யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download
TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/6/18

TNPSC-TET


English Current Affairs 01 To 02 June 2018 ENGLISH CURRENT AFFAIRS MATERIAL 2018 Latest English...

To get more details about this articles kindly visit our maanavan.com

TNPSC Group 2 Exam | Jahangir History Audio Study Materials The post TNPSC Group 2 Exam |...

To get more details about this articles kindly visit our maanavan.com

Lok Sabha Speaker TNPSC UPSC RRB Exam Audio Study Materials The post Lok Sabha Speaker TNPSC UPSC...

To get more details about this articles kindly visit our maanavan.com

TNPSC Group 2 Exam Tamil Video Study Materials | Tamil Videos     The post TNPSC...

To get more details about this articles kindly visit our maanavan.com

List Of RBI Governors In English | Exam Study Materials The post List Of RBI Governors In...

To get more details about this articles kindly visit our maanavan.com

Taxes Of India In English | General Knowledge Study Materials The post Taxes Of India In...

TNOSC-TET


TNPSC Tamil Group 2 Current Affairs In June 2018 The post TNPSC Tamil Group 2 Current Affairs In...

To get more details about this articles kindly visit our maanavan.com

List Of Important Summits In English | Exam Study Materials The post List Of Important...

To get more details about this articles kindly visit our maanavan.com

RPF Recruitment 2018 | 8619 Constable Posts | Govt Jobs RPF Recruitment 2018 8619...

To get more details about this articles kindly visit our maanavan.com

Group 1 Exam Chief Minister’s Notice Raising The Age Limit The post Group 1 Exam Chief...

To get more details about this articles kindly visit our maanavan.com

TNPSC Recruitment 2018 For 16 Translation Officer & Translator Posts | Jobs   Tamil...

To get more details about this articles kindly visit our maanavan.com

TNPSC Translation Officer And Translator Posts Apply Now    The post TNPSC Translation...

To get more details about this articles kindly visit our maanavan.com
TNPSC Recruitment 2018 For 16 Translation Officer & Translator Posts Notification Download...

To get more details about this articles kindly visit our maanavan.com

2450 Posts Will Be Filled Up By Direct Appointment In Tamil Nadu Electricity –...

To get more details about this articles kindly visit our maanavan.com

3,392 Assistant Workers Will Be Filled Soon By TRB The post 3,392 Assistant Workers Will Be Filled...

12/4/17

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

TET விழிப்புணர்வு சிறு பதிவு 


* ஆசிரியர்  தகுதி தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது

* துவக்கம் வெற்றி பெறுவதாக அமையட்டும்


* நுழைவு சீட்டு தேர்வு எழுதுவது முதல் பணி நியமனம் பெறும் வரை அத்தியாவசியம்

  * நுழைவு சீட்டை உங்கள் Gmail முகவரியில் ஒரு Soft Copy ஆக சேமித்து வையுங்கள்

* புகைபடம் இல்லாமல் இருப்பின் கீழே தரப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வின் போது மையத்தில் ஒப்படைக்கவும்

If there is no photograph on your hall ticket- Please click here to download the form

9/4/17

I "M" Possible - TET தன்னம்பிக்கை வரிகள் !!!

TET தன்னம்பிக்கை வரிகள் - பிரதீப் ப .ஆ . பூங்குளம்

இன்றைய வெற்றி விதைகள்:🐝

* பல முறை தேர்வில் தோற்றவரா நீங்கள் - கவலை வேண்டாம் - அறிவும் சூழலும் முரண்பட்டது. இணையும் போது வெற்றி நிச்சயம்


* முதல் முறை தேர்வு எழுதுபவரா கவலை வேண்டாம். முதல் முயற்சி வலிமை மிக்கது

* வயது அதிகம் மறதி என்ற பயம் இருந்தால் அகற்றுங்கள். அனுபவமே கல்வியின் அடித்தளம் . மன நிலையை ஒருநிலை படுத்துங்கள். இளைஞரை விட பல மடங்கு திறன் பெற்றவர் ஆவிர்

* வழிகாட்டுதல் இல்லை என்ற நிலை இருப்பின் வருத்தம் வேண்டாம் சுயத்தை மீறிய திறன் மற்றவரிடம் இல்லை. நம்பிக்கை உடன் படியுங்கள்

* மறதி, சோர்வு , சலிப்பு வருகிறாதா? கண்டிப்பாக ஏற்படும். நம்பிக்கை விதையுங்கள் இவை களை செடியாய் மறைந்து விடும்

* படிக்கும் பகுதி அதிகம் என்ற பயம் உள்ளதா ? ஒரு எண்ணத்தை மனதில் விதையுங்கள் " I முதல் 10 வகுப்பு மாணவன் படிப்பதை நம்மால் எளிதாக படிக்க முடியும் என "

* போட்டியாளர் அதிகம் என பயமா? எவரை பற்றியும் கவலை வேண்டாம். ஓடும் குதிரையில் முதல் குதிரை நான் என கொள்ளுங்கள்

* நேரம் போதவில்லையா?
இருக்கும் நேர்த்தை மிக நேர்த்தியாக பயன்படுத்துங்கள்

* பணி இடம் இருக்குமா ? எவ்வளவு இருந்தாலும் கவலை இல்லை. 1 பணியிடமாவது கிடைக்கும் அது எனக்கு என முடிவு கொள்ளுங்கள்

* அட்டவணை படிக்க இயலவில்லையா ? கவலை வேண்டாம். நாம் இயந்திரம் அல்ல இட்டதை எட்ட. இயன்ற வரை போராடு

* பாடம் புரியவில்லையா ? வாழ்வியலுடன் தொடர்பு படுத்தி படியுங்கள்

* கணிதம் வரவில்லையா? புத்தக கணக்கை தீர்த்து பாருங்கள். தேர்ச்சி மதிப்பெண் நிச்சயம்

* கனவை நீக்குங்கள். நிஜத்தில் வாழுங்கள். இன்றைய முயற்சியே
நாளைய வெற்றி

* எண்ணம் தெளிவாகட்டும்
இலக்கு
உயர்வாகட்டும்

* நேர்மறை எண்ணம் நேர்மறை முடிவு தரும்.
எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்- விவேகானந்தர்

வாழ்த்துகளுடன் : தேன்கூடு🏆

8/4/17

தேன்கூடு உளவியல் New significant material

TET வெற்றி நிச்சயம் சிறப்பு கட்டுரை - பிரதீப் ப.ஆ - பூங்குளம்


மீதமுள்ள நாட்கள் : 22 நாட்கள்
:::::::செய்ய வேண்டியவை:::::
* முடிக்கபடாத பாட பகுதியை விரைவாக படிக்க துவங்குங்கள்
* கடின பகுதியை மீள படியுங்கள்
* படிக்காத பாடங்களை ஒரு முறையாவது படியுங்கள்
* திருப்புதலை துவங்குங்கள்.
*முன்பு படித்ததை விட ஆளமாகவும் தெளிவாகவும் திருப்புதலில் படியுங்கள
* உங்கள் Major பாடமே உங்களின் கூடுதல் பலம். அதில் மிக தெளிவாய் இருங்கள்
* தேர்வில் வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்தை தினமும் மனதில் விதையுங்கள்
* தேவையற்ற மெடிரியல் அவற்றில் உள்ள தேவையற்ற கருத்துகளை படித்து நேர விரயம் செய்யாதீர்
* கூடுமான அளவு சிறு தேர்வு எழுதி பாடப்பகுதி சார் சுய மதிப்பீடு செய்யுங்கள்
* கணிதம் சோர்வான நேரத்தில் தீர்த்து பயிற்சி பெறுங்கள்
* தமிழ், அறிவியல், ச.அறிவியல் தேர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மறவாதீர்
:::::செய்ய கூடாதவை ::::::
* பிறரின் தேவையற்ற வசை சொற்களில் மூழ்கி இருக்காதீர்கள்
* தேர்வின் மீது பயம் தேவை. தேர்வையே பயம் என நினைத்து உடைய வேண்டாம்
* வெற்றியோ தோல்வியோ அது இப்போது தெரியாது. தெரிந்த முயற்சியை எடுத்து செல்வோம் வெற்றி நோக்கி
* வெய்ட்டேஜ் பற்றி கவலை வேண்டாம். குறைவாக உள்ளவர் டெட் தேர்வில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுங்கள்
* கோச்சிங் வகுப்பு தவறில்லை. தவறான நேர விரயம் செய்யும் கோச்சிங் தேவை இல்லை
*  இறுதி நேர பதற்றம் வேண்டாம்
* மறதி கண்டு பயம் வேண்டாம். அது மேலும் மறதி செய்யும்.
* சிறந்த தன்னம்பிக்கை தேவையான நேரத்தில் நினைவூட்டல் தரும்
* ஓய்வினை தவிர்க்க வேண்டாம். உறக்கம் அவசியம்
* ஏற்கனவே படித்து முடித்தவர் 2 திருப்புதல் செய்ய முனையுங்கள்
வாழ்த்துகள் _ தேன்கூடு

6/4/17

TNTET - ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் -2017 தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் .

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்  ஏப்ரல் 3-வது வாரத்தில்  வழங்க ஏற்பாடு.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.

 இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பட்ட தாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (தாள்-2) 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் (மொத்தம் 8 லட்சம் பேர்) விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென் னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. தற் போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக அதாவது ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எனவே, தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்பு நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், புதிதாக நடத்தப்பட உள்ள தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்களையும் அரசு கேட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதால் அதற்கேற்ப கணிசமான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNTET -2017 Exam Tips for Psychology

டெட் வெற்றி நிச்சயம் - கட்டுரை - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்🏆
                                                 

பாட வாரியான டிப்ஸ் : இன்று - உளவியல்
பகுப்புகள்:


கூற்றுகள்  - அறிஞர்கள் --: 5-8
சோதனைகள் _ அறிஞர்கள்
படிநிலைகள்: 5-6
வகுப்பறை சூழல் சார் உளவியல் : 10-12
விடலை பருவ உளவியல் : 5
உளவியல் பிரிவுகள் : 2
அறிவுரை பகர்தல், தொடர் நிகழ்வு : 3

::::மிக முக்கிய தலைப்புகள் | கூறுகள் ::::

* கற்றல் - வகைகள்
* கற்றல் முறைகள்
* ஊக்குவித்தல் கூறுகள்
* கவனித்தல், கவன சிதைவு
* நினைவு கூர்தல்
* சிந்தனை
* ஆக்கத்திறன்
* நுண்ணறிவு
* நுண்ணறிவு ஈவு
* ஆளுமை
* மன நலம்
* தலைமை பண்பு
* மனநலவியல்
* வளர்ச்சி
* வளர்ச்சி தேவைகள்
* மரபு
* சூழ்நிலை

::::வகுப்பறை சார்ந்து :::::

* மெதுவாக கற்போர் நிலை
* சராசரி மாணவர் நிலை
* மீத்திறன் மிக்க மாணவர்
* இவர்கள் பிரிப்பு முறை
* கையாளுதல்

:::::::: உளவியல் சோதனைகள் ::::::::

* உளவியல் சோதனைகள்
* அறிஞர்கள்
* முடிவுகள்
* சோதனை கருவிகள்
* முடிவின் படி நிலைகள்

:::::::: கோட்பாடுகள் :::::;::

* உள கோட்பாடு
* அறிஞர்கள்
* கருத்துகள்
* எதிர்ப்பும் வரவேற்பும்

:::::தொடர் பாட பகுதி ::::

* இயல்பு நிலை கடத்தல்
* விடலை பருவ மன எழுச்சி
* நெறி பிறழ்வு
* அறிவுரை பகர்தல்
* வழிகாட்டுதல்
√ உளவியல் குறைவான பாட பகுதியுடைய சிக்கலான பாடம்
√ புரிதல் உடன் படித்தல் அவசியம்
√ உளவியல் பாடத்திற்கு என குறிப்பிட்ட பாட புத்தகம் மட்டும் படிக்க கூற இயலாது
√ ஆசிரியர் பயிற்சியில் பயன்படுத்திய பயின்ற புத்தகம் படிக்கவும்
√ கூடுதலாக *மங்கல்* (Eglish) , மீனாட்சி சுந்தரம், சந்தானம், நகராஜன் புத்தகம் ஒன்றை படிக்கவும்
√ குழப்பம் தவிர்த்து நிதானித்து விரைவாக தெளிவாக படிக்கவும்
இலக்கு எளித்தல்ல...
எட்ட நினைத்தால் ...
முயல துவங்கு ...
🐝வாழ்த்துகளுடன் தேன்கூடு.

1/4/17

TET

101.  இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102.  இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103.  இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104.  இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105.  இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106.  இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107.  இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108.  இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109.  இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110.  இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111.  இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112.  இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113.  இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114.  இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115.  இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116.  இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117.  இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118.  இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119.  இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120.   இலக்கிய உதயம் நூலாசிரியர்               - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121.  இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122.  இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123.  இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124.  இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125.  இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126.  இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127.  இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128.  இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129.  இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130.  இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131.  ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132.  ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133.  ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134.  உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135.  உட்கார்ந்து எதிரூன்றல் -  காஞ்சி
136.  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137.  உண்டாட்டு - கள்குடித்தல்
138.  உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139.  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140.  உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
141.  உமைபாகர்  பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142.  உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143.  உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144.  உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145.  உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146.  உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147.  உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148.  உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149.  உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150.  உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151.  உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152.  உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153.  உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154.  உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155.  உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156.  உலகின் முதல் நாவல் – பாமெலா
157.  உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158.  உவமைக் கவிஞர்                    -சுரதா
159.  உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி
160.  உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
161.  உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162.  உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163.  உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164.  ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165.  ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166.  ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167.  ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168.  ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169.  எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு

TET

170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171.  . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172.  .       எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173.  எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174.  எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175.  எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை
176.  எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177.  எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178.  எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179.  எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180.  எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181.  எயில் காத்தல் – நொச்சி
182.  எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183.  எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184.   என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185.  ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186.  ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187.  ஏழகம்  - ஆட்டுக்கிடாய்
188.  ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்
189.  ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190.  ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191.  ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192.  ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193.  ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194.  ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195.  ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196.  ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197.  ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198.  ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199.  ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200.  ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

201.  ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202.  ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203.  ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205.  ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206.  ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207.  ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208.  ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209.  ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210.  ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211.  ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212.  ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213.  ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214.  ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215.  ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216.  ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217.  ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218.  ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219.  ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220.  ஒருபிடி சோறு -  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்

TET

221.  ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222.  ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223.  ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225.  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226.  ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227.  ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228.  ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229.  ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230.  ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231.  கங்கை மைந்தன் – தருமன்
232.  கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233.  கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234.  கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449
235.  கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 49
236.  கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 1850
237.  கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238.  கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239.  கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240.  கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241.  கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242.  கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243.  கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244.  கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245.  கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -  இராமவதாரம்
246.  கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247.  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248.  கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249.  கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250.  கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251.  கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252.  கரந்தை - ஆநிரை மீட்டல்
253.  கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254.  கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255.  கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256.  கருப்பு மலர்கள் ஆசிரியர் -  நா.காமராசன்
257.  கல்கியின் முதல் நாவல் - விமலா
258.  கலம்பக உறுப்புகள்  - 18
259.  கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260.  கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261.  கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262.  கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263.  கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264.  கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265.  கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266.  கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267.  கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268.  கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269.  கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270.  கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271.  கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272.  கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273.  கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274.  கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275.  கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276.  கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277.  கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278.  கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279.  கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280.  கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல்  மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா

TET

  கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல்  மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
282.  கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283.  கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284.  கவிராஜன் கதையாசிரியர்    - வைரமுத்து
285.  கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286.  கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287.  கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி                    
288.  கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289.  கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290.  கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291.  காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292.  காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293.  காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294.  காந்தியக் கவிஞர்                     -  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை                     
295.  காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296.  காரி  (கலுழ்ம்)  – காரிக்குருவி
297.  காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298.  காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299.  காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்                                                     
300.  காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
301.  கிரவுஞ்சம் என்பது – பறவை
302.  கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ  1750 
303.  கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
304.  கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305.  குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306.  குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307.  குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308.  குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309.  குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
310.  குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311.  குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312.  குறிஞ்சிக் கிழவன் - முருகன்                                                                            
313.  குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி                                             
314.  குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
315.  குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316.  குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317.  குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
318.  குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
319.  குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320.  குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம்  பெறும் புலவர்கள் – 18 பேர்
321.  குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
322.  குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323.  குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
324.  குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
325.  குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326.  குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327.  கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர்  - அடியார்க்கு நல்லார்
328.  கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329.  கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
330.  கைவல்ய நவ நீதம் எழுதியவர்            - தாண்டவராயர்
331.  கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் –  இறையனார்
332.  கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333.  கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334.  கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
335.  கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336.  கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
337.  சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
338.  சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
339.  சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340.  சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
341.  சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342.  சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343.  சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344.  சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345.  சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்                       

347.  சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர்
348.  சங்கப்பாடல்  இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
349.  சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350.  சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351.  சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352.  சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353.  சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் -  நம்மாழ்வார்          
354.  சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
355.  சதுரகராதி ஆசிரியர் -  வீரமாமுனிவர்
356.  சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
357.  சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358.  சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
359.  சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360.  சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
361.  .   சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362.  .   சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் -  மாயூரம் வேத நாயகர்
363.  சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364.  சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365.  சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366.  சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367.  சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368.  சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369.  சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370.  சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371.  சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
372.  சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
373.  சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374.  சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375.  சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376.  சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377.  சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378.  சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379.  சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
380.  சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
381.  சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382.  சின்ன சங்கரன் கதையாசிரியர்  - பாரதியார்
383.  சின்னூல் எனப்படுவது  -  நேமி நாதம்
384.  சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  - 1705
385.  சீகாழிக்கோவை எழுதியவர்  –  அருணாசலக் கவிராயர்
386.  சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
387.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388.  சீறாப்புராணம் ஆசிரியர்  -  உமறுப்புலவர்
389.  சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390.  சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்  –  மு.கதிரேசன் செட்டியார்
391.  சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392.  சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393.  சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்
394.  சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395.  சுரதாவின் இயற்பெயர்  -  இராசகோபாலன்
396.  சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397.  சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398.  சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399.  சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  - மண்டல புருடர்
400.  செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை

401.  செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903
402.  செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்
403.  செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்
404.  செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405.  செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406.  சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407.  சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
408.  சேயோன்  - முருகன்
409.  சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410.  சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411.  சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412.  சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413.  சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414.  சைவசமயக் குரவர்கள்  - நால்வர்
415.  சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
416.  சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும                      

   417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418.  சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419.  சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420.  சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421.  சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422.  சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423.  சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424.  சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425.  ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426.  ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427.  ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்
428.  ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429.  ஞானவெண்பாப் புலிப்பாவலர்  –   அப்துல் காதீர்
430.  டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431.  டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432.  தக்கயாகப் பரணி ஆசிரியர்  –  ஒட்டக்கூத்தர்
433.  தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்
434.  தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435.  தண்டி ஆசிரியர்  -  தண்டி
436.  தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை  –  35 அணிகள்
437.  தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438.  தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439.  தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440.  தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
441.  தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442.  தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443.  தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444.  தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
445.  தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446.  தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447.  தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448.  தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449.  தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450.  தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
451.  தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452.  தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453.  தமிழ் மொழியின் உப நிடதம் -  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454.  தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
455.  தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456.  தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457.  தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458.  தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459.  தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460.  தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461.  தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462.  தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463.  தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464.  தமிழ்த்தென்றல் -  திரு.வி.க
465.  தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466.  தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467.  தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468.  தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469.  தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
470.  தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471.  தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
472.  தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473.  தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474.  தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475.  தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
476.  தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்
477.  தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478.  தமிழின் முதல் நாவல் -  பிரதாப முதலியார் சரித்திரம் -  மாயூரம் வேத நாயகர்
479.  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்
480.  தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
481.  தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366
482.  தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483.  தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484.  தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
485.  தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486.  தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்                         488.  தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489.  தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - த.நா.குமாரசாமி
490.  தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
491.  தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்
492.  தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493.  தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்
494.  தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495.  தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496.  தானைமறம் – தும்பை
497.  தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்
498.  தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499.  திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500.  திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்

501.  திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502.  திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503.  திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி
504.  திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505.  திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506.  திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507.  .   திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,
508.  திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509.  திராவிட வேதம் - திருவாய் மொழி
510.  திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511.  திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி
512.  திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513.  திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514.  திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515.  திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516.  திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517.  திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519.  திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520.  திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521.  திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522.  திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523.  திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524.  திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் -  திருச்செந்தூர்
525.  திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526.  திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் -  பெ.சுந்தரம் பிள்ளை
527.  திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528.  திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி
529.  திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530.  திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531.  திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532.  திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533.  திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534.  திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -  டாக்டர் கார்டுவெல்
535.  திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536.  திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537.  திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538.  திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்
539.  திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540.  திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541.  திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542.  திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்
543.  திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544.  திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
545.  திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546.  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547.  திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548.  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549.  .திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656
550.  .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்                        

551.  . திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552.  .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553.  .திருவெங்கை உலா ஆசிரியர் -  சிவப்பிரகாச சுவாமிகள்
554.  .திருவேரகம் –  சுவாமிமலை
555.  .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556.  .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557.  .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558.  .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559.  .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560.  .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561.  .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562.  .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563.  .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564.   தென்னவன் பிரமராயனெனும்
565.  தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566.  தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567.  தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568.  தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569.  தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570.  தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571.  தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572.  .   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
574.  தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575.  தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
576.  தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577.  தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578.  தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579.  தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580.  தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581.  பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582.  தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583.  தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
584.  தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585.  தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586.  தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587.  தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்-
588.  தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
     அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589.  தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590.  தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591.  தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593.  தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594.  தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595.  தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596.  தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்
597.  தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600.  தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்

TET

1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு -  ஸிரில் பர்ட் - வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்                        

28/3/17

1.தமிழச்சி'- என்ற நூலை எழுதியவர்? வாணிதாசன்
2.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை


16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்

Psychology Question and Answer for Teachers Exam..!! ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

கற்றலும் அறிவும் 



1. தேசியக் கல்வி கொள்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1986

2. குழந்தை மையப்படுத்திய கல்வி முறையின் தந்தை எனப்படுபவர; - ரூஸோ

3. கற்றல் என்பது ........ ஆகும் - செயலுறு நிலை

4. திறந்தவெளிப் பல்கலைக்கழகம் செயல்படும் தத்துவம் - வாழ்நாள் முழுவதும் கல்வி

5. வாய்மொழி இலக்கியத்தை கற்பதனால் வளரும் திறன் எது? - புரிதல் திறன்

6. யுடிளவசயஉவ வாiமெiபெ என்பது - கருத்தியல் சிந்தனை

7. குருகுலக் கல்வி முறையில் கல்வி பயின்றோர் - அரசர்

8. தேசிய கலைத்திட்ட கல்வி பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு எது? - 2005

9. ஆயத்த நிலை .......... எனப்படுகிறது - பழுத்த நிலை 

10. கற்றலைத் தீர்மானிக்கும் காரணி எது? - மகிழ்ச்சியான வகுப்பறைச் சு+ழல்

11. அறிவு வளர்ச்சிக்கு உதவும் திறன் - புலன்காட்சித் திறன், மொழித் திறன், நினைவாற்றல்

12. வாய்மொழி இலக்கியத்தை கற்பதனால் வளரும் திறன் எது? - புரிதல் திறன் 

13. இந்தியாவின் முதல் கல்வி மந்திரியாக இருந்தவர் - அபுல் கலாம் ஆசாத் 

14. கோத்தாரிக் கல்விக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு - 1966

15. இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1985

கற்றலும், அறிவும் பற்றிய சில குறிப்புகள் :

கற்றல் மாற்றம் (அ) பயிற்சி மாற்றம் :

🌟 முன்பு கற்ற ஒன்று தற்போது ஒன்றினில் மாற்றத்தை ஏற்படுத்துவது கற்றல் மாற்றம் எனப்படும்.

🌟 முன்பு கற்றலைத் தற்போது கற்றுக் கொள்வதிலும், தற்போது கற்கின்ற ஒன்று முன்பு கற்றதிலும் சில விளைவுகளை ஏற்படுத்துவது கற்றல் விளைவு எனப்படும்.

🌟 ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு, செயல்திறன், பழக்க வழக்கங்கள், மனப்பான்மை போன்ற எந்த அளவைக் கூறும் வேறொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவதே கற்றல் மாற்றம் எனப்படும்.
1.வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை? தாலமி
3..இயற்பியலின் தந்தை? நியூட்டன்
4..வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை?ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?பிளேட்டோ
12..மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை? யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை? லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை? மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை? ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை? அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை? ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை? விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை? மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை? நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை? ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை? வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை? எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை? கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை? கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை? தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை? குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை? விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை? சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை? சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை? பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை? நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை? அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை? ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை? வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? அவினாசி மகாலிங்கம்

  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை 
2. கோவை 
3. மதுரை 
4. திருச்சி 
5 தூத்துக்குடி 
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி 
2. சேலம் 
3. வேலூர் 
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர் 
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி 
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958 
ஆண் 36158871 
பெண் 35980087