யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/6/18

சட்டம்

சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்

சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும்

சில உளவியல் உண்மைகள்

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்

சிறுநீரக கோளாறு

செல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து

டாக்டர்நகைச்சுவை 2

டூரின் துணி யேசுநாதரின் இறப்பில் மொத்தமாக மூன்று துணிகள்

தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்

தாய் பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்

தான் வாழ பிறரை கெடுக்காதே

தினம் ஒரு குட்டிக்கதை

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்

தோல்வி என்றால்?

நமது மனதிலும்

நல்ல குடி நீர் என்பதற்கும்

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும்

பி.இ. சேர்க்கை: இன்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்: உதவி மையத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகச் செல்ல வேண்டும்

 பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக கலந்தாய்வு உதவி மையத்தில் மாணவர்கள் ஆஜராக வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,78,131 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதன்முறையாக ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. கலந்தாய்வை வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க 1,59,631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. 
42 உதவி மையங்களில்: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களிலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. 
அசல் சான்றிதழ் சரிபார்ப்பானது அனைத்து உதவி மையங்களிலும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும். காலை 9 - 10 மணி வரை ஒரு பிரிவு, 10-11 மணி வரை இரண்டாம் பிரிவு என ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவு மாணவர்கள் எனப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை. அதன் பிறகு பிற்பகல் 1.30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
மாணவர்கள், தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் உதவி மையத்துக்கு வந்து விடவேண்டும்.
மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியது என்னென்ன?: சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டிய மையம், தேதி, நேரம், வரிசை (டோக்கன்) எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாணவர் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் தங்களுடைய பயன்பாட்டாளர் குறியீட்டைப் பயன்படுத்தியும் இந்த விவரங்களை மாணவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும்.
அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்: மாணவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, ஆன்-லைன் பதிவு செய்த விண்ணப்ப நகலை பிரதி எடுத்து அதில் மார்பளவு புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்துச் செல்லவேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் (இணை மதிப்பெண் சான்றிதழ்), பிளஸ்-2 பொதுத் தேர்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும். 
தேவைப்படுவோர் இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவருக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான உறுதிமொழி, இலங்கை அகதிகள் என்றால் அதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், விளையாட்டு வீரருக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
நகல் மட்டும் வைத்துக் கொள்ளப்படும்: இந்தச் சான்றிதழ்களைப் பொருத்தவரை அசல் மற்றும் நகல் இரண்டையும் மாணவர்கள் எடுத்துச் செல்லவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் நகல் சான்றிதழ்கள் மட்டும் உதவி மையத்தில் வைத்துக் கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் மாணவர்களிடமே திருப்பி அளிக்கப்பட்டு விடும். 
ஏற்கெனவே வேறு படிப்புகளில் சேர்ந்தவர்கள் என்ன செய்வது?: சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாகவே, வேறு படிப்புகளில் சேர்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் அசல் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கும் மாணவர்கள், கல்வி நிறுவனத்தின் முதல்வரிடமிருந்து அத்தாட்சி (போனஃபைடு') கடிதத்தையும், அந்தக் கல்வி நிறுவனத்தின் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தால் போதுமானது. அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. 
ஆன்-லைன் கலந்தாய்வு குறும் படம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது, இடங்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பன குறித்த குறும் படம் ஒன்று அனைத்து உதவி மையங்களிலும் போட்டுக் காண்பிக்கப்படும்.
அத்துடன், ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான முழு விவரங்கள் அடங்கிய சிறிய புத்தகம் ஒன்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தச் சிறிய புத்தகத்தை மாணவர்கள் தவறாமல் கேட்டுப் பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். 
உதவி மையங்களுக்கு செல்ல முடியாவிட்டால்... 
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு உதவி மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மாணவருக்குப் பதிலாக அவருடைய பெற்றோர் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் பெற்றோர், மாணவரின் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், மாணவரின் அசல், நகல் சான்றிதழ்களையும் உதவி மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய பெற்றோர் தங்களுடைய அசல் புகைப்பட அடையாள (ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை, கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை) இதில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிப்பது அவசியம்.
மாணவரோ அல்லது பெற்றோரோ குறிப்பிட்ட தேதியில் உதவி மையத்துக்குச் செல்ல முடியாதபோது, கடைசி நாளான ஜூன் 14-ஆம் தேதியன்று தொடர்புடைய கலந்தாய்வு உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
இந்த இரண்டாவது வாய்ப்பிலும் உதவி மையத்துக்குச் செல்ல முடியாத மாணவர்கள், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றார் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ்.

மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்துள்ளார்.


தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் பேரவையில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வித்திட்டத்தின்கீழ் புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் புதிய தொழில்நுட்பத்தினை பள்ளிக்கல்வித்துறை புகுத்தவுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் அட்டைகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படு. பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவினை மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விடும்படி தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

மாணவர் இல்லாததால் மூடப்பட்ட முதல் அரசு பள்ளி

மாணவர்கள் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பள்ளியாக அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மூடப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சி அல்லம்பட்டியில் 1998-ல் சுமார் 50 மாணவர்களோடு அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இரு வகுப்பறைகளைக் கொண்ட பள்ளிக் கட்டிடம், சமையல்கூடம், கழிப்பறைகள், குடிநீர் தொட்டி,விசாலமான மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் செயல்பட்ட இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணிபுரிந்தனர். 

இப்பள்ளியில் அல்லம்பட்டி, மனவயல், தாழிச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகவும், அவர் ஒழுங்கீனமாக செயல்பட்டதாகவும் ஊர் மக்களால் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கல்வித் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய 

நடவடிக்கை இல்லையாம்.இதனால் விரக்தி அடைந்த மக்கள், மாணவர்களை இப்பள்ளிக்கு அனுப்பாமல் அங்கிருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அறந்தாங்கி தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கநிலைக்கு சுருங்கியதால், ஓராசிரியர் பள்ளியானது.


  
அப்போது, இங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பணியாற்றியதாகக் கூறி, கடந்த ஆண்டு பயின்ற 2 மாணவர்களும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர். 

இதனால், இந்தக் கல்வி ஆண்டுஇப்பள்ளி திறக்கப்படவில்லை. இங்கு பணியாற்றிய ஆசிரியரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மூடப்பட்டுள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இளைப்பாறும் இடமாகவும், திறந்த வெளி மதுபானக் கூடமாகவும் பள்ளி வளாகம் தற்போது மாறியுள்ளது.

இதுகுறித்து அல்லம்பட்டியைச் சேர்ந்த அழகர், கூறியது: அல்லம்பட்டி, தாழிச்சேரி, மனவயல் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் இருந்து சுமார் 60 மாணவர்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் செல்கின்றனர்.

அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு கடந்தசில ஆண்டுகளாக வந்த ஆசிரியர்கள் முறையாக பணியாற்றாததால் இப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் மறுத்துவிட்டனர். ஆசிரியர்களின் ஒத்துழைப்பின்மையால் இப்பள்ளியை மூடவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. கிராம வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்றார்.

முயற்சி பலனளிக்கவில்லைஅறந்தாங்கி கல்வித் துறை அலுவலர்கள்  கூறியபோது, “அல்லம்பட்டி கிராமத்தில் இருந்து பெரும்பாலான மாணவர்களை தனியார் பள்ளிக்கும், தாழிச்சேரியில் இருந்து பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் அனுப்புகின்றனர். 

EMIS 2018-2019 New Format (pdf)

FLASH NEWS:-தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதலில் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் என்பது நீக்கம் - இயக்குநரின் செயல்முறைகள்!!


தனியார் பள்ளிகளுக்கு 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' ?

தமிழக பள்ளி கல்வித்துறையில், 30 ஆண்டுகளுக்கு முன், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் துவங்கப்பட்டது. மாவட்ட வாரியாக, மெட்ரிக் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மெட்ரிக் பள்ளிகளை, மெட்ரிக் இயக்குனரகத்தில் இருந்து மாற்ற, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. 
இதற்காக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆளுடைய பிள்ளை தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இந்த குழு அறிக்கையில், அனைத்து வகை பள்ளிகளையும் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது. 
அதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கலைக்கப்பட்டு, 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' புதிதாக உருவாக்கப்பட உள்ளது. இதன் கீழ், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., என, அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளும், இணைக்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்ய வேண்டும்

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வருகிற மார்ச்-2019-ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள மற்றும் முதன்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வெழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.


மேலும் அனைத்து தனித்தேர்வர்களும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவுசெய்து கொண்டு, மாவட்டக்கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறை தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.

செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் பொதுத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதுதொடர்பான மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 30-ந்தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரயில் நிலையங்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.5 கேஷ் பாக் அளிக்கும் பேடிஎம்..!

பிளாஸ்ட் கழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்திய ரயில்வே நிர்வாகம் வதோதரா ரயில் நிலையத்தில் பேடிஎம் உடன் இணைந்து 5 ரூபாய் கேஷ்பாக் சலுகை திட்டத்தினை அறிவித்துள்ளது.


வதோதரா ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டிலை கிரஷ் செய்யும் இயந்திரத்தில் தண்ணீர் பாட்டில்களைக் கிரஷ் செய்யும் போது பேடிஎம் மொபைல் எண்ணைச் சமர்ப்பித்தால் இந்தக் கேஷ் பாக் சலுகை வழங்கப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் இன்று ரயில்வே அமைச்சகம் மற்றொரு பசுமை முயற்சியாகச் சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் வழங்குப்படும் உணவு பாக்கெட்களினை மக்கும் தன்மையுடன் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்தச் சேவையினை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மக்கும் பாக்கெட்களின் உணவினை விநியோகம் செய்யக் கூடுதலாக 1 முதல் 5 ரூபாய் செலவாகுவதாகவும் ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது..

24 மணி நேரம் போதவில்லை என புலம்ப வேண்டாம்.. பூமியில் ஒருநாள் 25 மணி நேரமாக அதிகரிக்க போகிறதாம்!

வருங்காலங்களில், நாள் ஒன்றிற்கான நேரம், 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 
அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் இதுபற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.


140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. ஆனால் வருடத்திற்கு 3.82 செ.மீ தூரத்திற்கு நிலவு விலகி சென்றபடியே உள்ளது.


விலகும் நிலவு
தற்போது அது முதலில் இருந்ததைவிட 44 ஆயிரம் கி.மீ தூரம் பூமியை விட்டு விலகி சென்று உள்ளது. எனவே இப்போது ஒரு நாள் நேரம் என்பது 24 மணி நேரமாக உள்ளது.


இதுவே, 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரம் 41 நிமிடங்களாக மட்டுமே இருந்தது.


25 மணி நேரங்கள்
நிலவு நகரும் அளவை கணக்கில் கொண்டு பார்த்தால், அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில், பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரங்களாக இருக்கும். அப்போது மக்களின் கால நேரம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஒரு நாளைக்கு 24 மணி நேரமே போதவில்லை என்று புலம்பும் பலர் நம்மில் உண்டு.

அவர்களின் வருங்கால சந்ததிகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 25 மணி நேரத்தை என்ஜாய் செய்யலாம்.

இதை நினைத்து அவர்கள் மனதை தேற்றிக்கொள்ளவும்.
வருங்கால சந்ததிகள்
25 மணிநேரமாக உயர்வது என்னவோ மகிழ்ச்சியான செய்திதான்.

ஆனால், அதுவரை உலகை நாம் பாதுகாப்பாக வைத்திருப்போமா, சுய நலத்திற்காக கூறு போட்டிருப்போமா, என்பதே நமது முன்னால் இருக்கும் கேள்வி

82 கல்லூரிகளுக்கு தடை! போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால்,

நாடு முழுவதும் உள்ள 70 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் தரம், இட வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தது. இதில் 70 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் என 82 மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி இல்லாமலும், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமலும் இருந்தது தெரியவந்தது. இதனால் இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தடை உத்தரவைப் பிறப்பித்ததாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்த காரணத்தினால், நாட்டில் மொத்தமுள்ள 64 ஆயிரம் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பத்தாயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது.
இதேபோன்று புதிய மருத்துவக் கல்லூரிக்காக விண்ணப்பிக்கப்பட்ட 37 தனியார் கல்லூரிகளும், 31 அரசுக் கல்லூரிகளும் என மொத்தம் 68 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும். மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்திலுள்ள  32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் இன்று பேசிய அவர்

 இன்னும் 1 மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள  32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என்றார். பேரவையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நூலகங்களை பராமரிக்க தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் நூலகங்கள் அமைக்க நூல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். எத்தனை நூல்கள் வழங்கினாலும் அதனை பெற்று கொண்டு, நூலகங்களில் வைப்பதற்கென தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணம் : நிகர்நிலை பல்கலை.,-களுக்கு உத்தரவு

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகள், மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜவஹர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வீதம் ஐந்தரை ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடிக்க 71.5 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு மேற்கண்ட கல்விக்கட்டணம் தவிர MBBS சீட் பெற நன்கொடை தனியே வசூலிக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று. கல்லூரியின் தரத்தை பொறுத்து ரூ.80 லட்சம் வரை கட்டாய நன்கொடை வசூல் வேட்டை நடைபெறுவது நிதர்சனம்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ( 12.06.2018 ) - காலை 11 மணிக்கு எடுக்க வேண்டிய உறுதிமொழி :

ஒகி புயலின் போது உயிரிழந்த, காணாமல் போனவர்களின் குடும்பத்தை சேர்ந்த 188 பேருக்கு அரசு பணி - அரசாணை வெளியீடு , G.O(Ms)No:111 - Dated :31.05.2018