யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/1/18

வருமானவரி சில குறிப்புகள்

1.வருமானவரி படிவம் 16
மே மாதம் 31 ஆம் தேதிக்குள் சம்பளப்பட்டுவாடா அலுவலரிடமிருந்து பெறப்பட வேண்டும்.
============

2.ஜுலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி படிவங்களை இணைய தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
==============
3.ஜூலை 31 ஆம் தேதிக்குப் பின்னர் ரூ5000 அபராதம் கட்டிய பின்னரே சமர்ப்பிக்க முடியும்
=============
4.ரூ 2,50,000 க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக வருமான வரி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
==============
5. 80 c....1,50,000 கழித்தபின்னர் cps  தொகை அதிகம் இருந்தால் ரூ 50,000 வரை 80 CCD (1B)   யில் மேலும் கழித்துக்கொள்ளலாம்.
==============
6.வீட்டுவாடகைப்படி மாதத்திற்கு ரூ 8333 வீதம் ஆண்டிற்கு ஒரு இலட்சம் வரை கழிக்கலாம்.அதற்கு மேல் கழிக்க வீட்டு உரிமையாளரின்  PAN NO
RECEIPTS
முதலியன சமர்ப்பிக்க வேண்டும்.
===============
7.உங்கள் பெற்றோருக்கு வீட்டு வாடகை தருவதன் மூலம் HRA படியை கழித்துக்கொள்ளலாம்.
=============
8. வரி விபரம்
ரூ 2,50,000-NIL
........................
2,50,001முதல் 5,00,000 முடிய
5%
அதிகபட்சம்
(ரூ 12,500)
........................
5,00,000 முதல்
10,00,000 முடிய
20%
அதிகபட்சம் (ரூ1,00,000)
.........................
ரூ 10,00,000 மேல் 30%
இதற்கு மேல் தாங்காது சாமி.
============
9. TAXABLE INCOME: ரூ வரை 3,50,000 வரை ரூ 2500 கழித்துக்கொள்ளலாம் .
==============
10.வழக்கம்போல் தொழில்வரி முழுவதையும் கழித்துக்கொள்ளலாம்.

DEE - ஊராட்சி / நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது-நிலுவைகள் விவரங்கள் சார்பு!

மொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க டோல் - ஃபீரி 14546

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை வருகின்ற ஜனவரி 1 முதல் செயற்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.


மொபைல்-ஆதார்

மத்திய அரசின் அறிவிப்பின் படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருகின்ற ஐனவரி 1 முதல், ஆதார் எண்ணை இணைக்க மூன்று விதமான சுலபமான வழிமுறைகளை செயற்படுத்த உள்ளது. அதன் விபரம் பின் வருமாறு ;-

1 . மொபைல் எண் வாயிலாக ஐவிஆர்எஸ் ((IVRS)) எனப்படும் அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2 . OTP எனப்படுகின்ற ஒரு முறை கடவுச்சொல் கொண்டு மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது.
3. இறுதியாக, ஆதார் எண்ணை இணைக்க பிரத்தியேக ஆப் ஒன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல், ஏர்செல்,ஐடியா போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் ஆதார் எண் இணைக்க மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.
இதுவரை அருகாமையில் உள்ள ஸ்டோர்களுக்கு சென்று ஆதார் எண்னை இணைக்க வேண்டிய நிலை இருந்த சூழ்நிலையில், முதற்கட்டமாக ஆதார் இணைக்கப்பட வேண்டிய மொபைலில் இருந்து அழைக்கும் முறையை அறிந்து கொள்ள பினபற்ற வேண்டிய வழிமுறை பின் வருமாறு ;-
1 . உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற ஐவிஆர்எஸ் (IVRS) எனண்ணுக்கு அழையுங்கள்
2.அழைத்த பின்னர் மொழி தேர்ந்தெடுத்த பிறகு இந்திய பிரஜையா அல்லது வெளிநாட்டவரா என்ற கேள்விக்கு பதிவு செய்ய வேண்டிய எண்னை அழுத்திய பிறகு ஆதார் எண் இணைக்க என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. உங்கள் ஆதார் எண் பதிவு செய்த பிறகு உங்கள் ஆதார் எண் உறுதி செய்யப்பட உங்களது மொபைல் எண்னுக்கு OTP மெசேஜ் வந்து சேரும் அதனை உறுதிப்படுத்திய பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்து சேரும்.

உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

அனைத்துவகை ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும்பணியாளர்கள் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வர - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

ஜாக்டோ ஜியோ -தொடர் முழக்க போராட்டம்- 06.01.2018- கோரிக்கைகள்



'நெட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை, பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு, நவம்பரில் நடந்தது; 9.30 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இவற்றை, cbsenet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

பிளஸ் 2 தேர்வுக்கு இன்று 'தத்கல்' பதிவு

சென்னை, பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்று முதல், 'தத்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 பொது தேர்வை, நேரடியாக தனித்தேர்வர்கள் எழுதும் முறை, இந்த கல்வி ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
அடுத்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 பொது தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே, பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியும்.அதனால், இந்த கல்வி ஆண்டில், வரும் மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொது தேர்வில் மட்டுமே, தனித்தேர்வர்கள், நேரடியாக பங்கேற்க முடியும். இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.அதில், விண்ணப்பிக்க தவறியோர், 'தத்கல்' முறையில், இன்று முதல், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான ஆன்லைன் மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

வேலூரில் ஜனவரி 6-ம் தேதி நடக்கிறது பாஸ்போர்ட் மேளா!

வேலூரில் ஜனவரி 6-ம் தேதி அன்று சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது. இந்த மேளா, வேலூரில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் நடைபெறும். சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இந்தச் சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்துகிறது.


வேலூர் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம், மற்ற வார நாள்களைப் போல் ஜனவரி 6-ம் தேதி அன்று இயங்கும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளப்படும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் அனைவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக் கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மேளாவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட ஏ.ஆர்.என். பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். மேலும் தேவையான அனைத்து ஆவணங்களை அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். இந்த மேளாவிற்கான சந்திப்பு முன்பதிவு ஜனவரி 03, 2018 (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்குத் தொடங்கியது.

பாஸ்போர்ட் மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான முன்பதிவு நேரம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) விண்ணப்பங்கள், நிறுத்திவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்ய வருபவர்கள் இந்த மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக்: தேர்ச்சி பெறாதோர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் தேர்வு எழுத தொழில்நுட்பக் கல்வித் துறை சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் வருகிற ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் பட்டயத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். அதனுடன் மதிப்பெண் பட்டியல் கட்டணம் ரூ. 30, பதிவுக் கட்டணம் ரூ. 25 கட்டணங்களையும் சேர்த்து மாணவர்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாகச் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். 
அவ்வாறு தேர்வுக்குப் பதிவு செய்ய பிப்ரவரி 7 கடைசி நாளாகும். அபராதத் தொகை ரூ. 100 செலுத்தி, பிப்ரவரி 14 வரை தேர்வுக்குப் பதிவு செய்யலாம். 
அதன் பிறகு, தட்கல் முறையில் ரூ. 500 அபராதம் செலுத்தி மார்ச் 9-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைந்தது ஏன்? – அரசுப் பள்ளி ஆசிரியர்களை வருத்தெடுத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து, அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை ஆட்சியர் கந்தசாமி சரமாரியாக கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்தார்.


▪ராந்தம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திடீரென ஆய்வு நடத்தினார். பின்னர் செய்யாறு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்தது என அவர் கேள்வி எழுப்பியதற்கு ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டியதால் ஆட்சியர் ஆத்திரம் அடைந்தார். 6ஆம் வகுப்பில் இருந்தே முறையாக கற்றுக் கொடுத்து இருந்தால் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்படுகிறது என்று அவர் கடிந்து கொண்டார்.

▪ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு விட்டு, அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று கூறிய அவர், இதனால் தான் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் கண்டித்தார். ஆசிரியர்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

▪இதையைடுத்து செய்யாறு கல்வி மாவட்ட மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நகைச்சவை நடிகர் தாமு கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்