யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/7/17

மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் நிரப்பவும்.

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த10 சந்தேகங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள்

1) Identification Cettificate ல் subject code இரண்டு கட்டம் உள்ளது
எவ்வாறு நிரப்புவது ( உதரணம் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் )

2)Identification Cettificate ல் பெயர் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா



 3)Identification Cettificate ல் கையெப்பம் தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

4)சுய விவர படிவத்தில் அனைத்தும் பெயர் உட்பட தமிழ் எழுத வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா

5)+2 இவற்றில் முக்கிய பாடம் என்ற கட்டத்தில் வரலாறு , கணிதம் , இப்படி படித்த முக்கிய பாடம் எழுத வேண்டுமா

6) D.T.Ed ல் முக்கிய பாடம் இல்லை அதில் எழுவும் எழுத வேண்டுமா  அதை நடத்தும் தேர்வு வாரியம் எது ( B.Lit with D.TEd=  B.Ed  தேர்வர்கள் மட்டும்)

7) பட்டப்படிப்பில் முக்கிய பாடம் எழுத வேண்டுமா அதில் எதுவும் துணைப்பாடம் எழுத வேண்டுமா

8) இடம் தேதி என்ற இடத்தில் நமது ஊர் எழுத வேண்டுமா அல்லது சான்றிதழ் சரிபார்க்கும் ஊர் அன்றைய தேதி எழுத வேண்டுமா

9) சுய விவர படிவத்தில் போட்டோவில் அரசிதழ் பெற்ற அலுவலரிடம் இரண்டு நகல்களில் கையெப்பாம் வாங்க வேண்டுமா(Identification Cettificate கண்டிப்பாக வாங்க வேண்டும்)


10) தேர்ச்சி பெற்ற மாதம் வருடம் என்ற கட்டத்தில் மேல் உள்ள தேர்வு எழுதிய மாதம் ஆண்டு எழுத வேண்டுமா அல்லது கீழ் உள்ள ரிசல்ட் தேதி மாதம் எழுத வேண்டுமா

மாண்புமிகு கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலின் படி போட்டித் தேர்வுகளிக்கு பயிற்சி அளிக்கவும் போட்டித்தேர்வுகளுக்கான கட்டகங்கள் தயார்செய்யவும் விரும்பும் ஆசிரியர்கள் நிரப்பவும்.

Welfare of Differently Abled Persons Department –Early Intervention Centre for children with Autism in Siragugal Special School, Thanjavur District-Sanction of Grant- Orders- Issued.

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தபள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். பல்வேறு விதிகள் அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. குளறுபடிகள் கண்டறிந்துள்ளது.

அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது - 'துக்ளக்' கட்டுரை

ஆசிரியர்கள் பற்றி 'துக்ளக்'கில் (12.7.2017) வெளி வந்த கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. ஆசிரியர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என்கிற அளவுக்கு 'துக்ளக்'கில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்கள்
கவனித்தார்களா என்று தெரியவில்லை, 'துக்ளக்' எழுதியுள்ளவை இதோ!)*

உண்மையான அக்கறை திருவாளர் அமைச்சர் பெருமகனுக்கோ, அவரது துறை அதிகாரிகளுக்கோ இருந்திருந்தால், எங்கெங்கோ பட்டி, தொட்டிகளில் 'பள்ளிக்கூடம்' என்ற பேரில் நின்று கொண்டிருக்கிற, எப்போது இடிந்து விழுவோம் என்று தெரியாத கட்டிடங்களைப் பற்றியோ, அதில் படிக்கிற ஏழை மாணவர்கள், அங்கு வேலை பார்க்கிற ஆசிரியர்கள் என்கிற பிழைப்புவாதிகளைப் பற்றியோ அமைச்சரின் அறிக்கை, பேட்டிகளில் வெறும் தகவல்களாவது வந்து விழுந்திருக்கும்.*

*அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்களின் கல்வித் தரம் ஒழுங்காக இருந்தால் அல்லவா மாணவர்களின் கல்வியில் தரம் வரும். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கே வருவதில்லை.*

*லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, படித்து ஆசிரியர் வேலையில் சேருகிறவருக்கு, மாணவர்களின் படிப்பைப் பற்றி என்ன கவலை? மாணவர்கள் படித்தாலென்ன, கழுதை மேய்க்கப் போனாலென்ன? அவர்களுக்கு என்ன வந்தது? ரியல் எஸ்டேட், வட்டிக்குப் பணம் விடுவது, கடை கண்ணியைத் திறந்து வியாபாரம் செய்வது என்று சகல பிஸினஸ்களிலும் இறங்கி விட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கக் கூட நேரமில்லை.*

*ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைக்கு வருகிறார்களா, வேலைக்கு வந்தால் முழு வேலை நேரத்தையும் பள்ளிகளில்தான் செலவிடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க எந்த வழியுமில்லை. இதையெல்லாம்தான் நீதிபதி கிருபாகரன் தனது உத்திரவில் குறிப்பிட்டிருக்கிறார்.*

*இவ்வளவு மோசமான நிலையில், கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க தமிழர்களுக்கு என்ன பைத்தியமா பிடித் திருக்கிறது?*

ஆசிரியர்களே 'துக்ளக்'கை தெரிந்து கொள்வீர்!*

RTI - சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..!

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள தேசிய நெடுங்சாலைகளில் பயணம் செய்யும்போது கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கார், லாரி என வாகனத்திற்கு வாகனம் மாறுபடும்

இந்தகட்டண விவகாரத்தை வைத்து, பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்டிருந்தார். அதற்கு விளக்கமளித்த அரசு, சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை என்றும் மாறாக அது சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடியில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுங்கச்சாவடிகளில் மிக நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கும் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிய வந்துள்ளது.

நம் மாணவர்களைத் தமிழக அரசும் கைவிடலாமா? - HINDU தலையங்கம்

பொதுமருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பட்டப் படிப்புகளுக்காக ‘நீட்’
தேர்வு எழுதியவர்களில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கித் தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்துசெய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் தமிழக மாணவர்களுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்காது என்றும், தமிழக சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் மாணவர்களை நம்ப வைத்துத் தமிழக அரசு ஏமாற்றியிருக்கிறது என்றுதான் கல்வியாளர்கள் பலரும் கருதுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சமுக நீதியையும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகளையும் ‘நீட்’ தேர்வும், உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பும் ஒரேயடியாகத் துடைத்துப்போட்டிருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லையென்றால், மாநில அரசும் அப்படியே இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

‘நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் 72% மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கே சென்றுவிடும். தமிழ்நாட்டில் மருத்துவ சேவை சிறப்பாக நடப்பதற்கு முக்கிய காரணம், மருத்துவக் கல்வியின் முதுநிலை படிப்புகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குத் தரும் முன்னுரிமைதான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மருத்துவக் கல்வி என்பது முழுக்க முழுக்க இப்போது வணிகமயமாகிவிட்டதால், பொதுத் தகுதித் தேர்வு நடத்துவது தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் காண உதவுகிறது என்று கூறக்கூடும். ஆனால் அது அரசின் சமூக, பொருளாதார லட்சியங்களுக்கு முரணாக இருந்துவிடக் கூடாது. வெவ்வேறு வகையிலான பிராந்தியங்கள், பொருளாதாரப் பின்னணிகள், மொழிகள் உள்ள நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்திலேயே படிக்க வேண்டும், ஒரே மாதிரியே தேர்வுகளை எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது.


இவ்விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு ஒரு முடிவெடுக்க வேண்டும். அதற்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்த்து 48 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கு நம் மாணவர்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமென்றால், இந்த பலத்தைக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நசுக்கப்பட்டதற்கு ஆளும் அதிமுகவும் ஒரு காரணம் என்ற அவப்பெயரை வரலாறு என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும்!

ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்தஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம்
மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.

பழைய பென்ஷன் திட்டம் வந்தால் தான் -ஜெ.ஆன்மா சாந்தியடையும் அடித்து சொல்கிறது -ஜாக்டோ -ஜியோ

7ஆவது ஊதிய குழு குறித்து தமிழக நிதியமைச்சர் தகவல்

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
சென்னை:

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். ‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.

“அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்கக்கூடாது?”, என்று சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

அவரது பெயர் லலிதா, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்தார்.

பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ ஆக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நகரில் உள்ள பெரிய பள்ளிகள் சேர்ப்பார்கள்.

ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் எப்படி தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? என்பது குறித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

‘ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு’, என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.

மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக கடந்த 2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறேன். அப்போதே ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை நிச்சயம் மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்’, என்று நினைத்தேன். இப்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும்போதே நினைத்ததை செயல்படுத்தி உள்ளேன்.

எனதுகணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா பெருமிதத்துடன் கூறினார்.


தனதுஒரே மகளை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.