யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/8/18

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?
அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிட
முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு)  ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார். 
ஆனால் தற்போது தேர்விற்கு 37 நாள் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எப்போதுமே தேர்விற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பதற்கான செயல்பாடுகள் துவங்கும். பின் கடைசிதேதி, தேர்வு கட்டணம் செலுத்தும்தேதி  அறிவிக்கப்பட்டு இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால் தேர்விற்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில் இதுவரையில் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்காததால் ஆசிரியராக ஆவதற்காக கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!

பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறையை மூடுவதுடன், மாணவர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையால் பள்ளிச் சுற்றுச்சுவர் பாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து 20 அடி தொலைவுக்கு மாணவர்கள் செல்லாமல் தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகளை மூடி பராமரிப்பதுடன், மாணவ, மாணவிகள் அருகில் செல்லாமல் பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கட்டடங்களின் மேற்கூரையில் நீர் தேங்காதவண்ணம் அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் போது மாணவ, மாணவிகள் மழை மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பாக கவனமாகச் செல்லவும் அறிவுரை வழங்க அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இடி, மின்னல் வரும்போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என அறிவுறுத்தவும் அதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
பருவ கால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள், அவற்றுக்குக் காலதாமதமின்றி சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு இணையான
 கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! இந்த குரலைத் தெரியும்... ஆளைத் தெரியுமா?

ரயில்வே ஸ்டேஷன் போனதும் நம்மையுமறியாமல்
ஒரு குரல் நம்மை ஈர்த்துக்கொள்ளும்..
                                  


சரளா சவுத்ரி குரல்:
"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..." இந்த குரலை கேட்டதும் ஸ்பீக்கரை திரும்பி பார்க்காத நபர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த குரல் நமது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்று. ரயில் நிலையத்தில் பணிப்புரிபவர்களிடம் கேட்டு பாருங்கள் இந்த குரல் தான் எங்களுக்கு தாலாட்டு என்பார்கள்.
அப்படியொரு மென்மை, கம்பீரம் இரண்டுமே இருக்கும் அந்த குரலில். வெறும் 30 வினாடிகள் மட்டுமே அந்த குரலை அவ்வளவு எளிதாக பயணிகள் மறந்து விடமாட்கள்.நாள் ஒன்றுக்கு ஆயிரம் முறை ஒலிக்கும் "இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா..?
சரளா சவுத்ரி. 53 வயதாகும் இவர் 1982-ல் சென்ட்ரல் ரயில்வேக்கு அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் மேனுவல் தான். கம்ப்யூட்டர் கிடையாது. தற்செயலாய் இன்ஸ்பெக்சனுக்கு சென்றிருந்த ரயில்வே பொது மேலாளர் அட்ஸோத் பேனட்ஜி , இந்த குரலை கேட்டுவிட்டு உடனடியாக அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். மராத்தியில் ஒலிக்கு இவரது குரல் கணினி மூலம் எல்லா ரயில் நிலையங்களிலும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆரம்பக காலத்தில் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து வந்த சரளா சவுத்ரி, மாருதி ட்ராபிக் தகவல்களை தினமும் காலையில் மக்களுக்கு அறிவிப்பார்.அதன் பின்பு தான், தனது தந்தையில் ஆசைப்படி ரயில்வே நிர்வாகத்தில் பணிப்புரிய தொடங்கினார்.
இவரின் குரலை பதிவு செய்த அன்று, அவருடன் பணிப்புரிந்த ஒட்டு மொத்த ஊழியர்களும் உன் குரலுக்கு நீ கண்டிபாக சுத்தி போட வேண்டும், கலாய்த்தார்களாம். சரளா தனது 49 ஆவது வயதில் சொந்த காரணங்களுக்காக ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு துறைக்கு சென்றுவிட்டார்.
ஆனால், அவரின் குரல் இன்னமும் ரயில்வேக்கு பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது!!!

புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு 

முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில்  நடைபெறவுள்ளது.
* காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்
* பெயர் சேர்க்க - படிவம் 6
* பெயர் நீக்க - படிவம் 7
* வாக்காளர் அட்டையில் திருத்தம் - படிவம் 8
* முகவரி மாற்றம் - படிவம் 8A.

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ? "கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.

   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.

    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-31 "நகரும் சிலை" (30.08.2018) :



SEPTEMBER 2018 Diary:

1-Grievance day

5- Teachers Day

11-RL-Saamaupakarma

12-RL-Hijri new year


13-GH-Vinayagar chathurthi

21-GH-Moharam

17~22- I Term Exams

23~Oct 2- I Term holidays.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ராமதாஸ் அறிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமே இந்த முறைகேடுகளை கண்டுபிடித்திருக்கும் போதிலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் எழுதிய இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன்30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகளில் தகுதியில்லாத மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.இதைத் தொடர்ந்து அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டதில்200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்திப் பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.விரிவுரையாளர் பணிக்கான தேர்வுகளில் சில மாணவர்களின் மதிப்பெண்களைப் பட்டியலிடும் போது, கூடுதலாக சில மதிப்பெண்களை சேர்த்துப் பதிவு செய்ததன் மூலம் அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களுக்குப் பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத்தாள்களை கணினியில் உள்ளீடு செய்து கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமான பணி என்பது மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தான். இந்தப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் இந்தப் பணி எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரியவில்லை.ஒருவேளை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக அந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் கூட, அந்தப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் தேர்வு மதிப்பெண் முறைகேடுகள் நிச்சயமாக நடந்திருக்காது. ஆனால், அவ்வாறு செய்யப்படாததை எதேச்சையாக நடந்த, சாதாரண விஷயமாகக் கருதமுடியாது.
தேர்வு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்போதைய தலைவர் ஜெயந்தியும், முன்னாள் தலைவர் ஜெகநாதனும் வெளிப்படையான முறையில் தான் நடந்து கொண்டனர்.
ஆனால், இவர்களைத் தாண்டிஇந்த ஊழலுக்கு ஆட்சியாளர்கள் நிலையிலோ, அதிகாரிகள் நிலையிலோ யாரோ துணை போயிருக்க வேண்டும். இந்த ஊழல்களுக்கு முகவர்களாக செயல்பட்ட சிலரையும், கடைநிலை ஊழியர்கள் சிலரையும் கைது செய்து விட்டு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டித்து விட்டோம் என ஆட்சியாளர்கள் திருப்தியடைந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தமாகும். இது குற்றவாளிகளை ஊக்குவிக்கும்.அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது மிகவும்அவசியமாகும்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஊழல் செய்து அதிக மதிப்பெண் பெற்றமாணவர்களை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளின் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பிய அவலம்: பொதுப்பணித்துறையில் சர்ச்சை:

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூத்திற்கு திருப்பி அனுப்பியிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1289 உயர்நிலை பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ேதவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை, சுற்றுச்சுவர் கட்டுதல், குடிநீர் வசதிஉள்ளிட்ட பணிகளை 1257 கோடி செலவில் ேமற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, நிதி நபார்டு வங்கியின் கடனுதவியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2017-18ம் நிதியாண்டில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதற்கட்டமாக 100 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே டெண்டர் விட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், ஒரு சில பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. அதே போன்று மற்ற 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதி கட்டமைப்பு டெண்டர் விட வேண்டிய நிலையில் இருந்தது.இதற்கிடையே ஜிஎஸ்டி காரணமாக மீண்டும் திட்ட அறிக்கை தயாரிப்பது மற்றும் ஏற்கனவே டெண்டர் விட்ட பணிகளுக்கு ஜிஎஸ்டியால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதால் பணிகள் நிறுத்தி வைப்பு, ஆளும் கட்சியின் வற்புறுத்தலின் பேரில் கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் 150 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.kaninikkalvi அந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் மேற்கொள்ளாததால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் கோட்ட செயற்பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு ஒதுக்கீடு செய்த ₹150 கோடி நிதியை சரண்டர் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, நடப்பாணடில் நிதியை பயன்படுத்த தவறியதால், அந்த நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. வரும் நிதியாண்டில் மீண்டும் திட்ட அறிக்கை தயார் செய்து இதற்கான நிதியை பெற இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

வேலைவாய்ப்பு: பெசில் நிறுவனத்தில் பணி! Click Here To Download PDF Notification :

சென்னையில் உள்ள Broadcasting Engineering Consultants India Limited என்ற நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பணி: தரவுப் பதிவு அதிகாரி காலியிடங்கள்: 20 
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் நிமிடத்திற்குள் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன். 
சம்பளம்: ரூ.17,498 வயது: 21 - 30 
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு 
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14/9/2018
அனுப்ப வேண்டிய முகவரி: Assistant General Manager (HR) BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 மேலும் விவரங்களுக்கு 
 CLICK HERE TO VIEW&DOWNLOAD THE NOTIFICATION 

நெஞ்செரிச்சலுக்கு மருந்து!

நம்மில் பலருக்கு நெஞ்சு எரிச்சல் தீராத உபாதையாக

இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகக் கார உணவு, துரித உணவை அடிக்கடி சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

இததகைய நெஞ்செரிச்சலில் இருந்து தப்பிக்க மருந்து மாத்திரை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கையாகவே எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

நெஞ்செரிச்சலை குணப்படுத்த

நெஞ்சு எரிச்சலின் போது ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனனில் ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளதால் இது நெஞ்சு எரிச்சலை குணப்படுத்தும்.
நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு துளசி நல்ல மருந்தாகும். இந்த பிரச்சனைகள் வந்தால் துளசி இலை சாறை அருந்தினால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
சோம்பு ஜீரண சக்தி அதிக அளவு கொண்டது. நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் போட்டு சிறிது நேரம் மென்று தின்று வந்தால் உடனே சரியாகும்.
நன்கு அரைத்த பட்டையின் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் முற்றிலும் அடங்கும்.

மோர் மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மோரில், சிறு துண்டு இஞ்சி, மற்றும் கருவேப்பில்லையை அரைத்து குடித்து வந்தால், வயிற்றுக்கு இதம் அளிக்கும்.மேலும் கிராம்பு பொடியை நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.
நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பொழுது அதிக அளவு தண்ணீர் அருந்துவதின் மூலம் சரி செய்யலாம்.
சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
தவிர்க்க வேண்டியவை

வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அதிக உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இறுக்கமான உடைகளை அணிவதால் வயிற்றின் இயற்கையான ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்குவது மிகவும் நல்லது.
சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.எனவே புகைபழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதிரடியாக விலை குறைக்கப்பட்ட விவோ மொபைல்கள்

இந்தியாவில் விவோ ஸ்மார்ட் போன்களின் விலைகள் அதிரிடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக விவோ நிறுவனத்தின் மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களான விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 ஆகியோ மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி முதல் இந்த விலைகுறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ரூ.22,990, ரூ.14,990 மற்றும் ரூ. 35,990 ஆக இருந்த விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 மாடல்களின் விலை தற்போது ரூ.18,990, ரூ. 13,990 மற்றும் ரூ.31,990 ஆக குறைந்துள்ளது.

எக்ஸ்சேஞ் ஆஃபரில் உங்களுக்கு இன்னும் குறைவான விலையிலும் கூட கிடைக்கும். பொதுவாக சொன்னால் இது செம்ம ஜாக்பாட்.