யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/17

ENGLISH READING PRACTICE

                                           

Click here

வேலைவாய்ப்பில்லா வணிகப் பள்ளி மாணவர்கள்!

                                           
பி-ஸ்கூல் எனப்படும் வணிகப் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு 
வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும், இங்குப் பயிலும் 20 சதவிகித மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர் எனவும் அசோசெம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம், இந்திய வணிகப் பள்ளிகளில் பயிலும் மானவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய ஆய்வு மேற்கொண்டது. பணமதிப்பழிப்பு, புதிய திட்டங்கள் நிறுத்தப்படுவது மற்றும் மந்தமான தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் இம்மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக அசோசெம் கூறுகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் 30 சதவிகிதம் குறைவான அளவிலேயே பி-ஸ்கூல் மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல பி-ஸ்கூல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமானது 40 முதல் 45 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளது.

இந்த வணிகப் பள்ளிகளில் இவ்வளவு கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டுமா என்று மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சிந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. 400க்கும் மேற்பட்ட இதுபோன்ற நிறுவனங்கள் செயலிழந்துவிட்டன. மேலும், 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் டெல்லி, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, டேராடூன் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த சுமார் 250 பி-ஸ்கூல்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் சீட்டுகளை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாலும், தரமான மாணவர்களைத் தேர்வு செய்யத் தவறுவதாலும் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்குத் தீர்வாக உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது, சிறந்த பயிற்சி அளிப்பது மற்றும் ஆராய்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தில் அதிகம் செலவிடுவது போன்றவை தீர்வாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கல்வி பணியா? பிற பணிகளா?

1)மாணவர் திறள்பதிவேடு*

*2) FA(a)பதிவேடு*

*3)FA(b)பதிவேடு*

*4)பாட ஆசிரியர் பதிவேடு*

*5)வகுப்பாசிரியர் பதிவேடு*

*6)வகுப்பாசிரியர் வேலை பதிவேடு*

*7)மாணவர் அடைவு திறன் பதிவேடு*

*8)கல்வி இணை செயல்பாடுகள் பதிவேடு*

*9) I can I did பதிவேடு*

*10)உடற்கல்வி பதிவேடு*

*11)கணித உபகரணபெட்டி பயன்பாட்டு பதிவேடு*

*12)கணித உபகரணபெட்டி stock list பதிவேடு*

*13)புத்தக பூங்கொத்து stock list பதிவேடு*

*14)   புத்தக பூங்கொத்து பயன்பாட்டு பதிவேடு*

*15)காலை வழிபாட்டு பதிவேடு*

*16)மாணவர் வருகை பதிவேடு*

*17)விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு*

*18)விலையில்லா வண்ண பென்சில் வழங்கிய பதிவேடு*

*19)விலையில்லா பாடநூல் வழங்கிய பதிவேடு*

*20)விலையில்லா குறிப்பேடு வழங்கிய பதிவேடு*

*21)விலையில்லா புத்தக பை வழங்கிய பதிவேடு*

*22)விலையில்லா காலணி வழங்கிய பதிவேடு*

*23)C,D grade எடுத்த மாணவருக்கு அளித்த சிறப்பு கவன செயல்பாட்டு பதிவேடு*

*24)வாழ்க்கை திறன் பதிவேடு*

*25) 2 line note திருத்தம்*

*26) 4 line note திருத்தம்*

*27) தமிழ் note திருத்தம்*

*28) English note திருத்தம்*

*29) கணக்கு  note திருத்தம்*

*30) அறிவியல் note திருத்தம்*

*31) சமூக அறிவியல் note திருத்தம்*

*32) 1:30Pm  தமிழ், English dictation திருத்தம்*

*33) பள்ளி கண்ணாடி*

*34) கம்பிபந்தல் படைப்பு திருத்தம்*

*35)வீட்டு பாடம் திருத்தம்*

*36)தமிழ் புத்தக* *பாட பின் பயிற்சி* 
*திருத்தம்*

*37) ஆங்கில புத்தக பாட பின் பயிற்சி திருத்தம்*

*38) கணித புத்தக பாட பின் பயிற்சி திருத்தம்*

*39)அறிவியல் புத்தக பாட பின் பயிற்சி திருத்தம்*

*40)சமூக அறிவியல் புத்தக பாட பின் பயிற்சி திருத்தம்*

*41) கணிணி பதிவேடு*

*42)மக்கள் தொகைக் கணக்கு*

*43) வாக்காளர் சரிபார்ப்பு பணி*

*45) பள்ளி பகுதி மக்கள்தொகை கணக்கெடுப்பு*

*46)ஆதார் வேலை*

*47) EMIS வேலை*

*48) NMMS பதிவு*

*49) மாணவர் ரத்தப் பிரிவு*

*50)மாணவர் சுகாதார அட்டை பதிவேடு*

*51) RANK CARD*

*52) மதிப்பெண் பட்டியல்*

*53) RESULT WORK*

இதுபோக இன்னும்   பதிவேடுகள் உள்ளன.

CCE RESOURCE MATERIAL (STANDARD 1-9)

ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இனி மாவட்டம் வாரியாக மட்டுமே EMIS இணையதளம் இயங்கும்!!!

பொது வருங்கால வைப்பு நிதி- ஊதிய திருத்தம் - திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்தல் அரசாணை எண் 362 நிதி( படிகள்) துறை நாள் : 11.12.2017

G.0 NO : 751 | 350 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குதல் திருத்தப்பட்ட அரசாணை!

வாக்காளர் வீடுகளில் வருமானவரி சோதனை-தேர்தல் ஆணையம் உத்தரவு*

அதிகாரியை செருப்பால் அடித்த ஆசிரியை!!!

EMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள் பிரிப்பு.

கல்வி மேலாண்மைத் தகவல் திட்டத்தின் கீழ் மாணவர் தரவுகள்
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

☀மாநிலம் முழுமையும் பயன்படுத்தும் அளவிற்கு பிரதான கணினியின் செயல்திறன் இல்லாததால் பலநேரங்களில் இத்தளத்தின் பறிமாற்ற வேகம் குறைந்தவிடுகிறது.

☀நேற்று இரவிலிருந்து இயங்காமல் இருந்த EMIS தளம் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

☀இதனையடுத்து கிழமை வாரியாக இணையத்தைப் பயன்படுத்தம் வகையில் மாவட்டங்களைப் பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

☀கீழ்க்காணும் நாட்களில் மட்டும் சார்ந்த மாவட்டங்கள் EMIS தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

*☀ஞாயிறு :*

அனைத்து மாவட்டங்களும்

*☀திங்கள், புதன் & வெள்ளி :*

1. சென்னை
2. கடலூர்
3. கோயமுத்தூர்
4. தர்மபுரி
5. ஈரோடு
6. காஞ்சிபுரம்
7. கிருஷ்ணகிரி
8. நாமக்கல்
9. நீலகிரி
10. சேலம்
11. திருப்பூர்
12. திருவள்ளூர்
13. திருவண்ணாமலை
14. விழுப்புரம்
15. வேலூர்

 வியாழன் & சனி :*

1. அரியலூர்
2. திண்டுக்கல்
3. கரூர்
4. கன்னியாகுமரி
5.  கிருஷ்ணகிரி
6. மதுரை
7. நாகப்பட்டினம்
8. புதுக்கோட்டை
9. பெரம்பலூர்
10. இராமநாதபுரம்
11. சிவகங்கை
12. தஞ்சாவூர்
13. தேனி
14. திருச்சிராப்பள்ளி
15. திருவாரூர்
16. திருநெல்வேலி
17. தூத்துக்குடி
18. விருதுநகர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 17லட்சம் பேர் விண்ணப்பம்,

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர் 
விண்ணப்பித்துள்ளனர். 9351 காலி பணியிடங்களுக்கு இன்று மாலை வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு இன்றிரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பகோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணையம் பொறுப்பில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.*

ஒரு ரூபாய்க்கு விமானப் பயணம்!

                                   
2012 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால்
கிங்ஃபிஷர் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது, மீண்டும் ஏர் டெக்கான் விமான சேவையை தொடங்கவுள்ளதாக அதன் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவையைத் தொடங்கினார். குறைந்த கட்டணமாக ஒரு ரூபாய் கட்டணத்தை அறிமுகப்படுத்தி, சிம்ஃபிளி ஃபிளை என்ற வாசகத்துடன் செயல்பட்டது.

பின்னர், இந்த விமான சேவை 2008ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுடன் இணைந்து செயல்பட தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனது சேவையை வரும் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தனது முதல் சேவையை மும்பை- நாசி வழித்தடத்தில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் சிறுநகரங்களை இணைக்கும், மத்திய அரசின் உடான் சேவையை தற்போது பல விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இந்த உடான் சேவை சிறிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டணத்தில் விமான பயணம் மேற்கொள்வது. சாதாரண மனிதர்களை விமானத்தில் பயணிக்கச்செய்வதே இந்த உடான் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் படி ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 மட்டுமே. மீதமுள்ள தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கும்.

இந்த உடான் சேவையுடன் இணைந்து ஏர் டெக்கான் நிறுவனமும் தனது இரண்டாவது சேவையை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் கூறுகையில், ''நாசிக்கில் இருந்து மும்பைக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல 4 மணி நேரமாகும். விமானத்தில் 40 நிமிடத்தில் சென்று சேரலாம். டிக்கெட் கட்டணம் ரூ.1400. சில அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.1 கட்டணத்திலும் டிக்கெட் கிடைக்கும். இவர்கள் முதலில் டிக்கெட் புக் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

2018, ஜனவரி மாதம் டெல்லியில் இருந்து ஆக்ரா, சிம்லா, லூதியானா, டேராடூன், குலு பகுதிகளை டெல்லியுடன் இணைக்கும் வகையில் விமான சேவை தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் பணியிடங்கள்.!!!

SABL TIME TABLE

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை
இணைக்க புதிதாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து 

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க புதிதாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை 

புதிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும்

- மத்திய அரசு