யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/3/17

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.


 பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச்சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.

எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமானவரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 2 நாட்கள் மட்டுமே!

மும்பை: பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்ச
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.

வழக்கு
நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.

தள்ளுபடி
தள்ளுபடி
இதன்பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.

வழக்கு
ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அதிரடி உத்தரவு
இரு நாட்கள்தான் கெடு
இரு நாட்கள்தான் கெடு
இந்தமனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதேபோல முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3 என்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது.
வாகனநிறுவனங்களுக்கு நஷ்டம் இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை இன்னும் 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு. அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.

தள்ளுபடி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது.

இருநாட்கள்தான் கெடு ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச் 31 இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.

2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், காலியாக 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு; பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்

2017-18ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பொதுமாறுதல், பதவி
உயர்வு கலந்தாய்வில், காலியாக உள்ள 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதவி உயர்வு பெற்ற

முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு.மா.வே.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை 31/3/17 நண்பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது

APRIL DIARY 2017.......

1- குறைதீர் முகாம்(உ.தொ.க.அலுவலகம்)

13- பெரிய வியாழன் வரையறுக்கப்பட்ட விடுப்பு.


14 - தமிழ் வருடப் பிறப்பு &புனித வெள்ளி அரசு விடுமுறை.

22 - சனி பள்ளி வேலை நாள்

24- மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம் & ஷபே மிராஜ் வரையறுக்கப்பட்ட விடுப்பு

28-மூன்றாம் பருவத் தேர்வு முடிவு & பள்ளி கடைசி வேலை நாள்

ஏப்ரல் 29 முதல் மே 31 வரை கோடை விடுமுறை

29-TET ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1


30- ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான வங்கிகணக்கினை sgsp கணக்காக மாற்றக் கோரும் விண்ணப்பப்படிவம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கிக்கணக்கினை STATE GOVERNMENT SALARY PACKAGE முறைக்கு மாற்றக்கோரும் SCHOOL WISE விண்ணப்பம்.

2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்*

*13.04.2017-வியாழன்-பெரிய வியாழன்*
*14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள்*
*16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர்*

*25.04.2017-செவ்வாய்-ஷபே மிராஜ்*
*10.05.2017-புதன்-சித்ரா பவுர்ணமி / புத்தர் ஜெயந்தி*
*12.05.2017 –வெள்ளி-ஷபே பாரத்*
*28.05.217-ஞாயிறு- ரம்ஜான் நோன்பு முதல் நாள்*
*22.06.2017- வியாழன்- ஷபே காதர்*
*03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு*
*04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம*்
*07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா*
*08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்*
*25.08.217-வெள்ளி-சாம உபகர்மா*
*31-08.2017-வியாழன்-அர்ஃபா*
*04.09.2017-திங்கள்-ஓணம்*
*22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு*
*18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு*
*02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்*
*04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி*

*02.12.2017-சனி-திருக்கார்த்திகை*

TN Lab Assistant Selection " Weightage Calculation Method " | ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில்
நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும்.

காலியிடத்துக்கு தகுந்தாற் போல், 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதனையடுத்து, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏப்ரல் 9 முதல் 11-ஆம் தேதி வரை இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

Weightage Calculation  Method

1.எழுத்துத் தேர்வு - 150க்கு பெற்ற  மதிப்பெண்

2.வேலைவாய்ப்புப் பதிவு - 10 மதிப்பெண்

3.கூடுதல் கல்வித் தகுதியாக பிளஸ் 2 க்கு - 2 மதிப்பெண்

4.பட்டப்படிப்புக்கு - 3 மதிப்பெண்

5.ஆய்வக உதவியாளர் அனுபவச் சான்று இருந்தால் - 2 மதிப்பெண்

இதனையடுத்து, இனசுழற்சி இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும்.


இந்தநியமனம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வெளியிடப்பட்ட அரசாணைப்படி நேர்மையாக நடைபெறும்.

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்
துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.


 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.

சரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல் | என்ஜினீயரிங் படிப்புக்கு
ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 554 உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. 1 லட்சம் இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது. கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No TET for those whose certificates verified between May 2010-Feb 2011

EDUCATION
No TET for those whose certificates verified between May
2010-Feb 2011


CHENNAI:Madras high court on Tuesday said candidates aspiring to become teachers and whose certificates were verified between May 2010 and February 2011 need not appear for the mandatory Teachers Eligibility Test (TET).

Delivering the judgement on review petitions filed by 94 teacher trainees, a Division Bench comprising Justices Elipe Dharma Rao and M Vengopal granted relief to them after dismissing their petitions by another Division Bench.

In May 2010, over 32,000 qualified candidates having teacher education diploma were sponsored by various employment exchanges on seniority as well as communal reservation basis for teacher selection process. Their certificates were verified between May 12, 2010 and February 2011.

On August 23, 2010, the Centre notified the Right of Children to Free and Compulsory Education Act (RTE Act), as per which a Teachers’ Eligibility Test was made mandatory for appointment of teachers for Class VI to Class VIII.
Two TET exams were held by the state government, which had seen less than one per cent pass percentage, resulting in teacher training qualified candidates resenting the selection process by a mandatory test, instead of seniority of registration in employment exchanges.

A batch of 94 such candidates had filed a writ petition, which was dismissed on March 1 last year.
Their appeal too was dismissed in July last year. In their present petition, filed by advocates R Sudha and C Uma, they said they were sponsored for selection and their certificate verification too was completed. Hence they should be exempted from writing the TET.

Advocate general A L Somayaji assisted by additional government pleader P Sanjay Gandhi, however, said mere sponsoring of names by employment exchange and calling of candidates for certificate verification, by themselves could not be termed selection. The question of appointment would arise only if a candidate is selected for the post, he said.

The bench pointed out that Clause 5 of the RTE Act notification made it clear that candidates who had taken part in selection process prior to the Aug 23 2010 notification date need not write the TET.


After the AG said no vacancies were available for teachers as on date, the judge said “we direct the authorities to accommodate the review petitioners in future vacancies, without insisting on them to appear for the TET.”