யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/16

அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு

3 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகத்துடன் ஆங்கில இலக்கண பயிற்சித்தாள் அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு



மொழித்திறன் மேம்பாட்டுக்காக3 முதல் 8-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்குஆங்கில இலக் கணபயிற்சித்தாள்கள் பாடப்புத்தகத்துடன் இணைத்துவழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்பி.பெஞ்சமின் அறிவித் துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று

பள்ளிக் கல்வித்துறை மானியகோரிக்கை மீதானவிவாதத்துக்கு பதிலளித்துஅவர் பேசியதாவது:



பள்ளி கல்வித்துறைக்கு கடந்த 5ஆண்டுகளில் 86,193 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுடன் சேர்த்து ரூ.1.10லட்சம் கோடிஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான நலத்திட்டத்துக்காக ரூ.15,474.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான சிறப்புஊக்கத்தொகை திட்டத் தின் கீழ்ரூ.1,810 கோடி மாணவர் கள்வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்துக்காக இந்த ஆண்டுரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிஅவசியம் என்பதைகருத்தில்கொண்டு, அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வியில் 2012-13ம் ஆண்டுமுதல் ஆங்கில வழி பிரிவுகள்தொடங்கப்பட்டுள்ளன.தற்போது வரை 3 லட்சத்து 95ஆயிரத்து 858 மாணவர்கள்இதில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். ஆசிரியர்பணியிடங்களை பொறுத்தவரை79,354 பணியிடங் கள்ஒப்புவிக்கப்பட்டு, 74,316பணியிடங்கள் பணி மூப்பு மற்றும் நேரடி நியமனம் மூலம்நிரப்பப்பட்டுள்ளன.மாற்றுத்திறனாளி குழந்தைகள்ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 353பேருக்கு கல்வி, உதவிஉபகரணங்கள் ரூ.32.15கோடியில் வழங்கப்படும்.கல்வியில் பின்தங் கியஒன்றியங்களில் செயல்படும் 44மாதிரி பள்ளிகளுக்கு ரூ.4கோடியில் கணினி மற்றும்உபகரணங்கள் வழங்கப்படும்.


விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்று வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 93 பகுதி நேரநூலகங்கள் ஊர்ப்புறநூலகங்களாக தகுதிஉயர்த்தப்படும். இதற்கெனநூலகர் பணியிடங்கள்உருவாக்கப்படும். சென்னைமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தில் ஆங்கிலவழியில் தொடக்க கல்விபட்டயப்படிப்பு தொடங்கப்படும்.இதில், 50 மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்பெறுவர். பள்ளிமாணவர்களின் மொழித்திறன்மேம்பாட்டுக்காக 3 முதல் 8-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணபயிற்சித்தாள்கள் பாடப்புத்தகத்துடன் இணைத்து வழங்கப்படும்.அரசு தேர்வு இயக்ககத்தில்தேர்வு பணிகளை மேற்கொள்ளதனிப்பிரிவு அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக