யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

மது மயக்கத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் : அதிர்ச்சி செய்தி

மது மயக்கத்தில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் : அதிர்ச்சி செய்தி

கன்னியாகுமரி மாவட்ட  ஆசிரியர் மது அருந்திவிட்டு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு அரசு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்து பாடம் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், தமிழ் ஆசிரியர் சுரேந்திரன் என்பவர் பள்ளி மாணவிகளிடம் மிகவும் ஆபாசமான வார்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால் கோபம் கொண்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் குழித்துறை கல்வி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் மற்றும் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக