யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/10/18

சத்துணவு திட்டத்தில் 10 லட்சம் முட்டை குறைப்பு மாணவர்கள் எண்ணிக்கையில் மோசடி?

தமிழகத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய சத்துணவு திட்டத்தில் தினமும் 10 லட்சம் முட்டை குறைக்கப்பட்ட விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 58,474 அரசு பள்ளிகள், 54,472 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவு மையங்களின் மூலமாக தினமும் 60 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகள் சத்துணவு திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர். இவர்களுக்காக தினமும் 60 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டில் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டத்திற்கான தினசரி முட்டை கொள்முதல் 60 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டது. நடப்பாண்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை தினமும் 60 லட்சம் முட்டை பெறப்பட்டது. 

ஜூலை மாதம் முதல் தினசரி முட்டை கொள்முதல் 50 லட்சமாக குறைந்தது.கடந்த ஜூலை 24ம் தேதி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் டெண்டர் அறிவிப்பில் முட்டை கொள்முதல் குறைந்த விவரங்கள் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டது. 


கடந்த ஆண்டில், ஜூலை மாதத்திற்கான தினசரி முட்டை கொள்முதல் அளவுடன் ஒப்பிடுகையில் தினமும் 10 லட்சம் முட்டை கொள்முதல் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

முட்டை ெகாள்முதல் குறைந்த விவகாரத்தின் பின்னணியில் பெரும் முறைகேடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மாநில அளவில் அரசு பள்ளிகளில் 1.23 கோடி மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர். இதில் தினமும் 40.50 லட்சம் பேர் மட்டுமே சத்துணவு திட்டத்தில் பயனாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. நடப்பாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சத்துணவு திட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். 

அங்கன்வாடிகளில் 7,79,278 மாணவ மாணவிகள் பயனாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை 2 முதல் 3 சதவீதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் நடப்பாண்டிற்கு தினமும் சுமார் 63 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அதிகரிப்பிற்கு மாறாக, மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 


பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையில் ‘பொய் கணக்கு’ காட்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்துணவு திட்டத்தில் இல்லாதவர்களின் பெயரில் முட்டை கொள்முதல் செய்து மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது. முட்டை கொள்முதல், சப்ளை போன்றவை ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட துறையில் டெண்டர் விடப்பட்டு, மேற்கொள்ளப்படுகிறது. 


பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை தினசரி, வாராந்திர தேவைப்பட்டியல் பள்ளிக்கல்வி நிர்வாகத்திடம் இருந்து பெறப்படுகிறது. தேவைப்பட்டியலில் குளறுபடி, மோசடி செய்து முட்டை கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

முட்டை விவகாரத்தில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையில் நடந்த மோசடி, முறைகேடு மறைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மையாக இருந்தால், அதை மறைத்து அதிகமாக காட்டியிருப்பது எதற்காக என்ற சந்தேகமும் நிலவுகிறது. மாணவ மாணவிகளின் சேர்க்கை அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் வெகுவாக குறைகிறது. 


ஆனால் ‘பள்ளி ரெக்கார்டுகளில்’ மறைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மட்டுமே பொது தேர்வு காரணமாக மறைக்காமல் காட்டப்படுவதாக தெரிகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறித்து விசாரிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது கல்வியாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

3 லட்சம் கூமுட்டை..?! 

முட்டை மோசடி விவகாரத்திற்கு பின், கொள்முதலில் பல்வேறு மாற்றம் 

செய்யப்பட்டுள்ளது. 385 ஒன்றியம், 200 மையங்கள் மூலமாக தினமும் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையின் எடை 49 கிராம் அளவில் இருக்கவேண்டும். எடை குறைவாக (புல்லட் முட்டை) இருந்தாலும், தரமற்ற முட்டை வினியோகம் செய்தாலும் ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைந்த, கெட்டுப்போன முட்டை கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. 

கோழிப்பண்ணையில், கோழி போடும் முதல் முட்டை எடை குறைவாக இருக்கும். இந்த முட்டை 25 கிராம் முதல் 30 கிராம் எடை அளவிற்குள் இருக்கும். இந்த முட்டைகளை சத்துணவு மையங்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்துணவு கூடங்களுக்கு 2 நாட்களுக்கு முன்பே முட்டைகளை வினியோகம் செய்து விடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த முட்டைகளில் 3 லட்சம் முட்டை கெட்டுப்போனதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் தெரிகிறது. ‘கூமுட்டையாக’ இருந்தாலும் இவற்றையும் பள்ளிக்கு சப்ளை செய்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.

சத்துணவில் அரை முட்டை 

சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள், குறியீடு உடன் சில கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்படுவதாக கூறப்படுகிறது. சில ஓட்டல்களில் சத்துணவு முட்டைகள் கிடைப்பதாக தெரிகிறது. 

மாவட்டம், ஒன்றியம் வாரியாக ஒதுக்கப்படும் முட்டை பதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சில மையங்களில் தினமும் முழு முட்டை வழங்காமல் அரை முட்டை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முட்டையில் மட்டுமின்றி பள்ளி, அங்கன்வாடி மையங்களில் பருப்பு, எண்ணெய், அரிசி போன்றவையும் முறைகேடாக பதுக்கிவைத்து, கொண்டுசெல்வதாக கூறப்படுகிறது. 

மற்ற திட்டங்களிலும் மோசடி..?

பள்ளி கல்வித்துறையில் நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், சைக்கிள், நான்கு செட் சீருடை, காலணி, புத்தக பை, கிரையான்ஸ், கலர் பென்சில், கணித உபகரண பெட்டி, கம்பளி சட்டை, ரெயின்கோட், புவியியல் வரைபடம் போன்ற பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. 

இதில் பயன்பெறும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, பெறப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை போன்றவற்றில் பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. கொள்முதல் செய்த பொருட்களை தணிக்கை செய்யவோ, விசாரிக்கவோ யாருமில்லாத நிலை உள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுகிறது. இந்த செலவினங்களை ஆய்வு செய்ய, முறைகேடுகளை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழகம் முழுவதும் உபரியாக உள்ள 92 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

அக்டோபர் 31க்குள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவு

பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து, கிராமப்புற மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.


*மாவட்டத்துக்கு, 150 பேரை தேர்வு செய்து, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கல்வி சார் சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.மாவட்டத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

*கூட்ட நெரிசல் இல்லாத இடங்களுக்கு, வானிலை மாற்றங்களை கருத்தில்கொண்டு, ஒரு நாள் கல்வி சுற்றுலா, வரும், 31க்குள் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
*கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களை மூன்று பஸ்களில் அழைத்துச் செல்ல வேண்டும். மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் இடம்பெற வேண்டும்

*ஒரு பஸ்சில் நான்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும். காலை, 7:00 முதல், மாலை 5:00 மணி வரை செல்லும்

*ஒரு நாள் சுற்றுலாவுக்கு, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது மழை பெய்வதால், வானிலை மாற்றம் சீரானதும், சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்' என்றனர்

TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வழக்கு சாதகமானதால் விரைவில் அரசாணை வெளியிட 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறையிடம் கோரிக்கை.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசு கடந்த 23/08/2010 ஆம் தேதியில் அமலாக்கம் பெற்றது. ஆனால் அது தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைமுறையில் வந்தது. இந்த காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்  நிரப்பிக்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த பல மாதங்களுக்குப் பின்னர் இவர்கள் TNTET  நிபந்தனைகளுக்குள் கொண்டுவரப்பட்டனர்.

TNTET 2012 ல் பற்றியதான அறிவிப்பு வந்த போதும் கூட பல மாவட்டங்களில் இது சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் TET நிபந்தனை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புதல் குறித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் கடந்த 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் ஒன்று வெளியிட்டது.
 அதன்படி இனிமேல் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடம் நிரப்பும் போது TET தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று அறிவித்தது.

இந்த செயல்முறைக்குப் முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு முறையாக கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் இதர பலன்கள் ஒருசில மாவட்டங்களில் தர மறுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET லிருந்து விலக்கு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு இடையே அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு  இந்த TNTET நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு விலக்கு கொடுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி நான்கு மாதங்களில் மற்ற ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒரு நல்ல தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆகவே TNTET நிபந்தனை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் (individual representation) தமிழக அரசுக்கு அளித்து வருகின்றனர். அதில் இவர்களின் நியாயமான வேண்டுகோளாக 16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் TNTET லிருந்து முழுவதும் விலக்கு தர கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பான அரசாணை விரைந்து வெளியீடு செய்து தருமாறு மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை மீண்டும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் இந்த சிக்கல்களைத் தீர்க்க செயல்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் இவ்வமைப்பு கூறுவது யாதெனில் அரசாணை   வெளியீடு தொடர்பான எந்தவொரு வதந்திகளையும் நம்பாமல் கடந்த 07--09--2018 அன்று வெளிவந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு  போட்ட எந்தவொரு ஆசிரியரும் பாதிக்கப்படாதவாறான நாளான
16/11/2012 ற்கு முன்பு ஆசிரியர் பணியில்  சேர்ந்த அனைவரும் INDIVIDUAL REPRESENTATION ஐ தங்கள் பங்குக்கு  விரைந்து செய்து முடிக்க வேண்டுமாய்  கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

சமக்ர சிக்‌ஷா ஒருங்கிணைந்த பள்ளி மான்யம்2018-2019 பயன்படுத்துதல் மற்றும் வழிக்காட்டுதல் குறிப்புகள் :

மானியம் வழங்குவதன் நோக்கம்
✔2018 – 19 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்
கல்வி திட்டத்தின்கீழ்(Samagra Shiksha) அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கேற்றவாறு தேவையான வசதிகளை
மேம்படுத்த ஒருங்கிணைந்த பள்ளி மான்யம்(Composite School Grant)
அனுமதிக்கப்பட்டுள்ளது.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
✅ஒருங்கிணைந்த பள்ளி மானியத் தொகையை சட்ட திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள
நிதி நெறிகள் மற்றும் திட்ட விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*1⃣.SWACHHTA ACTION PLAN*
*2018 – 19*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
✅SWACHHTA ACTION PLAN 2018 – 19 (SAP) முழு சுகாதார தமிழகம் என்ற
தலைப்பின் கீழ் பயன்படுத்துவதற்காக 10 சதவீத தொகைக்கு அனுமதி
வழங்கப்படுகிறது.
1. மாணவர்களின் எண்ணிக்கை - 15 – 100 எனில் மான்யத் தொகை ரூ.25000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை
ரூ.2,500/.
2மாணவர்களின் எண்ணிக்கை – 101 - 250 எனில் மான்யத் தொகை ரூ. 50000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை ரூ.
5,000/.
3.மாணவர்களின் எண்ணிக்கை – 251 - 1000 எனில் மான்யத் தொகை ரூ. 75,000/-
இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும் தொகை ரூ.
7,500/-
4.மாணவர்களின் எண்ணிக்கை – 1000 க்கு மேல் எனில் மான்யத் தொகை ரூ.
1,00,000/- இதில் SWACHHTA ACTION PLAN 2018 – 19 க்கு அனுமதிக்கப்படும்
தொகை ரூ. 10,000/-
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*2⃣.கழிவறை பராமரிப்பு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் பயன்பாட்டில் இருக்கும்
வகையில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு மாணவர்கள்
பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
2.கழிப்பறையின் உட்புறம் பேசின் பொருத்துதல், கதவு மற்றும்
வெண்டிலேட்டர், தரைப் பூச்சு வேலை, தண்ணீர்  வசதிக்கான குழாய்கள், தரை
ஒடுகள், செப்டிங் டாங்க் பழுது பார்த்தல் முதலிய பணிகள் மேற்கொள்ளலாம்.
3.கழிவுநீர் வெளியேறும் குழாய் இணைப்புகள் பழுது பார்த்தல்.
4.கழுப்பறைகளை சுத்தம் செய்யத் தேவையான (Bleaching powder, Phenol,
etc…) பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.
5.கழிவுநீர்த் தொட்டி (Septic tank) சுத்தம் செய்தல்.
6.பள்ளி வளாகத்தில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளிலும் கட்டாயம் கை
கழுவ வசதியாக (Hand Washing Facility) குழாய் அமைத்திடவும் மற்றும்
அதற்கான பொருட்கள் (Wash Basin, Soap, etc..) வைத்திடவும் வேண்டும்.
7.பழுது மற்றும் பராமரிப்புப் பணி செய்யப்பட்ட கழிவறை கட்டடங்களுக்கு
வெள்ளை மற்றும் வர்ணம் அடிக்கப்பட்டு(White and Colour washing) அத்தகவலை
கழிவறை சுவற்றில் எழுதி வைத்திட வேண்டும். (ஆண்கள்/பெண்கள்/பொதுக் கழிவறை
2018 – 19 ஆம் ஆண்டு நிதியிலிருந்து பணி செய்யப்பட்டது).
8. பொதுக் கழிப்பறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நுழைவு
வாயிலில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*3⃣.குடிநீர் வசதி*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. அனைத்துப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதியினை
மேம்பாடு செய்து தொடர்ந்து தண்ணீர் வசதி கிடைக்கும் வகையில் பராமரிப்புப்
பணி மேற்கொள்ள வேண்டும்.
2.மோட்டார், தண்ணீர் வசதிக்கான குழாய்கள், தரைமட்டத் தொட்டி, மேல்நிலை
நீர் தேக்கத் தொட்டி போன்றவற்றை பழுது பார்த்தல்.
3.மொத்தப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான போதுமான எண்ணிக்கையில்
குழாய்(TAP) வசதி செய்யப்பட வேண்டும்.
4.கழிவறை மற்றும் குடிநீர் தொட்டியினைச் சுற்றியுள்ள இடங்களிலுள்ள
முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து பள்ளி வளாகத்தினை தூய்மையாக
வைத்திருக்க வேண்டும்.
5.மாணவர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி செய்து கொள்ளலாம்.
6.தரைமட்டத் தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, கழிவு நீர்த்
தொட்டி(Septic tank) ஆகிய தொட்டிகளுக்கு மேல்மூடி இல்லாத நிலையில்
உடனடியாக மூடி அமைத்திட வேண்டும்.
7.அனைத்துக் கழிவறைகளிலும் கண்டிப்பாக தண்ணீர் இணைப்புடன் கூடிய குழாய்
பொருத்த வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*4⃣.கற்றல் – கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.தொடக்க மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1 – 3 வகுப்புகளில் உள்ள
மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றல் முறையின் புதிய
அணுகுமுறை மூலம் கல்வி கற்பதற்கேற்றவாறு கற்றல் – கற்பித்தலுக்குத்
தேவையான எழுதுபொருட்கள், அமர்வதற்கான பாய்கள்/நாற்காலிகள், கீழ்மட்ட
கரும்பலகை, கம்பிப்பந்தல், சுய வருகைப் பதிவேடு, ஆரோக்கிய சக்கரம், CCE
பதிவேடுகள், கரும்பலகைக்கு வண்ணம் தீட்டுதல், அடிப்படை வசதிகளை
மேம்படுத்த மேஜை, நாற்காலி, பீரோ, சுவர் கடிகாரம், மின் சாதனப்பொருட்களான
மின்விசிறி, மின் விளக்குகள், ஒலி பெருக்கி(மைக்) போன்றவற்றை வாங்க
பயன்படுத்தலாம்.
2.மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட கற்றல் – கற்பித்தல்
செயல்பாடுகளுக்கு பயன்படுத்து கொள்ளலாம்.
3.மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த மாணவர்களின் பயன்பாட்டிற்காக
பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ் பள்ளி
மேலாண்மைக் குழு மூலம் வாங்கிப் பயன்படுத்தலாம்.
4.அறிவியல் ஆய்வகத்திற்கான தேவையான ஆய்வகப் பொருட்கள், உலக உருண்டை,
நிலப்படத் தொகுதி, தனிம வரிசை அட்டவணை போன்றவற்றை வாங்க முன்னுரிமை
அடிப்படையில் பயன்படுத்தலாம்.
5.மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்
கைபந்து, கால்பந்து, ஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்கப் பலகை(Chess Board),
கேரம் விளையாட்டு(Carrom Board) போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்க
பயன்படுத்தலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*5⃣.கணினி வழிக் கற்றல் (CAL Centre)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. இக்கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ள புதிய பாடப்புத்தங்கள் மூலம்
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பத்தை கைக்கொண்டு
பயில்வதற்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்கனவே அனைவருக்கும் கல்வி
இயக்கத்தின் மூலம் கணினி வழி கல்வி திட்டத்தின்கீழ்(CAL Centrer)
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்திரவாத காலம் முடிந்த நிலையில்
பயன்பாடின்றி உள்ள கணினிகள் மற்றும் பழுதடைந்துள்ள பள்ளி உபகரணங்களைப்
பழுது நீக்கம் செய்திடவும், இயங்காக நிலையில் உள்ள பழுதுப் பொருட்களுக்கு
மாற்றாக புதிய உபகரணங்களை மாணவர்களுக்கு பயனுடையதாக வாங்கி கொள்ளவும்
பயன்படுத்தலாம்.
2.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் செயல்படும் கணினிவழிக் கல்வித்
திட்டம் நடைபெறும் பள்ளிகளுக்கு இணையதள வசதி தேவைப்படின் வருடத்திற்கு
அதிகபட்சமாக ரூ.2000 பயன்படுத்துக் கொள்ளலாம்.
3.மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் நிகழ்வைப் புதுமையான முறையில்
வழங்குவதற்கு ஏதுவாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு
பழுதடைந்துள்ள நிலையில் உள்ள (Audio/Visual Aids) LCD Projector, Screen,
TV, DVD உள்ளிட்ட பொருட்களை பழுது நீக்கம் செய்ய பயன்படுத்தலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*6⃣.மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் பள்ளிப் பாதுகாப்பு.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைக் கட்டடங்களிலும் கட்டாயம்
கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும்.(To achieve 100%
barrier free access (RTE) Act,2009)
2.மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும்
அனைத்துக் கழிப்பறைகளில் குறைந்தபட்சம் ஒரு கழிப்பறை அலகு மாற்றுத்
திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக கைப்பிடிகள், தரை ஒடுகள், கழிப்பறை
கோப்பைகள் மற்றும் விவரப் பலகைகள் அல்லது குறியீடுகள் அமைக்க
பயன்படுத்தலாம்.
3.பள்ளி வளாகத்தில் பாதுகாப்பில்லாத மின் இணைப்புகள், கட்டுமானங்கள்,
மரங்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றினை அகற்றிடவும் மாணவர்கள்
பாதுகாப்புடன் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பள்ளி மேலாண்மைக் குழு (SMC)*
1.ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் (வ.எண், பெற்ற தொகை, வங்கி
பெயர் மற்றும் நாள்) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்.
2.மேற்காணும் இனங்களில் தேவையான பொருட்களை வங்குவதற்கு அவசியமான
பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும்.
பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி
தரமான பொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும்.
3.ஒரு செலவீனம் ரூ.5000/- க்கு மேல் இருந்தால் அத்தகைய செலவினத்திற்கு
கண்டிப்பாக மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெறப்பட்டு
“Quotation” அவற்றில் குறைவான விலைப்புள்ளி வழங்கிய நிறுவனத்திடமிருந்து
பொருட்கள் வாங்கப்பட வேண்டும்.
4.நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை
கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியரால் கையொப்பமிட வேண்டும்.
5.ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின்போது
அப்பள்ளிக்கு வழங்கப்படுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம்
மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு
செய்வதற்கு ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம், ரொக்க
பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்
குழு கணக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும்.
6.அனைத்து  பள்ளிகளிலிருந்து கூடிய வரையில் டிசம்பர் மாதம் முதல் ரொக்க
பதிவேடு, பற்றுச்சீட்டுகள், இருப்புப் பதிவேடு மற்றும் பொருட்களின்
உண்மைத் தன்மை ஆகியவற்றை பார்வையிட்ட பின்னரே பயன்பாட்டுச் சான்றிதழை
தலைமையாசிரியர் கையொப்பமுடன் ஆசிரியர் பயிற்றுநர்கள் பெறுதல் வேண்டும்.
7.பயன்படுத்தாத மீதமுள்ள தொகையினை 31.03.2019 க்குள் மாவட்ட திட்ட
அலுவலக கணக்கிற்கு தலைமையாசிரியர்கள் வங்கி வரைவோலை / ECS மூலம்
ஒப்படைப்பு செய்தல் வேண்டும்.
8.பள்ளித் தகவல் பலகையில் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நாளதுவரை
பெறப்பட்ட விவரம் (தேதி தொகை உட்பட) பெயிண்டால் எழுதப்பட்டிருக்க
வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*ஒருங்கிணைந்த பள்ளி மான்யம் பயன்படுத்தியதைக் கண்காணித்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்(APO), மாவட்ட கல்வி
அலுவலர்கள்(DEO), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி பார்வையின்
போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும் அதற்கான பற்றுச் சீட்டுகள்,
ரொக்கப் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றைக் கண்காணிக்க
வேண்டும்.
2.தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறனை 6,7,8 வகுப்பு மாணவர்கள் மேம்படுத்த
ஒவ்வொரு பள்ளி நாட்களிலும் தலைமையாசிரியர் (பள்ளி மேலாண்மைக் குழு
ஒப்புதலுடன்) தினசரி பத்திரிக்கைகள் வாங்கியுள்ளாரா என்பதையும்,
மாணவர்கள் வாசித்தல் திறனை பரிசோதித்தும் பள்ளிப் பார்வைக்கும் செல்லும்
அலுவலர்கள் பதிவேட்டில் குறிக்க வேண்டும்.
3.SWACHHTA ACTION PLAN 2018-19 முழு சுகாதாரத் தமிழகம் என்ற தலைப்பின்
கீழ் 10 சதவீதத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
4.இருப்புப் பதிவேட்டையும், ரொக்க பதிவேட்டையும், பள்ளி மானியப்
பதிவேட்டையும் மற்றும் இம்மானியத்தை பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ள
பொருட்களின் உண்மைத் தன்மையையும் அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.
5.தேவையின் அடிப்படையிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி
மேலாண்மைக் குழு ஓப்புதலுடன் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பதையும்,
வாங்கப்பட்டுள்ள பொருட்களின் தரத்தையும் உறுதி செய்தல் வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பொருட்கள் வாங்குதல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்களை பட்டியலிட வேண்டும்.
அவ்வாறு பட்டியலிட்ட பொருட்களை அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கி
பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்கள் மட்டுமே
வாங்கப்பட வேண்டும்.
2.தேவைப்படும் பொழுது மட்டும் பொருட்கள் வாங்க தேவைப்படும் அளவிற்கு
வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட வேண்டும். கூடுதலாக தொகை எடுக்கப்பட்டு
நெடுநாட்களுக்கு தலைமையாசிரியர் கையிருப்பில் வைத்திருத்தல் கூடாது.
3.பொருட்கள் வாங்கியமைக்கான பற்றுச் சீட்டுகள் (Vouchers) பெறப்பட்டு
வரிசையாக பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரு செலவீனம் ரூ.5000/- க்கு
மேல் இருந்தால் அத்தகைய பற்றுச் சீட்டுகளுக்கு Tin நம்பர்
அவசியமானதாகும்.
4.தொகை பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்பட்டவை ரொக்கப் பதிவேட்டில்
(Cash book) பதிவு செய்ய வேண்டும். தலைமையாசிரியர் ஒவ்வொரு பதிவிலும்
தலையொப்பமிட வேண்டும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ரொக்கப் பதிவேடு
Abstract – இல் கையொப்பமிட வேண்டும்.
5.பொருட்களின் விவரங்களை இருப்புப் பதிவேட்டில் (Stock Register) பதிவு
செய்தல் வேண்டும். இருப்புப் பதிவேட்டு பக்க எண் பற்று சீட்டில் பதியப்பட
வேண்டும்.ஒவ்வொரு பதிவிலும் தலைமை ஆசிரியர் தலையொப்பமிப்பமிட வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பயன்பாட்டுச் சான்றிதழ்கள் ஒப்படைத்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1.பயன்பாட்டுச் சான்றிதழ்களை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

மாணவர் விவரத்தை கல்வித்துறை வெப்சைட்டில் பதிவு முடியாததால் காலதாமதமாகும் ஸ்மார்ட் கார்டு திட்டம் :

அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஸ்மார்ட் கார்டு திட்டம் காலதாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்தாக பள்ளி கல்வி மேலாண்மை இணையதளம்(இஎம்ஐஎஸ்) என்ற திட்டத்தை கடந்த 2012ம் ஆண்டு அரசு தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் ஒன்று முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பள்ளி விவரம், பெற்றோர் விவரம் உள்ளிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் ரத்த வகை, எடை உயரம் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் கூடுதலாக ஒவ்வொரு விவரமும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதற்கான பணிகள் தொடர்ந்து பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தனித்தனியாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உடனுக்குடன் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்து தற்போது 4வது மாதம் தொடங்கியுள்ளது. இருப்பினும் பல மாவட்டங்களில் மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்வது தொடர் காலதாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது பெரும்பாலான அரசு தொடக்கப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதியும் இல்லாமல் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் விவரங்கள் கடந்த ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எங்களுக்கு என்று தனியாக கணினி ஆசிரியர்கள் இல்லை. இங்கிருக்கும் ஓரிரு ஆசிரியர்களும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இல்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள வேறு பள்ளி ஆசிரியர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மேலும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இருந்தாலும் பள்ளியில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதி இல்லை. இதனால் தனியார் இன்டர்நெட் மையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 90 லட்சம் மாணவர்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 90 சதவீதமாகும். இந்த பணி நூறு சதவீதம் முடியாமல் உள்ளதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடர்ந்து காலதாமதமாகிறது. இந்த பணி முடிந்தவுடன், ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்மார்ட் கார்டால் என்ன பயன்?

இந்த திட்டம் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக மட்டும் அல்லாமல்  கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நகர்வாகவும் கருதப்படுகிறது. இந்த கார்டில் பயிலும் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம் பெற்று இருக்கும். ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் ஆசிரியர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறைக்கு தேவை இருக்காது. ஒருங்கிணைக்கப்படும் தகவல்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு தீர்வு காண வழிவகை ஏற்படும்

200 கோடி செலவில் 111 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை வசதி :

200 கோடி செலவில் 111 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை வசதி,  குடிநீர் வசதி செய்து தரப்படவுள்ளது. இதற்காக, விரைவில் டெண்டர் விட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பள்ளிகளில் புதிதாக ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டிய பள்ளிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டது. அதன்பேரில், மாவட்ட வாரியாக அதிகாரிகள் அளித்தனர். அந்த அறிக்கையின் பேரில் தமிழகம் முழுவதும் 111 மேல்நிலை பள்ளிகளில் நபார்டு வங்கியின் நிதியுதவியின் பேரில் 200 கோடி செலவில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம், தளவாட பொருட்கள், சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டது. 885 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், 111 பள்ளிகளில் ஆய்வகம், தளவாட பொருட்கள், 104 இடங்களில் குடிநீர் வசதிகள், 255 இடங்களில் கழிப்பறை, 39478 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.

இதற்காக தற்போது தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் டெண்டர் விடப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 1 பள்ளியிலும், கடலூர் மாவட்டத்தில் 2 பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 1ம், தர்மபுரி மாவட்டத்தில் 10ம், ஈரோடு மாவட்டத்தில் 6ம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1ம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ம், கரூர் மாவட்டத்தில் 2ம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5ம், மதுரை மாவட்டத்தில் 5ம், நாமக்கல்லில் 1ம், நாகையில் 2ம், நீலகிரி, பெரம்பலூரில் தலா 1ம், புதுக்ேகாட்டையில் 21ம், ராமநாதபுரத்தில் 1ம், சேலத்தில் 14ம், சிவகங்கை 1ம், நெல்லையில் 3ம், திருப்பூரில் 2ம், திருவண்ணாமலை 3ம், திருச்சி 2ம், திருவள்ளூர் 2ம், தேனி 2ம், திருவாரூர் 1ம், தூத்துக்குடி 2ம், வேலூரில் 7ம், விழுப்புரத்தில் 10ம், விருதுநகர் 1 பள்ளி என மொத்தம் 111 பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக, 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வகுப்பறை கேட்ட 14.13 லட்சம், ஆய்வகள் 39.27 லட்சம், தளவாட பொருட்கள் 24.24 லட்சம், குடிநீர் வசதி 2.52 லட்சம், கழிப்பறை 5.59 லட்சம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 10 நாட்களுக்குள் டெண்டர் விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பள்ளிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்

இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை :

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்று வரும் நான்காவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் நிகழ்வில் பள்ளி மாணவர்கள் 550 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர் .
லக்னெளவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் இந்திய சர்வதேச அறிவியல் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திராகாந்தி பிரதிஷ்டானில் நடைபெற்று வரும் இந்த விழாவின் ஒரு பகுதியாக டிஎன்ஏவை தனியாகப் பிரித்து எடுக்கும் நிகழ்ச்சி ஜிடி கோயங்கா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அப்பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 550 பேர் பங்கேற்று வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பின் கல்வியாளர் ரிஷிநாத், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சரோஜா காந்த் பாரிக் ஆகியோர் பார்வையிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் தொடங்கிவைத்தார். அவர் கூறுகையில், இந்த நிகழ்வானது இந்திய அறிவியல் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் ஆகும். மேலும், மாணவர்களின் அறிவியல் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை இது காட்டுவதாக உள்ளது. நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களிடமும் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், ஊக்கமளிக்கவும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் மாணவர்கள், பெண்கள், ஆராய்ச்சியாளர்கள் என 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 12,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும் என்றார்.
தேசிய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சரோஜ் காந்த் பாரிக் கூறுகையில், சியாட் நகரில் நடைபெற்ற டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் கின்னஸ் நிகழ்வில் சுமார் 302 மாணவர்கள் பங்கேற்றனர். தற்போது நடைபெற்ற நிகழ்வில் 550 மாணவர்கள் பங்கேற்று சாதனை நிகழ்த்தி உள்ளனர் என்றார்.
திட்ட மாதிரிகள் கண்காட்சி: லக்னெள அன்சல் பிளாசா பகுதியில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளி வளாகத்தில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் பொறியியல் மாதிரி போட்டி நடைபெற்றது.
இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது நவீன கண்டுபிடிப்பு மாதிரிகளை காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், தில்லி என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது 100 நவீன படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்பீன், பிரதீப் ஆகியோர் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய இரண்டு சக்கரங்களில் செயல்படும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். கோயம்புத்தூர் கே. பி.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகள் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் கழிவுகளை அகற்றும் நவீன இயந்திரத்தை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஈ.சந்திரகுமார், எஸ்.ஹரிபிரசாத் ஆகியோர் பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய நவீன ஊன்றுகோலை வடிவமைத்திருந்தனர்.
இது குறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், பார்வையற்றவர்கள், செல்லிடப்பேசியின் வாயிலாக இணைக்கப்பட்ட கருவிகள் மூலம் தங்களது முன்னே உள்ள பொருள்களை உணரும் வசதி இந்தக் கருவியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தேசிய திறனாய்வுத் தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்!

உயர் படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வில், தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கடினமான தேர்வாகக் கருதப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று மாநில அரசால் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாவது கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். கடந்த மே 13ஆம் தேதியன்று, இது என்சிஇஆர்டியால் நடத்தப்பட்டது.இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சம் பேர் எழுதினர். இதில், 1,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த ஆதித்யாஎன்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு சார்பில் ஆராய்ச்சிப் படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு போன்ற உயர் படிப்புகள், மருத்துவ உயர்படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்

ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் !

கடலுாரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் நடந்தது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 2 பாட பிரிவு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மைத் தன்மையை கண்டறியும் பணியை மாவட்டம் வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 2 பாட பிரிவு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 3,800 பேரின் மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மையானவை என, கண்டறிந்து ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டது.மீதமுள்ள 400 பேரின் மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையைக் கண்டறியும் சிறப்பு முகாம் கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.


இதற்காக ஆசிரியர்கள், பணியாளர்கள் சான்றிதழ்களுடன் வந்தனர்.அவர்களின் மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவெண், பிறந்த ஆண்டு, தேதியை, தேர்வுத் துறையின் ஆன்-லைன் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் கடலுார் செல்வராஜ், வடலுார் திருமுருகன், விருத்தாசலம் செல்வகுமார், சிதம்பரம் ஆஷா கிறிஸ்டின் ஆகியோர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, உண்மையானவ என, சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் :

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர் 27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 21 மாதங்களாக ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக போராடி வருகின்றனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். முடக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஊதிய குறைப்பினை சரி செய்வதுடன் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் காலம் காலமாக இருந்து வருகின்ற பணியிடங்களை ஒழித்தல், நியமனங்களுக்கு தடை, 5 ஆயிரம் பள்ளிகளை மூடி பொது கல்வியை பாழடிப்பது போன்ற கொள்கைகளை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொண்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிமன்றம் வேலை நிறுத்தத்திற்கு அப்போது தடை விதித்தது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை செப்டம்பர் 11 முதல் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று செப்டம்பர் 15ல் நீதிமன்றம் மற்றொரு உத்தரவிட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


பின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவில் தமிழக அரசு கடந்த அக்ேடாபர் 13ம் தேதிக்குள் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் அல்லது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றமே ஊதியக்குழுவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உத்தரவு வழங்கியது.

மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழக அரசின் தலைமை செயலாளர், பென்ஷன் திட்ட குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செயப்பட்டு அந்த அறிக்கையின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வாக்குறுதியை நீதிமன்றத்தில் அளித்தார். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்டு தமிழக அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்த வாக்குறுதிக்கு மாறாக அக்குழுவிற்கு கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால நீட்டிப்பு காலம் 8 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் அக்குழுவின் நிலை என்ன என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் நிலை என்ன என்பதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனாலேயே தொடர்ந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறி மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.



கடந்த 4ம் தேதி நடைபெற்ற தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் தமிழக அரசின் போராட்டத்திற்கு எதிரான உத்தரவுகள், கெடுபிடிகளை மீறி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து சென்றுவிட்டதுடன் போராட்டங்களிலும் பங்கேற்றனர். இதனால் பல பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு துறை அலுவலகங்களும் மூடப்பட்டதால் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தன.

இந்தநிலையில் மீண்டும் வரும் 13ம் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுவதுடன் நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளதால் அரசு மட்டத்திலும், கல்வித்துறையிலும் பணிகள் மீண்டும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

5 மாநில தேர்தல் அட்டவணை :

மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள்: மாணவர்களுக்கு ரூ.2.20 லட்சம் பரிசு :

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை,  பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ,  மாணவிகளுக்கு ரூ.2.22 லட்சம் பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்

பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை  சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்

ஒவ்வொரு போட்டிகளிலும்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம்,  இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம்,  மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது

பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகள்


கவிதைப் போட்டி :

முதல் பரிசு- பீ.ஜோசி அபர்ணா,  வித்யாகிரி மேல்நிலைப்பள்ளி,  சிவகங்கை மாவட்டம்,

இரண்டாம் பரிசு- செ.சுகசஞ்சய்,
ஸ்ரீசரஸ்வதி மேல்நிலைப் பள்ளி,  தருமபுரி மாவட்டம்,

மூன்றாம் பரிசு- மா.சண்முகநந்தா,  பி.எம்.வி. மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி,  தூத்துக்குடி.

கட்டுரைப் போட்டி :

முதல் பரிசு- ம.திவ்யா,  புனித மரியண்ணன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  சிவகங்கை மாவட்டம்,

இரண்டாம் பரிசு-
ரா.திவ்யதர்சினி,  நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம்,

மூன்றாம் பரிசு-

ஆ.ராஜலட்சுமி,  பா.தொ.ந.உ.க. மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டம்.

பேச்சுப் போட்டி :

முதல் பரிசு-

சை.புவனேஸ்வரி,  எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளி,  அம்பத்தூர்,  சென்னை,

இரண்டாம் பரிசு- ரோஷிணி,
கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி,  தாம்பரம், சென்னை,

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ன் படி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2019 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழில் எழுதுதல் - சில அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு!