யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/9/16

நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி

நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப்பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும்பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்குவிதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.


வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளைமீண்டும் தொடங்க
அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக நாட்டின் 15 திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி கடந்த வாரம்ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் கடந்த 2009 முதல்திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புக்குவிதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாகக்கூறியுள்ளது. என்றாலும் இந்த ஆய்வுப் படிப்புகளில் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்கும் விதி முறைகளில் சிலவற்றைப்பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
உதாரணமாக, இந்த ஆய்வுப் படிப்புகளுக்குத் திறந்தநிலைப்பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத்தேர்வு செய்யவேண்டும். இது வன்றி, மாணவர்கள்ஆய்வு செய் யும் பாடங்களைஒட்டி மூன்று யூனிட் அளவிலாகபாட வகுப்பு களும் அவர்களுக்குநடத்தப்பட வேண்டும். இதில் தேர்வு நடத்திஅதில் வெற்றி பின்னரே ஆய்வுகளை தொடர அனுமதிக்க வேண்டும்எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிடெக், எம்டெக்படித்த மாணவர் களுக்கான ஆய்வுமற்றும் தொழில் வகுப்புகள் கொண்டபாடங்களில் மாணவர் சேர்க்கை கூடாதுஎன்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
இந்த உத்தரவால், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளில் அடுத்தஆண்டு முதல், மொழிப் பாடங்கள்மற்றும் வரலாறு, புவியியல், அரசியல்அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர பாடங் களில்மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பல்வேறு பாடப்பிரிவு களில்பட்டம் மற்றும் பட்டமேற் படிப்புகள்உள்ளன. இதில் எம்.பில்மற்றும் பிஎச்.டி ஆய்வுப்படிப்புகளில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும், இதனால் அதில் தவறுகள் நடப்பதாகவும்மத்திய அரசுக்குப் புகார்கள் வந்தன.
அப்போதுதிறந்தநிலை பல் கலைக்கழகங்களை மத்தியதொலைதூரக் கல்வி கவுன்சில் நிர்வகித்துவந்தது. இந்தப் புகார் களைஆராய்ந்த கவுன்சில் திறந்தநிலை பல்கலைக்கழகங் களில் ஆய்வுப் படிப்புகளுக்கு2009-ம் ஆண்டு தடை விதித்தது. எனினும், மத்திய அரசின் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டும் ஆய்வுப்படிப்புகளை நடத்தி வந்தது. 2012-ல்திறந்தநிலை பல்கலைக்கழகங்களும் யுஜிசி வழிகாட்டுதலின் கீழ்கொண்டு வரப்பட்ட பின் இது முழுமையாகநிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில்திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மற்ற முழுநேரப் பல்கலைக்கழகங்களின்கல்விச் சட்டப்படியே தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகவும், இதனால் முன்புபோல் ஆய்வுப்படிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்தது. இது தற்போது ஏற்கப்பட்டுஆய்வுப் படிப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக