யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/16

இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது இல்லாமல் போயிக்கொண்டிருக்கிறது. வர வர C.E.O க்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போகிறது. வாட்ஸப்பில் விவாதித்தால் மெமோ....முகநூலில் பின்னூட்டங்கள் பதிவிட்டால் போனில் மிரட்டல்....ஸ்டேடஸ் போட்டால் சஸ்பென்ட்.....அதையும் தாண்டி போலீஸில் புகார்.....
என்னய்யா நடக்குது கல்வித்துறையில....?
ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு, ஆயிரத்தெட்டு அரசாணையை போட்டுக்கொண்டு அரசாங்க வாகனத்தில் உலா வரும் இவர்களுக்கு ஆசிரியர்களின் உழைப்பும் உணர்வும் எங்கு புரியப்போகிறது.
Many CEOs forget that they are also a government servant as teachers. The only major difference is that they have an opportunity of getting corrupted because of their positions....
Most of the higher officials in education dept, they don't want teachers to form, organise or communicate with one another.... Since, nowadays teachers are more knowledge, well equipped and getting updated than the officials.
அவர்களது இம்மாதிரியான செயல்பாடுகள் அவர்களுக்குள்ளே உள்ள பயத்தின் வெளிப்பாடேயாகும். ஆகையால் ஆசிரியர்களே துணிந்து நிள்ளுங்கள், யாருக்காகவும் எதர்க்காகவும் நாம் பயந்திட வேண்டாம்....அவர்களில் நிறைய பேர் தன்னை ஒரு அதிகாரியாகவே பாவிக்கின்றனர். உண்மையில் அவர்கள் எல்லோரும் அலுவலர்கள் என்பதை மறந்துவிடுகின்றார்கள்.
பாவம் என்ன செய்வது.....அதிகாரம் என்னும் மாயையில் சிக்கித்தவிக்கின்றனர்.....
கருத்துரிமை என்பது நம்முடைய அடிப்படை உரிமை....மறந்துவிடாதீர்.....

Income Tax form

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள் Forms

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் விண்ணப்பம்

தொடக்கக் கல்வி - அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் விண்ணப்பம் (நகராட்சி / மாநகராட்சி பள்ளிகள்)

EMIS-NEW FORMAT

NHIS 2016 -SPOUSE OPTION CERITIFICATE

புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்-2016 விண்ணப்ப படிவம்(NHIS 2016 - Apply Form)




NHIS 2016 -SPOUSE OPTION CERITIFICATE

EMIS - FORM ( new)



புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம்-2016 விண்ணப்ப படிவம்(NHIS 2016 - Apply Form)



LPC FORM IN PDF

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2016,ஆதார் எண் பதிதல்,EMIS- கல்வி செயற்கைக்கோள் வழியாக ஆய்வு மேற்கொள்ளுதல்-11.8.16 அன்று அறிவுரை வழங்குதல் சார்பு

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு

ஆதார் இணைப்பு பணிகள், விவர சேகரிப்பு பணிகள் நடப்பதால்,விரை வில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் மற்றும் பதி லுரை முடிவில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ‘கடந்த 2012-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவித்தீர்கள். 

அந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது’ என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.பெஞ்சமின் பேசுகையில், ‘தற் போது மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் ஆதார் எண்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 90 லட்சம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக் கப்பட்டுள்ளன. விரைவில் இவர் களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும்’ என்றார்.

அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு

3 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகத்துடன் ஆங்கில இலக்கண பயிற்சித்தாள் அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு



மொழித்திறன் மேம்பாட்டுக்காக3 முதல் 8-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்குஆங்கில இலக் கணபயிற்சித்தாள்கள் பாடப்புத்தகத்துடன் இணைத்துவழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்பி.பெஞ்சமின் அறிவித் துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று

பள்ளிக் கல்வித்துறை மானியகோரிக்கை மீதானவிவாதத்துக்கு பதிலளித்துஅவர் பேசியதாவது:



பள்ளி கல்வித்துறைக்கு கடந்த 5ஆண்டுகளில் 86,193 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுடன் சேர்த்து ரூ.1.10லட்சம் கோடிஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான நலத்திட்டத்துக்காக ரூ.15,474.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான சிறப்புஊக்கத்தொகை திட்டத் தின் கீழ்ரூ.1,810 கோடி மாணவர் கள்வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்துக்காக இந்த ஆண்டுரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிஅவசியம் என்பதைகருத்தில்கொண்டு, அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வியில் 2012-13ம் ஆண்டுமுதல் ஆங்கில வழி பிரிவுகள்தொடங்கப்பட்டுள்ளன.தற்போது வரை 3 லட்சத்து 95ஆயிரத்து 858 மாணவர்கள்இதில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். ஆசிரியர்பணியிடங்களை பொறுத்தவரை79,354 பணியிடங் கள்ஒப்புவிக்கப்பட்டு, 74,316பணியிடங்கள் பணி மூப்பு மற்றும் நேரடி நியமனம் மூலம்நிரப்பப்பட்டுள்ளன.மாற்றுத்திறனாளி குழந்தைகள்ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 353பேருக்கு கல்வி, உதவிஉபகரணங்கள் ரூ.32.15கோடியில் வழங்கப்படும்.கல்வியில் பின்தங் கியஒன்றியங்களில் செயல்படும் 44மாதிரி பள்ளிகளுக்கு ரூ.4கோடியில் கணினி மற்றும்உபகரணங்கள் வழங்கப்படும்.


விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்று வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 93 பகுதி நேரநூலகங்கள் ஊர்ப்புறநூலகங்களாக தகுதிஉயர்த்தப்படும். இதற்கெனநூலகர் பணியிடங்கள்உருவாக்கப்படும். சென்னைமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தில் ஆங்கிலவழியில் தொடக்க கல்விபட்டயப்படிப்பு தொடங்கப்படும்.இதில், 50 மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்பெறுவர். பள்ளிமாணவர்களின் மொழித்திறன்மேம்பாட்டுக்காக 3 முதல் 8-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணபயிற்சித்தாள்கள் பாடப்புத்தகத்துடன் இணைத்து வழங்கப்படும்.அரசு தேர்வு இயக்ககத்தில்தேர்வு பணிகளை மேற்கொள்ளதனிப்பிரிவு அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது:
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.இதற்காக அரசு சார்பில் அனுபவம்வாய்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்.

உத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு, பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது.
அங்குள்ள கான்பூர் மாநகராட்சி சார்பில், 'துப்புரவு தொழிலாளர் பணிக்கு, 3,275 இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்கள் தேவை' என, விளம்பரம் செய்யப்பட்டது. அதில், 1,500 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மற்றவை, இடஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படவுள்ளன.

இதற்கு கல்வி தகுதி எதுவும் தேவையில்லை.ஆனாலும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், இந்த பணிக்காக குவிந்துள்ளன. விண்ணப்பித்த பலர், பட்டபடிப்பு, முதுநிலை பட்டங்கள் பெற்றவர்கள். விண்ணப்பித்த பலரின் கல்வி தகுதியை பார்த்து, அதிகாரிகளுக்கு தலை சுற்றத் துவங்கியுள்ளது. 'அதிகம் படித்த இவர்களை, துப்புரவு பணிக்கு எப்படி தேர்வு செய்வது' என, மாநகராட்சி நிர்வாகம் குழம்பி போயுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் இன்னும் உள்ளதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை, ஏழு லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை----பொதுஅறிவுகட்டுரை,


வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் ஆசிரியர் தின சிறப்பு கட்டுரைபொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.
மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.
இனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.
குப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கமாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.
அதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் "" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே! இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்'' என்று பல முறை சொல்லியும் அந்த மாணவர் அழுக்கான குல்லாவையே அணிந்து வந்தாராம். இதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்த ஆசிரியர், மாணவரின் தலையிலிருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தாராம்.
ஆசிரியரே தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்துச் சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டதும் அந்த மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். அதன் பிறகு அந்த மாணவர் குல்லாவை எப்போதும் சுத்தமானதாகவே அணிந்து வந்தாராம்.
கல்வியை மட்டும் மாணவருக்குக் கற்றுத் தராமல் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுத்தந்த இந்த ஆசிரியர் யார்?
தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்தவர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பி.எச்டி. டாக்டர் பட்டம் பெற்றவர். மிகச் சிறந்த கல்வியாளர். அவர் தான் டாக்டர் ஜாகீர் ஹுசைன்.
அவர் நடத்தி வந்த பல்கலைக்கழகத்துக்கு காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் உள்பட பலரும் நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவரது பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தவர்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்த பலரும் திடீரென நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டனர்.
நிதி நிலைமை மோசமான நிலையிலும்கூட கல்விக் கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாத ஜாகீர் ஹுசைன், நிதி நிலைமையைச் சரிசெய்ய தன்னுடைய சம்பளத்தையும் மற்ற ஆசிரியர்களின் சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதென முடிவு செய்தார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் அதற்கு உடன்பட்டார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.
அனைவரும் மாதம் ரூ.300 சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால் மற்ற பல்கலைக்கழகங்களில் பணி செய்த ஆசிரியர்களின் சம்பளமோ ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்த நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ரூ.300 மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த செய்தி மிகப்பெரிய தியாகமாகப் பேசப்பட்டது.
ஊதியக் குறைவுக்காக எந்தவித ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ நடத்தவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்தது. மாதம் ரூ.300 சம்பளமாகப் பெறும் தொகையையும் குறைத்துக் கொண்டு ரூ.200 சம்பளமாகப் பெற்றனர். இதுவும் அதைவிட பெரிய தியாகச் செயலாகப் பேசப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு நிதி நிலைமை மேலும் மோசமாகவே ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை ரூ.150 ஆகவும் குறைத்துக் கொண்டனர்.
ஆனால் ஜாகீர் ஹுசைனோ தனது சம்பளத்தை ரூ.95 ஆக குறைத்துக் கொண்டார். இந்த 95 ரூபாய் மாதச் சம்பளத்தில் தான் சுமார் 20 ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.
இந்த தேச உணர்வும், தியாக உணர்வும் இருந்த கல்வியாளரைத்தான் இந்தியா தனது குடியரசுத் தலைவருக்கான கட்டிலில் மூன்றாவது முறையாக அமரவைத்து அழகு பார்த்தது.
இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். கீழே இருப்பவர் மேலே போக ஏறிச்செல்ல உதவும் ஏணியும், இக்கரையில் இருப்பவர் அக்கரைக்குச் செல்லத் தோணியும் உதவுவதைப் போல மாணவச் செல்வங்களுக்காகவே தங்களை உருக்கிக் கொண்டு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும் இந்த மெழுகுவர்த்திகள் போற்றுதலுக்குரியவர்கள். வணக்கத்துக்கு உரியவர்கள்.
ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அப்துல் கலாம்களாக மாற்றி விட முடியும். அவமானங்களும், அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
சம்பவங்கள் மூலம் விளக்கி அவர்களை உருக வைக்க முடியும்.மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்துவோம்!