யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/6/17

பள்ளிக்கல்வி - பள்ளி மாணவிகளுக்கான வீர தீர செயல்களுக்கான "கல்பனா சாவ்லா" விருதுகள் - விண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முகமது ரிஃபாத் தயாரித்த உலகத்திலேயே மிக மிகச் சிறிய சாட்டிலைட்டை( 64 கிராம்) விண்ணில் செலுத்தியது நாசா

பாடத்திட்ட மாற்றம் பதிவு செய்ய ஜூலை 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பாடத்திட்ட மாற்றம் குறித்த பணிக்குப் பதிவு செய்ய ஜூலை 2 -ஆம் தேதி வரை கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் வகையிலும், பிளஸ் 1 வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கு பெற ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் -இல் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ஊர்ழ் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் டங்ழ்ள்ர்ய் ஊர்ழ் பங்ஷ்ற் ஆர்ர்ந் ரழ்ண்ற்ண்ய்ஞ் என்ற படிவத்தில் தங்களது விவரங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பதிவுக்கான காலம் ஜூலை 2 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் நிதிஉதவி பெறும் அரசு பள்ளிகளில் "திருவள்ளுவர் வெண்கல சிலை" நிறுவ அறிவுறுத்தல் - சிலை விலை பட்டியல் - இயக்குனர் செயல்முறைகள்



புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்
பதிலளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை. தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.

இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.


இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

750 தனி ஊதியம் 1.1.2011க்குபிறகு நிர்ணயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பதிலளிக்க மதுரை , திருச்சி மண்டல தணிக்கை அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம் ) அவர்களின் உத்தரவு !!!

தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகள் - ஆசிரியர்கள் குழப்பம்

தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல்
ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை சார்பில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டு செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

இதில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பணி நாள்கள் 210 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆக., 5, செப்., 16, அக்., 7 ஆகிய 3 சனிக்கிழமைகளும், ஆண்டுத் தேர்வு முடிந்து ஏப்., 20, ஏப்., 23 முதல் ஏப்., 27, ஏப்., 30 ஆகிய 7 சனிக்கிழமைகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் கடந்த காலங்களில் பயிற்சிக்காக அளிக்கப்பட்டு வந்த ஈடுசெய் விடுப்பும் ஆசிரியர்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

தொடக்க கல்வித்துறையின் இந்த அறிவிப்பை அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்கவில்லை. தேர்வுக்கு முன்பே பயிற்சிகளை முடிக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜூன் 24ல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், ஜூலை 1ல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இதனால் சிரமப்படுகிறோம் என்றனர்.

SSLC RETOTAL RESULTS PUBLISHING-PRESS RELEASE

NEET 2017 RESULT PUBLISHED

"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!

கற்றல் என்பது உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். ஆனால், நமது கல்விச் சூழல், ஆசிரியர் கூறுவதை மாணவர்கள்
கேட்கும்விதமாவே உள்ளது. இது, ஒரு வழிப்பாதை போன்றது அல்லவா. மாணவர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகப் பள்ளிக்கூடம் இருந்தால்தான் மகிழ்ச்சியோடு கற்பார்கள்.

பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல; ஆசிரியர் எனும் வழிகாட்டியை, நண்பர்கள் எனும் பெரும் உறவைப் பெறும் இடமும்கூட. ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பதோடு, தோழமையுடன் நடந்துகொண்டால், பள்ளியைவிட இனிமையான இடம் வேறு என்ன இருக்கப்போகிறது? ஆனால், ஆயிரம் ஆசிரியர்களில் தோழமையோடு பழகும் ஆசிரியர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான், மணிமாறன்.

 
அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.

இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.

சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.



அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.

இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.

சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.



ஒவ்வொரு மாணவருக்குள்ளும் சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்கு. என் மீது புகார் சொல்லியும் கடிதங்கள் வந்திருக்கு. அந்த விஷயங்களில் என்னைச் சரிசெய்துகிட்டேன். மாணவர்களை இன்னும் நெருக்கமாக நேசிக்க, இந்தப் பெட்டி உதவுகிறது. எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற கருத்துச் சுதந்திரப் பெட்டி இருக்கணும்" என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் ஆசிரியர் மணிமாறன்.

5TH STD - TERM 1 MIND MAPS - TAMIL

கோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்


நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
நீட்தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மருத்துவப்
படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது.நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
 நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
நீட்தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது வேதனையான விஷயம்தான். ரேங்க் பட்டியலில் இல்லாவிட்டாலும் நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

வந்தவாசியைச் சேர்ந்த அன்புபாரதி, நிலாபாரதி சகோதரிகள். வந்தவாசி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அன்பு பாரதியும் நிலா பாரதியும் பயின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அன்பு பாரதி 1165 மதிப்பெண்களும், நிலாபாரதி 1169 மதிபெண்களும் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகினர்.

நீட்தேர்வை எதிர்கொண்டது குறித்து அவர்கள் 'தி இந்து'விடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் ஐந்து நாட்கள் ஓய்வு எடுத்தோம். பின்னர் நீட் தேர்வுக்காக திட்டமிட்டோம். நீட் 2014 தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ் முந்தைய வினாத்தாள்களை வாங்கி பயிற்சி மேற்கொண்டோம். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் எங்களுக்கு அந்தக் கேள்விகள் புதிதாக இருந்தன. அதனால், சிபிஎஸ்இ 11, 12 வகுப்பு புத்தகங்களை வாங்கிப் படித்தோம்.

அதன்பின்னரே எங்களால் அந்தக் கேள்வித்தாளில் இருந்த வினாக்களுக்கு பதில் அளிக்க முடிந்தது. நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமானால் சிபிஎஸ்இ தரத்துக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்" என்றனர்.


நீட்தேர்வில் அன்பு பாரதி 151 மதிப்பெண்களும் நிலாபாரதி 146 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குனர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



ஐந்தாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலம் மன வரைப்படம்

No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.

PF" CALCULATION METHOD

உங்க PF பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் சட்டம்-1952 (அ) தொழிலாளர் சேமநல நிதி 1952 என்பது இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும்
விதமாக தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன. தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் தொழில் தருவோர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்து வட்டியுடன் ஒய்வின் முடிவில் தொழிலாளர்களுக்கு திருப்பி தரப்படும் . இந்தப் பங்களிப்புப் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் திரும்ப பெற்று கொள்ளலாம்

1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் சேமநல நிதி திட்டத்துடன் சேர்த்து இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் இதனை செயல்படுத்தி வருகிறது .   ஒரு தொழிலாளரின் சம்பளம் ரூ. 15000 க்கு கீழ் எனில்  பிஎப் கட்டாயம். ஆனால் தொழிலாளரின் சம்பளம் ரூ.15000க்கு மேல் எனில் தொழிலாளர் விருப்பப்படாவிட்டால் பிஎப் பிடிக்க தேவையில்லை. 

தொழிலாளர் வாங்கும் சம்பளம் மற்றும் இதர படிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அதே 12 சதவிகிதத் தொகையை அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இதில் 8.33 சதவிகிதத் தொகை தொழிலாளர்களது குடும்ப நல ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவிகிதத் தொகை அந்தத் தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படும். பிஎப் பணத்துக்கு  ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

உதாரணமாக:
 ஒருவர் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி(டிஏ) சேர்த்து ரூ.25000  வாங்குகிறார் என்றால் அவரிடம் இருந்து 12 சதவீதம் அதாவது  ரூ. 3,000  பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படும்.  இதேபோல் நிறுவனமும் ரூ. 3,000 பணத்தை செலுத்தும். 
ஆனால் அதில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. 25000 ரூபாயில் 3.67 சதவீதம் அதாவது ரூ. 917.50  பணத்தை தொழிலாளரின் பங்களிப்பாக அவரது கணக்கில் நிறுவனம் சேர்க்கும் .

இதேபோல் 25 ஆயிரம் ரூபாயில்  15 ஆயிரம் ரூபாயை கழித்துபோக மீதமுள்ள 10000த்தில் தான்  8.33 சதவீதம் பணத்தை (ரூ.832.50 காசு தான்)  தொழிலாளரின்  வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படும். ஆக மொத்தம் அவரது கணக்கில்   நிறுவனம் சார்பாக ரூ. 917.50+ரூ.832.50 சேர்த்து 1750 மாதந்தோறும் சேர்க்கப்படும். 

நில்லுங்க... 3000 ரூபாய் வர வேண்டுமே ஆனால் ரூ1750 தானே போடுகிறார்கள் என்று தோன்றுகிறதா?  ஏனெனில் மீதமுள்ள 1250 ரூபாய் பென்சன் திட்டத்துக்கு போய்விடும். அதுவும் கணக்குல சேர்த்துக்குவாங்க.

எனவேஓராண்டு முடிவில் அவர் கணக்கில் உள்ள பணத்துக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும்  இதேபோல் 8.65  வட்டி வழங்கப்படும்.  இப்ப கணக்கு போட்டு பாருங்க உங்க பிஎப் கணக்குல எவ்வளவு வரும்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.
பணத்தை எப்படி எடுப்பது?

ஒருவர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துக் கொண்டு பணத்தைப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும்.

ஒருவர் பணியில்  இருந்து விலகிய பின்னர் 60 நாட்களாக வேலையில்லாமல் இருந்தாலோ, அல்லது  பிஎப் வசதி உள்ள நிறுவனத்தில்   வேலை செய்யாமல் இருந்தாலோ ,  பிஎப் கணக்கை முடித்துக்கொண்டு மொத்த பணத்தையும் எடுக்கலாம். ஆனால் வேலையில் இருக்கிறார் என்றால், அவர் 57 வயதில் தான் 90 சதவீத பணத்தை எடுக்க முடியும். இதேபோல் 58 வயதில் மீதமுள்ள 10 சதவீத பணத்தை எடுக்க முடியும்.

அரசு கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி

அரசு கல்லுாரிகளில், கூடுதலாக, 20 சதவீதம் மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்து, விரைவில் உத்தரவு வழங்கப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - நீதிபதி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில், பொறியியல் கல்லுாரி துவக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் அன்பழகன்: அரசின் பரிசீலனையில் இல்லை.
நீதிபதி: உசிலம்பட்டியில் பொறியியல் கல்லுாரி அல்லது கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்: அரசு பரிசீலிக்கும்.

காங்., - ராமசாமி: காரைக்குடியில், அரசு கலை கல்லுாரி ஏற்படுத்த வேண்டும்; பெண்கள் கல்லுாரியும் வேண்டும். தற்போதுள்ள கல்லுாரியில் இடமில்லை எனக்கூறி, 61 மாணவர்களை
புறக்கணித்து உள்ளனர்.

அமைச்சர் அன்பழகன்: அரசு கல்லுாரிகளில், 20 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்க, விரைவில் உத்தரவு வழங்கப்படும். அதே போல், சுயநிதி
கல்லுாரிகளில், 10 சதவீதம்; அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 15 சதவீதம், கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால ரீசார்ஜ் சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விழாக்காலச் சிறப்புச் சலுகையாக ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.786, ரூ.599 மதிப்பில் சிறப்பு காம்போ வவுச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 786 காம்போ வவுச்சரில், ரூ.786 மதிப்புள்ள வாய்ஸ் அழைப்புகள், 3 எஆ டேட்டா ஆகியவை கிடைக்கும். இதற்கு 90 நாள்கள் வேலிடிட்டி. இச்சலுகை ஜூன் 21 முதல் 30 வரை அமலில் இருக்கும்.
ரூ.599 காம்போ வவுச்சரில், டாக் வேல்யூ ரூ.507 மெயின் அக்கவுன்ட்டிலும் ரூ.279 பிரத்யேக உபயோகமாக 30 நாள்களுக்கு மட்டும் தனிப்பட்ட கணக்கிலும் கிரெடிட் செய்யப்படும். 10 குறுஞ்செய்திகள் இலவசமாக அளிக்கப்படும். இதன் வேலிடிட்டி 30 நாள்கள் மட்டுமே. இச்சலுகை ஜூன் 21 முதல் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை 90 நாள்களுக்கு அமலில் இருக்கும்.
ரூ.60 மதிப்பிலான டாப்-அப் வவுச்சருக்கு ரூ.60 டாக்-டைமும், ரூ. 110-க்கு ரூ.115-ம், ரூ.210-க்கு ரூ.220-ம், ரூ.290-க்கு ரூ.310 என சிறப்பு டாக்வேல்யூ சலுகைகளாக அளிக்கப்படுகின்றன.

ரூ.310, ரூ.510, ரூ.610, ரூ.1,010, ரூ.1,510, ரூ.2,010 டாப்-அப் மதிப்புகளுக்கு முழு டாக்டைம் மற்றும் 10 சதவீதம் கூடுதல் டாக்டைமும், ரூ.3100, ரூ.5100 டாப்-அப் மதிப்புகளுக்கு முழு டாக்டைம் மற்றும் 20 சதவீத கூடுதல் டாக்டைம் என விழாக்காலச் சிறப்பு சலுகைகளாக வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் அனைத்தும் ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த ஆண்டு சிபிஎஸ்சி 10 - 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்பே தொடங்குகிறது

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வுகள் நடத்தப்படும். இதற்கான கால அட்டவணையை சிபிஎஸ்சி அறிவிக்கும். ஆனால் இந்த வருடம் தேர்வை பிப்ரவரி மாதமே நடத்த முயன்று வருகின்றனர்.
இது பற்றி சிபிஎஸ்சி அதிகாரிகள், இந்த வருடம் பொது தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த இருக்கிறோம்.   இதனால் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் மாணவர்கள் ஜனவரி மாதமே ஆயத்த தேர்வுக்கு தயாராகிவிடுகின்றனர்.இந்த முடிவுக்கு காரணம் பரீட்சை தாளை மதிப்பீடு செய்வதில் ஏற்படும் பிரச்சனையே  என தெரிவிக்கின்றனர்.

மார்ச் மாதம் பரீட்சை நடைபெறும் போது கோடைகால விடுமுறையும்  சேர்ந்து வருகிறது. ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றுவிடுகின்றனர். இதனால் பரீட்சை தாளை திருத்துவதற்காக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது.இதனால் தேர்வு மதிப்பீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகப்படியான மாணவர்கள் மறுமதிப்பீட்டலுக்கு விண்ணப்பிக்கின்றனர்.  2.47 சதவீதம் மாணவர்களிடமிருந்து மறுமதிப்பீட்டலுக்கான விண்ணப்பம் வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் பிப்ரவரி 15இல் தேர்வு நடத்துவது தேர்வு மதிப்பீட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என தெரிவிக்கின்றனர்.

இது பற்றி சிபிஎஸ்சி மூத்த அதிகாரி , தேர்வு மதிப்பீட்டலுக்கான வழிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும். அதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு தான் ஆசிரியர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டு மதிப்பீடு செய்தாலும் அதனை கூட்டி கணிணியில் பதியும் போது தவறு ஏற்பட்டு விடுகிறது. இதனால் இத்தவறுகளை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.சென்ற வருடத்தை விட இந்த வருடம் சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 2.82 சதவீதம் உயர்ந்துள்ளது.

மொத்தம் 11 இலட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 6,38,865 பேர் ஆண்கள் மற்றும் 4,60,026 பேர் பெண்கள். 10,678 பள்ளி மாணவர்களுக்காக 3,502 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

கலந்தாய்வின்போது மாணவர்களிடம் ஒப்புதல் பெறுவதும் அவசியம்: யுஜிசி உத்தரவு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டண விவரங்களை வெளியிடுவதுடன், அதைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவர்களிடம் பெறுவது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


நீண்ட இழுபறிக்குப் பின்னர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான "நீட்' தகுதித் தேர்வு முடிவை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, தாமதமாகி வந்த இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்பை (எம்.பி.பி.எஸ்.) வழங்கும் 34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அவசர உத்தரவு ஒன்றை யுஜிசி பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு 34 நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு, சுகாதாரப் பணிகளுக்கான இயக்குநரகம் (டி.ஜி.ஹெச்.எஸ்.) சார்பில் நடத்தப்படும். இதில் மொழிச் சிறுபான்மை மற்றும் மதச் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் சேர்த்துக் கொள்ளப்படும்.

மாநில ஒதுக்கீட்டுக்கு தனி கலந்தாய்வு: இதேபோல் அரசுக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொதுக் கலந்தாய்வு மாநில அரசு சார்பில் நடத்தப்படும். இந்த இரண்டு கட்ட கலந்தாய்வின்போதும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண விவரத்தை மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், அந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவரிடம் கலந்தாய்வு அதிகாரிகள் பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கோவை அம்ரிதா விஷ்வ வித்யபீடம், சென்னை சேலையூர் பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாதெமி, சென்னை எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை மீனாட்சி உயர்கல்வி ஆராய்ச்சி அகாதெமி, சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகிய 9 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பு வழங்கப்படுவதாக யுஜிசி பட்டியலிட்டுள்ளது.

NEET : மாநில அளவில் கோவை மாணவர் முதலிடம்



இவர் நீட் தேர்வில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 260-ஆவது இடம் பெற்றுள்ளார்.

2015-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வை முடித்த இவர், முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், அதே ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். எனினும் முதலாமாண்டு முடித்ததும் பொறியியல் படிப்பைக் கைவிட்டு, நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த எனக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தேர்வெழுதுவதற்கு பயிற்சி மையத்தில் பெற்ற பயிற்சிதான் உதவியது என்றார்.
சென்னை மாணவர்: தமிழக அளவில் இரண்டாவது இடத்தை சென்னை மாணவர் கே.ஆதித்யா பிரணவ் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 648 மதிப்பெண்ணும், அகில இந்திய அளவில் 351-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். தேர்வு முடிவு குறித்து அவர் கூறுகையில், ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வைக் காட்டிலும் நீட் தேர்வு எளிதாகவே இருந்தது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலானோர் தேர்வு எழுதியதால், என்னுடைய தரவரிசை குறைந்துவிட்டது என்றார்.
மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன் பிடித்துள்ளார். இவர் 646 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 391-ஆவது இடத்தையும், டி.ஆர்.ஜீவா என்ற மாணவர் 645 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 404-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டம்!அமலுக்கு வரும் கல்வியாளர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு 2018-19 முதல் 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கடுத்த ஆண்டில் 2,7,10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-2021 கல்வியாண்டில் 3,4,5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.


முன்னதாக, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. இப்போது உலக அளவில் அறிவியல் சமூக, பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் கணக்கில்கொண்டு, அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர். அது மட்டுமின்றி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றிபெறும்வகையில் அவர்களைத் தயார்செய்யவேண்டிய தேவையும் எழுந்தது. இது குறித்து அரசுக்கு கல்வியாளர்களும் ஆசிரியர்கள் தரப்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அதையடுத்து பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வல்லுநர் குழுவும் அதன் கருத்துப்படி மூன்று உட்குழுக்களும் அமைக்கப்பட்டு, ஆலோசனை பெறப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சரின் தலைமையில் வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில்தான் இந்தப் பாடத்திட்ட மாற்றம் குறித்து மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஒன்று, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலான பாடத் திட்டம் மாற்றம் பற்றியது. இரண்டாவதாக, மேல்நிலைக் கல்வியில் கற்பிக்கப்படும் தொழிற்கல்வியை மாற்றும் திட்டம். மூன்றாவதாக, தகவல்தொழில்நுட்பவியல் பாடத்தைச் சேர்ப்பது.
தற்போது தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை, கணினி பற்றியோ தகவல் தொழில்நுட்பவியல் பற்றியோ பாடம் சேர்க்கப்படாத நிலையே நீடிக்கிறது. அதனால் உயர்நிலையின் ஐந்து வகுப்புகளிலும் அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்பவியல் பாடம் சேர்க்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தொழில்கல்வியைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 12 வகையான பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பாடத்திட்டமானது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டன. அதனால், இப்போது அதிவேகமாக நடந்துவரும் தொழில்வளர்ச்சிக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இது மட்டுமில்லாமல் தொழிற்கல்வி மாணவர்கள், சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி பெறும்படியாகவும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்ற தொழில்சார் பல்கலைக்கழகங்களின் உதவியோடு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது, தொழிற்கல்விப் பாடத்திட்டத்தில் மாற்றத்தைச் செய்யும்.

மற்ற பாடத்திட்டக் குழுக்களைப் போல அல்லாமல், தமிழக நிலைமைக்கு ஏற்ற தொழிற்கல்வி எது எனத் தீர்மானிக்க, தனியான ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும். இதில் தற்போது கற்பிக்கப்படும் 12 வகைப் பாடங்களை மாற்றியமைப்பதா அல்லது புதிய பாடங்களை அமைப்பதா என அக்குழு அலசி ஆராயும். அதன்படி முதலில் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் ஐந்து பாடங்களுக்கு புதிய பாடநூல்கள் தயாரித்து வழங்கப்படும். மீதமுள்ள வகையினங்களுக்கு அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

மேலும், இணையவழிக் கல்வியை ஊக்குவிக்கும்வகையில் விரிவான கல்வி மேலாண்மைத் தளத்தை உருவாக்கவும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய செயலிகளை உருவாக்கவும் பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான தேவைகளைப் பற்றி அரசுக்கு கருத்துரு அனுப்பவும், ஆறு மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றும் பணியை முடிக்கவும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநருக்கு, பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் த. உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வூதியம் என்றால் என்ன?

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்காக தங்களுடைய இளமை
காலம் முழுவதும் உடல் பலமாக இருக்கும் போது அரசுக்கும் மக்களுக்கும் இடையே அச்சாணியாக சுழன்று  அரசுக்கும் மக்களுக்கும் தங்களுடைய பணிக்காலம்
முழுவதும் முழு உழைப்பை செலுத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் முதுமை அடைந்து நாடி நரம்புகள் சுருங்கிய பின்பு எந்த வேலையும் செய்ய இவர்களது
உடல் தகுதியற்றது எனும் போது 58 வயதில் பணியிலிருந்து அரசால் ஓய்வு
அளிக்கப்படுகிறது. அவ்வாறு ஓய்வு பெற்றவர்கள் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் சமுதாயத்தில் கெளரவமாகவும் வாழ்வதற்கும்           
  மற்றவர்நகளை    நம்பி இருக்காமல் வாழ்வதற்கும், 20 ஆண்டுகளுக்கு
மேல் அரசாங்கத்திற்காக உழைத்த உழைப்பிற்காக அரசால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓர் ஊதியம் வழங்கப்படுகிறது.அந்த ஊதியமே ஓய்வூதியம் எனப்படுகிறது.ஓய்வூதியம் என்பது முதுமை வாழ்க்கையின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. அந்த ஓய்வூதியம் என்பது 2003க்கு பின்னர் அரசு பணியில்
சேர்ந்தவர்களுக்கு கேள்வி குறியாகவே உள்ளது.  

கேள்வி குறியான ஓய்வூதியம்
 அதாவது 1.4.2003க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றோர்
மற்றும் பெறுவோரின் ஓய்வுக்கு பின் உயிர்வாழ அடிப்படை தேவைகளான உணவு ,உடை,மருத்துவம் போன்றவற்றிற்காக முதுமையில் சாலையில் கண்டவர்களிடம் கையேந்தி நிற்றல், யாராவது கொடுப்பாரா ?என எதிர்பார்த்திருத்தல், தள்ளாடும் நிலையில் மருந்துகள் வாங்க காசு இல்லாமல் சாகுதல், பணமில்லாததால் உறவுகளால் வீதியில் தள்ளப்படுதல், ஒரு வேலை சாப்பாட்டிற்காக வேறுவழிஇல்லாமல் ஏரி வேலை செல்லுதல் போன்ற அவலநிலைகளுக்குஉள்ளாகுகின்றனர்.இதற்கு காரணம் தற்போது நடைமுறையிலுள்ள cps என்னும் புதிய பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் தான். இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும்/  
பெறுபவர்களுக்கும் ஓய்வூதியம் என்பதே இன்று வரை கிடையாது. Cps பணிபுரியும் ஊழியர்களாகிய நாம் ஓய்வு பெற்ற பின்
ஓய்வூதியம் இல்லாமல் அடிப்படை தேவைகளுக்காக நடுரோட்டில் கையேந்தி நிற்போம் என்பதில் எந்த வித மாற்றமில்லை என்பதை அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்.

ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்

ஓய்வூதியத்திற்கு நீதித் துறையின் அங்கங்கமான நீதி மன்றத்தாலும், இந்திய
அரசியலமைப்பாலும் ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமையென பல்வேறு
வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இனி காண்போம்.

நீதித் துறையின் படி ஓய்வூதியத்தின் வரையறைகள்
நமது நாட்டின் நீதித் துறையின் மிக உயர்ந்த அங்கமான உச்ச நீதி மன்றத்தால்
வழங்கப்படும் தீர்ப்புகள் என்பது எழுதப்படாத சட்டமாக கருதப்படுகிறது.அவ்வாறே ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளில் ஓய்வூதியம் என்பதை  உரிமையென்றே வரையறை செய்யப்பட்டுள்ளது. அவைகளான
# ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி 17.12.1982 அன்று
நகரா என்பவர் இந்திய அரசின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பின் படி ஓய்வூதியம் என்பது நன்கொடையோ அல்லது கருணை தொகையோ அல்ல. அது ஓய்வூதியர்களின் மதிப்புமிகு உரிமை என்றும் அரசு ஊழியர்களின்
நீண்ட கால மற்றும் திறமையான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

# ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த ஜித்தேந்திர குமார் என்பவர் ஓய்வூதியம்
தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஓய்வூதியம் என்பது ஊழியரின்
உரிமையாகும்.இதனை இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 31 B உறுதி செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் படி ஓய்வூதியத்தின் வரையறைகள்

@ ART-14 சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்.(உரிமைகளை வழங்கும் போது முன்/பின் என்று வேறுபடுத்தி உள்ளது.)

@ ART-31B, சில சட்டங்களையும், ஒழுங்கு விதிமுறைகளையும் செல்லத்தக்கவனவாக்குதல்.

@ ART-41,முதுமை நோய் இயலாமை மற்றும் உடல் ஊனம் போன்ற நேர்வுகளின் போது அரசு வழங்க வேண்டிய உதவிகளை செய்து சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட வாழ்க்கை
வாழச் செய்வதே சேமநல அரசு செய்யும் பணி என்று வரலாற்று சிறப்புமிக்க
தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

@ ART-148 நகரா வழக்கின் தீர்ப்பில் அரசியல் சட்டம் 309 மற்றும்
148(5)ன்படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட்ட வேர்
ஊன்றி நிலைத்த உரிமையாகும் என்று ஓய்வூதியர்களுக்கு ஒரு உரிமை சாசனம்
(Magna carta) வழங்கியுள்ளது.

@ ART-309 ஒரு மாநிலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணியின்  
 வரையறைகள், விதிகள் மற்றும் ஊதியங்கள் போன்றவற்றை மாநில அரசு வரையறை செய்யப்படவேண்டும். மேலும் அவ்வொழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்கள் உயிர்வாழ்வதற்க அந்தந்த மாநில அரசிடமிருந்துஓர் ஊதியம் பெற உரிமை உடையவராவார். இச்சரத்தின் அடிப்படையிலே தமிழக அரசும் தமிழ்நாடு ஓய்வூதிய
விதிகளை  1978இல் உருவாக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்குவது நடைமுறையில்
உள்ளது.ஆயினும் 01.04.2003க்கு பின் தமிழக அரசில்  பணிநியமனம்
பெற்றவர்களுக்கு இந்த பழைய ஓய்வூதிய திட்டம் பொருந்ததாது. 
இதன் தொடர்ச்சி  அடுத்த பதிவில்.
 இவன்
அ.ஜெயப்பிரகாஷ்
அரூர் ஒன்றியம்.தருமபுரி.

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம்

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது.தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும்.

இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்.

ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்குதனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும்வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார்.

ஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..! #Kiddle

குழந்தைகள் வளர்ப்பில் மிக முக்கியமானது குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது எதைக் கொடுக்க கூடாது என்பதுதான். மூன்று வயதுள்ள குழந்தைகள் தொடங்கி  பத்து வயதுள்ள குழந்தைகள் வரை மொபைல் மற்றும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகம். 
அடம்  பிடிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக குழந்தைகளிடம் மொபைல் போனைக் கொடுப்பது அவர்களின் வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வீடியோ கேம்ஸில் ஆரம்பித்து இணையத்தில் தேடுவது வரை இணையத்தில்  நினைத்து பார்க்க முடியாத  ஆபத்துகளும், நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைத்தான் கொடுக்கிறோமா?தன்னுடைய குழந்தை மொபைல் வைத்திருக்கிறது என்பதை பெற்றோர் ஒரு வித கெளரவமாக  பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான்கு வயது குழந்தையின் அப்பா ஒருவர் பேசும் போது "என்னோட பையன் மொபைலை கைல குடுத்தா தான் அமைதியா இருக்கான், நா எப்போ வீட்டுக்கு வருவேன்னு பாத்துட்டே இருப்பான், அப்பாவ  எதிர்பார்த்து இல்ல, என்னோட மொபைலை எதிர்பார்த்து, நாபோனதும் மொதல்ல மொபைலை வாங்கிடுவான், அதுலயே தான் இருக்கான், எனக்கு தெரியாத எது எதையோ கண்டு பிடிச்சு சொல்றான், எனக்கே ஆச்சர்யமா இருக்கும்" என்கிறார் பெருமையாக.அனேக வீடுகளில் இணையதள சுதந்திரம் என்பது  வரையறுக்கப்படாததாகவே இருக்கிறது. பெற்றோர், ஆசிரியரிடம் கேட்கத் தயங்குகிற சில விஷயங்களை இப்போதெல்லாம்  குழந்தைகள், நேராக இணையத்தில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இணையத்தை தேடிப் போகிற குழந்தைகள் பார்க்க கூடாத விஷயங்களை எல்லாம் பார்ப்பது, அதைப்  பற்றி சிந்திப்பது  எல்லாம்  உளவியல் ரீதியாக குழந்தைகளுக்கு  பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தைகளிடமிருந்து இணையத்தையும் மொபைலையும் பிரிக்க முடியாது எனும்போது  அவர்களின் எதிர்காலம் கருதி என்னவெல்லாம்செய்யலாம், அதிலிருந்து எப்படி குழந்தைகளை மீட்பது என யோசிக்கிற பெற்றோர்களுக்காகவே வந்திருப்பதுதான் கிடில் (Kiddle)மற்ற சர்ச் எஞ்சின்களில் நாம் எதைத் தேடினாலும் அந்தப்பக்கங்களில் தேவை இல்லாத ஒரு தளத்தின் பாப் அப் வந்துவிடுகிறது.

 தவறுதலாக அப்பக்கங்களை தொட்டு விட்டால் அவை ஆபாச பக்கங்களுக்கோ விளம்பர பக்கங்களுக்கோ கொண்டு சென்று விடுகிறது. அப்படி எந்தஇடையூறுகளும் இல்லாத, குழந்தைகளின் உலகத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதை மட்டும் கருத்தில்கொண்டு கூகுள் வடிவமைத்திருக்கிற சர்ச் எஞ்சின்தான் "கிடில்". கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு , சினிமா, அரசியல் எனஎதைப் பற்றி தேடினாலும் ஆபாசங்கள் இல்லாத பயனுள்ள தகவல்களை மட்டுமே தருகிறது கிடில். குழந்தைகளுக்காக சிறந்த எடிட்டர்களைக்கொண்டு ஆக்கபூர்வமான விஷயங்களைமட்டும் பதிவேற்றுகிறது. குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக செய்திகளோடு படங்களையும் இணைத்திருக்கிறது கிடில்.  கிடிலின் ஸ்லோகனாக"விசுவல் சர்ச் எஞ்சின்" என அடை மொழி வைத்திருக்கிறார்கள்.

kiddle - கிடில்

ஆபாச வலைத்தளங்களுக்கு அழைத்துச் செல்லும் எந்த பெயரை  டைப் செய்தாலும் நகர மாட்டேன் என அடம்பிடிக்கிறது கிடில். உதாரணத்துக்கு சினிமா சார்ந்த விஷயங்களை தேடினால் ஆபாசங்கள் இல்லாத பயோடேட்டாக்களை மட்டுமே காட்டுகிறது. கார் என்று தேடினால் கார்கள் பற்றிய தகவல்களுடன் கார் பற்றிய பாடல்கள், கட்டுரைகள் என குழந்தைகளின் பயணம் பற்றிய விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது.

எல்லாத் தேடல்களிலும் எதிர்மறையான விஷயங்களை தவிர்த்து நேர்மறையான விஷயங்களை மட்டுமே அள்ளி வந்து தருகிறது கிடில்.மொபைலில்  கிடில் சர்ச் எஞ்சினை  அப்டேட் செய்து விட்டு குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் தவறான பல தளங்களுக்கு   செல்வது கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு மொபைலையோ கணினியையோ கொடுத்து விட்டு தைரியமாக இருக்கலாம். ஆனால்,  அவ்வப்போது அவர்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம், நவீன அப்டேட் காலத்தில் நமக்கு தெரியாத பல விஷயங்களை குழந்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. 
முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை அரசு எதிர்த்து வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க சட்டம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு, அதை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த சட்டம் ஒப்புதலுக்காக மத்திய அரசால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதன் காரணமாக தமிழகம் உட்பட நாடுமுழுவதும் நீட் தேர்வுகள் நடந்து, நேற்று முடிவுகளும் வெளியானது. இதில், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவின் கீழ் பயின்றவர்கள்.

இந்நிலையில், நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இது மாணவர்கள், கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவிலான ரேங்கிங் வெளியிடப்படாது என்பதால், மாநில அளவில் யார் முதலிடம் பிடித்தார்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

நீட் தேர்வு சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவை மையப்படுத்தி நடந்தது என்பதால், தமிழகத்தில் பெரும்பாலும் சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவில் பயின்றவர்களே மருத்துவ பாடத்தைப் பயில முடியும் என்ற சூழல் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பலர் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே எடுத்துள்ளனர். இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பலருக்கு, மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடை தவிர்த்த இடங்களில், 85 சதவிகிதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவிகிதம் இடங்கள் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

ஓரிரு நாளில் விண்ணப்ப வினியோகம் துவங்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு ஓரளவு ஆறுதலைத் தரக்கூடும் என நம்பப்படுகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை ஏற்கெனவே குஜராத் மாநிலம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்  மருத்துவ பாடச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என தமிழக அரசு ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு அனுமதி பெற தொடர்ச்சியாக முயற்சிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செல்லாததாகிவிடும். தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது என்பதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில், தற்போது மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி அரசு அறிவிக்கும்போது அதற்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவ கல்விக்கான சேர்க்கை என்பது இந்த முறை மிகுந்த குழப்பத்துக்குள்ளாகியுள்ளது.

எம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் - விஜயபாஸ்கர்

மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் நீட் தர வரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது மருத்துவ கனவுகளுடன் கொண்ட மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவபடிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களைமாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணையை இன்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார்.

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்சரோஜா அறிவிப்பு

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமானிய கோரிக்கைமீது நடந்த விவாதத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் பேசுகையில், 

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 3 சக்கர ஸ்கூட்டர் மோசமான நிலையில் இருந்தால் திமுக ஆட்சியின் போது புதியவாகனம் வழங்கப்பட்டது. தற்போது புதியவானகங்கள் இருப்பு இல்லை.அதே நேரம் பழுதுபார்த்தும் தரப்படுவதில்லை. இதற்கு ஒதுக்கப்பட்ட தொகையும் பயன்படுத்தப்படவில்லை.பள்ளிக்கல்வித்துறை மற்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாநிலஆணையர், துறை செயலர் பதவிகள் காலியாக உள்ளன. சமூக நலத்துறையில் குறிப்பிட்ட திட்டங்களில் அதன் இலக்குகள்எட்டப்படவில்லை. திருநங்கை நலவாரியம் செயல்படாமல் உள்ளது. அங்கன்வாடிகளில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும்'' என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரோஜா, ''பிச்சைக்காரர்கள், தெருவோர வாசிகளை மறுவாழ்வுக்காக நேரடியாக சமூக நலத்துறை ஏற்க முடியாது. காவல்துறையினர் அவர்களை ஒப்படைத்தால் மட்டுமே அடுத்த கட்டமாக மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.சிறப்பாசரியர்களுக்கு ரூ.5ஆயிரமாக இருந்த தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

NEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்குஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு, மானபங்கத்திற்கும் உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தது போலவே, தமிழகத்துக்கு இத்தேர்வு சாதகமாக அமையவில்லை.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

*தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி ?*

ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா?
நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா?
அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
MBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்!
*1)* தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 
அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப்படும்.
*2)* இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.
*3)* அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.
அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.
*4)* இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.
*5)* அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் 
தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள் பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.
*6)* (SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்
பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்)
PERCENTILE வேறு PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
*7)* பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில்
பதியப்படும்.
*8)* இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
*9)* அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.
*10)* இதுவரை கூறிய அனைத்தும் தமிழ்நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை 
பூர்த்தி செய்ய வேண்டும்.
அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.
(domicile status: Tamilnadu)
ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் 
பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.
*11)* இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.
*12)* இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.
*13)* பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு 
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது
45 சதம் ஆகும்.
*14)* இப்படித்தான் அட்மிஷன் நடைபெறுகிறதே 
அல்லாமல் வேறு எப்படியும் அல்ல.
*பின்குறிப்பு-1:* 
தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் 
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசிப்பிடச் 
சான்றிதழ் (DOMICILE CERTIFICATE) சமர்ப்பிக்கத் தேவையில்லை
*பின்குறிப்பு-2:* 
பெற்றோரின் இடமாற்றல் காரணமாக மாணவன் வெளி மாநிலத்தில் படிக்க நேர்ந்தால், அவன் DOMICILE CERTIFICATE சமர்பிக்க வேண்டும்.