யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/9/16

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது. 
இந்த தேர்வுக்கு, 11.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஆனால், 6.24 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வில், 33 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். அதன்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பொது பணியாளர் தேர்வாணையம், முதல்நிலை தேர்வு முடிவை வெளியிட்டது; இதில், 15 ஆயிரத்து, 445 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், தங்களது விருப்ப பாடத்தின் படி, நவ., 12ல் நடக்கும், முதன்மை தேர்வை எழுத வேண்டும்; அதில், தேர்ச்சி பெறுவோர், நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும்; நேர்முக தேர்வுக்கு பின், இறுதி பட்டியல் வெளியாகும்.

மும்பை பள்ளிகளில் யோகா: தடை விதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு யோகாமற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை அளிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க மும்பை கோர்ட் மறுத்துள்ளது.மும்பை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா மற்றும் சூரிய நமஸ்காரப் பயிற்சிகளை அளிக்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதனை எதிர்த்து மசூத் அன்சாரி என்பவர் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை கட்டாயமாக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

மேலும் மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.அந்த மனு மீது நேற்று நடந்த விசாரணையில், சூரிய நமஸ்காரம் என்பது வெறும் பெயர்தான் எனவும், அதனை உடற்பயிற்சியாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்தது. வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

பரபரப்பாக செயல்பட்ட அரசு அலுவலகங்கள்

தமிழகத்தில், 'பந்த்' நடத்தப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள எழிலக வளாகம், மின் வாரியம் உள்ளிட்டஅரசு அலுவலகங்கள், வழக்கத்தை விட, நேற்று பரபரப்பாக செயல்பட்டன.இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது:
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு சற்று தாமதமாக தான் வருவோம். ஆனால், இன்று தாமதமாக வந்தாலோ, விடுப்பு எடுத்தாலோ, 'பந்த்'க்கு ஆதரவு தெரிவிப்பதாக, உயரதிகாரிகள் கருதுவர்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு கல்லூரி மாணவர் பயிற்சி திட்டம் : பயிற்றுனர் இல்லாததால் பாதிப்பு.

அரசு கல்லுாரி மாணவர்களுக்கான மென் திறன் பயிற்சி திட்டத்திற்கு, பயிற்றுனர் கிடைக்காததால், செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு கல்லுாரி மாணவர்களில், இறுதி ஆண்டு படிப்போருக்கு, பணியில் சேர வசதியாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது; இதன்படி, 30 அரசு கல்லுாரிகளில், ஆண்டுக்கு, 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல், கூடுதலாக, 32 கல்லுாரிகளில் பயிற்சி அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது; இதற்காக, ஒவ்வொரு கல்லுாரிக்கும் ஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் வீதம், 1.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மென் திறன் பயிற்சி வழங்க, பயிற்றுனர்கள் இல்லாத குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சி அளித்து வந்த தனியார் நிறுவனங்களுடன், ஒப்பந்தத்தை நீட்டிக்காததால், இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மன்றத்தின் உறுப்பினர் செயலரான, கல்லுாரி கல்வி இணை இயக்குனர், சேகர் பங்கேற்கவில்லை; நந்தனம் கல்லுாரி முதல்வர், அமுதா பாண்டியன், மென் திறன் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி பங்கேற்றனர்.

அப்போது, அரசு ஒதுக்கிய நிதியில், குறிப்பிட்ட தொகையை கல்லுாரிகளுக்கு அளித்து விடுவதாகவும், கல்லுாரிகளே பயிற்சியாளரை நியமித்து, மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்படியும் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், 'எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல், மென் திறன் பயிற்சி திட்டத்தை செயல்படுத்த முடியாது; பயிற்சியாளர்களை நியமிப்பதுடன், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்' என, கல்லுாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, எந்த முடிவும் சொல்லாமல், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி கட்டண கமிட்டிக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்

சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற உத்தரவுப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு அமைத்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள்; ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
பணிகள் முடக்கம் : கமிட்டியின் முதல் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார்; பல்வேறு காரணங்களால், அவர் பதவி விலகினார். பின், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். இரண்டு ஆண்டுகளுக்கும்மேலாக, கட்டணம் குறித்து விசாரணை நடத்தினார்; ஆட்சி மாற்றம் வந்ததும், 2012ல் பதவி விலகினார்.பின், 2012 ஜனவரியில், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, கல்விக் கட்டண கமிட்டி தலைவரானார்; மூன்று ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த அவர், 2015 டிசம்பர் 31ல் ஓய்வு பெற்றார்.அவரை தொடர்ந்து, கமிட்டியின் சிறப்பு சட்ட அதிகாரி மனோகரனும், கடந்த மார்ச்சில் ஓய்வு பெற்றார். அதனால், கட்டண கமிட்டியின் பணிகள் முடங்கின. இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டண கமிட்டி தலைவரை நியமிக்காமல், இனியும் தாமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியது. மூன்று வாரங்களில் தலைவரை நியமிப்பதாக, தமிழக அரசு உறுதி அளித்தது.

முன்னாள் நீதிபதிகள் : இதையடுத்து, பள்ளிக்கல்வி, சட்டத்துறை இணைந்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. 'ஏற்கனவே தலைவராக பதவி வகித்த சிங்காரவேலு உள்ளிட்ட முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.அடுத்த வாரம், தலைவர் நியமிக்கப்பட்டு விடுவார்' என்று, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.தமிழக உள்ளாட்சி தேர்தலை, அடுத்த மாதம், 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவிற்காக, 183 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. 
தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்படும்என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பந்த்' காரணமாக, தள்ளிப் போடப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள்தெரிவித்தனர்.

கேம்பஸ் இன்டர்வியூ' : அண்ணா பல்கலை 'டிப்ஸ்

அண்ணா பல்கலை சார்பில், சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லுாரிகளின், இறுதியாண்டு மாணவர்களுக்கு, 'கேம்பஸ்' தேர்வு நடந்து வருகிறது. 
அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் இணைப்பு பெற்றுள்ள, 550க்கும் மேற்பட்ட தனியார் இன்ஜி., கல்லுாரிகளுக்கும், விரைவில் கேம்பஸ் தேர்வு நடக்க உள்ளது. 'கேம்பஸ் தேர்வில் பங்கேற்பது எப்படி; தனியார் நிறுவன அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி' என, மாணவர்களுக்கு வழிகாட்டும் புத்தகத்தை, அண்ணா பல்கலையின் தொழில் நிறுவன இணைப்பு மையமான, சி.யூ.ஐ.சி., வெளியிட்டுள்ளது.இந்த விபரங்களை, www.annauniv.edu/pdf/AU-CUIC என்ற இணையதள முகவரியில் பெறலாம்.

செப். 23க்குள் அங்கீகாரம் பி.எட்., கல்லூரிகளுக்கு 'கெடு'

தனியார் பி.எட்., கல்லுாரிகள், செப்., 23க்குள், மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் கல்விதொடர்பான, பி.எட்.,பி.பி.எட்.,எம்.எட்., படிப்புகளுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், நேற்றுடன் மாணவர் சேர்க்கை முடிந்தது. 
தனியார் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்த, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.ஆனால், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர் சேர்க்கை நடத்த, இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், அனைத்து தனியார் கல்லுாரிகளும், செப்., 23க்குள், மாணவர்களின்பட்டியலை தாக்கல் செய்து அங்கீகாரம் பெறும்படி, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடி உத்தரவிட்டுள்ளது..

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவைமறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!

இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது. 
 இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் டெலிகாம் சேவை பயன்படுத்துபவர்களை  தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்ஸ் கால் இணைப்பிற்காக ஜியோ-விடம் கூடுதல் கட்டணங்கள் கோரிய ஏர்டெல் நிறுவனத்திற்கு டிராய் அமைப்பு மறுப்பு தெரிவித்தது. இந்தியாவில் முழுமையாக நெட்வொர்க் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ சேவை வங்கப்பட்டது தவறாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வழங்க வேண்டும். ஆனால் லாப கணக்குகளைப் பாரத்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் சுமார் 52 கோடி வாய்ஸ் கால்களை துண்டித்துள்ளது.

ஜியோவிடம் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் இரு வழி இணைப்பும் ஏர்டெல் மூலம் செய்யப்படுகிறது. ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்கள் ஆன நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது.இதனால் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கு டிராய் ஆணைக்கு இணங்க நிலையான சேவை அளிக்கும் வகையில் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க முடிவு செய்துள்ளது.கடந்த வாரம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ வின் 100 வாய்ஸ்கால்களுக்கு 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மறுமுனையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 2 கால் செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் ஜியோ இன்போகாம் உடன் முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது.டிராய் அமைப்பு மூலம் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு கால் இணைப்பிற்கு14 பைசா கூடுதல் கட்டணத்தை ஜியோவிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளது.தற்போதைய நிலையில் இந்தியா முழுவதிலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் சுமார் 7,000 இண்டர்கனெக்டிங் பாயின்ட் உடனடி தேவையாக ஜியோ முன்வைக்க உள்ளது

தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.35 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தது நிர்வாகம். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகி றது. 
இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.அவர்களை வழி நடத்தும் பணியில் 2 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இடவசதி தடையாக இருந்தது. அங்குள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை பள்ளிக்கு எழுதிக் கொடுத்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி. சந்தை மதிப்பில் தற்போது அந்த இடம் ரூ.30 லட்சமாகும்.சில தடைகளைத் தாண்டி, பள்ளிக் கட்டிடம் எழுந்துள்ளது.கொடிக் கம்பம் அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. மாநில நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச் சுவரை கட்டிக் கொடுத்துள் ளது.ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை. பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியை கட்டிடக் குழு மேற் பார்வை செய்து வருகிறது.

இது குறித்து கட்டிடக் குழுவில் உள்ளவர்கள் கூறும்போது, “கல்வி ஆர்வலர்களின் நிதி உதவியால் சுமார் ரூ.12 லட்சம் வரை செலவிடப் பட்டு பணி நடைபெற்றது. மேலும், ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். நவீன கணினி வழிக் கல்வி, யோகாசனம் மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செயதுள்ளோம். எங்கள் இலக்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றனர்.இதுகுறித்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி கூறும்போது, “அந்தப் பள்ளியில் படித்தவன் நான். ஆரம்பக் கல்வியை தொடங்கி, ஆசிரியராக உயர்ந்து நிற்கிறேன். அதற்கு அடித்தளமிட்டது, நான் படித்த இந்தப் பள்ளியாகும்.

 அந்த பள்ளிக்கு இடம் தேவைப்படுகிறது என்பதை அறிந்தேன். சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில், எனது 20 சென்ட் நிலத்தை எழுதித் கொடுத்துள்ளேன் ” என்றார்.வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும் இந்த காலத்தில், ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்காக 30 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை தானமாக கொடுத்த தலைமை ஆசிரியர் கோவிந்தசாமியின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. 
தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள், 'ஆன்லைன்' முறையில், 'எமிஸ்' என்ற மின்னணு ஆளுமை திட்டத்தில் இணைக்கப்படுகிறது; இதில் மாணவர்களுக்கு தனியாக, ஒரு அடையாள எண் வழங்கப்படும். இந்த பதிவுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஆதார் எண் மிகவும் அவசியம்.

ஆனால், தமிழகத்தில் படிக்கும், 1.25 கோடி மாணவர்களில், இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆதார்எண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், எமிஸ் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், செப்., 20க்குள் பதிவு செய்து, அதன் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

Alagappa University - Invitation - One Day Induction Programme for the I year B.Ed(DDE)., students (2016-2018) on 18-09-2016

CCE - GRADE FORM

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழையதிட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர்சங்கங்கள் வலியுறுத்தல்.

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. 
குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்குதலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.தலைமை செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடுஅரசு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தலா மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களின்கருத்துக்களை குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் பற்றி தலைமை செயலக சங்க தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஓய்வூதியம் முக்கியமானது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் 1-4-2003 முதல் பழைய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோன்று, மாநில அரசும் 10 சதவீதம் தனது பங்காக ஓய்வூதிய நிதிக்கு அளிக்கும். இந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்து, அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருவாயில் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்குதுதான் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டம் முற்றிலும் அரசு ஊழியர்களுக்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமேஇந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது. பிடிக்கும் பணம் பங்கு மார்க்கெட்டில் போடப்படுவதால் பணத்துக்கு பாதுகாப்பு கிடையாது. தேவையானபோது பணத்தை எடுக்க முடியாது. கடந்த 12 ஆண்டுகளில், பணியில் இருந்தபோது இறந்தவர்கள் ஒருவருக்கு கூட போட்ட பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதனால், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை வல்லுநர் குழுவினர் கைவிரிப்பு?

2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதனால் எந்த பலனும் இல்லை, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதையடுத்து, தற்போது வல்லுநர் குழு அமைத்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தமிழக அரசு நேற்று ஆலோசனை கேட்டது. 10க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக வல்லுநர் குழுவினரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்து குறித்து சில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “நாங்கள் சொன்ன கருத்தை வல்லுநர் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அரசு தரப்பில் கூறும்போது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு வரி உள்படகிடைக்கும் அனைத்து வருவாயையும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்ய முடியாது. அதனால் அதிகபட்சமாக தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் அரசு ஊழியர்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுக்கான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி - விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.

ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையிலான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் இணைந்து வழங்குகின்றன.
இதுகுறித்து சென்டர் ஃபார் டீச்சர் அக்ரெடியேஷன் (சென்டா) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரம்யா கூறியதாவது:5,000-க்கும் மேற்பட்டோர்..‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான போட்டி. ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தவும், மேம்படுத்த வும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 300 நகரங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப் போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 2-வது ஆண்டாக நாடு முழுவதும் 22 நகரங்களில் வரும் டிசம்பர் 3-ம் தேதி 2016-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடக்க உள்ளன. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் போட்டி நடக்கும்.மொத்தம் 13 பிரிவுகளில் போட்டி நடைபெறும். இதில் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என தங்கள் விருப்பத்துக்கேற்ப ஆசிரியர்கள் போட்டிப் பாடப் பிரிவைதேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு துபாயில் 2017-ல் நடக்க உள்ள உலக கல்வி, திறன்மேம்பாட்டு மாநாட் டில் பங்கேற்க வார்கே அறக் கட்டளை சார்பில் வாய்ப்பு அளிக் கப்படும். ஒவ்வொரு மாநிலத்தி லும் முதலிடம் பெறுபவர்களின் விவரங்கள் ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகும். இதுதவிர, வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு சென்ட் ரல் ஸ்கொயர் அறக்கட்டளை சார்பில் வெளியாக உள்ள புத்தகத்தில் எழுதும் வாய்ப்பும், ஹெச்டி பாரேக் அறக்கட்டளை மூலம் 50 பேருக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு...
கணினி மூலம் போட்டி நடத்தப்படும். தேர்வு செய்துள்ள பாடம், பாடம் நடத்தும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக ‘ஆப்ஜெக்டிவ்’ வகை கேள்விகள் இடம்பெறும். போட்டி குறித்தகூடுதல் விவரங்கள், முன்பதிவு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (www.tpo-india.org) தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'

அரசின் அனுமதி பெறாமல், பள்ளிகளுக்கு தன்னிச்சையாக விடுமுறை அளித்த, தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப,பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.காவிரி பிரச்னை தொடர்பாக, நேற்று நடந்த முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு, சில தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
அதனால், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாகை போன்ற சில மாவட்டங்களில், தனியார் நர்சரி பள்ளிகள் செயல்படவில்லை.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற முக்கிய மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளி,கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நடந்ததால், மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின.

இந்நிலையில், தன்னிச்சையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், சங்கத்தினருக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அழைப்பு.

யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகையுடன் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2016ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், முதன்மைத் தேர்வுக்காக மாணவர் / மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் எண். 163/1, பி.எஸ். குமாராசாமி ராஜா சாலை, சென்னை – 28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மூன்று அலுவலக வேலை நாட்களில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மொத்தம் 225 (SC-92, SC(A)-18, ST-03, MBC-40, BC-54, BC(M)-07, DA-07 மற்றும் OC-04)மாணக்கர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ / மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பித்து முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி வசதி உண்டு, இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000/- உதவித் தொகை தமிழக அரசால் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
முதல்வர்
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை – 28.
தொலைபேசி எண் : 044 / 24261475

பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் தேவை: நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசின் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை

பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான இந்த வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலகச் சங்கம் தனது கருத்தை முதலாவதாகப் பதிவு செய்தது.
சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி, இணைச் செயலாளர் ஹரி சங்கர், பொருளாளர் மகேந்திரன் தலைமையிலான குழு நிபுணர் குழுவிடம் மனு அளித்தது.
பல்வேறு பிரிவினரின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு ஒய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நலத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்கனவே பெற்று வந்த ஒய்வூதியத்தை, 1.4.2003 முதல் புதியதாகப் பணியில் சேர்பவர்களுக்கு வழங்க இயலாது என்பது முற்றிலும் சமூகப் பாதுகாப்பிற்கு எதிரானது. அரசு ஊழியருக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் திட்டமான பங்களிப்புடன் கூடிய புதிய ஒய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தினையே நடைமுறைப்படுத்த

வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டம் மாலை 5.30 வரை நடைபெற்றது.

TRB: விரிவுரையாளர் பணிக்கு நாளை போட்டி எழுத்துத் தேர்வு.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (செப்.17) நடைபெற உள்ளது.
டிஆர்பி சார்பில், 
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை, இளநிலை விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சென்னை மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 2,443 பேர் பங்கேற்று தேர்வெழுத உள்ளனர்.
செல்லிடப்பேசி, மின்னணு கணக்கிடும் கருவி, மின்னணு கடிகாரம் ஆகிய சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு வர அனுமதி கிடையாது.
டிஆர்பி-யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டில் புகைப்படம் பதியவில்லையெனில், இணைப்புத்தாளில் புகைப்படம் ஒட்டி முழுமையாகப் பூர்த்தி செய்தோ அல்லது 2 புகைப்படங்களையோ எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தேர்வர்கள் மையத்துக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.