யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/12/18

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை---உடல்நலம் மருத்துவம்



1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 
மலம் கழிக்க வேண்டும். 
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். 
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், 
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். 
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் 
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். 
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, 
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. 
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; 
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம், 
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். 
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். 
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு 
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு 
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
வேர்க்கடலை,
பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும்,
ராகியை
சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!
ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???
தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!
உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
 இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.
இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை 
கட்டாயம் உறங்க வேண்டும்...

கேபிள், 'டிவி' கட்டணம் குறையாது

கேபிள் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை' என, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:'டிவி' சேனல்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளும், 'அலகாட்' முறையை, 'டிராய்' அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, ஜன., 1ல் அமலாகிறது. இதில், எந்த சேனல் வேண்டும்; எது வேண்டாம் என்பதை, பார்வையாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.இதன்படி, பல்வேறு சேனல்கள், தங்களுக்கான, எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்துள்ளன. அவர்களிடம் பேரம் பேச முடியாது. இந்த மாத இறுதியில், சேனல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கோரியபடி, கட்டண குறைப்பு சாத்தியமில்லை.டிராய் விதிமுறைப்படி, வினியோக கட்டணத்தில், அரசு கேபிள், 'டிவி' நிர்வாகத்திற்கு, 55 சதவீதமும், கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு, 45 சதவீதமும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பற்ற பள்ளி பட்டியலுக்கு உத்தரவு

கோவை: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பாதுகாப்பற்ற கட்டடங்களின் எண்ணிக்கை குறித்து, தகவல் சேகரித்து அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 36 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி கட்டடங்களை, பொதுப்பணி மற்றும் வட்டார வளர்ச்சி துறையினர் பராமரிக்கின்றனர். மழைக்காலம் துவங்கும் போதெல்லாம், 'பாதுகாப்பற்ற கட்டடங்களில், மாணவர்களை தங்க வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்படுகிறது.போதிய இடவசதி இல்லாததால், பல பள்ளிகள், இதை பின்பற்ற இயலாத நிலை தொடர்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுக்க, பாதுகாப்பற்ற தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பட்டியலை அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை இயக்குனர் கருப்பசாமியிடம் கேட்ட போது, ''பாதுகாப்பற்ற கட்டடங்களை கணக்கெடுத்து, அப்பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். பட்டியல் திரட்டும் பணிகள் நடக்கின்றன,'' என்றார்.

நீதிக்கதை :



 விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டூம் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.

அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை...

ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீத அளவுக்கு, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர் சங்கத்தின் அவசர மாநிலச் செயற்குழுக் கூட்டம், திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் எம். அதியமான்முத்து தலைமை வகித்தார்.


இக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீதத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்க வேண்டும். உயர்கல்வி பயின்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கவேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணி விதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை: குறைவாக இருந்தால் வேறு பள்ளியில் சேர்க்க உத்தரவு :

அரசுப் பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகிலுள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி கணக்கெடுக்கப்படும். அதேபோல் இந்தாண்டும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே அந்த எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியரை அனுமதிக்கலாம். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என நிர்ணயம் செய்யலாம். 60 மாணவர்களுக்கு கூடுதலாக இருந்தால் 2 பிரிவாகப் பிரித்து ஆசிரியர் நிர்ணயிக்கலாம்.
மேலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு இணையாக ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் பொழுது தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்வது போலவே, ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தனித்தனியாக ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால், அந்த வகுப்பில் உள்ள குறைந்தபட்ச மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழிப் பிரிவுகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறைக்கு டிச.29-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்

பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்சுத்தம் மற்றும் பொதுஅறிவை வளர்க்கும் வகையில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் :

பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மார்கழி மாதம் பிறந்ததையொட்டி நேற்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நிருபர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதலமைச்சரும் துணை முதல் அமைச்சரும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.டெல்டா  மாவட்டங்கள் புயலால் பாதித்த போது அரசு மேற்கொண்ட பணிகளை தமிழகமே பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்  ஒரு வார காலம் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அதன் பிறகு  பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


புயலால் பாதிக்கப்பட்ட  டெல்டா மாவட்டங்களில் நீட் தேர்வை பொறுத்தவரை  பயிற்சிகளுக்காக கால அவகாசம் தரப்பட்டிருந்தது. அதனால் அனைத்து  பள்ளிகளிலும் நீட் பயிற்சிகளில் மாணவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். நீட்  தேர்வுகளில் பங்கு  பெற டெல்டா மாணவர்களுக்கு எந்த ஒரு தங்கு தடையும் இல்லை. பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  பள்ளி மாணவர்களுக்காக வழங்க இருந்த 14 வகையான இலவச திட்டங்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்சுத்தம் மற்றும் பொதுஅறிவை வளர்க்கும்  வகையிலும், மாணவர்களின் குணநலன்களை மேம்படுத்தும் வகையில் நீதிபோதனை  வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.  பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் செங்கோட்டையன் - விஜயேந்திரர் சந்திப்பு நடைபெற்றது

ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநர் அறிவுரைகள் :

2,150 ஆசிரியர்களுக்கு 2021 வரை பணி நீட்டிப்பு!

தமிழகத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டு மாநிலம் முழுவதும் 150 மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர்கள் ₹9.300-₹34,800 என்ற ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் ₹4,600 உடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.


இவர்கள்  பணி நியமனம் ஓராண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 18.07.2018 முதல் 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 200  உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு இப்பள்ளிகளிலும் தற்காலிக அடிப்படையில் தலா 6 பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர் என மொத்தம் 1200 பட்டதாரி ஆசிரியர்கள், 200  உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கும் 1.06.2018 முதல் 31.05.2021 தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹36,000 முதல் ₹1,15,700 வரையும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ₹2,600 முதல்  ₹65,500 வரையும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககமும் வெளியிட்ட இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது

முதன் முறையாக குரூப் 2 தேர்வு முடிவுகள் தேர்வு முடிந்து ஒரே மாதத்தில் வெளியீடு!



தமிழகத்தில் சார்பதிவாளர் உள்ளிட்ட 1,199 பணியிடங்களுக்கான குருப் 2 தேர்வு கடந்த நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வில், நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தவர்களுக்கான 1,199 பணியிடங்களை நிரப்பும் பணியில் குரூப் 2 தேர்வு முதுநிலை தேர்வு நடைபெற்றது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 2,00,268 மையங்களில் நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார், 6,26,503 பேர் தேர்வெழுதினர். இவர்களில் ஆண்கள் 3,54,136 பேரும், 2,72,357 பேரும் மற்றும் 10 மூன்றாம் பாலினத்தவரும் எதிர்வு எழுதினர்.
இந்நிலையில், இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை https://www.tnpsc.gov.in/results.html என்ற இணையத்தளத்தில் காணலாம்.
முதன் முறையாக குரூப் ௨ தேர்வு முடிவுகள், தேர்வு முடிந்து ஒரே மாதத்தில் வெயிடப்பட்டுள்ளது. இதையடுத்து, குரூப் 2 பிரதான தேர்வு வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஜனவரி 7 ஆம் தேதிக்குள் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்!

ஜனவரி 7 ஆம் தேதிக்குள் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்:ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ந.ரெங்கராஜன் பேச்சு..புதுக்கோட்டை,டிச.16: ஜனவரி  7 ஆம் தேதிக்குள் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ந.ரெங்கராஜன் பேசினார்.

 புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் உயர்நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க கூட்டம் இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் கு.மா.திருப்பதி வரவேற்றுப் பேசினார்.

 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ரெங்கசாமி,க.சு.செல்வராஜ்,மு.ராஜாங்கம்,வி.எம்.கண்ணன்,ஆ.செல்லத்துரை, புகழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஆ.மதலைமுத்து,மன்றம் நா.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில ஒருங்கிணைப்பாளர் ந.ரெங்கராஜன் பேசியதாவது: ஜனவரி 5 ஆம் தேதிக்குள் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.அப்படி இல்லை எனில் நீதிமன்றமே தலையிட்டு அதற்குரிய ஆணையை பிறப்பிக்கும் என நீதியரசர்கள்  வாக்குறுதி அளித்துள்ளார்கள்.எனவே ஜனவரி 7 ஆம் தேதி வரை  போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்..நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது போராடுவது நியாயமாக இருக்காது..எனவே ஜனவரி 7 ஆம் தேதி நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கவில்லை எனில் போராட்டத்தை தவிர வேறுவழியில்லை..காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்     தொடர்ந்து  திட்டமிட்டமிட்டபடி நடைபெறும்.எனவே தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளான  புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும்,21 மாத நிலுவைத் தொகை வழங்கப் பட வேண்டும்,மதிப்பூதியம்,தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோவின் 7 அம்ச  கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாநில,மாவட்ட ஒன்றிய பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,அரசுப் பணியாளர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர் கோ.சக்திவேல் நன்றி கூறினார்.

பிளஸ் 2 தேர்வில் இந்தாண்டு என்னென்ன புதிய மாற்றங்கள் தெரியுமா?