யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/16

DISTRICT WISE NMMS PASSWORD

பள்ளிக் கல்வித்துறை செயலர் வேறு துறைக்கு மாற்றப்படுவாரா??

High School HM Promotion Case Details

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான
வழக்கு:
--------------------------------------------
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பானவழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இத்துணை நாட்களாகஎடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்றஅளவில் குறுகிய கால அளவில்ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டுவந்தது.
  

 ஆனால் இன்று நடந்தவிவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிஉயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்டஅனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதிவிசாரணையாக விசாரிக்கப்படும்.

இறுதி விசாரணை வரை தற்போதுள்ளதடையாணை உள்ளபடியே தொடரும்.

இதற்குப்பெயர் Stay resolution order என்பதாகும்.

இதன் மூலம், புதிதாக தடையாணைஏதும் இவ்வழக்கில் பெற இயலாது.

அதே சமயம், இருக்கின்ற தடையாணையையாராலும் நீக்க முடியாது.

இனி ஒரே ஒரு விசாரணைமட்டும்தான். அது இறுதி விசாரணைமட்டுமே.

ஏற்கனவேஇருந்ததைப் போல் வார வாரம்லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்குவர சில மாதங்கள் ஆகும்.

இன்னும்சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல்கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை.

தங்கள்உண்மையுள்ள,

ப.நடராசன், மாநில தலைமை நிலையச்செயலாளர், பதவி உயர்வு பெற்றபட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,தருமபுரி மாவட்டம்..

Flash News:NEET - நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ்எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் உள்ளஇடங்களில் சேர விரும்பும் மாணவர்கள்அகில இந்திய மருத்துவ, பல்மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எழுதவேண்டும். தனியார் மருத்துவ,
பல்மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும்.

இந்நிலையில்நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மக்களவையில் சுகாதாரத்துறைஇணை மந்திரி அனுப்பிரியா பட்டேல்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
2017-ல்மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுதமிழில் நடத்தப்படும்.அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி மொழிகளிலும் நீட் தேர்வை எழுதலாம். ஆங்கிலம்,ஹிந்தி தவிர்த்து பிறமாநில மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும். மேலும் மருத்துவ இளம், முதுகலை படிப்புகளுக்கானஇடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவுசெய்யும்.இவ்வாறுஅவர் கூறினார்

திண்டுக்கல் மாவட்ட தொடக்க &நடுநிலை பள்ளிகளில் நடத்தப்படும் இரண்டாம் பருவ தேர்வு மற்றும் SLAS தேர்வு காலஅட்டவனை



2017 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள். RH list.

தேவையில்லாத புத்தகங்கள் வேண்டாம் : மாணவர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

தேவையில்லாதபுத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள், ஒவ்வொருநாளும் பள்ளிக்கு செல்லும் போது,
அனைத்து பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உணவுமற்றும் குடிநீர் போன்றவற்றை சுமந்து செல்கின்றனர். அதனால், சிறு வயது குழந்தைகளின் முதுகுதண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பாட புத்தகங்களின் அளவுகுறைக்கப்பட்டு, அதற்கேற்ப பாட வேளைகள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன. இம்முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும்சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'மாணவர்களுக்கு, தினமும்என்ன பாடம் நடத்த வேண்டும்என, திட்டமிட வேண்டும். அதற்கேற்ப, பாட புத்தகங்கள் மற்றும்நோட்டு புத்தகங்களை, அளவோடு கொண்டு வர, மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியர் விவரங்கள் இல்லை-அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி

டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம்

மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித்துறையில், 10ம் வகுப்பு,
பிளஸ்2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள்அமைத்து, ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. இதில், அவ்வப்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
தாமதம்: இது போல, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதேர்வுகளிலும், மையங்களில் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் அனுப்புதல், பிரித்தல், மறு ஆய்வு செய்தல்போன்றவற்றிற்கு, கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால், தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் அனுப்புதல் மற்றும் திருத்தம் நடக்கும்என, சி.பி.எஸ்.இ., வாரிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் கல்வி ஆண்டில், தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்லைனில்விடை திருத்த ஒருங்கிணைந்த மையத்திற்குஅனுப்பப்படும்.

கணினி குறியீடு : பின், அவற்றில் கணினிகுறியீடு கொண்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், கணினிமூலமும், மற்றவை கணினி வழியேபிரித்தும், திருத்த அனுப்பப்படும். இந்த, டிஜிட்டல் திருத்த முறையால், முறைகேடாகதிருத்தும் வகையில், விடைத்தாள்கள், 'லீக்' ஆவது; காணாமல்போவது தடுக்கப்படும். மேலும், 25 நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகளைவெளியிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!

ரொக்கம்இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு
ஏற்பாடு

செய்துஉள்ளது.இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பணதட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம்வெகுவாக குறைந்து உள்ளது. .

இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்குரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படிமத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.இது குறித்து மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாகபல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில்விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசுஏற்பாடு செய்து உள்ளது எனமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துஅவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகளைஅதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதிதொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம்ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும்மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம்ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவுகருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

10 பேரைஇணைக்க வேண்டும்

பல்வேறுகல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள்ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான்இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல்தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில்இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

CCE-4th WEEK MATHS KEY

WORK SHEET - 4 TENTATIVE KEY ANSWERS - SOCIAL SCIENCE

WORK SHEET -4 TENTATIVE KEY ANSWERS - SCIENCE

தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.

 1)ஏ. சுப்பராயலு-
17.12.1920 - 11.07.1921.

2) பனகல்ராஜா
11.07.1921- 3.12.1926.

3) பி. சுப்பராயன்
04 .12.1926- 27.10.1930

4)பி. முனுசுவாமி நாயுடு

27.10.1930 -4.11.1932

5) ராமகிருஷ்ணரங்காராவ்
5.11.1932 -04.04.1936

6)பி. டி. இராஜன்
4.4. 1936- 24.08. 1936

7) ராமகிருஷ்ணரங்காராவ்
24.08.1936 -1.04.1937

8) கூர்மாவெங்கட ரெட்டி நாயுடு
1.04.1937 -14.07.1937

9) இராஜகோபாலாச்சாரி
14 .07.1937- 29.10.1939

10) த. பிரகாசம்
30.04.1946 - 23.03. 1947

11) ஓமந்தூர்ராமசாமி ரெட்டியார்
23.03.1947- 6.04. 1949

12) பூ.ச.குமாரசுவாமி ராஜா
6.4.1949

13)பூ.ச. குமாரசுவாமிராஜா
26.01. 1950 - 9.4. 1952

14) இராஜகோபாலாச்சாரி10.4.1952 -13.4. 1954

15)கே. காமராஜ்
13.4.1954- 31.03. 1957

16) கே. காமராஜ்
13.04.1957 -1.03. 1962

17) கே. காமராஜ்
15.03.1962 -2.10. 1963

18)எம். பக்தவத்சலம்
2.10.1963- 6.03.1967

19) சி. என். அண்ணாத்துரை
6.03. 1967- . .08. 1968

20)சி. என். அண்ணாத்துரை
...08- 1968- 3.02.1969

21) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
3.02.1969 -10.02. 1969

22) மு. கருணாநிதி
10.02.1969- 4.01. 1971

23) மு. கருணாநிதி
15.03. 1971- 31.01. 1976

*குடியரசுத்தலைவராட்சி*
31.01.1976- 30.06.1977

24)எம். ஜி. இராமச்சந்திரன் 30.06.1977- 17.02. 1980
*குடியரசுத்தலைவர் ஆட்சி*
17.02.1980 -9.06.1980

25)எம். ஜி. இராமச்சந்திரன் 9.06.1980- 15.11. 1984

26)எம். ஜி. இராமச்சந்திரன் 10.02.1985 -24.12.1987

27) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
24.12.1987- 7.01. 1988

28)ஜானகிஇராமச்சந்திரன்
7.01.1988- 30.01. 1988

*குடியரசுத்தலைவர்*
30.01. 1988- 27.01. 1989

29)மு. கருணாநிதி
27.01.1989 -30.01. 1991

*குடியரசுத்தலைவர்*
30.01.1991 -24.06.1991

30) ஜெ. ஜெயலலிதா
24.06.1991 -12.05.1996

31) மு. கருணாநிதி
13.05.1996- 13.05. 2001

32)ஜெ. ஜெயலலிதா
14.05.2001- 21.09. 2001

33.ஓ. பன்னீர்செல்வம்
21.09.2001 -01.03. 2002

34)ஜெ. ஜெயலலிதா
2.03.2002 -12.05.2006


35) மு. கருணாநிதி
13.05. 2006- 15.05. 2011

36)ஜெ. ஜெயலலிதா
16.05. 2011- 27.09. 2014

37) ஓ. பன்னீர்செல்வம்
28.09.2014 -23.05. 2015

38) ஜெ. ஜெயலலிதா
23.05. 2015 - 06.12. 2016

39) ஓ. பன்னீர்செல்வம்

6.12. 2016 -

TET ARTICLE :ஆசிரியர் தகுதித்தேர்வு - ஜெயலலிதாவுக்காக காத்திருந்த பள்ளி ஆசிரியர்கள்!

அஇஅதிமுகஆட்சியில் கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்றுஆசிரியர் தகுதித்தேர்வு. ஜெயலலிதா ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுபள்ளி ஆசிரியர் கனவில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தினார். மூன்று முறை ஆசிரியர்
தகுதித்தேர்வு நடத்தப்பெற்று எழுபதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பைபெற்றிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க மொபைல் ஆப்கள் அறிமுகம்!!!

திருவனந்தபுரமஊழலை ஒழிக்கும் வகையிலும், மக்கள் ஊழலுக்கு எதிராகபோராடும் வகையிலும் இரண்டு மொபைல் ஆப்களைகேரள
முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை(09-12-16) அறிமுகம் செய்துவைத்தார்.

சர்வதேசஊழல் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும்கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரளமுதல்வர் பினராயி விஜயன், ஊழலுக்குஎதிரான 2 மொபைல் ஆப்களை அறிமுகம்செய்துவைத்தார்.

ஊழலற்ற, நிலையான வளர்ச்சி

'அரைஸிங்கேரளா' (Arising Kerala), விசில் நவ் (Whistle Now) என்றுபெயரிடப்பட்டுள்ள ஆப்களை அறிமுகம் செய்துவைத்த பினராயி விஜயன், "ஊழலற்றமற்றும் நிலையான வளர்ச்சி என்பதேமாநில அரசின் நோக்கம். ஊழலைஒழிக்க மாநில அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு, அரசு சாரா நிறுவனங்களில் ஊழலைமுடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.


ஊழலை ஒழிப்பது தொடர்பான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் கேரள மக்கள் இந்தஆப்கள் மூலம் வழங்கலாம் என்றார்பினராய்விஜயன்.