யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/7/18

1,6,9,11 வகுப்பு பாடப்புத்தகங்கள் எளிமையா உள்ளனவா? என ஆய்வுக்கூட்டம்

குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக பாடநூல் ஆய்வுக்கூட்டம் சனியன்று நடந்தது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர். 1,6,9,11 ஆம் வகுப்புப் பாடநூல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டாலும் நேரம் போதாமை காரணமாக முதல் வகுப்பு நூல்களுக்கானவை மட்டும் முன் வைத்து பேசப்பட்டது. பிற நூல்களுக்கு மீண்டும் விரைவில் கூடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பாடநூல்களில் உள்ள நிறை குறைகளை ஆசிரியர்கள் பட்டியலிட தொகுத்திருக்கிறோம். தொகுத்தவற்றை மீண்டும் சரிபார்த்து உறுதிப்படுத்தியபின் பரிந்துரைகளை விரைவில் பதிவிடுகிறோம். அரசுக்கும் அளிக்கிறோம். பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தது மட்டுமல்லாமல் வெகு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் பங்கேற்றது பெருமகிழ்வைத் தந்தது. பேராசிரியர்களின் ஆதரவு போற்றத்தக்கது.

எம்.பி.பி.எஸ்.: அரசு கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள்:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை 1,329 மாணவர்களுக்கு: தமிழகத்தில் மொத்தம் 2,447 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; இவற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் 1,329 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 1,118 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்துப் பிரிவினருக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
1,118 காலியிடங்கள்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 828 பேர் அழைக்கப்பட்டு, 813 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 719 இடங்கள் நிரம்பின. சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. மூன்று நாள்கள் கலந்தாய்வின் முடிவில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 29 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், தனியார் கல்லூரிகளில் 59 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 808 இடங்கள் நிரம்பின.
4 இடங்கள்: பொதுப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு: தரவரிசைப் பட்டியலில் 1,418 -இலிருந்து 2,380 வரையிலான 963 அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா : காத்திருக்கும் 5,500 ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில்
நிரந்தர பணி இல்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 5,500 பேர் உள்ளனர். மத்திய இடைநிலை கல்வி வாரிய உத்தரவின்படி, பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.ஆனால், மாநிலங்கள் தமது கொள்கைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து, அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதன்படி கேரள அரசு, 2012 மார்ச் 31க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா 2012 ஜூலை 28-வரை விலக்கு அளித்துள்ளது.அதுபோல் தமிழகத்தில் முன் தேதியிட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளரிடம் 5,500 ஆசிரியர்கள் மனு அளித்தனர். சென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் இதனை வலியுறுத்தினர்.
ஆனால் இதுவரை அதற்கான உத்தரவு வராததால் 5,500 ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதி மறுகூட்டல், மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்குப் பின் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. 
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் புதன்கிழமை (ஜூலை 4) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.எல்.எட்., தேர்வு தேர்ச்சி: ஆசிரியைகளுக்கு சிக்கல்

தேசிய அளவில் தனியார் பள்ளிகளில் பி.எட்., தகுதி இல்லாத ஆசிரியர் மத்திய அரசின் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனத்தின் (தி நேஷனல் ஓபன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் – என்.ஐ.ஓ.எஸ்.,) டி.எல்.எட்., (ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) கல்வி தகுதி பெற வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டது.

டி.எல்.எட்., தகுதியை 2019க்குள் பெற வேண்டும் என்ற நிபந்தனையால் உடல் ரீதியான மற்றும் மகப்பேறு காலங்கள் போன்ற காரணங்களால் ஆசிரியைகள் பலர் இத்தகுதி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை 80 ஆயிரம் காலி இடங்கள்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கையில், சிவில் பிரிவில், 13 ஆயிரத்து 874 இடங்கள் உட்பட, மொத்தம், 80 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில், கடந்த 30ல் துவங்கியது. பொதுப்பிரிவான சிவிலுக்கு நடந்து முடிந்துள்ளது. தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள, 500 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து, 20 சதவீத அடிப்படையில் சிவிலுக்கு, 15721 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2150 பேர் விண்ணப்பித்ததில், 1847 பேர் மட்டுமே பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்றனர். 13 ஆயிரத்து 874 இடங்கள் காலியாக உள்ளன.மெக்கானிக்கலை பொருத்தவரை, 21 ஆயிரத்து 670 இடங்களுக்கு, 4800 பேர் விண்ணப்பித்துள்ளனர். எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு, 50 ஆயிரத்து 989 இடங்களுக்கு, 4050 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 
நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட, 90 ஆயிரம் இடங்களில், 10 ஆயிரம் இடங்களே நிரம்பும் நிலை இருப்பதால், 80 ஆயிரம்காலி இடங்களுடன் கல்லுாரிகள் செயல்படும் நிலை உள்ளது.