யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/1/18

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற:

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்
( pay slip ) நகல் எடுக்க!!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர்

வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்


*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து  
தரவிறக்கம்செய்து கொள்ளலாம்


இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *Tpf கணக்கு எண் &  
பிறந்ததேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு PTPF-ம்
Cps தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல்(SUFFIX) ஆகும்மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்தசுருக்கச் சொற்களை இடவும்தொடக்க கல்வி துறை 
 PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின்  
வழியேதரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத்  
தரவிறக்கஇயலும்.

```🔹Annual income statement🔹```

*இதில்கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காதுஆனால் 
 ஊதியப்பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவைஒப்படைப்பு ஊதியம் 
உள்ளிட்டவை 
OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின்அவ்விபரங்களை மேற்கண்ட 
 இணைப்பில் காண இயலாது.

எனவேஅதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும்  
இணையஇணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை  
உள்ளீடுசெய்துதங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

ஊக்க ஊதிய உயர்வு -M.Phil உயர் கல்வி தகுதிக்கு பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ) இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த தெளிவுரை!



BREAKING NEWS: நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு: தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு அளித்து மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ 1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாக உயர்வு.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாக உயர்வு - மத்திய அரசு.

ஏ .டி .எம் இயந்திரத்தில் தவறுதலாக வந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர் -கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது:

கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை??

அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்புகளி ல் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம்.

            ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

            தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

            அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை.

            அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம்.

            அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆ ந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

            தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்..??

            தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 6 00 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்?? தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve)  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

            மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்..?? கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..??

            எட்டு வருடங்களுக்கும் மேலாக, கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன...
வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்...
2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
கல்வி மானியக் கோரிக்கையில் கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா தமிழக அரசு??                                                                                                                         
G. RAJKUMAR, MCA., BEd.,
96983 39298
மாநில இணைய ஆசிரியர்
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 
பதிவு எண் ® 655/2014.

குரூப் 4 தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

                                                       



தமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் 
அடங்கிய பணிகளுக்கு 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டது. இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 11.02.2018 அன்று தமிழகத்தின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெறவுள்ளது.


சுமார் 20.8 லட்சம் பேர் எழுதவுள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in-ல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்

மேலும் விண்ணப்ப கட்டணம் கிடைக்க பெறாதவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய லானுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் இமெயில் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு தமிழக அரசின் தேர்வுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

                                             

சென்னை: தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள், 20 லட்சம்
பேருக்கு, வேலை வாய்ப்புக்கான தொழிற்கல்வி கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.


20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

மாணவர்களை தயார்படுத்துவதற்காக, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி நேற்று துவங்கியது. தமிழகத்தில், பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி, பிளஸ் 2 முடித்ததும், அரசு பள்ளி மாணவர்கள், வேலைவாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்களை தயார்படுத்தும்,

ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.

தொழிற்கல்வி பயிற்சி



'லெண்ட் அஹேண்ட் இந்தியா' என்ற, பிரபல தனியார் நிறுவனத்தினர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியைதுவக்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளி மாணவர்கள், படிப்பை முடிக்கும் போது, வேலை வாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், 20 லட்சம் மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, மாணவர்களை தயார்படுத்த வசதியாக, ஒன்பது முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பயிற்சி தரப்படுகிறது.

260க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி


வேலைவாய்ப்புக்கான தொழிற்கல்வி பயிற்சியில், விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்; கட்டாயமில்லை. வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், சிறு வணிகம், ஆட்டோ மொபைல்ஸ், அழகு, உடல்நல பராமரிப்பு கலை என, 260க்கும் மேற்பட்ட தொழிற்கல்விகளில்


Advertisement
ஒன்றை, மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
இந்த திட்டத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, மூன்று கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கிறது. மேலும், 30 கோடி ரூபாய் வரை நிதி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான, 'நீட்' தேர்வு எழுத, அரசு பள்ளி மாணவர்கள், 2,000 பேருக்கு, சென்னையில் உள்ள கல்லுாரிகளில், சிறப்பு பயிற்சி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மாநில இயக்குனர், ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முத்தான 'மூன்று' நிலா! வானில் ஒரு அதிசயம்

                                                     


சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித
நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.
நாளைய சிறப்பம்சம் என்னவெனில், சந்திரகிரகணத்துடன் ரத்த நிலா மற்றும் நீலநிற நிலாவும் தோன்ற உள்ளது.

சூப்பர் மூன்

பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.* பூமிக்கும் - நிலவுக்குமான சராசரி துாரம் 3,84,400 கி.மீ. 'சூப்பர் மூன்' அன்று, இதைவிட குறைவான துாரத்தில் நிலா இருக்கும்.* சூரியனை பூமி சுற்றி வர 365.26 நாட்கள் ஆகிறது. அதே போல நிலவு, பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது 'சூப்பர் மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.

சந்திர கிரகணம்

நிலவுக்கு தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது. சூரிய ஒளியைத் தான் அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால் சூரிய ஒளி, நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது.


ரத்த நிலா


சந்திர கிரகணத்தன்று 'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' என அழைக்கப்படுகிறது.


நீலநிற நிலா


மாதம் தோறும் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமி, 'நீலநிற நிலா' என அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் தெரிவதில்லை. அறிவியல் வரலாற்று ரீதியாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

32
சுமார் 152 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது என கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். உலகம் முழுவதற்குமானது அல்ல. ஆசியாவில் கடைசியாக இந்நிகழ்வு 1982 டிச., 30ல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 32 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது.எங்கு தெரியும்இந்தியாவில் நாளை(ஜன.31) மாலை 5 : 18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 6:21 முதல் இரவு 7:37 வரை முழு கிரகணம் இருக்கும்.இரவு 7:37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8: 41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

எப்படி பார்ப்பது

இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.

சந்திர கிரகணம் பரிகாரம் யாருக்கு

நாளை (ஜன., 31) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16 மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.புதன் கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு: மத்திய நீர் ஆணையத்தில் பணி!

                                            
                                             

மத்திய நீர் ஆணையத்தில் காலியாக உள்ள ஸ்கில்டு வொர்க் அசிஸ்டன்ட்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Skilled Work Assistant.

காலியிடங்கள்: 21

ஊதியம்: ரூ.18,000.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ.

கடைசித் தேதி ; 23.2.2018

மேலும் விவரங்களுக்கு http://www.cwc.nic.in/என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

TNOU-BEd ADMISSION -NO ENTRANCE EXAM-NEW METHOD FOR The Selection of candidates will be on the basis of the marks secured in the qualifying UG / PG Degree examination.

தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை!!!

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 
'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

 *தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்..  புதுமை!*

கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த
திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.
பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை
பயன்படுத்தப்படும்.

திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,
மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

*வருகைப்பதிவு எப்படி?*


புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,
ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஞாபகம் இருக்கிறதா?? தேர்வின் பெயர்களும் தேதிகளும்...

அரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணிபுரிந்து பணிதுறப்பு (Resign ) செய்து மற்றொரு அரசு உதவி பெரும் பள்ளியில் பணிமுறிவின்றி சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த பள்ளியில்பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து பெறலாம் -என்பதற்கான அரசாணை!!!

FLASH NEWS - SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENT REG SCHOOL TEAM VISIT & DISTRICT WISE SCHOOL LIST PUBLISHED...