யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/10/15

6 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் குழந்தை பாதுகாப்பு ஊழியர் தவிப்பு

சென்னை,:தமிழகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், 2012ல் துவங்கப்பட்டது.
இதில், 300 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை; 10 மாதங்களாக செலவுப்படியும் வழங்வில்லை. இதனால், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, திட்ட அலுவலர்கள் கூறியதாவது:ஆறு மாதங்களாக சம்பளம், செலவுப்படிகள் வழங்காததால், அலுவலக வாடகை பாக்கி, தொலைபேசி கட்டணம், குடிநீர் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியவில்லை. ஆறு மாதங்களாக குடும்பம் நடத்த கடும் சிரமப்படுகிறோம். தீபாவளிப் பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில், சம்பள பாக்கியை வழங்கினால் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவர்களுக்கு இலவச சுற்றுலா

சென்னை: அறிவியல் மையம் மற்றும் தோட்டக்கலைப் பண்ணைகளுக்கு, மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின், புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தில்,
இலவச அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்ல, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், எட்டாம் வகுப்பு வரை, 800 பேரை சுற்றுலா அழைத்து செல்ல, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தில், மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி, 15 ரூபாய்; மதிய உணவு, 50 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்கள் உடன் செல்ல வேண்டும். அரசு பஸ்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

கலைப்பாட தொழில்நுட்பதேர்வில் மறுகூட்டல் தேவை

சென்னை,:'கலைப் பாட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வழங்க வேண்டும்' என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கலை, ஓவியம், இசை, கணிதம் உள்ளிட்ட, சிறப்புப் பாடங்கள் உள்ளன; இவற்றை கற்பிக்க, சிறப்பாசிரியர்கள் உள்ளனர். கலைப் பாடம் படித்துள்ளதுடன், தமிழக அரசு நடத்தும், தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் தான், சிறப்பாசிரியர் பணி கிடைக்கும்.

அதன்படி, தொழில்நுட்ப தேர்வுக்கு, 14ம் தேதி, விண்ணப்பப் பதிவு துவங்கியது; 20ல் முடிந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுக்கு பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முறையை அமல்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார், செயலர் சாந்தகுமார் ஆகியோர், அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவியை சந்தித்து மனு அளித்து உள்ளனர்.

மலேசியாவுக்கு இந்திய ஆசிரியர்கள்

மலேசியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மலேசியர்களின் திறனை அதிகரிப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் புதன்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கிராமப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி அளிப்பதற்காக, இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் இந்திய ஆசிரியர்களைக் கொண்டு பயற்சியளிக்கப்படும் என்றார் அவர்.

போனஸ் சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்த ஒப்புதல் : மத்திய அமைச்சரவை அனுமதி

புதுடெல்லி: தொழிற்சாலை ஊழியர்களுக்கான போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.21 ஆயிரமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தற்போதுள்ள போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. 


இதன் மூலம் இனி மாதச்சம்பளம் ரூ.21 ஆயிரம் வரை வாங்குபவர்கள் போனஸ் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதேபோல் போனஸ் உச்சவரம்பு தொகையும் ரூ.3,500ல் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் தேர்தலை கருத்தில்கொண்டே பாஜ போனஸ் உச்சவரம்பை உயர்த்தியுள்ளதாக பல்வேறு கட்சி பிரமுகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பீகாரில் ஆளும் ஜனதா தள கட்சியின் ெசய்திதொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது, “போனஸ் உச்சவரம்பை உயர்த்தியுள்ளதால் பீகார் தேர்தலில் பாஜவுக்கு எந்த நன்மையும் கிடைக்காது” என்று கூறியுள்ளார்.

நாசா செல்ல வாய்ப்பு தரும் 'சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்'

மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் சிந்தனையை துாண்டும், 'சூப்பர் ப்ரெய்ன் சேலஞ்ச்' போட்டியை, 'எட் சிக்ஸ் பிரெய்ன் லேப் ஸ்கில் ஏஞ்சல்ஸ்' என்ற, நிறுவனம் அறிவித்துள்ளது;
பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.முதல் கட்டத் தகுதிப் போட்டி, நவம்பர், 14 முதல், 22 வரை, 'ஆன்லைனில்' நடத்தப்படுகிறது; இறுதி போட்டி, பின்னர் அறிவிக்கப்படும்.

இதுகுறித்து, 'எட் சிக்ஸ் பிரெய்ன் லேப்' நிறுவனர் சரவணன் சுந்தரமூர்த்தி கூறியதாவது:விளையாட்டு ஆர்வத்தை,சிந்தனை திறனாக வளர்க்க, இந்தப் போட்டியை நடத்துகிறோம்;ஆங்கிலத்தில், வினாக்கள் மற்றும் விளையாட்டுகள் இருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் லேப் டாப்பில், இணையதளம் மூலம் மட்டுமே பங்கேற்கலாம்.

ஒரு மணி நேரம் மட்டும் விளையாட அனுமதி. குறைந்த நேரத்தில், யார் சரியான விடைகளுடன், விளையாட்டை நிறைவு செய்கிறார்களோ, அவர்களுக்கே அதிக மதிப்பெண். வகுப்பு மற்றும் வயதுக்கேற்ப, விளையாட்டு வகை வழங்கப்படும்.வெற்றி பெறுவோரில் ஐந்து பேர், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கும், மூன்று பேர், சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். மேலும், 7,000 பேருக்கு, லேப்டாப், ஐ பேட் மற்றும் விளையாட்டு, 'கிட்' உட்பட, பலபரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்பது எப்படி? போட்டியில் பங்கேற்க, www.skillangels.com மற்றும் www.thesuperbrainchallenge.com என்ற இணையதளத்தில், பதிவுக் கட்டணத்துடன், நவம்பர், 22 வரை விண்ணப்பிக்கலாம். பதிவு செய்தவர்களுக்கு தனியாக, 'லாக் இன்' முகவரி வழங்கப்படும். மாதிரிப் போட்டிகள், மேலே குறிப்பிட்ட, இரண்டு இணையதள முகவரிகளில்உள்ளன. அவற்றை பயிற்சி எடுத்துப் பார்க்கலாம். விவரங்களுக்கு, 044- - 664 698 77 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நடுநிலைப் பள்ளியில் 6,7,8 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு 05.11.2015 மற்றும் 06.11.2015 ஆகிய நாட்களில் "Value Integrated Teaching and Learning (VITAL)" என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள்


CTET September 2015 Examination OMR Sheet Image & Answer key Declared

இந்த அப் தான் உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் செயல்திறன் அதிகம் பாதிக்கிறது

 எவ்வளவு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்கினாலும் நாளடைவில் அதன் பேட்ரி லைப்பும், செயல்திறனும் குறைந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் சில அப்ஸ்.


சமீபத்தில் இது தொடர்பாக ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான ஏ.வி.ஜி. சுமார் ஒரு மில்லியன் ஆண்ராய்ட் பயனாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில் ஸ்னாப்ஷாட் செயலிதான் ஆண்ட்ராய்ட் போனில் அதிகளவு டேட்டா, கேமரா மற்றும் ஜி.பிஎ.ஸ். பயன்படுத்துவதாகவும், இதன் காரணமாக போனின் பேட்ரி மற்றும் செயல்திறனை குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வில் ஐ.ஓ.எஸ். கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!

* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.


*நவீன இயந்திரங்களின் வருகையால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘கோர்’ பொறியியல் துறைகளில் 30 சதவீத வேலை வாய்ப்புகள் காணாமல் போகும். அதேசமயம், டிஜிட்டல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் உதயம், அதிக பணியாளர்களை நியமிக்கும் நிலையை உருவாக்கும்.

* பிக்-டேட்டா அனலிடிக்ஸ், மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், பிளாட்பார்ம் இன்ஜினியரிங், கிராபிக் டிசைன் இன்ஜினியரிங், நியு யூசர் இன்டர்பேஸ் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் ஆகிய புதிய துறைகளில் தேவைப்படும் திறனாளர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமான அளவில் இருக்கும்.

* முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யும் முறையை அதிகளவில் கையாளும். அதன்படி, வரும் 2020ம் ஆண்டிற்குள் 22 சதவீத பணியாளர்களை ஆன்லைன் மூலம் தேர்வு செய்யும்.

* பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டத்தை தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றத் தவறினால், வேலை வாய்ப்புக்கு தகுதியுடைய பட்டதாரிகளின் எண்ணிக்கை 20 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும்.

* எந்த இன்ஜினியரிங் படிப்பை படித்திருந்தாலும், ‘கோடிங்’ திறன் உள்ளவர்களுக்கு சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

* ஈவன்ட் மேனேஜ்மென்ட், மீடியா, விஷûவல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

* கிரியேட்டிவ் மற்றும் டெக்னிக்கல் ரைட்டிங் போன்ற புதிய துறைகளில் பணியாளர்களுக்கான தேவை எக்கச்சக்கமாக இருக்கும்.

* ஹெல்த் கேர் துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உயரும்.

* சட்டத்துறையில், கார்ப்ரேட் சட்ட ஆலோசகளின் தேவையும் அதிகளவில் இருக்கும்.

* கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தேவை சொல்லிக்கொள்ளும் வகையில் அமையும்.

* வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் பணியாளர்களின் தேவை அபரிமிதமாக இருக்கும்.

* மாற்றத்தக்க சக்தி துறையில் பணியாளர்களின் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 15 சதவீதத்தை தொடும்.

* அதிக தேவை மிகுந்த துறைகளாக பொறியியல், வங்கி, நிதி, கணிதம் மற்றும் சேவை ஆகியவை இருக்கும்.

* ஒருவரின் முன்னேற்றத்தில் ஆங்கில வழிதொடர்பு, பகுத்தாய்வு திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

-கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

ஊதிய முரண்பாட்டை போக்க முற்றுகை போராட்டம் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு - ஜாக்டா - பி.கே.இளமாறன்.

திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வுக்கு அக்., 12 ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவ., 11. தேர்வு நாள் ஜன.,24. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில்லை.
தேர்வு முறை: பொதுஅறிவு 75 வினாக்கள். இது பட்டப்படிப்பு தரத்தில் கேட்கப்படும். திறனறி தேர்வில் 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் ஆகியவை பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். 300 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி தேர்வு எழுத வேண்டும்.
கடந்த இரண்டாண்டுகளாக திறனறி தேர்வுகள் நடத்தப்படுவதால், முதல்முயற்சியில் தேர்வெழுதுபவர்களுக்கு அதிக வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. எழுத்துத் தேர்வின் மூலமே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நேர்காணல் கிடையாது.
எதிர்பார்ப்பில் வி.ஏ.ஓ., தேர்வு: அடுத்ததாக வி.ஏ.ஓ., மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. வி.ஏ.ஓ., தேர்வுக்கான 800 காலிப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 21 - 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுஅறிவு 75 வினாக்கள், கிராம நிர்வாக நடைமுறைகள் குறித்து 25 வினாக்கள், திறனறி தேர்வு 20 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும்.
குரூப் 4 தேர்வு: பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் 2500 காலிப்பணியிடங்கள் உள்ளன. குரூப் 4 தேர்விற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.பொது அறிவு 75 வினாக்கள், திறனறி தேர்வு 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயது, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் 32 வயது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வயது வரம்பில்லை. 
பொதுப்பிரிவினருக்கு இச்சலுகை கிடையாது. பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அளவில் திறனறி வினாக்கள் கேட்கப்படும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு பாடத்தை படிக்க வேண்டும்.குரூப் 2ஏ தேர்வுக்கு உங்களை தயார்படுத்திக்கொண்டால், தொடர்ந்து நடக்கும் குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வுகளுக்கும் அது பயனுள்ளதாக அமையும், என்றார்.

போனஸ் சம்பள உச்சவரம்பு உயர்வு: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு தொகையை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரமாக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


கடந்த 1965ல், நிறைவேற்றப்பட்ட, போனஸ் சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே, போனஸ் சட்டம் பொருந்தும். போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மற்றும் போனஸ் தொகை, கடைசியாக, 2006ல், உயர்த்தப்பட்டது. இந்நிலையில், போனஸ் மற்றும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்த வேண்டுமென, நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. செப்டம்பர் 2ல், தொழிற்சங்கங்கள், ஒரு நாள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அப்போது, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்திய மத்திய அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று(21-10-15) நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது; இனி, 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுவோருக்கு போனஸ் கிடைக்கும்.

மேலும், தொழிலாளர்களுக்கான போனஸ் உச்சவரம்பாக உள்ள, 3,500 ரூபாயை இரட்டிப்பாக்கியுள்ள மத்திய அமைச்சரவை, அதை, 7,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. விரைவில் கூடவுள்ள பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத் தொடரில், இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

* இந்தியா - எகிப்து இடையேயான, கடல்சார் போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்துக்கும், வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணும் விஷயத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

* பயங்கரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில், மாலத்தீவு நாட்டுடன் இணைந்து செயல்படுவதற் கான ஒப்பந்தத்துக்கும் ஓப்புதல் அளிக்கப்பட்டது. 

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவிபெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014-15ம் ஆண்டுக்கான கணக்குத்தாட்களை பதிவிறக்கம் செயது கொள்ளலாம்

சித்தா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு 25-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: 4 நாட்கள் நடக்கிறது

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2015-16ம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர் வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளில் சேர தமிழகம் முழுவதும் இருந்து 5,075 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான 4,913 பேருக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இது, www.tnhealth.org என்ற சுகா தாரத்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந் தாய்வு சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவ மனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதல் கட்ட கலந் தாய்வுக்குப் பிறகு காலி இடங்கள் இருந்தால் 31-ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வில் பங்கேற்குமாறு மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு இன் னும் அனுமதி கிடைக்கவில்லை. விரைவில் அனுமதி கிடைத்து விடும். கலந்தாய்வு குறித்த மேலும் தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்’’ என்றார்.

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் இத்தேர்வில் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்துகொள்ள விரும்பு வோர் நவம்பர் 18-ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு (தொலைபேசி எண்: 044-24410025) செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா?

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது.  கலந்தாய்வின்போது பல காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.
இவ்வாறு கூடுதலாக கவனிப்பதால் பிளஸ் 2 பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர்  கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்கள் மறைக்கப்பட்டன. இதனால் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் பிளஸ்2 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் முதுநிலை ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால்  முதுநிலை ஆசிரியர்களுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனால் ஏற்படும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாவது பொது கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும். 
இவ்வாறு தெரிவித்தனர்.ஏற்கெனவே, கலந்தாய்வு மூன்று மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்ட நிலையில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆள் இல்லாமல் காலியாக உள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியையும் கவனிக்க முடியாமலும்,  பாடத்தை முழு ஈடுபாட்டுடன் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாமலும் திணறுகின்றனர்.

எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!

* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.


*நவீன இயந்திரங்களின் வருகையால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘கோர்’ பொறியியல் துறைகளில் 30 சதவீத வேலை வாய்ப்புகள் காணாமல் போகும். அதேசமயம், டிஜிட்டல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் உதயம், அதிக பணியாளர்களை நியமிக்கும் நிலையை உருவாக்கும்.

* பிக்-டேட்டா அனலிடிக்ஸ், மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், பிளாட்பார்ம் இன்ஜினியரிங், கிராபிக் டிசைன் இன்ஜினியரிங், நியு யூசர் இன்டர்பேஸ் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் ஆகிய புதிய துறைகளில் தேவைப்படும் திறனாளர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமான அளவில் இருக்கும்.

* முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யும் முறையை அதிகளவில் கையாளும். அதன்படி, வரும் 2020ம் ஆண்டிற்குள் 22 சதவீத பணியாளர்களை ஆன்லைன் மூலம் தேர்வு செய்யும்.

* பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டத்தை தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றத் தவறினால், வேலை வாய்ப்புக்கு தகுதியுடைய பட்டதாரிகளின் எண்ணிக்கை 20 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும்.

* எந்த இன்ஜினியரிங் படிப்பை படித்திருந்தாலும், ‘கோடிங்’ திறன் உள்ளவர்களுக்கு சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

* ஈவன்ட் மேனேஜ்மென்ட், மீடியா, விஷûவல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

* கிரியேட்டிவ் மற்றும் டெக்னிக்கல் ரைட்டிங் போன்ற புதிய துறைகளில் பணியாளர்களுக்கான தேவை எக்கச்சக்கமாக இருக்கும்.

* ஹெல்த் கேர் துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உயரும்.

* சட்டத்துறையில், கார்ப்ரேட் சட்ட ஆலோசகளின் தேவையும் அதிகளவில் இருக்கும்.

* கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தேவை சொல்லிக்கொள்ளும் வகையில் அமையும்.

* வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் பணியாளர்களின் தேவை அபரிமிதமாக இருக்கும்.

* மாற்றத்தக்க சக்தி துறையில் பணியாளர்களின் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 15 சதவீதத்தை தொடும்.

* அதிக தேவை மிகுந்த துறைகளாக பொறியியல், வங்கி, நிதி, கணிதம் மற்றும் சேவை ஆகியவை இருக்கும்.

* ஒருவரின் முன்னேற்றத்தில் ஆங்கில வழிதொடர்பு, பகுத்தாய்வு திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

-கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

அக இ - புதியதாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 02.11.2015 முதல் 06.11.2015 வரையிலும், உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.11.2015 முதல் 20.11.2015 வரையிலும் மாவட்ட அளவில் நடத்த உள்ளது.




கல்விக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது:ஒரு சமுதாயம், நாடு முன்னேற கல்வியே அடித்தளம். இதற்கான விதையை பள்ளியில் விதைத்தால் தான் நோக்கம் நிறைவேறும் என்பதற்காக அரசு 14 வகை உபகரணங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

இனி நோட்டு புத்தகமும் இலவசமாக கிடைக்கும். இவை தவிர பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளியில் படிக்க வைக்க வேறு எந்த பொருளாவது கடையில் பணம் தந்து வாங்க வேண்டியிருக்கிறது என்றால், அதுபற்றி தெரிவிக்கலாம். இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, அதையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவு, உடை, இருப்பிடம் போன்று,நவீன கால மாற்றத்திற்கேற்ப கம்ப்யூட்டர் பயன்பாடும் மாறியுள்ளது என்றார். 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 4.20 லட்சம் பேர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் 2003–ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கு பிரதி மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவுத் தொகையை அரசும் தன் பங்காக செலுத்தும். அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்குத் தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிட்டு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
விடுபட்ட கணக்குகள் விடுபட்ட 21 லட்சத்து 70 ஆயிரத்து 464 வரவு நேர்வுகள், கருவூலக் கணக்குத் துறையால் சரிபார்க்கப்பட்டு உரிய அரசுப் பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு 2014–15ம் ஆண்டிற்கான கணக்குத் தாள்கள் (அக்கவுன்ட் சிலிப்ஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் யாரும் விடுவிக்கப்பட்டு இருந்தாலோ, குறைகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அரசு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வலைதள முகவரி அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014–15ம் ஆண்டுக்கான கணக்குத் தாள்களை, URLhttp://218.248.44.123/auto_cps/public என்ற வலைதள முகவரியில் அவரவர் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக இ - 2015-16ம் ஆண்டிற்கு தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "EVERYDAY SCIENCE AND SIMPLE PROJECTS ON CCE" மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "PREPARATION FOR COMPETITATIVE AND TALENT SEARCH EXAMINATION" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் நடைபெறவுள்ளது