யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/12/18

NMMS 2018 - Best Study Materials & Previous Year Question Papers & Answer Keys Download---கல்விச் செய்திகள்





✅ NMMS Exam 2018 - How to prepare - Tips?
https://goo.gl/U1eT4F


✅ NMMS Exam 2018 - OMR Sheet (Sample)
https://goo.gl/U1eT4F


✅ NMMS Exam 2018 - Study Materials
https://goo.gl/U1eT4F


✅ NMMS Exam 2018 - Previous 6 Year Question Papers & Key Answers
- 2017 Question & Answer
- 2016 Question & Answer
- 2014 Question & Answer
- 2013 Question & Answer
- 2012 Question & Answer
https://goo.gl/U1eT4F


 📲 Android App for NMMS Scholarship Exams 
https://goo.gl/QwNEgZ

அனைத்து வாகனங்களுக்கும் புதிய நம்பர் பிளேட் : பாதுகாப்பு அம்சங்களுடன் தர மத்திய அரசு உத்தரவு



அனைத்து வாகனங்களுக்கும், உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை, அடுத்த ஆண்டில் பொருத்த வேண்டும்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவது, வாகன திருட்டை தடுப்பது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிவது போன்றவை, போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளன.

இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், வாகனங்களுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான நம்பர் பிளேட்டுகளை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மத்திய மோட்டார் வாகன சட்டம், 1989ல், மாற்றங்கள் செய்து, உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக, இந்த நம்பர் பிளேட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த பிளேட்டுகள், வாகனத்துடன் இணைந்ததாக உருவாக்க, வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில், வாகன விபரம், வரி, அபராதம், விபத்து விபரங்கள், உரிமையாளரின் விபரங்கள் மின்னணு முறையில் பதிவேற்றப்படும். சோதனையின் போது, நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்தால், அனைத்து விபரங்களும் தெரியவரும்.

இந்த நம்பர் பிளேட்டுகள் சேதமடைந்தால், அவற்றை அழித்து விட்டு, புதிய நம்பர் பிளேட்டுகளை, தயாரிப்பாளர்களோ, மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ வழங்கலாம். உடைந்த நம்பர் பிளேட்டுகளை திரும்ப பெறாமல், வேறு நம்பர் பிளேட்டுகள் வழங்குவதும், உடைந்த நம்பர் பிளேட்டுகளை, வேறு வாகனங்களில் பொருத்துவதும் குற்றமாகும்.

புதிய வாகனங்களுக்கு, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை வழங்கும் போதும், பழைய நம்பர் பிளேட்டுகளை பெறும் போதும், இதற்கான பதிவேடுகளில், விபரங்களை பதிவேற்ற வேண்டும். இந்த விபரங்களை, நிபுணர் குழு, அடிக்கடி ஆய்வு செய்யும்

இன்றைய சிந்தனை---தகவல் துளிகள்



''கிடைத்த வாய்ப்பை....''


கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன், மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். 

அதுதான் சந்தர்ப்பம் (opportunity) என்னும் சிலை.
அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை
வழுக்கையுமாக இருக்கும்.

சந்தர்ப்ப சிலையிடம் சில கேள்விகள் ... 

உனக்கு இறக்கை எதற்கு..?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!

முன்னந் தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!

ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதோர் இருந்து
கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!

பின்னந் தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது..?.
சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் என்னைப் பற்றிப்
பிடித்துக் கொள்ளா இருப்பதற்காக!

சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள். 

இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார். 

ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால் 
அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது 
என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்..? 

ஆம்,நண்பர்களே.,

இன்றைக்கு கையில் கிடைக்கும் வாய்ப்புகளை 
தவற விட்டு விட்டு பெரிய வாய்ப்பு கிடைக்கும்
என நம்பி காத்து இருப்பதைவிட,கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்வதே வெற்றியை தரும்.

12 ம் வகுப்பு அரசு மாதிரி வினாத்Hereதாள் Download ---கல்விச் செய்திகள்

12th New Official Model Question Papers 2018 - Published

https://goo.gl/RTqR6z



♦ Tamil Question

♦ English Question

♦ Maths Question

♦ Physics Question

♦ Chemistry Question

♦ Biology Question

♦ Botany Question

♦ Zoology Question

♦ Computer Applications

♦ Computer Science

♦Computer Technology

♦ Commerce Question

♦ Accountancy Question

♦ Economics Question

♦ History Question

♦ Nursing Question

♦ Agricultural Science

♦ Ethics & Indian Culture

♦ Vocational Nursing

♦ General Nursing

♦ Advanced Tamil

♦ Political Science

♦ Home Science

♦ Geography Question

♦ Nutrition & Dietics

♦ Home Science Question

♦ Communicative English

 And Official Period Allotment Published

👉 https://goo.gl/RTqR6z

தொலைந்துபோன டெபிட் கார்டை தடை எப்படி செய்வது?---தகவல் துளிகள்




இன்று நமது பணப் பரிவர்த்தனைக்கு பிரதான கருவியாக 'டெபிட் கார்டு' உள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பது, இணைய தளம் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்வது போன்ற வங்கிச் சேவைகளை டெபிட் கார்டு மிகச் சுலபமாக்கிவிட்டது. 

இந்நிலையில், வங்கி டெபிட் கார்டை தொலைக்க நேர்ந்தால், தடுமாறிப் போய்விடுவோம். வங்கியில் இருந்து உங்களது புதிய டெபிட் கார்டை பெறுவதற்கு முன்பு, தொலைந்த அட்டையை 'பிளாக்', அதாவது தடைசெய்வது சற்றுக் கடினமான செயல்.

உங்களது டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். அப்போது, தொலைபேசியில் காத்திருக்கும் நேரம் மற்றும் வங்கிக் கணக்கு எண், டெபிட் கார்டு தொலைந்ததற்கான காரணம், முகவரி போன்ற தகவல்களைத் தருவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நம்மைப் பொறுமையிழக்க வைக்கும்.

இதற்கு மாற்றாக, தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்.

உங்களது 'யூசர் ஐடி' மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இணைய வங்கிக்கணக்கில் உள்நுழையுங்கள். 'ஈ- சர்வீசஸ்' எனும் பிரிவில், ஏடிஎம் கார்டு சேவைகள் என்பதற்குக் கீழே 'பிளாக் ஏடிஎம் கார்டு' என்பதைத் தேர்வு செய்யுங்கள்.


பின்னர் எந்த வங்கிக்கணக்குக்கான டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்களின் ஏடிஎம் கார்டு எண்ணின் முதல் மற்றும் கடைசி 4 இலக்க எண்கள் காண்பிக்கப்படும். அத்துடன் செயல்பாட்டில் உள்ள, தடை செய்யப்பட்ட அனைத்து டெபிட் கார்டுகளும் காண்பிக்கப்படும். நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டை தேர்வு செய்து, அதைச் சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும்.

அதை உறுதிசெய்யும் வகையில், வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி எனும் அங்கீகாரத்தை தேர்வு செய்யவும். வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி-ஐ என்டர் செய்த பின்னர், அதை உறுதி செய்ய (கன்பர்ம்) வேண்டும்.

கடைசியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்யக்கோரும் உங்களின் சேவை கோரிக்கையை வெற்றிகரமாகச் சமர்பித்த பின்னர் வழங்கப்படும் சேவை எண்ணை, எதிர்கால தேவைக்காகவும் மீண்டும் அதுதொடர்பாக விளக்கங்களை வங்கியில் கோரவும் குறித்து வைத்துக்கொள்ளவும்.

டெபிட் கார்டை பிளாக் செய்வதற்கான சேவை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று அந்த எண்ணை வழங்கி புதிய டெபிட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். அந்தச் சமயத்தில் வங்கிகள் உடனடியாக கையில் டெபிட் கார்டை உங்களுக்கு வழங்கும். அது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் அல்லது அதிகபட்சமாக 2 வேலை நாட்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும்.

நீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா?---கல்விச் செய்திகள்



தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர்  191 பேர்,  தமிழ்நாட்டு மாணவர்கள்  வெறும் 4 பேரே!

நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் 191 பேர்; தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 
4 பேர் என்ற அதிர்ச்சித் தகவலை டெக்கான் கிரானிக்கல்' ஏடு புள்ளி விவரங் களுடன் வெளியிட்டுள்ளது.
"டெக்கான் கிரானிக்கல்'' கூறுகிறது.

இது குறித்து "டெக்கான் கிரானிக்கல்" ஆங்கில நாளேட்டின் 07.12.2018 தேதி இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் வெளியிடப் பட்டுள்ள தகவலின்படி, தமிழக அரசுக்குச் சொந்தமான 22 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கே நான்கு மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்திருக்கும் பொழுது, திகைக்க வைக்கும் வகையில் வெளி மாநிலங்களில் கல்வி பயின்ற 191 மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைத்துள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களி லிருந்து ஒரே ஒரு மாணவர் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்திருக்கும் பொழுது, வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் 70 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். வகுப்பில் சேர்ந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம்...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் பெறப் பட்ட தகவல்மூலம் இது தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சினை கடந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. மருத்துவக் கல்லூரிகளில் "நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 422 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வருவாய்த் துறையின் மூலம் பூர்வீகச் சான்றிதழ்களைப் பெற்று இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு வெளி மாநில மாணவர்கள் அதிக அளவில் சேர்வதைக் குறைப்பதற்காக கடந்த ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் பெற் றோரில் ஒருவர் தமிழகத்தில் படித்திருக்க வேண்டும் என்னும் அந்த விதியை அமல்படுத்தியதன் மூலம் இந்தஆண்டு வெளிமாநில மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வரை வெளி மாநிலங் களில் பயிலும் மாணவர்கள், தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தின்கீழ் (ஸ்டேட் போர்டு) பயிலும் மாணவர்கள் மிக அதிகஅளவிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றதால் அவர்களுடன் போட்டி போடமுடியாமல் இருந்தனர். இதற்காக சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மேலாளர்   உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கூடஅளித்திருந்தார். ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர், "நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படி மட்டுமே கேள்வி கேட்கப்படுவதால் வெளி மாநில மாணவர்கள் அதிக அளவில் "நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பூர்வீகச் சான்றிதழ் வழங்கி மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் சேருவதற்குத் தடை விதிக்கக்கோரி தமிழக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இதற்காக வெளிமாநில மாணவர்கள் வருவாய்த் துறை மூலம் பூர்வீகச் சான்றிதழ்களைச் சட்ட விரோதமாகப் பெற்று வருகின்றனர் என்றும் பெருமளவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
இது பற்றி கூறியுள்ள சமூக நீதிக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், "சில நியாயமான வழக்குகள் உள்ளன. மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் அலுவலர்கள் அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களின் பூர்வீக உரிமைகள் மதிக்கப்படவேண்டும். ஆனால் பூர்வீகச் சான்றிதழ்கள் முறைகேடாகப் பயன் படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடது'என்று தெரிவித்துள்ளார்.

 "தற்போது இந்த மாணவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, நாங்கள் அரசிடம் எடுத்துக்கூறி, நமது மாநில மாணவர்களின் நலன்களைக் காப்பதற்கான விதிகளைக் கொண்டு வருவோம்என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இது பற்றி கூறுகையில், "தமிழக அரசு தமிழக மாநிலப் பாடத்தின்படி பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் தனியான இட ஒதுக்கீடு ஏற்பாடு செய்யவேண்டும். வெளிமாநில மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீடு, அவர்களுடைய சொந்த மாநில ஒதுக்கீடு போன்ற வேறு வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் தமிழக மாநிலப்
பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கும் வகையில் சிறப்பு ஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தால்...
தமிழ்நாட்டில் உள்ள 22 அரசுமருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2447 எம்.பி.பி.எஸ். இடங்களில் 40 அளவிலான மாணவர்கள் தான் தமிழக அரசு மற்றும்  தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களிலிருந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் முந்தைய ஆண்டுகளில்  மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 1,277  மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

 சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்றவர்களில் 
611 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
விதிகளின்படி, தமிழக அரசுமருத்துவக் கல்லூரிகளில் மாநிலஇட ஒதுக்கீட்டின்கீழ் இடம்பெறும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கவேண்டும், தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் வசிப்பிடம் அல்லது பூர்வீகத்திற்கான சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. பகுதி அளவிலோ முழுமையாகவோ வெளி மாநிலங்களில் பயின்றமாணவர்கள் பூர்வீகச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இவ்வாறு " டெக்கான் கிரானிக்கல்" ஆங்கில நாளேட் டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு - 2018 அரசு மாதிரி வினாத்தாள்கள் - Download Here---கல்விச் செய்திகள்



👉 https://goo.gl/mF21WS

🔰 Tamil  Model Question

🔰 English Model Question

🔰 Maths Model Question

🔰 Physics Model Question

🔰 Chemistry Model Question

🔰 Biology  Model Question

🔰 Botany Model Question

🔰 Zoology Model Question

🔰 Computer Applications

🔰 Computer Science

🔰 Commerce Model Question

🔰 Accountancy Model Question

🔰 Economics Model Question

🔰 Business Maths Model Question


👉 https://goo.gl/mF21WS

12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு - 2018 அரசு மாதிரி வினாத்தாள்கள் - Download Here கல்விச் செய்திகள்,



👉 https://goo.gl/p7xxfh

📮 Tamil  Model Question

📮 English Model Question

📮 Maths Model Question

📮 Physics Model Question

📮 Chemistry Model Question

📮 Biology  Model Question

📮 Botany Model Question

📮 Zoology Model Question

📮 Computer Applications

📮 Computer Science

📮 Commerce Model Question

📮 Accountancy Model Question

📮 Economics Model Question

📮 Business Maths Model Question


👉 https://goo.gl/p7xxfh

1st to 8th Standard SA Test - Question Papers Collection - From 2012 to 2018 கல்விச் செய்திகள்,


  1. 1st Term - Question Papers Collection for 1st to 8th Standard - Download Here 
  2. 2nd Term - Question Papers Collection for 1st to 8th Standard - Download Here 
  3. 3rd Term - Question Papers Collection for 1st to 8th Standard - Download Here 

DAS Exam - Question Paper and Answer Key 2018

  • DAS Exam - Maths Question Paper and Answer Key | Mrs. Mahalakshmi - Download Here

1st Standard SA - Second Term Model Question Papers 2018

  • 1st Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
2nd Standard SA - Second Term Model Question Papers 2018

  • 2nd Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
3rd Standard SA - Second Term Model Question Papers 2018

  • 3rd Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
4th Standard SA - Second Term Model Question Papers 2018

  • 4th Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
5th Standard SA - Second Term Model Question Papers 2018

  • 5th Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
6th Standard SA - Second Term Model Question Papers 2018

  • 6h Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
7th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016

  1. 7th Tamil - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  2. 7th English - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  3. 7th Maths - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  4. 7th Science - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  5. 7th Social - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here
8th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016

  1. 8th Maths - 2nd Term Model Question Paper | Mr. Santhosh - English Medium Download Here
  2. 8th Tamil - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  3. 8th English - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  4. 8th Maths - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  5. 8th Science - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  6. 8th Social - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here
4th & 5th Standard SA - Second Term Question Papers - 2017

  1. 4th Standard 2nd Term Model Question Paper (Tamil, English, Science, Social) | Mr Sanjay Muthusamy - Tamil Medium Download Here 
  2. 5th Standard 2nd Term Model Question Paper (Tamil, English, Science, Social) | Mr Sanjay Muthusamy - Tamil Medium Download Here 
  3. 3rd Standard 2nd Term Model Question Paper (Tamil) | Mr Sanjay Muthusamy - Tamil Medium Download Here 
  4. 4th Standard 2nd Term Model Question Paper (Tamil, English, Science, Social) | Mr Sanjay Muthusamy - English Medium Download Here 
  5. 5th Standard 2nd Term Model Question Paper (Tamil, English, Science, Social) | Mr Sanjay Muthusamy - English Medium Download Here 

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம்...

                                     

பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம், சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் அமல்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் பதிவேடு மூலமாக மாணவர்களின் வருகையை பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்கு மாற்றாக, நவீன முறையில் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் பேஸ் ரீடிங் முறை, சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல்படுத்தப்படவுள்ளது.  இந்த பள்ளியில் உள்ள ஒரே ஒரு வகுப்பறையில் மட்டும், இந்த திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் 
துவக்கி வைக்கிறார். இந்த முறையில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்து கணிப்பொறியில் இணைத்துவிடுவர். பின்னர் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்ததும், ஆசிரியர் ஒரு புகைப்படம் எடுத்து அதனை கணிப்பொறியில் இணைத்ததும் புகைப்படங்களை சரிபார்த்து, எத்தனை பேர் வந்திருக்கிறார்கள், எத்தனை பேர் வரவில்லை என கணிப்பொறி கூறிவிடும். அத்துடன் இணையதளம் வழியாக இந்த தகவல், தலைமை ஆசிரியர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சென்றடையும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன மூலம் அரசு செயல்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டம், தமிழகத்தில் அரசு பள்ளியில், செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து எதிரொலி - இதர தேர்வு பட்டியலும் ரத்தாகுமா?

                                 

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து ஆனதையடுத்து, மற்ற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலையும் ரத்து செய்து புதிய பட்டியலை தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அரசு பள்ளிகளில், ஆயிரத்து 325 சிறப்பாசிரியர்களை நியமனம் செய்த விவகாரத்தில், குளறுபடிகள் நிகழ்ந்ததாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓவியம் மற்றும் தையல் பிரிவுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, வருகிற 18 ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மதுரையைப்போல், சென்னையிலும் தீர்ப்பு வரும் பட்சத்தில், ஒட்டுமொத்த தேர்வு பட்டியலையும் ரத்து செய்துவிட்டு, புதிய தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடு - ஒரு நபர் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் தாக்கல் என தகவல்

                                          அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் வகையில் தமிழக அரசு அமைத்த ஒரு நபர் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு அரசு செயலர் சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் ஏழு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்,100க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், தனி நபர்கள் என பலரும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதுவரை  பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் ஆசிரியர்களே பெரும்பான்மையாக கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் துறை ரீதியான மனுக்கள் என அதன் தன்மைக்கு ஏற்ப  பிரிக்கப்பட்டு பின்பு அவர்களை நேரில் அழைத்து கருத்துக்களை கேட்டது. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், முதலமைச்சரிடம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஏற்கனவே ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீதர் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

புகைப்பட வருகைப்பதிவு முறை சென்னை அரசு பள்ளியில் அறிமுகம்

சென்னை, அரசு பள்ளிகளில் முதல் முறையாக, சென்னை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், புகைப்பட வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மாணவர்களை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறையை, அரசு பள்ளியில் அறிமுகம் செய்ய, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. பெங்களூரை சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற நிறுவனம் சார்பில், 'ஆன்ட்ராய்ட்' வகை செயலி வழியாக, இந்த தொழில்நுட்பம் அமலாகிறது.இதுகுறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் கூறியதாவது:

நாட்டிலேயே முதன்முறையாக, புகைப்பட வருகைப்பதிவு திட்டம், தமிழக அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது. சீனாவில், ராணுவத்திலும், சில துறைகளிலும், இதை செயல்படுத்துகின்றனர். வகுப்பில் உள்ள மாணவ, மாணவியரின் புகைப்படங்கள், முதலில் சேகரிக்கப்பட்டு, அவை, 'ஆன்ட்ராய்ட் ஆப்' மற்றும், கணினி சர்வரில் உள்ளீடு செய்யப்படும்.வகுப்பு ஆசிரியர், தங்கள் மொபைல் போனில், ஆன்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிலுள்ள வசதியை பயன்படுத்தி, வகுப்பில் உள்ள அனைத்து மாணவ, மாணவியரின் முகம் பதிவாகும் வகையில், ஒரே புகைப்படமாக எடுக்கலாம். அந்த புகைப்படத்தில் பதிவாகும் மாணவ, மாணவியரின் முகங்கள், செயலி வழியாக, வருகைப்பதிவாகி விடும்.இந்த தொழில்நுட்பத்தால், தவறான வருகைப்பதிவு செய்ய முடியாது. வருகைப்பதிவு எடுக்கும் நேரம் குறையும். கணினி முறையில், வருகைப்பதிவு விபரங்களை தொகுத்து வைக்கலாம். அவற்றை, யாரும் திருத்த முடியாது. இது, முழுக்க முழுக்க, 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' என்ற, கணினி வழி செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தில் செயல்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், 8ம் வகுப்புக்கு மட்டும், புகைப்பட வருகை பதிவு முறை, சோதனை முயற்சியாக அமலுக்கு வருகிறது. வரும், 10ம் தேதி, தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இதை துவங்கி வைக்கிறார்.
திட்டத்தின் வெற்றியை பொறுத்து, மற்ற வகுப்புகளுக்கும், மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அசோக் நகர் பள்ளியில், நுழைவு வாயில் கேமரா வழியாக, மாணவியரை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறை, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்க கடலில் புதிய புயல் சின்னம் சென்னை, விசாகபட்டினத்துக்கு, 'குறி

கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே, வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில், கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், சாத்தனுார் மற்றும் சத்தியமங்கலத்தில், தலா, 2 செ.மீ., - வேலுார் கலவை மற்றும் கிருஷ்ணகிரியில், தலா, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.இன்றைய வானிலையை பொருத்தவரை, 'தமிழகத்தில், 28 மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். கரூர், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையில் திடீர் மழை பெய்யலாம். புதுச்சேரியில், வெயில் கொளுத்தும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வங்கக் கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென்கிழக்கில், இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோடு பகுதிக்கும், வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதிக்கும் இடையே, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு, அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும், ஈரப்பதம் நிறைந்த மேக கூட்டங்கள் வலு ஏற்படுத்துவதால், புயல் சின்னமாக உருவாகும். வரும், 10ம் தேதி முதல், காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் மாறி, தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னைக்கும், ஆந்திராவின், விசாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியில், இந்த புயல் கரையை கடக்கும்; இந்த புயல், வலுமிக்க தீவிர புயலாக உருவெடுக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு, தாய்லாந்து தேர்வு செய்துள்ள, 'பேய்ட்டி' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.புயல் உருவாவதால், தற்போதைய நிலையில், கடலோர பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் என, வானிலையாளர்கள் கணித்துள்ளனர்

பள்ளிகளை கண்காணிக்க பறக்கும் படை

ஜனவரி 1ந்தேதி முதல் 'சிப்' இல்லாத ஏ.டி.எம்.கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல்!!!

School Attendance App - New Version உடனே Update செய்யுங்க!

Attendance app version v2.0.1. உள்ளதா என்று பார்க்கவும்.V2.0.0 இருந்தால் update கொடுக்கவும்.

 V2.0.1 என மாற்றம் அடைந்த பின்னர் synchronization date 7.12.2018 உள்ளதா என பார்க்கவும். Date 6.12.2018 இருப்பின் synchronization செய்யவும் date 7.12.18 மாற்றம் அடையும். பள்ளிக்குச் சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும்.

வருகைப்பதிவு முடித்தவுடன் மீண்டும் synchronization செய்யவும். Daily Report சென்று பார்க்கவும். Green tic இருக்கும். உங்கள் வருகைப்பதிவு online இல் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வழிமுறைகளைப் பின்பற்றி வருகைப்பதிவு மேற்கொள்ளவும்.

வேளாண் முதுநிலை பாடங்களுக்கு மீண்டும் இருபருவம்':

வேளாண் முதுநிலைபாடங்களுக்கு, அடுத்த கல்வியாண்டு முதல் மீண்டும் இருபருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.வேளாண் உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்.,), வேளாண் பல்கலை, அதன் உறுப்பு கல்லுரிகள், பாடப்பிரிவுகள்குறித்து ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குகிறது.

வேளாண் பல்கலையில், கடந்த ஜூன் மாதம், தேசிய வேளாண் கல்வி அங்கீகாரக் குழு ஆய்வு நடத்தியது.இதில், வேளாண் பல்கலையின், ஒன்பது உறுப்பு கல்லுாரிகளில், ஏழு பாடப்பிரிவுக்களுக்கு, ஐ.சி.ஏ.ஆர்., அங்கீகாரம் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.ஆனால், ஐ.சி.ஏ.ஆர்., விதிகளை மீறி, முதுகலை மற்றும் முனைவர் பாடப்பிரிவுகளுக்கு, முப்பருவ கல்வி முறை பின்பற்றப்பட்டதால், அங்கீகாரம் வழங்கப்படவில்லை. கடந்த, மூன்று ஆண்டுகளாக முதுகலை படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாத நிலை நீடிக்கிறது.இது குறித்து, பல்கலை துணைவேந்தர் குமார் கூறுகையில், ''வேளாண் பல்கலை மாணவர்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஏ.ஆர்.ஐ.,) மேற்படிப்பை தொடருவதற்கு, உதவியாக முதுநிலை படிப்புகளுக்கு, முப்பருவக் கல்வி முறை பின்பற்றப்பட்டது.


ஐ.சி.ஏ.ஆர்., விதிகளின்படி, இருபருவ கல்வி பின்பற்ற, நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இகுகுறித்து, ஜனவரியில் தேசிய வேளாண் அங்கீகாரக்குழு பல்கலையில் ஆய்வு செய்ய உள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல், முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் இருபருவக் கல்விமுறை பின்பற்றப்படும்,'' என்றார்.

6 மாதங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா"புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு அடித்தது அதிஷ்டம்.!!

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் 3 சென்ட் இலவச வீட்டு மனைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் ஆணையில், நீர்நிலை, மேய்க்கால் மற்றும் சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பயனாளிகளின் தகுதியின் அடிப்படையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களை அப்புறப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கும் தமிழக அரசு, மேய்க்கால் மற்றும் சாலை போன்ற மற்ற ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தவும் ஆணையிட்டுள்ளது. இந்த திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ (C.P.S. solution)



உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் நியமன நடைமுறைகள் ரத்து : அறிவிப்பில் தெளிவில்லை என ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கடந்த 26.7.2017ல் சிறப்பு ஆசிரியர் பிரிவில் காலியாகவுள்ள 632 உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வில் 70 மதிப்பெண் பெற்றேன். பணி வழங்குவதற்கான சீனியாரிட்டி எனக்கு கிடைத்தது. இதன்படி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். அப்போது, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான கல்வியில் உயர்தகுதி பெற்றதற்கான சான்றிதழ் பெறவில்லை என கூறினர்.


 ஓராண்டு வகுப்பான இந்த படிப்பு கடந்த 2004ல் கைவிடப்பட்டது என்பதை விளக்கினேன். இதன்பிறகு வெளியான தேர்வானவர்களின் பட்டியலில் என் பெயர் இல்லை. உரிய கல்வித்தகுதி பெறவில்லையென அதில் கூறப்பட்டுள்ளது. உரிய தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு முடிவுகள் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கு என்னை அழைக்கவும், எனக்கு உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தெளிவாக இல்லை. அறிவிப்பில் முரண்பாடு உள்ளது. எனவே, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் நியமனம் தொடர்பான  ஒட்டுமொத்த நடைமுறைகளும் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்