யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/9/16

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்த்தப்படும் - முதல்வர் அறிவிப்பு

CPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

CPS -பற்றிவிளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுவருகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்பாதிப்புகள் ,வடிவம்  ஓய்வூதியவரலாறு தற்போதைய நிலை, பத்திரிகை செய்திகள், CPS திட்டம் பற்றிய கேள்விகள் , பழையமற்றும் புதிய ஓய்வூதிய திட்டவேறுபாடுகள்  உள்ளிட்டவை  இடம்பெற்றுள்ளது. இப் புத்தகம் வேண்டுவோர்தொடர் கொள்க.
தொடர்புக்கு:

திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ் - 96299-27400
C.கார்த்திக்-98654-45689

CPS ACCOUNT SLIP-2015-2016

TRB appointment BT(Maths) Regularisation

துப்புரவு பணியாளர் ஊதியம் CM Cell Letter

DSE:புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மின்னணு மேலாண்மை மூலம் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக..



Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form - ஐ பூர்த்தி செய்து Aeeo அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். CPS MISSING CREDITS

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.

மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.

குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

5,451 காலியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது

Directorate of Government Examinations SSLC Supplementary Examinations, September / October 2016 Time Table

ஆசிய பல்கலை., பட்டியலில் இந்தியாவின் நிலை

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயர்கல்வி வழங்குவதில் முன்னணியில் இருப்பது ஐ.ஐ.டி., எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம். தற்போது நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்ததாக உயர்கல்வியில் இன்ஜினியரிங் படிப்பை ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசை மற்றும் இலக்காக உள்ளது. நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேரலாம். அதுபோல பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனமும் புகழ் பெற்றது. 

இவ்வளவு பெருமை மிக்க நமது ஐ.ஐ.எஸ்சி., மற்றும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் ஆசிய 

நாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

பிரிட்டனின் முன்னணி செய்தி நிறுவனமான 'ராய்ட்டர்ஸ்' ஆசியாவின் சிறந்த பல்கலைக்
கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 75 கல்வி 
நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா எத்தனை:

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஐ.ஐ.டி., 72வது இடத்தையும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) 73வது இடமும் பெற்றுள்ளது.

என்ன காரணம்

இந்தியாவின் சிறந்த ஐ.ஐ.டி.,களான மும்பை மற்றும் டில்லி ஆகியவை இந்த பட்டியலில் உயர்ந்த இடத்தை பெற்றிருக்க முடியும். ஆனால் பல்கலைக்கழகங்கள் என்று கணக்கிடும் போது, இந்தியாவில் அனைத்து ஐ.ஐ.டி., களையும் இணைத்து ஒரே பல்கலைக்கழகமாக வைத்து ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி, மும்பை ஐ.ஐ.டி.,களுடன் புதிதாக துவக்கப்பட்ட ஐ.ஐ.டி.,களையும் சேர்க்கும் போது, சராசரி குறைந்து கடைசி இடமே 
கிடைத்துள்ளது.

23: இந்த 75 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் அதிகபட்சமாக சீனாவின் 23 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா 20, ஆஸ்திரேலியாவில் 6, இந்தியா, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து தலா 2, நியூசிலாந்து 1 என இடம்பெற்றுள்ளன.

டாப் - 10 பல்கலைக்கழகம்

சிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 20 இடங்களில் ஜப்பான் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த 17 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
1) கே.ஏ.ஐ.எஸ்.டி., பல்கலைக்கழகம், தென் கொரியா
2) டோக்கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்
3) சியோல் தேசிய பல்கலைக்கழகம், தென் கொரியா
4) ஒசாகா பல்கலைக்கழகம், ஜப்பான்
5) போஹங் பல்கலைக்கழகம், தென் கொரியா
6) டேஹோகு பல்கலைக்கழகம், ஜப்பான்
7) கியோட்டோ பல்கலைக்கழகம், ஜப்பான்
8) சுங்யிங்வான் பல்கலைக்கழகம், தென் கொரியா
9) யோன்சி பல்கலைக்கழகம், தென் கொரியா
10) கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்

எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

சென்னை: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்., மாதம், பொதுத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, வரும், 6ல் வெளியாகிறது. ''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, செப்., 6 முதல், 10 வரை,

அவரவர் தேர்வு எழுதிய மையங்களில், பெற்றுக் கொள்ளலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:


ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிடவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உரிமம் பெற்றுள்ள 960 ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகனப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தாட்கோ சிறப்பு மையத் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் பாரம்பரிய வேளாண்மை தொழிலைத் தொடரும் வகையில், அங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையைப் பதப்படுத்த, கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள கோழித்துறையில் பசுந்தேயிலை தயாரிக்கும் இயந்திர அலகு அமைக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.80 லட்சம் ஒதுக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்காக, 10,299 மாணவர்களுக்கு 11 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக, மத்திய சிறப்புத் திட்ட நிதியிலிருந்து ரூ.34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.

பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு.

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
மாணவர்களின் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பதிய வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக வழக்கிழந்து வரும் தூய தமிழ்ச் சொற்களைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உதவிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, பட விளக்கத்துடன் கூடிய அகராதியைத் தொகுத்து வகுப்பு வாரியாக கல்வித துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கலைக் கழகம்:

 தமிழ்மொழியை காக்கும் நோக்கில் அன்றாடம் பயன்பாட்டுக்கு வரும் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைத் தரப்படுத்தி ஊடகங்களுக்கும், அறிவியாளர்களுக்கும், மொழியியலாளர்களுக்கும் வழங்கும் நோக்கில் அகர முதலி இயக்ககத்தில் தமிழ் கலைக் கழகம் ஏற்படுத்தப்படும்.தமிழ்ச் சொற்களைப் பகுத்தறிந்து அறிவியல் நோக்கில் ஆய்வு செய்து, புதிய கலைச் சொற்களை உருவாக்க விரும்புவோருக்கு உதவிடவும், தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் தமிழ்ப் பாடத் தேர்வர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையிலும் தமிழ்ச் சொற்களின் சரியான வேர்ச் சொற்களைத் தொகுதித்து வேர்ச் சொல் சுவடி எனும் நூல் அச்சிட்டு வெளியிடப்படும்.

தமிழாய்வு அரங்கம்:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் அயல்நாட்டறிஞர் அழைக்கப்பட்டு தமிழாய்வு அரங்கம் நடத்தப் பெறும். இந்த அரங்கம் நடத்தப்படுவதால் தமிழுக்கு புதிய ஆய்வு நூல் கிடைப்பதோடு தமிழாய்வு மேலும் செம்மையுறும்.தமிழியல் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில், தமிழ் இலக்கியம் தடம் பதித்த 116 ஆண்டுகள் என்ற தலைப்பின் கீழ், 1900 முதல் 2016 வரை வெளிவந்த இலக்கிய நூல்களின் விவர அட்டவணை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடப்படும்.கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகம் சீராக்கி பராமரிக்கப்படும். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் புதிதாக மூன்றாம் பரிசு வழங்கப்படும். இந்தப் பரிசு ரூ.5 ஆயிரம் கொண்டதாக இருக்கும்.

மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள்:

 கணினியில் ஆங்கிலமொழிக்கென சொல் திருத்தம் செய்யும் வசதி இருக்கிறது.இதே போன்று தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக் காட்டித் திருத்திக் கொள்ளும் வகையிலும் ரூ.300 மதிப்பில்"அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்' மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் முதல் கட்டமாக 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்குப் பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.குவாஹாட்டி பல்கலை.யில் தமிழ் பயில உதவித்தொகைஅசாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:அசாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாகப் பயிலும் 6 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1.39 லட்சம் வழங்கப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.21-ஆம் நூற்றாண்டில் அயலகத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 5 அயலக நாடுகள் ஒவ்வொன்றில் இருந்தும் தகுதி வாய்ந்த 5 தமிழ்ப் படைப்பாளர்களிடம் இருந்து கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை போன்ற தரமான படைப்புகளைப் பெற்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல்களாக வெளியிடப்படும்.

மோரீஷஸில் தமிழ்:

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்றான மோரீஷஸ் நாட்டில் தமிழர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும், பேசவும் பயிற்சி அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று ராமச்சந்திரன் அறிவித்தார்.

இந்த மாதம் தொழில் வரி !

ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய 
அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை 2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).

உண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள்

மதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு கல்லுாரிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கான பட்டச் சான்றுகளை கல்லுரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின், சம்பந்தப்பட்ட பல்கலைக்கு அச்சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படும்.சான்றிதழ்களை அனுப்பி வைக்கும்போது, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர் சார்பில் அதற்கான கட்டணமும் காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் உண்மைத்தன்மைக்கான சான்று சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில், இப்பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என கல்லுாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சிவகங்கை அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இக்கல்லுாரியில் பணியாற்றும் 43 பேரின் இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எச்டி., பட்டச் சான்றுகள் உண்மை தன்மைக்காக காமராஜ் பல்கலைக்கு 30.9.2015ல் அனுப்பி வைக்கப்பட்டது. உடன் 64,500 ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கவில்லை.

ஆனால் இதே கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் அதற்கான உண்மை தன்மை சான்று கிடைத்து விட்டது.ஆனால் காமராஜ் பல்கலையில் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. சான்றிதழ் பிரிவில் கேட்டால் 'அதுபோன்ற சான்றிதழ்களே வரவில்லை,' என பதில் கூறுகின்றனர். ஆனால்அரசியல், அதிகாரிகள் சிபாரிசில் சில ஆசிரியர்களுக்கு மட்டும் உண்மை தன்மை சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம். பல்கலை பதிவாளர் இப்பிரச்னை குறித்து விசாரித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

5,451 காலியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் தொந்தரவு: மாறுதல் கேட்டு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மனு.

சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொந்தரவு கொடுப்பதால், தங்களை பணிமாறுதல் செய்யும்படி, அங்கு பணிபுரியும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனர்.சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன். 
அந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு பணிபுரியும், ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள், தங்களை வேறுபள்ளிக்கு மாறுதல் செய்யும்படி, மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலரை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். அவருக்கு பிடிக்கவில்லை எனில், அவர்களை பள்ளியை விட்டு, அனுப்பும் வரை ஓய்வதில்லை. அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாணவியரிடம்எழுதி வாங்கி வைத்துக்கொண்டு, மிரட்டல் விடுக்கிறார்.

ஊரில் உள்ள, சில அரசியல்வாதிகளையும், பெற்றோர் ஆசிரியர்கழகம் என்ற பெயரில், பள்ளிக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். மேலும், 'அடித்து கொன்றுவிடுவோம்' என, மிரட்டல், பாலியல் அச்சுறுத்தல், ஆசிரியர்களை, நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. ஏற்கனவே, அவரது மிரட்டலுக்கு பயந்து, வேறு ஊருக்கு, பலர், மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். இதனால், இந்த பள்ளியில் இருந்து, வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்டு, ஒன்பது ஆசிரியர்கள் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமைமாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.

மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.
குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

Directorate of Government Examinations SSLC Supplementary Examinations, September / October 2016 Time Table

மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்வு- செய்தி அறிக்கை