யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/17

NEET Exam Coaching - நுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா?

பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று வர, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவ - மாணவியரிடம் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பிளஸ் 2 படிக்கின்றனர். இவர்களில், நான்கு லட்சம் பேர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள், பிளஸ் 2க்கு பின், மருத்துவம் படிக்க, நீட் நுழைவு தேர்விலும், தேசிய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிக்க, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும், தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், நீட் தேர்வு எழுத, சரியான பயிற்சி இல்லாததால், இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீட் உட்பட, மத்திய அரசின் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 412 மையங்களில், பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்காக, மாணவர்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தங்கள் பள்ளி அல்லாமல், வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக, தனியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: தற்போது வீட்டிலிருந்து, பள்ளி இருக்கும் இடம் வரை மட்டுமே, பஸ் பாஸ் உள்ளது. ஆனால், நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையம், வேறு இடத்தில் இருப்பதால், இந்த பாசை பயன்படுத்தி, அங்கு செல்ல முடியாது. சாதாரண கூலி தொழிலாளரான பெற்றோரால், பஸ் டிக்கெட்டுக்கு பணம் தர முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை

பள்ளிக்கல்வித் துறைக்கு தேர்வான, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வான, 199 இளநிலை உதவியாளர்கள், 125 தட்டச்சர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டனர். 

அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, 10 பேருக்கு, பணி நியமன ஆணைகளை,முதல்வர் பழனிசாமி வழங்கினார். மற்றவர்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட, மாவட்டக் கல்வி அலுவலர்களும், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், நியமிக்கப்பட்ட தட்டச்சர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரும், பணி நியமன ஆணை வழங்கினர்.

மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
குழந்தைகள் தினவிழா அரசு சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:-

மாணவ-மாணவிகள் 16 மணிநேரம் பெற்றோர்களிடமும், 8 மணிநேரம் ஆசிரியர்களிடமும் இருக்கிறார்கள். நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து அவர்களுக்கு தக்க அறிவை ஊட்டிவருகிறார்கள். மத்திய அரசு எத்தகைய போட்டித்தேர்வை கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் 73 ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாத இது போன்ற பயிற்சி எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும் இல்லாதது.

மேலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் உயர் கல்வியில் என்ன படிக்கலாம், என்ன படிப்பை படித்தால் வேலைகிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு வசதியாக விரைவில் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும். அது முழுக்க முழுக்க இலவசம்.

புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணைத்து கொடுக்கப்பட உள்ளது. அந்த பாடத்திட்ட வரைவு வருகிற 20-ந்தேதி இணையதளத்தில் வெளியிட உள்ளோம்.

தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரி செய்ய டிசம்பர் மாதத்திற்குள் பயிற்சி மையங்களை தொடங்க உள்ளோம்.

32 மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டில் சிம் கார்டை பொருத்த நினைத்தோம். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி சிம் கார்டு இல்லாமல் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.

விழாவில் அவர் குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். மேலும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், நூலகங்களுக்கு அதிக நன்கொடை வழங்கியவர்களுக்கும், நூலகங்களுக்கு அதிக உறுப்பினர் சேர்த்தவர்களுக்கும் விருது வழங்கினார்.

விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, ஜெயவர்த்தன் எம்.பி., விருகை ரவி எம்.எல்.ஏ., நட்ராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள்.

இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், கார்மேகம், கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார்.

TNPSC Group 4 Exam - 9,351 காலி இடங்கள்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 பணிகளில் 9,351 காலி இடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் வரித்தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர், என மொத்தம் 9,351 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, எஸ்.எஸ்.எல்.சி கல்வித்தரத்திலான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப்-4) நடத்துவதற்கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கான கல்வி மற்றும் பிற தகுதிகள் வருமாறு:-
பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, கூடுதலாக தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில் நுட்பக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அனைத்துப் பதவிகளுக்கும் ஒரே விண்ணப்பம் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க டிசம்பர் 13-ந்தேதி கடைசி நாள். தேர்வு வருகிற 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடை பெறுகிறது. மாவட்ட மற்றும் தாலுகாக்களில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு பணியாளர் தேர்வாணைய இணைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தரப் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர்கள் பணி சார்பான அரசாணை எண்-229 தகவல்கள்:

பள்ளிக்கல்வி - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017/18 -பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்:

கருணை அடிப்படையில் அரசு பணி யாருக்கு வழங்கப்படும்!!!

கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

# கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?


தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

# இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

# இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?

இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

# கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.8

# கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

# கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?

காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

# என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?

அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

# என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?

தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

# கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

# கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,

தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

# திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?

திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

# மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

-thanks -- வழக்கறிஞர் பாண்டியன்
தமிழக அறப்போர் இயக்கம்

TNPSC GROUP IV EXAM FULL TIME COACHING IN CHENNAI:

GST வரி விதிப்பில் மாற்றம்: விலை குறையும் 200 பொருட்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் உட்பட சுமார் 200 பொருட்களின் விலை இன்று முதல் குறைகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மாற்றத்தால் பயன்பெறுவோரில் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன. அடுத்து, சிறு குறு தொழில்கள், உணவகங்கள், ஹோட்டல்களும் இதன் மூலம் பயனடைகின்றன.


கடந்த வாரம் குவாஹாட்டியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28% வரி விதிப்பில் இருந்த 180 பொருட்கள் உட்பட சுமார் 210 பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான சாக்லேட், செரிவூட்டப்பட்ட பால், மயோன்னைஸ் சாஸ், மசாலா கூழ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரைக் கட்டிகள், பாஸ்தா, பர்ஃபி, இட்லி-தோசை மாவு, உறையவைக்கப்பட்ட மீன், சீவிங்கம், துணி துவைக்கும் சோப்புப் பவுடர், ஷேவிங் க்ரீம், பிளேடு, ஷாம்பு, டியோட்ரண்ட், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை இன்று முதல் குறைகிறது.
அதேப்போல, வெட் கிரைண்டர்கள், கவச வாகனங்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 6 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 8 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், 6 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் சதவீதமாகவும் (வரி இல்லை) குறைக்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி கவுன்சில் குழு முடிவின்படி, 178 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டதையடுத்து, 28 சதவீத வரிகள் விதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் இருக்கும் பொருள்களின் எண்ணிக்கை 50-ஆக குறைந்துள்ளது. அந்தப் பட்டியலில் பெயிண்ட், பர்ப்யூம்ஸ், ஏசி இயந்திரம், துணி துவைக்கும் இயந்திரம், குளிர்பதன பெட்டி, வாக்குவம் கிளீனர், கார்கள், 2 சக்கர வாகனங்கள், விமானம், படகு போன்ற ஆடம்பரப் பொருள்களும், பான் மசாலா, சிகரெட்டுகள், புகையிலை தயாரிப்பு பொருள்கள் போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்களுமே தற்போது உள்ளன.

28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள பொருள்களில், காபி, மார்பிள், கிரானைட், கஸ்டர்டு பவுடர், பற்பசை, பாலிஷ், திரவியங்கள், கழிப்பறை சார்ந்த பொருள், தோல் ஆடை, சிகையலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் விக், குக்கர், ஸ்டவ், சவரக்கத்தி, வெட்டுக்கருவிகள், வாட்டர் ஹீட்டர், பேட்டரிகள், மூக்கு கண்ணாடி, கை கெடிகாரம், மெத்தை, வயர், கேபிள், மரப்பெட்டி, சூட்கேஸ், ஹேர் க்ரீம், ஹேர் டை, முகப்பூச்சு, காற்றாடி, விளக்கு, ரப்பர் ட்யூப், மைக்ரோ ஸ்கோப் உள்ளிட்டவை முக்கியமானவை.

டயாபடிக் உணவு, பிரிண்டிங் மை, கைப்பைகள், தொப்பிகள், கண்ணாடி பிரேம்கள், மூங்கில்/பிரம்பாலான மர சாமான்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கு மாவு, சட்னி பவுடர் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உலர்த்தப்பட்டகாய்கறிகள், தேங்காய் ஓடு, மீன் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது.

இட்லி தோசை மாவு, கயிறு, மீன் வலை, ஆடை, உலர்ந்த தேங்காய் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

0% உலர்த்தப்பட்ட காய்கறிகள், தேங்காய் ஓடு, மீன்
5% ஏசி மற்றும் ஏசி அல்லாத உணவகங்கள், சட்னி பவுடர்
12% ரீபைண்ட், சர்க்கரை, டயாபடிக் உணவு, தொப்பிகள், கைப்பைகள்
18% சாக்லேட்டுகள், காபி, மார்பிள், கிரானைட், குக்கர்கள், கை கெடிகாரம், ஷாம்பூ, காற்றாடிகள்
28% பான் மசாலா, சிகரெட்டுகள், புகையிலை பொருள்கள், சிமெண்ட், பெயிண்ட், ஏசி, வாஷிங் மெஷின், கார்கள், 2 சக்கர வாகனங்கள் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில பொருட்களாகும்.

EMIS STUDENT ADMIT OPTION FROM OTHER SCHOOLS ENABLED NOW EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும்
போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது
.மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம்  இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும்.  அடையாள அட்டை பதிவுகள் பதியலாம் எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit)  வசதி செய்யப்பட்டுள்ளது

புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீடிப்பு

பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் 
நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பல ஆண்டுகளாக, பல்கலைகளில் நிதி வரவு - செலவை சரியாக நிர்வகிக்காததால், பல்கலைகளில் கடும் நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளது. அதே நேரம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், 1,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 8,000க்கும் மேற்பட்டோர், வேலையின்றி சம்பளம் பெறுவதால், அந்த பல்கலைக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது.
இப்பல்கலையால் அரசுக்கு, மாதம் தோறும், 50 கோடி ரூபாய் செலவாகிறது. எனவே, பணியின்றி இருக்கும், பேராசிரியர்கள், ஊழியர்களை, அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு மாற்ற, உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, எந்த பல்கலையிலும், அரசு கல்லுாரியிலும், புதிய பணி நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை விதிக்கப்பட்டு, ஓர் ஆண்டு முடிந்த நிலையில், தற்போது பணி நியமன பணிகளை தொடரலாமா என, பல பல்கலைகளின் துணைவேந்தர்கள் அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு, தமிழக அரசு தரப்பில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், நிதி இருப்பு குறைவாக இருப்பதாலும், ஒவ்வொரு பல்கலையிலும் வருவாய் குறைந்து, அதிக நிதிச்சுமை உள்ளதாலும், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டாம் என, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், பல்கலைகளில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாறாக செலவை அதிகரிக்க கூடாது என்றும், துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது!!!

சென்னை: 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்;
அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது.


இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன. திறந்தநிலை பல்கலை, 2003ல் துவங்கப்பட்டது. அதற்கு முன், திறந்தநிலை கல்வி முறையில், பல பல்கலைகள், அடிப்படை கல்வித் தகுதி இன்றி, நேரடியாக, முதுநிலை படிப்புகளை வழங்கியுள்ளன.
அதில், படித்தவர்களின் படிப்பு குறித்தே, தற்போது, சில வழக்குகள் உள்ளன. திறந்தநிலை பல்கலையால் நடத்தப்படும் படிப்புக்கும், இந்த வழக்கு
களுக்கும், எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 
மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான
அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.


இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

9,351 பணியிடங்களுக்கு, 'குரூப் - 4' தேர்வு அறிவிப்பு : முதல் முறையாக வி.ஏ.ஓ., பதவியும் இணைப்பு

சென்னை: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி.,
வழியாக தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பு தகுதியில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு, 'குரூப் - 4' வரிசையிலும், வி.ஏ.ஓ., பணியிடத்துக்கு, தனியாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால், மனித வளம் மற்றும் நிதி இழப்பு கருதி, இரு தேர்வுகளையும் ஒன்றாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்தது.

இதையடுத்து, வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்ட, குரூப் - 4 தேர்வுக் கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டது. இதன்படி, 2018 பிப்., 11ல் நடக்கும் தேர்வுக்கு, நேற்று முதல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது; டிச., 13 வரை விண்ணப்பிக்கலாம்; கட்டணத்தை, டிச., 15 வரை செலுத்தலாம். இந்த தேர்வில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, 4,300 பேர் உட்பட, எட்டு பதவிகளில், 9,351 பேர் சேர்க்கப்பட உள்ளனர். வி.ஏ.ஓ., பதவிக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வயது வரம்பில், எந்த மாற்றமும் இல்லை. ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே பதிவு செய்யலாம். தேர்வு முடிவு வரும் போது, தரவரிசை அடிப்படையில், தகுதியான, விருப்பப்பட்ட பதவியை தேர்வு செய்யலாம். முதற்கட்டமாக, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில், தங்கள் சுயவிபரங்களை, ஒரு முறை பதிவாக, ஆன் -- லைனில் பதிவு செய்ய வேண்டும். அதன் வழியாக, குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே, ஒரு முறை பதிவு செய்தவர்கள், மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
குரூப் - 4 தேர்வுக்கு, 12 லட்சம் பேரும், வி.ஏ.ஓ.,தேர்வுக்கும், 15 லட்சம் பேரும், இதுவரை விண்ணப்பித்து வந்தனர்.
வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - 4 தேர்வையும் எழுதி வந்தனர். தற்போது, குரூப் - 4 தேர்வில், வி.ஏ.ஓ., பணியிடமும் சேர்க்கப்பட்டதால், 18 லட்சம் பேர் போட்டியிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 'இந்து அறநிலையத் துறை செயல் அதிகாரி பதவியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, 2018 ஜன., 20, 21ல் தேர்வு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
இதற்கான, ஆன் - லைன் பதிவு, நேற்று துவங்கியது. டிச., 13 வரை விண்ணப்பிக்கலாம்; டிச., 15 வரை தேர்வு கட்டணம் செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.