யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/12/18

2,150 ஆசிரியர்களுக்கு 2021 வரை பணி நீட்டிப்பு!

தமிழகத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டு மாநிலம் முழுவதும் 150 மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர்கள் ₹9.300-₹34,800 என்ற ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் ₹4,600 உடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.


இவர்கள்  பணி நியமனம் ஓராண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 18.07.2018 முதல் 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 200  உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு இப்பள்ளிகளிலும் தற்காலிக அடிப்படையில் தலா 6 பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர் என மொத்தம் 1200 பட்டதாரி ஆசிரியர்கள், 200  உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கும் 1.06.2018 முதல் 31.05.2021 தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹36,000 முதல் ₹1,15,700 வரையும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ₹2,600 முதல்  ₹65,500 வரையும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககமும் வெளியிட்ட இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக