யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/9/16

CPS வல்லுநர் குழு-ஆசிரியர் இயக்கங்கள் சந்திப்பு நடந்தது என்ன?

CPS நண்பர்களுக்கு

வல்லுநர்குழு _ சந்திப்பு குறித்த பதிவு.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரசு சார்பில் திருமதி. சாந்தா ஷீலா நாயர், திரு. கிருஷ்ணன். திரு. சண்முகம், திரு. முத்து  ஆகியோர்பங்கு
பெற்றனர்.

பிரிஜேஸ்புரோகித் கலந்து கொள்ளவில்லை.

குழுவின்கேள்விகள் அனைத்தும் cps ஐ நியாயப்படுத்தும் விதமாகஇருந்தது.

என்ன காரணத்திற்காக குழு அமைக்கப்பட்டது என்றசந்தேகம் எழுகிறது.


Cps ஒழியஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே தீர்வு.

திண்டுக்கல் எங்கெல்ஸ்..

ஊராட்சி பதவிகளுக்கு வண்ண ஓட்டுச்சீட்டு

ஊராட்சிதேர்தலில், நான்கு பதவிகளுக்கு, வண்ணஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது.ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சிஒன்றிய குழு உறுப்பினர், மாவட்டஊராட்சி குழு உறுப்பினர் 
ஆகியபதவிகளுக்கான தேர்தலில், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படஉள்ளது. 


கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வாக்காளர்கள், நான்கு ஓட்டு போடவேண்டும்.கடந்த உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, 'பிங்க்' நிறம்; ஊராட்சி வார்டு உறுப்பினர்பதவிக்கு, வெள்ளை அல்லது நீலம்; ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்பதவிக்கு, பச்சை; மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிக்கு, மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டுகள்அச்சிடப்பட்டன. இந்த உள்ளாட்சி தேர்தலிலும், வண்ண ஓட்டுச்சீட்டுகளை அச்சிட, மாநில தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது

SSLC:செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம்வகுப்பு துணைத் தேர்வு எழுதவிண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர்வெளியிட்டசெய்திக் குறிப்பில்,

அக்டோபரில்நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணைதேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும்செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு

பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு,காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும்,
24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.


தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள்வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.

சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:-
சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்றுஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள்கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்

அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும்.தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

புத்தகப்பை, வீட்டுப்பாடம்

குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

 தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
புதியதாக குழு: தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். 
இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார். 
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தை சிறப்பான முறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு'

பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள் வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

பி.எட்., 'அட்மிஷன்' நிறுத்த திடீர் உத்தரவு

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தொடர்பான, பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, 670 தனியார் கல்லுாரிகளிலும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும், கடந்த மாதம் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.
அரசின் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், நிரம்பாத காலி இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நேற்று துவங்கியது; இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், அனைத்து தனியார், பி.எட்., கல்லுாரிகளிலும், இன்றுடன் மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை, நேற்று மாலை, திடீர் அறிவிப்பை வெளியி ட்டுள்ளது; இதனால், தனியார் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 'எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென மாணவர் சேர்க்கையை நிறுத்த உத்தரவிட்டால், கல்லுாரிகளை எப்படி நடத்துவது; மாணவர் சேர்க்கைக்கு, மேலும், இரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பள்ளி, கல்லூரிகள் இயங்குமா?

கடையடைப்பு போராட்டம் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் இன்று இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பிரின்ஸ்பாபு கூறியதாவது: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, காலாண்டு தேர்வு, அரசின் பொது வினாத்தாளுடன், இன்று நடத்தப்படுகிறது. அரசு விடுமுறை அறிவிக்காததால், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். ஆசிரியர், மாணவர்கள், 'கறுப்பு பேட்ஜ்' அணிந்து வருவர்.


தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்களின் சங்க தலைவர் எம்.ஜே.மார்ட்டின் கென்னடி: எங்கள் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, முடிவு செய்து கொள்ளலாம்.

தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன்: மாணவர்கள் பாதுகாப்பு கருதி, இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கலாம் என, முடிவு செய்துள்ளோம். இன்று நடக்கவிருந்த தேர்வுக்கான மாற்று தேதி, பின்னர் அறிவிக்கப்படும். எனினும், பள்ளிகள் விடுமுறை அளிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளி நிர்வாகங்களே முடிவு எடுத்து கொள்ளலாம்.

நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார்: பள்ளி வாகனங்கள் இயங்காது என்பதால், எங்கள் சங்கத்தில்உள்ள பள்ளிகள் செயல்படாது; சனிக்கிழமை பள்ளிகளை இயக்குவோம்.

அரசு நிலை என்ன? : பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது, 'பள்ளிகளுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கவில்லை' என்றார். தனியார் கல்லுாரிகள் நிலவரம் குறித்து, எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கோட்டையில் ஆலோசனை : 'பந்த்'தால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, போலீஸ் டி.ஜி.பி., ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரயில்களில் பாதுகாப்பு : 'பந்த்'தையொட்டி, ரயில் மறியல் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, தாம்பரம் உட்பட, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 'ரயில் போக்குவரத்தில், எந்த பாதிப்பும் இருக்காது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய ஓட்டல்கள் பங்கேற்பு : கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதால், தமிழகம் முழுவதும் உள்ள, மூன்று லட்சம் கடைகள் மூடப்படும் என, தமிழ்நாடு சிறு டிபன் கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால், சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பெட்ரோல் 'பங்க்' இயங்கும் : பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று, 'பங்க்'குகளை மூடுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நடத்தும், 197 பெட்ரோல், 'பங்க்'குகள், மாநிலம் முழுவதும், இன்று செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., ஆதரவு : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:தமிழர்களின் உரிமையை, எந்த விதத்திலும் விட்டுத் தரக்கூடாது என்பதால், தமிழக பா.ஜ., முழு ஆதரவை தெரிவிக்கிறது. அதேநேரத்தில், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்களுக்கு அருகில் போராட்டம் போன்ற வன்முறையை துாண்டும் அறிவிப்புகளை, சிலர் உள்நோக்கத்தோடு
வெளியிட்டு இருப்பதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நகை கடைகள்
இன்று அடைப்பு
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
தமிழகத்தில், 35 ஆயிரம் தங்க நகை கடைகள் உள்ளன. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகாவில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இன்று, 'பந்த்'
நடக்கிறது. அதற்கு ஆதரவாக, அனைத்து நகை கடைகளும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு : குழுவிடம் அரசு ஊழியர் சங்கத்தினர் மனு

பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி கள், அரசு குழுவிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழக அரசு பணியாளர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது; இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசுப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அவர்களின் பணிக் காலத்திற்கு பின் பாதுகாப்பு அரணாக இருந்தது; அதில், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில், குடும்ப ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில், பணியாளரின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதிய நிதிக்கு மாற்றப்படும். இதற்கு சமமானத் தொகையை, மாநில அரசு, தன் பங்காக, அளிக்கும். இத்தொகை, அரசால் நியமிக்கப்படும், நிதி மேலாளர் வசம் ஒப்படைக்கப்படும்; இத்தொகையை, பங்கு சந்தை யில் முதலீடு செய்வர். அந்த முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயில், பணியாளர் ஓய்வு பெறும் போது, அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் உள்ள பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்கப் படும். இதன் காரணமாக, எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை உறுதியாக கூற இயலாது; பிடித்தம் செய்த தொகையை, பாதியில் பெற இயலாது என, பல்வேறு பாதகமான விஷயங்கள் உள்ளன.
எனவே, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; இக்குழு, சென்னையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. தலைமைச் செயலக ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், அரசுப் பணியாளர் சங்கம், அனைத்து ஆசிரியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, 'ஜேக்டோ, டேக்டோ' மற்றும் அரசு அலுவலர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர், உறுப்பினர்களிடம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி, மனுக்கள் அளித்தனர். 

செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'அக்டோபரில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிறது ?

செட்’ தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை!

செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், செட் என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.

செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில் பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, செட் தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; நெட் தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.

அதன்பின் நடந்த, செட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், செட் தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.