யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/6/17

*தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி ?*

ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா?
நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா?
அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
MBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்!
*1)* தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 
அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப்படும்.
*2)* இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.
*3)* அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.
அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.
*4)* இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.
*5)* அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் 
தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள் பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.
*6)* (SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்
பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்)
PERCENTILE வேறு PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
*7)* பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில்
பதியப்படும்.
*8)* இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
*9)* அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.
*10)* இதுவரை கூறிய அனைத்தும் தமிழ்நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை 
பூர்த்தி செய்ய வேண்டும்.
அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.
(domicile status: Tamilnadu)
ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் 
பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.
*11)* இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.
*12)* இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.
*13)* பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு 
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது
45 சதம் ஆகும்.
*14)* இப்படித்தான் அட்மிஷன் நடைபெறுகிறதே 
அல்லாமல் வேறு எப்படியும் அல்ல.
*பின்குறிப்பு-1:* 
தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் 
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசிப்பிடச் 
சான்றிதழ் (DOMICILE CERTIFICATE) சமர்ப்பிக்கத் தேவையில்லை
*பின்குறிப்பு-2:* 
பெற்றோரின் இடமாற்றல் காரணமாக மாணவன் வெளி மாநிலத்தில் படிக்க நேர்ந்தால், அவன் DOMICILE CERTIFICATE சமர்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக