யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/9/16

முதலில் Cps ல் சேர்ந்தவர்களுக்கு Cps Number Allotment Letter தந்திருக்கமாட்டார்கள். அவர்கள் தற்போது Cps கணக்கில் login செய்து   Allotment letter  என்பதை click செய்து download செய்துகொள்ளுங்கள். உங்கள் கணக்குத்தாளையும் download செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
இதனை கிளிக் செய்து login செய்யுங்கள்.
 http://cps.tn.gov.in/public/

தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அரசின் கடிதம்.

மத்திய அரசு - கல்வி கடன் வட்டி மானியம் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது?

2009 பின் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள:-

கல்விக்கடன் வட்டி மானியம் தொடர்பான அறிவிப்புக்கள் அறிந்துகொள்ள :-http://www.iba.org.in/circularnew.asp


http://www.iba.org.in/HRD.asp

ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும்-கலைஞர்

ஆசிரியர்களைஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும்உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். அவர்ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப்
புகழ்படைத்தவர்! அவர் பிறந்த நாள்- செப்டம்பர் 5ஆம் நாள், “ஆசிரியர்தினம்” என ஆண்டுதோறும் எழுச்சியுடன்கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில்வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும்சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடு
ம் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப
்படுகிறது.
ஆசிரியர்சமுதாயம் மகிழும் வகையில், “நல்லாசிரியர்விருது” என வழங்கப்பட்ட அந்தவிருதின் பெயரை, 1997இல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது” எனப் பெயர்மாற்றம் செய்து வழங்கிட வகைசெய்தது தி.மு.க. அரசு!
அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்கஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச்சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்;
20 ஆண்டுகள்பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின்‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாகமாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு; ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப்படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப்பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவுமூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதியஆசிரியர் நியமன முறையை அடியோடுரத்து செய்தது என எண்ணற்றசலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு!
இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக்குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்தஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்-அரசு ஊழியர் குடும்பங்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகைசெய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திடவிரும்புகிறேன்.
ஓர் ஆசிரியருக்கு வேலை கொடுத்தால் அவர்குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ளஉறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமைவிரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில்திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும்காலங்களில் எல்லாம் அதிக அளவில்ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது.
ஆனால், ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கழகஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகைகளையெல்லாம் பறித்ததுடன்; அந்தச் சலுகைகளைகளை மீண்டும்வழங்கிடக் கோரிப் போராடிய ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் நள்ளிரவு நேரத்திலும், பெண்கள் என்று பாராமலும், வீடு புகுந்து கைது செய்தும், ஏறத்தாழ1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்-அரசுஊழியர்களை வேலை நீக்கம் செய்தும்கொடுமை புரிந்தது இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசு ஒன்றுதான்என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
அத்துடன், அண்மைச் சில ஆண்டுகளாக, ‘தகுதித்தேர்வு’ என்ற ஒன்றைப் புகுத்தி, அதையும் ஆண்டுதோறும் நடத்திடாமல், ஆசிரியர் பயிற்சி பெற்ற பலர்வேலை கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் நிலையைஇன்றைய அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆசிரியர் சமுதாயம் அடைந்திடும் இன்னல்களை எண்ணி வேதனைப்படாமல் இருந்திடமுடியவில்லை.

இந்நிலையில்ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாகவிளங்கிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்சார்பில் தமிழக ஆசிரியர் அனைவர்க்கும்எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துமகிழ்கிறேன்.

CPS - திட்டத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு

நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப்பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும்பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்குவிதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.


வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளைமீண்டும் தொடங்க
அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம்ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல்திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்குவிதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக்கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்புகளில் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப்பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப்பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத்தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள்ஆய்வு செய் யும் பாடங்களைஒட்டி மூன்று யூனிட் அளவிலாகபாட வகுப்பு களும் அவர்களுக்குநடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்திஅதில் வெற்றி பின்னரே ஆய்வுகளை தொடர அனுமதிக்க வேண்டும்எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக்படித்த மாணவர் களுக்கான ஆய்வுமற்றும் தொழில் வகுப்புகள் கொண்டபாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாதுஎன்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்தஆண்டு முதல், மொழிப் பாடங்கள்மற்றும் வரலாறு, புவியியல், அரசியல்அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில்மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில்பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள்உள்ளன. இதில் எம்.பில்மற்றும் பிஎச்.டி ஆய்வுப்படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும்மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போதுதிறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்தியதொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்துவந்தது. இந்தப் புகார் களைஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப்படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல்திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ்கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாகநிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில்திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின்கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப்படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டுஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம்கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்றதொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், 770 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 8.93 கோடி ரூபாயில் இத்திட்டம்செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக
மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில்கம்ப்யூட்டர், ஹார்டுவேர்ஸ், கேமரா, புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக் சிஸ்டம் பொருத்தும் பணிகளைஅவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடுதிரை வகுப்பறைக்கு என, பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளஇணையதள வசதியை அதற்கு மட்டுமேபயன்படுத்த வேண்டும்.
பிற அலுவலக பணிக்கு பயன்படுத்தவோ, மின்னஞ்சல் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி முதன்மை கல்விஅலுவலர் வாசு கூறியதாவது: தேனிமாவட்டத்தில், ஆண்டிபட்டி, கெங்குவார்பட்டி, சிலமலை, கொடுவிலார்பட்டி, தெப்பம்பட்டி, லட்சுமிபுரம் உட்பட, 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொடுதிரை கற்றல்வகுப்பறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையானகம்ப்யூட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை பொருத்தும்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம்தோறும் தலா, 1,000 ரூபாய் வீதம் இணையதளபயன்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மாணவர்கள்பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், 'சிடி' மூலம் வகுப்பறையில்பாடம் நடத்த சம்பந்தப்பட்ட பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர், முதல் வாரத்தில் பணிகள்நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநில நல்லாசிரியர் விருதுக்கு சேலம் மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்குத்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2015-16 ஆம்ஆண்டுக்கான உயரிய டாக்டர் ராதாகிருஷ்ணன்விருதுக்கு, சேலம் மாவட்டத்தில் உள்ள13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலநல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்விவரம்:
1. ந.பாஸ்கரன், தலைமை ஆசிரியர், ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி, இருசனாம்பட்டி, வீரபாண்டி. 2. யா. ஜான் லூர்தாஸ், தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கொண்டலாம்பட்டி, பனமரத்துப்பட்டி. 3. பி.ஸ்ரீவித்யா, தலைமைஆசிரியர், மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அம்மாப்பேட்டை.
4. கை.சண்முகவள்ளி,தலைமை ஆசிரியர், ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாமிநாயக்கன்பட்டி, ஓமலூர்.
5. மு.செல்வி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோணங்கியூர், கொங்கணாபுரம். 6. க.மேகலா, தலைமைஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எம்.பழக்காரனூர், மேச்சேரி.
7. இரா.ஜெயந்தி, தலைமை ஆசிரியர், நகரவைமகளிர் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை. 8. பெ. சுசீந்திரன், தலைமை ஆசிரியர், நகரவைஉயர்நிலைப் பள்ளி,
புதுத்தெரு, கிச்சிப்பாளையம். 9. பெ.சுமதி, தலைமைஆசிரியர், அரசினர் மேல்நிலைப் பள்ளி, நட்டுவம்பாளையம், சேலம். 10. எ.மரியமெர்லின், தலைமைஆசிரியர், அரசினர் (ம) மேல்நிலைப் பள்ளி, ஜலகண்டாபுரம்.
11. இரா.செல்லதுரை, முதல்வர், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம்.

12. சு.பியூலா ஞானபூஷனம், முதுகலைஆசிரியர், குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம். 13. க.கண்ணகி, முதுநிலைவிரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவனம், உத்தமசோழபுரம். இந்த விருதுகள் சென்னை சாந்தோம் செயின்ட்பீட்ஸ் பள்ளி வளாகத்தில் செப்டம்பர்5 ஆம் தேதி மாலை 4 மணிக்குநடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது என மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.

‘ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும்’ கருணாநிதி – ஆசிரியர் தின வாழ்த்து.

 ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் எனகருணாநிதி தனது ஆசிரியர் தினவாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில்கூறியிருப்பதாவது:–


 ஆசிரியர்களுக்கு விருது ஆசிரியர்களை ஏணிப்படிகள்என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர
கலசங்களாகவும்உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர்ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ்படைத்தவர்! அவர் பிறந்த நாளானசெப்டம்பர் 5–ம் நாள், ‘‘ஆசிரியர்தினம்’’ என ஆண்டுதோறும் எழுச்சியுடன்கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும்சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுவதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது. எண்ணற்ற சலுகைகள் ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில், ‘‘நல்லாசிரியர்விருது’’ என வழங்கப்பட்ட அந்தவிருதின் பெயரை, 1997–ல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது“ எனப் பெயர்மாற்றம் செய்து வழங்கிட வகைசெய்தது தி.மு.க. அரசு. அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்கஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச்சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்புநிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலைநீக்கம்; தமிழாசிரியர்களின் ‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாக மாற்றம்; தமிழ் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு; ஆசிரியர்–அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப்படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப்பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவுமூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதியஆசிரியர் நியமன முறையை அடியோடுரத்து செய்தது என எண்ணற்றசலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு.  ‘ஆசிரியர்தின’ நல்வாழ்த்துகள் இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக்குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்தஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்–அரசு ஊழியர் குடும்பங்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகைசெய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திடவிரும்புகிறேன். ஓர் ஆசிரியருக்கு வேலைகொடுத்தால் அவர் குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமைவிரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில்தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம் அதிக அளவில்ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது. இவ்வாறு ஆசிரியர் சமுதாயத்திற்குஎந்த நாளிலும் அரணாக விளங்கிடும் தி.மு.க.வின்சார்பில் தமிழக ஆசிரியர் அனைவருக்கும்எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளை தெரிவித்துமகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.