யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

நமது SPD மேடம் அவா்களின் ஆனைப்படி அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.


நாளை முதல் கனமழை பெய்யும், ஆனா, வெள்ளம்லாம் வராது... நம்பிக்கை தரும் "வெதர்மேன்"

சென்னை: கடந்தாண்டைப் போலவே நாளை பெய்ய இருக்கும் கனமழையால் வெள்ளம் வரலாம் என யாரும் அஞ்சத் தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மழை என்று வந்து விட்டாலே பலருக்கும் ரமணன் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சமூக வலைத்தளவாசிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் போடும் பதிவுகள்தான் நினைவுக்கு வரும். கடந்தாண்டு சென்னை வெள்ளம் வந்த போது அவர் போட்ட பதிவுகள் பலருக்கும் உதவி செய்தது. எனவே, இந்தாண்டும் இவரது பேஸ்பும் பக்கத்தை பலரும் கவனித்து வருகின்றன.
இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டும் இதே டிசம்பர் 1ம் தேதி கனமழை பெய்ததால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டும் அதே நாள் கனமழை பெய்ய இருப்பதால் மக்கள் மத்தியில் வெள்ளம் குறித்த பீதி அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த பீதி தேவையற்றது, தேவையற்ற புரளிகளைப் பரப்ப வேண்டாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை இதுதான். முன்பு உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகளும் வேறு திசையில் நகர்ந்ததால், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவியது.
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, டிசம்பர் 1ம் தேதி தமிழ்நாடு கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது டிசம்பர் 1 அல்லது 2ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்கலாம். அப்போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.
சென்னை வரலாற்றில், இந்த நவம்பர் மாதம்தான் மிகவும் வறட்சியான மாதமாக பதிவாகியுள்ளது. ஆனால், அதே சமயம், இந்த டிசம்பர் 1ம் தேதி பெய்யும் கன மழை காரணமாக நிச்சயம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த ஆண்டைப் போல வெள்ளம் ஏற்படும் என்று புரளியை நம்ப வேண்டாம்.
அதே சமயம், சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும். கடலூர் முதல் புதுசேரி வரையில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.
டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். படிப்படியாக அடுத்தடுத்து நாட்களில் மழை குறையும். 2 மற்றும் 3ம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMHJbWiuAbLSvmsFvCjXuLxHaQ9hc4bgKkJOVQI4QSJyWBJaw_RG6tVCo03A4S7nNKuUM_B-ONnXkgZh3mtD-FjMAXaWSa_jcfI7n6WGzZgi37jJws9jUD-k6f_l05dWbQ9rggOZemV48/s320/IMG-20161129-WA0365.jpg

டெல்லி ஜந்தர்மந்தரில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்

செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது

புதுடில்லி:'வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின், நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது. 
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால்எழுத்து மூலம் அளித்த பதில்:வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளை வினியோகிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது. 


சிறிய தொகை

கிராமப் பகுதிகளின் தேவைகளுக்காக, 100ரூபாய் போன்ற சிறிய தொகை நோட்டுகளை சப்ளை செய்யும்படி, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ராஜ்யசபாவில் அளித்த மற்றொரு பதிலில், ''வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப அதிகரிக்கும்படி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது,'' என்றார்.

பஸ் ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்

சென்னை: அரசு பஸ் ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாயை, ரொக்கமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. 
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில், 1.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காரணமாக, இந்த மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாய் மட்டும் ரொக்கமாக வழங்க, போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில், மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும், 22 ஆயிரத்து, 400 ஊழியர்கள் பயனடைவர். அவர்கள், ஒரு வாரத்திற்கு, ஏ.டி.எம்.,களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு நிதியுதவி

சென்னை:நிதியுதவி பெற விரும்பும், ஆதிதிராவிட இளைஞர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டய கணக்கர், செலவு கணக்கர் தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிட இளைஞர்கள், சுயமாக தொழில் செய்ய, நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, நிதியுதவி பெற விரும்புவோர், http://application.tahdco.com என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அரசு பள்ளிகளுக்கு 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்'

சிவகங்கை: தமிழகம் முழுவதும் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தில் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கழிப்பறைகள் பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயினும் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன.
இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்கவும், சிறப்பாக பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தவும் மாநில புதுமை நிதி மூலம் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தை செயல்படுத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.முன்னோடி திட்டமாக மாவட்டந்தோறும் சிறப்பாக கழிப்பறைகளை பராமரிக்கும் ஆறு பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பள்ளி கழிப்பறைகள் நவீனப்படுத்தப்படும்.
ஆண், பெண் கழிப்பறைகளுக்கு தனித்தனியாக 2 ஜன்னல்கள், கதவு, கை கழுவுமிடம், கண்ணாடி, சோப்பு, டவல், கழிப்பறை சுவர்களில் வண்ணமயமான சித்திரங்கள், தண்ணீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு பள்ளிகளை தேர்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி

1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 
2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு

வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.

சுமார் 10.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம் வட்டத்தில் 151 கடைகள், நெமிலியில் 115 கடைகள், வாலாஜாவில் 186, ஆற்காட்டில் 159, காட்பாடியில் 184, வேலூரில் 164, அணைக்கட்டில் 105, குடியாத்தத்தில் 114, பேர்ணாம்பட்டில் 96, ஆம்பூரில் 143, வாணியம்பாடியில் 123, நாட்டறம்பள்ளியில் 85, திருப்பத்தூரில் 190 கடைகள் என 1,815 நியாய விலைக் கடைகளில் செயலி முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு செயலியை இயக்க மாவட்டத்தில் 8 மையங்களில் செயல்முறை பயிற்சி அளிக்கப்
பட்டுள்ளது.
 நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் செயலியில் குடும்ப அட்டையில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர், ஆதார் எண், செல்லிடப்பேசி போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுவதுடன், பொருள்கள் வாங்கிய விவரம், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.
 இந்தத் திட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இதுவரையில் 64 சதவீத அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண், செல்லிடப்பேசி விவரங்களை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்துள்ளனர்.
 ஆதார் அட்டை எடுக்கத் தவறியவர்களுக்கு அட்டை எடுக்கும் பணி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் சுமார் 50,000 பேர் இணைந்துள்ளனர்.
 மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 வட்டங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டலக் குழுவானது, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, ஆதார் அட்டையை நியாய விலைக் கடைகளில் இணைக்கும் முயற்சி எடுக்கவுள்ளது.  
இதுகுறித்து பொதுவிநியோகத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம், போலி கார்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண், செல்லிடப்பேசி விவரம் இணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
 நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைக்காத உறுப்பினர்களை இணைப்பதற்காக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை முதல் தொடங்கி சில நாள்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 நியாய விலைக் கடையில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினரின் ஆதார் அட்டை இணைக்க முடியாதவர்களின் பெயரை நீக்கம் செய்வதோ, பொருள்கள் வழங்குவதோ நிறுத்தப்பட மாட்டாது என்றார்.

லஞ்ச வழக்கு: ஊரீசுக் கல்லூரி செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூர் ஊரீசுக் கல்லூரியில் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்லூரியின் செயலர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், அண்ணா சாலையில் சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் செயல்படும் ஊரீசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பேராயர் ராஜவேலு, அப்போதைய கல்லூரி நிதியாளுநரும், தற்போதைய பொறுப்பு முதல்வரான எழில்கிறிஸ்துதாஸ் உள்பட 9 பேர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு, கல்லூரி நிர்வாகத்துக்கு திங்கள்கிழமை அனுப்பிய உத்தரவில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராயர் ராஜவேலுவை, கல்லூரிச் செயலர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து, நிர்வாகக் குழுவைக் கூட்டி மாற்றுச் செயலரை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல, பொறுப்பு முதல்வர் எழில்கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவரை புதன்கிழமை (நவ.30) பணி ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது. மேலும் வழக்கு முடிவடையும் வரையில் அவருக்குச் சேர வேண்டிய பணி பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொறுப்பில் இருந்து எழில்கிறிஸ்துதாஸ் செவ்வாய்க்கிழமை விலகினார்.
கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள உத்தரவு குறித்து பேராயர் ராஜவேலுவின் கருத்தை அறிய தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

டாக்சி டிரைவரின் வங்கி கணக்கில் ரூ.9806 கோடி அதிர்ச்சியில்...

டாக்சி டிரைவரின் வங்கி கணக்கில் ரூ.9806 கோடி அதிர்ச்சியில்...

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங், டாக்சி டிரைவர். இவருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் கணக்கு உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இவரது வங்கி கணக்கில் 98,05,9510,231 ரூபாய் கணக்கு வரவு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மறு நாளே அவர் கணக்கில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது குறித்து பல்வீந்தர் சிங் பலமுறை வங்கியில் சென்று கேட்டும் எந்த பதிலும் இல்லை.தற்போது இது தொடர்பாக வருமான வரிசோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பல்வீந்தர் சிங் கூறியதாவது:-

நான் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் கணக்கு தொடங்கினேன். எனது கணக்கில் மொத்தம் ரூ.3 ஆயிரம் இருந்தது.எனது கணக்கில் ரூ.9806 கோடி வரவு வைக்கபட்டது தொடர்பாக பல முறை வங்கிக்கு சென்றேன் ஆனால் யாரும் எந்தவித பதிலும் சொல்ல வில்லை.

அதே சமயம் எனது பழைய பாஸ் புக்கை வாங்கி கொண்டு 7 ந்தேதி புதிய பாஸ் புக் வழங்கினார்கள்.ஆனால் அதில் ஏற்கனவே எனது கணக்கில் வரவு வைக்கபட்ட 9806 கோடி கணக்கு விவரம் எதுவும் இல்லை.

வங்கியின் கிளை மேலாளர் ரவீந்தர் குமார் எந்த வித தகவலும் என்னிடம் கூற மறுத்து வந்தார்.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கியின் மேலாளர் குறிப்பிடும் போது இது தவறுதலாக பதிவு செய்யபட்டு உள்ளது. மறுநாள் அது சரிசெய்யப்பட்டு விட்டது

இனி பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாதா? மகிழ்ச்சி தகவல்

இனி பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாதா? மகிழ்ச்சி தகவல்

கடந்த 9 ஆம் தேதி முதல் வங்கிகளில் பணம் எடுக்க மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

அதன்படி, இனி வங்கியில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது மற்றும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி, வாரத்திற்கு ஒருவர் ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், இந்த தொகையும் பல தடவை பிரித்து எடுக்கவே அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், அவசர தேவைக்கு பணம் இல்லாமல் சிரமத்திற்கும் மக்கள் ஆளாகினர். இதனால், பலர் பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய யோசித்தனர்.

இதற்கிடையில், செல்லாமல் போன பழைய ரூபாய் நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்பட்டால் தான், மீண்டும் மக்களிடம் பணம் புழக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற முடிவு செய்த மத்திய அரசு, இது குறித்து நேற்று உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டது.

 இதன் பிறகு வங்கிகளில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவும் எடுக்கப்பட்டது.

அந்த முடிவை ரிசர்வ் வங்கி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதன்படி இன்று (29-ந் தேதி செவ்வாய்க்கிழமை) முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழி ஏற்பட்டுள்ளது.

சில வங்கிகளில் இந்த நடைமுறை இன்றே அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் கேட்ட கூடுதல் பணத்தை வழங்கினார்கள்.

அதே சமயம், வங்கிகளில் போதிய பணம் இல்லாததால், மக்களுக்கும் தற்போது சிறு சிறு தொகையாகவே வழங்கப்படுவதாக, சில வங்கிகள் தெரிவித்துள்ளன.

ஜியோவின் அதிரடி

சென்னை: சேவையை தொடங்கிய 3 மாத காலத்தில் 5 கோடி வாடிக்கையாளர்களை கடந்து ஜியோ நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தனது 4G சேவையைத் தொடங்கியது.

ஜியோ தனது சேவையை ஆரம்பித்து மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில், தற்போது 5 கோடி வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

ஒரு நாளைக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் தன் சேவைக்குள் இணைத்ததாக கூறப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்துக்கு 5 கோடி வாடிக்கையாளர்களை கடக்க 12 ஆண்டுகளும், வோடாபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 13 ஆண்டுகளும் ஆன நிலையில்

 ஜியோ நிறுவனம் இந்த சாதனையை 3 மாதங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளது குறைந்த காலத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களை தனது சேவைக்குள் கொண்டு வருவதே ஜியோவின் இலக்கு என்று அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறி இருந்தார்.

நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்று : இது டிசம்பர் மாத எச்சரிக்கை அதிர்ச்சி தகவல்

நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்று : இது டிசம்பர் மாத எச்சரிக்கை அதிர்ச்சி தகவல்

சென்னை, நவ.29 (டி.என்.எஸ்) கடந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளை தண்ணீரில் தத்தளிக்க வைத்த டிசம்பர் பேய் மழையை யாராலும் மறந்திருக்க முடியாது.

100 வருடங்களுக்குப் பிறகு பார்த்த அத்தகைய கன மழை தற்போது மீண்டும் வரும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பு இருப்பதால், மக்கள் சற்று பீதியடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கையும், மக்களிடம் நல்லா கிளப்புகிறது பீதியை.

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்வதோடு, நொடிக்கு 58 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை முதல் தமிழக மீனவர்கள் யாருடம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் உடனடியாக கரைக்குத் திரும்புங்கள், என்று தெரிவித்துள்ளார்.

ஆக, கடந்த ஆண்டு டிசம்பர் சம்பவம் இந்த ஆண்டும் நிகழும் போல!

மது மயக்கத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் : அதிர்ச்சி செய்தி

மது மயக்கத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் : அதிர்ச்சி செய்தி

கன்னியாகுமரி மாவட்ட  ஆசிரியர் மது அருந்திவிட்டு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு அரசு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்து பாடம் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், தமிழ் ஆசிரியர் சுரேந்திரன் என்பவர் பள்ளி மாணவிகளிடம் மிகவும் ஆபாசமான வார்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால் கோபம் கொண்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் குழித்துறை கல்வி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் மற்றும் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்துல் கலாம் நினைவிடத்தில் வெண்கல சிலை அகற்றம்

அப்துல் கலாம் நினைவிடத்தில் வெண்கல சிலை அகற்றம்


ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடப்பதால், அங்கிருந்த கலாம் வெண்கல சிலை அகற்றப்பட்டுள்ளது.


ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சமாதி உள்ளது. ஜூலை 27ல், சமாதி முன், 6 அடி உயரத்தில் அப்துல் கலாம் வெண்கல சிலை நிறுவி, நினைவிடம் அமைக்க மத்திய அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

இந்நிலையில், 15 கோடி ரூபாய் செலவில், நினைவு மண்டபம் அமைக்கும் பணி, முழுவீச்சில் நடப்பதால், இதற்கு இடையூறாக இருந்த கலாம் வெண்கல சிலையை அகற்றி, பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.

சிலை இருந்த பீடம், அடித்தளத்தை இடித்தனர்.அப்பகுதியில், கட்டுமானப் பொருட்கள் குவிந்து கிடப்பதால், அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள், நுழைவாயில் முன், கலாம் சிலை இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

8 வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவருக்கு வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், புதன்கிழமை (நவ.30) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை பெற்றுத் தரும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்
அவ்வப்போது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்
நடத்தப்படுகின்றன.


அதன்படி, புதன்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முகாம் தொடங்குகிறது.

இந்த முகாமில், கோவை, சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான இளைஞர்களை தேர்வு
செய்கின்றனர்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள், ஐடிஐ, பட்டயம், பி.எட்., படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜந்தர்மந்தரில் அனைத்திந்திய ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

TET Genuineness Apply Form

Important GO Details

அரசானைகள் GO'S

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.


1.G.O.No. 270  Dt : OCTOBER 22, 2012
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

2.G.O.No. 229 Dt : செப்டம்பர் 4, 2012
அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்

3.G.O.No. 123 Dt : may 17, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

4.G.O.No. 178 Dt : July 12, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

5.G.O.No. 270 Dt : July 10, 2012
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்

6.G.O.No. 264Dt : July 6, 2012
CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை

7.G.O.No. 243 Dt : June 29, 2012
புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்

8.G.O.No. 96 Dt : June 18, 2012
திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்

9.G.O.No. 140  Dt : June 11, 2012
2012 - 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012

10.G.O.No. 133  Dt : June 14, 2012
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012

11.G.O.No. 203 Dt : June 8, 2012
INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government - Interest rates for the year 2012-2013 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்

12.G.O.No. 123  Dt : may 17, 2012
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்

13.G.O.(Ms).No.139 Dated: 27.4.2012.
NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No139

14.G.O.(Ms).No.56 Dated: 24.4.2012.
B.Ed Special Educaton is equivalent to B.Ed General Education

15.Lr No 35574  Dated: 23.4.2012.
CPS-Mode of recovery of subscription and arrear amount-clarification

16.G.O Ms. No. 20309/12/2011
முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் -

17. G.O Ms. No. 21223/12/2011
அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :

18.G.O Ms. No. 193 02/12/2011
2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக

19.G.O Ms. No. 190  29-11-2011
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.

20. G.O Ms. No. 325    28-11-2011
அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்-

21.GO MS No-325 Dated the 28/11/2011Lr No. 59617 /CMPC 2011 DT 25-11-2011
HIGHER SECONDARY SCHOOL HM/DEO - FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION

22.G.O Ms. No. 177 11-11-2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011

23.G.O Ms. No. 175   08-11-2011
முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011

24.G.O Ms. No. 29421-10-2011
பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011

25.G.O Ms. No. 994  20-10-2011
அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS No-994 Dated the 20th october 2011

26.G.O Ms. No. 273   03-10-2011
1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை

27.G.O Ms. No. 141  13-09-2011
பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் - தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011

28.G.O Ms. No. 141   13-09-2011
10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்

29.G.O Ms. No. 112     28-07-2011
சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை

30.G.O Ms. No. 51  16-06-2011
மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள் amendment

31.G.O Ms. No. 51  16-05-2011
மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள்

32.G.O Ms. No. 58    February 25, 2011
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை

33.GO No23 dated:12 –01—2011
Revised Fixation of pay for teachers –2010வருட அரசாணைகள்

34.Letter No.63305 dated: 08 –11—2010.
Fixation of pay of employees in the Selection Grade / Special Grade –

35.G.o No 391 dt 7/10/2010
மாற்று திறனாளிகளின் ஊர்தி படி ரூ 300 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தி அரசு ஆணை

36.G.o No 240 dt 18/8/2010
மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான கல்வி தகுதிகள்

37.GO.MS.NO-270 Dated-26-08-2010
implementation of one man commision38.GoMs.No 116 Dt 18/08/2010Openuniversity-pg degree not valid for Govt.service39.Go.no175Dt18/06/2010Withdrawal of acquittance for salaries credited in bank through-order issued ECS

40.Go ms no 157 Dt.10-06-2010
30 upgraded Hr.Sec.School List41.GO No 128 Dt 05/07/201010 day ALM training-reg

42.GO.MS.NO-154 Dated-10/06/2010
Upgraded Hr.Sec.School list 2010

43.GO.MS.NO-143 Dated-21/05/2010
Upgraded Hr.Sec.School list 2010

44.GO.NO-131 Dated-28/04/2010
ஆசிரியர் பொது மாறுதல்-நெறிமுறைகள்-2010 -1145.GO No 96 Dt 22-03-2010temporary Post Continuation Order -2007-2009 upgraded schools-order issued up to 30/06/20112009வருட அரசாணைகள்

46.GO No.445 dated: 10–09—2009.
House Building Advance - Rate of interestLr No.29593 dated: 25–08—2009.இறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குவது தொடர்பான விளக்கம்

47.Letter No.38561 dated: 16 –11—2009.
B.Sc Bio-chemistry is not equivalent to B.Sc Chemistry2007வருட அரசாணைக

48.Lr NO 356 Dated: 2-11-2007
முன் அனுமதியின்றி எம்.பில் முடித்தமைக்கு பின் ஏற்பு

49.Go NO 31 Dated: 06-02-2007
அரசு தேர்வுகளை நடத்த முதன்மை கண்காணிப்பாளராக வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம்.2006வருட அரசாணைகள்
50.GO NO 120 Dated: 18-07-2006
1-1-2006 முதல் தகுதிகாண் பருவம் துவங்குதல் குறித்து ஆணை

51.GO NO 99 Dated: 27-06-2006
1-1-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கல்

52.GO NO 73 Dated: 23-06-2006
வேலை நிறுத்த காலம்-பணிக்காலமாக வரன்முரைபடுத்தும் ஆணை

53.GO NO 73 Dated: 17-11-2006
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு எழுதவேண்டிய துறைதேர்வுகள் ஆணைDOWNLOADS2006 க்கு முந்தைய அரசாணைகள்

54.GO Ms No.11 dated: 09–02—2004.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் -ஒய்வு பெரும் நாள் -பணி நீட்டிப்பு இல்லை

55.G.O.No.1144 Dt : dec 13, 1993
பள்ளிக்கு வருட இடையில் எந்த நிகழ்ச்சிக்காகவும் அரசுவிடுமுறைவிட்டாலும் பள்ளிவேளைனாட்களில் குறைவு ஏற்ப்படகூடாது என்பதர்க்கானா அரசு ஆணை

56.GO Ms No.71 dated: 06–06—2002.
B.Sc(Bio-Chemistry) With B.Ed Physical science Eligible for B.T Science

57.GO Ms No.504 dated: 02 –11—2000.
Special Provident fund Scheme -2000 –click hereSpecial Provident fund Scheme -2000 rules
DOWNLOADTamilnadu education rules

58.GO.MS.NO-164 Dated-21/08/2000
M.Sc Applied chemistry is equivalent to M.Sc Chemistry

CCE - Worksheet 3 | Maths [English Medium] Question Papers.