யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/16

வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை

'வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை

அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது. வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம்.

அந்த வகையில், வரும் அக்., 8ம் தேதி, வங்கிகளுக்கு விடுமுறை; மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. 10ல்,ஆயுத பூஜை; 11ல், விஜயதசமி; 12ல், மொகரம் வருகிறது. அதனால், அக்., 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக இயங்காது.

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவை செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை

செய்ய வேண்டியவை
முதலில்கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டுசீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில்டிக் அடிக்க வேண்டும் .

நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும்சின்னத்தில் படாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்.

டிக் அடித்த துண்டு சீட்டைA என்ற இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரில்வைத்து ஒட்ட வேண்டும்.

ஸ்டேபில்பண்ணக்கூடாது.*
13A என்றுஒரு படிவம் இருக்கும். அதைசரியாக பூர்த்தி செய்து தங்களுக்கு தெரிந்தசான்றொப்பமிட தகுதி உடைய நண்பர்களிடம்அந்த படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்கவேண்டும்.

பின்னர்A என்ற ஒட்டிய இளஞ்சிவப்பு நிறஅலுவலக கவரையும், 13A படிவத்தையும் சேர்த்து B என்ற கவரில் போட்டுஒட்டி விட வேண்டும் .

செய்ய கூடாதவை
படிவம்13A ல் சான்றொப்பம் வாங்காமல் இருக்கக் கூடாது.

இரண்டுஅலுவலக கவரையும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

படிவம்13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரிகூட வைத்து விடக்கூடாது

மேலும்சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் ஆலோசித்துதெளிவு படுத்தி கொள்ளுங்கள் .

இந்த முறை ஒரு தபால்வாக்கு கூட செல்லாத வாக்காகஇருக்கக்கூடாது

ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையம்

அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்


சிவகங்கை: 'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்குவழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்குதெரியாது' என, ஓய்வூதிய நிதிஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.

மத்தியஅரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு
ஊழியர்கள், மேற்குவங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசுஊழியர்கள் இணைக்கப்பட்டனர். இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறைஊழியர்கள் உள்ளனர்.இவர்களிடம் இருந்துசந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38
ஆயிரத்து935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்தசந்தா மற்றும் அரசு பங்குத்தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில்செலுத்தவில்லை. இதனால் பணியின் போதுஇறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன்பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில்தமிழக அரசு, புதிய ஓய்வூதியதிட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிசாந்தாஷீலா நாயர் தலைமையில் குழுஅமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்களில், பணியின்போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீதபணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீதபணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமேதரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்றஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம்கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசுஊழியர்களுக்கும் இதேநிலை தான். ஓய்வூதியநிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில்விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச்சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள்ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப்பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்திற்காகஅரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடுசெய்யப்பட்ட தொகை குறித்த விபரம்இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசுஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.

மத்தியஅரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில்ஓய்வு பெற்ற மத்திய அரசுஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம்கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர்இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பிதருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட்தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தைஅதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறுசதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை

புதியஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய நடவடிக்கைஎடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசுபணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ்தெரிவித்தார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி: அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு
எந்த பயனும் இல்லாத, புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

தமிழகத்தில்அனைத்து துறைகளிலும், இரண்டு லட்சம் காலிபணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருபணியாளர், மூன்று பேரின் பணிகளைசெய்யும் நிலை உள்ளது. தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில், பணி நியமனங்களை தவிர்த்து, காலமுறை சம்பளத்தில் நிரந்தர ஊழியர்களை நியமிக்கவேண்டும். இது தொடர்பாக, நடவடிக்கைஎடுக்காத பட்சத்தில், அனைத்து துறை பணியாளர்களுடன்ஆலோசித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்

மத்தியஅரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்ய முடியாமல்தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல்மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதியஅறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும்
வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. இதற்கு, மத்திய அரசின், அறிவியல் மற்றும்தொழில்நுட்பத் துறை இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒன்றுஅல்லது இரண்டு மாணவர்களுக்கு, அறிவியல்திட்டங்கள் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வழங்கப்படும்.

இதற்கானபதிவு, ஆக., 25ல் துவங்கியது. வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில்பதிவு செய்தால் மட்டுமே திட்டங்கள் ஏற்கப்படும். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளுக்கு, இதுகுறித்த அறிவிப்பை, மாவட்ட கல்வித் துறைவழங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தல், திட்டங்களைதேர்வு செய்தல் குறித்து, தலைமைஆசிரியர்களுக்கோ, பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கோ, உரியவழிகாட்டுதலும் இல்லை; பயிற்சியும் இல்லை. தொடர்ச்சியாக, இரு ஆண்டுகள், அறிவியல்கண்காட்சிக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், மீண்டும் பதிய முடியவில்லை. இதுகுறித்து, கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கும், பலர் புகார் செய்தும், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால், விருதுக்கான பதிவில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்னணியிலும், அரசு பள்ளிகள் பின்தங்கியும்உள்ளன

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

1620 முதுகலைஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளிகல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம்தேர்ச்சி பெற்ற அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்றுநடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்விஇயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

மாணவர்களின்படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம்பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழகதேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்புஎன்பதை மாற்ற வேண்டும். ஏராளமானஉயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்குஎன்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்கவேண்டும்.

தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டுஉள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புஇன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கானபுதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.

முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'

பள்ளி கல்வியில், 272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்துவெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவுசெய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், 272 விரிவுரையாளர்பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, செப்., 17ல், தேர்வு நடந்தது. மதுரைதேர்வு மையம் ஒன்றில், தேர்வுஎழுதிய பெண் மூலம் வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது.தேர்வு முடிவை வெளியிடதாமதித்தால், இந்த பிரச்னையை மையப்படுத்தி, யாராவது வழக்கு தொடரலாம் என்பதால், தேர்வு முடிவை விரைந்து வெளியிட,

டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. தேர்வுக்கான உத்தேச விடை வெளியிடப்பட்டுஉள்ளது; தேர்வு எழுதியோர் தங்கள்கருத்துகளை, டி.ஆர்.பி.,க்கு அனுப்பலாம் எனவும்அறிவிக்கப்பட்டு உள்ளது

மத்திய அரசு பள்ளிகளில் 2,000 ஆசிரியர் இடம் காலி : தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்தியஅரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படஉள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்தவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவளமேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591
இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயாபள்ளிகள் செயல்படுகின்றன.
இங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்குமாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாகஉள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயாசமிதி வெளியிட்டு உள்ளது. இப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர்தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்திஅல்லது ஏதாவது ஒரு மாநிலமொழி தெரிந்திருக்க வேண்டும். கணினிகளை இயக்க, அடிப்படை திறன்கள்இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில்நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம்என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதியஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

காலி இடங்கள் விபரம் : இரண்டுஉதவி கமிஷனர்கள், 40 பள்ளி முதல்வர்கள், 880 முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்றமற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர்உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள்என, 2,072 காலியிடங்கள் உள்ளன.

அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு

அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய மக்கள் தொகை பதிவு ஆவணத்தில் இருந்து பெறப்படும் குடிமக்களின் பயோ-மெட்ரிக் தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு ஆதார் எண்களை ஒருங்கிணைத்து மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளாராக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை இந்திய பொது அடையாள எண் ஆணையகம் அங்கீகரித்துள்ளது.

குடிமக்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் சிறந்த சேவைகளை அளித்திட ஏதுவாக, ஆதார் பதிவுகளை மேற்கொள்ளவும், மாநில மக்கள் தொகை பதிவேட்டினை பராமரிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மாநிலம் முழுவதும் 60 நிரந்தர பதிவு மையங்கள் அமைக்கப்படும்.இந்த நிரந்தரப் பதிவு மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை பராமரிக்கும்.முதல் கட்டமாக இந்த நிரந்தர பதிவு மையங்கள், சென்னை மாநகராட்சி, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தாலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சென்னை நீங்கலாக இதர மாநகராட்சிகளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் நிறுவப்பட்டு ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.ஆதார் அடிப்படையிலான பல்வேறு வகையான அட்டைகள் வழங்கும் பணியும் இந்த மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

புதிய கட்டடங்கள்: தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் தொழில்முனைவோர் மையங்கள் ஏற்படுத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு கோவையில் உள்ள டைடல் பூங்காவில், வாடகைக் கட்டடத்தில் தொழில் முனைவோர் மையம் அமைக்கப்படும். இந்த மையத்துக்கு நாஸ்காம் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.மின் ஆளுமை இயக்குநரகம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியன சென்னை ஆழ்வார்பேட்டையிலும், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் எழும்பூர், நுங்கம்பாக்கத்திலும் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.இந்த நிறுவனங்களுக்கு கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்துஉள்ளது.
உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, பேராசிரியர் பணிக்கான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வு உட்பட, பல தேர்வுகளை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.'இது, கூடுதல் பணிச்சுமையாக உள்ளதால், நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் ஏற்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து, கடிதம் அனுப்பி உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வுகளை நடத்த, அடுத்த ஆண்டில், தனி ஆணையம் அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையைஅமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கமிட்டி பரிந்துரைப்படி, புதிய வரைவு கல்வி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி, ஜூனில் வெளியிட்டது.

அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்து கூற, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது; பல தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்டதால், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், nep.edu.@gov.in என்ற இ- மெயில் முகவரிக்கு, கருத்துக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

TRB EXAM:வினாத்தாள் 'லீக்' - பெண் மீது வழக்கு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான சம்பவத்தில், தேனியைச் சேர்ந்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்வு, செப்., 16ல், மதுரை உட்பட, ஐந்து மாவட்ட மையங்களில் நடந்தது. 
மதுரை தனியார் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய, தேனியைச் சேர்ந்த பெண், வினாத்தாள் பக்கங்களை மொபைலில் படம் எடுத்து, வாட்ஸ் ஆப்பில்அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு அறை கண்காணிப்பாளர் புகாரை அடுத்து, அப்பெண் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், போலீசார் நேற்று வழக்குபதிவு செய்தனர். மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில், அப்பெண்ணிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 
பேரிடர் மேலாண்மை குறித்து, அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;அதற்காக பள்ளிகளில், பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்த வேண்டும். அக்., 17 முதல், 26 வரை, பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்; இறுதியில், மாநில போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CPS MISSING CREDIT FORMAT - 2016 DOWNLOAD

அரசு பள்ளிகள், கல்லூரிகளில் WIFI - முதல்வர்ஜெயலலிதா

மாணவர்களுக்கு இணைய வசதி: மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக 50 பள்ளிகளில் ரூ.10 கோடியில் நிறுவப்படும்என்றும் இந்தச் சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 50 இடங்களில் கம்பியில்லாத இணைய வசதி (வைஃபை) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், அரசு சேவைகளை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் பெறுவதற்கான புதிய திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் களில் வைஃபை எனப்படும் கம்பியில்லாத இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்று சட்டப் பேரவைத் தேர்தலின்போது, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், 50 இடங்களில் அம்மா வைஃபை மண்டலம் ஏற்படுத்தி கட்டணமில்லாத இணைய வசதி ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.அம்மா இ-சேவை: தமிழக அரசின் சேவைகளை செல்லிடப்பேசி செயலியில் பெறும் வகையில், அம்மா இ-சேவை என்ற திட்டத்தைச் செயல்படுத்தவும், முதல் கட்டமாக 25 முக்கிய சேவைகள் அளிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

எல்கோ-சிறப்பு மண்டலம்:

 சென்னையைஅடுத்த சோழிங்கநல்லூரில் எல்கோ சிறப்புப் பொருளாதார மண்டலத்தை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிறுவியுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் ஏற்றுமதி மதிப்பு ரூ.16 ஆயிரத்து 536 கோடி ஆகும். இது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியில் 25 சதவீதமாகும்.சிறு-குறு தொழில்முனைவோர் தகவல் தொழில் நுட்பவியல்-அது சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க வழி செய்யப்படும். அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் எல்கோ சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் ரூ.80 கோடியில் கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

உத்தரவு : 
தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக பணியாற்றிய, கலெக்டரில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, மதிப்பூதியம் வழங்க, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, 21ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல்நடத்தும் அலுவலர்களான கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்.தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லாத, தேர்தல் சார்ந்த பிற பணிகளில் ஈடுபட்ட, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு, 22 ஆயிரம் ரூபாய். மேலும், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோ ருக்கு, 15 ஆயிரம் ரூபாய்; டேட்டா ஆபரேட்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, 6,000 ரூபாய்; கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் மே, 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு, அதன்படி, மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்துக்கு, 3.76 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்துக்கு, 48.36 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும், 2017 ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாவோரின் பெயர் சேர்ப்பதற்காக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கிறது. வாக்காளர்கள் வசதிக்காக, இரண்டு சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. 
அதன்படி, செப்., 11ல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது; ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாவது சிறப்பு முகாம், இன்று நடைபெற உள்ளது.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, சிறப்பு முகாம் நடைபெறும்; பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும், 2017 ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாவோரின் பெயர் சேர்ப்பதற்காக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கிறது. வாக்காளர்கள் வசதிக்காக, இரண்டு சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. 
அதன்படி, செப்., 11ல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது; ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாவது சிறப்பு முகாம், இன்று நடைபெற உள்ளது.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, சிறப்பு முகாம் நடைபெறும்; பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை

அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது. வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம்.
அந்த வகையில், வரும் அக்., 8ம் தேதி, வங்கிகளுக்கு விடுமுறை; மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. 10ல்,ஆயுத பூஜை; 11ல், விஜயதசமி; 12ல், மொகரம் வருகிறது. அதனால், அக்., 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக இயங்காது.

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு, கிடுக்கிப்பிடி விதிமுறைகள் கொண்டு வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 5,500 தொடக்கப் பள்ளிகள்; 3,700 மெட்ரிக்; 5,000 மழலையர்; 660 சி.பி.எஸ்.இ., உட்பட மொத்தம், 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. 
இவற்றில் படிக்கும், 50 லட்சம் பேரில் பெரும்பாலான மாணவர்களை, தனியார் வாடகை வாகனங்களே, பள்ளிக்கு அழைத்து வருகின்றன.இதற்காக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேன் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. காவிரி பிரச்னைக்காக, செப்., 16ல் நடந்த வேலை நிறுத்தத்தில், தனியார் பள்ளி வாகன சங்கத்தினர் பங்கேற்றனர்.அதனால், தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் பள்ளி வாகனங்களை கட்டுப்படுத்த, கல்வி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 போலீசாருடன் இணைந்து, கண்காணிப்பு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: தனியார் பள்ளி மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களை, பள்ளி வாகனங்கள் எனகூற முடியாது; அவை வாடகை வாகனங்கள். அரசு உருவாக்கிய, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகளை, இந்த வாகனங்கள் பின்பற்றவில்லை.எனவே, இந்த வாகனங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய அவசியம் வந்துள்ளது.அதன்படி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பொருட்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வேண்டும். அவசர வழி, 'சீட் பெல்ட்' அமைக்க வேண்டும். பள்ளி வேலை நாட்களில் கண்டிப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். மஞ்சள் வண்ணம் பூச வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தனியார் வாகனங்களுக்கு, பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தி, தடையில்லா சான்றிதழ் பெற உத்தரவிட வேண்டும்.

இந்த சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளே, பாதுகாப்பு விதிகளுக்கு பொறுப்பு என உத்தரவிட வேண்டும்.எஸ்.அருமைநாதன் , மாநில தலைவர், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம்.பள்ளி வாகன விதிகளை அப்படியே, தனியார் வாகனங்களுக்கும் கொண்டு வர வேண்டும். இதேபோல், இலவச பஸ் பாஸ் வழங்கும் தமிழக அரசு, மற்ற மாநிலங்களை போல், பாதுகாப்பு விதிகளை கொண்ட வாகனங்களை மட்டுமே, மாணவர்களுக்காக இயக்க வேண்டும்.கே.ஆர்.நந்தகுமார், பொதுச்செயலர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகள் சங்கம்.மஞ்சள் வண்ணத்தை தவிர, மற்ற விதிகளை பின்பற்றி வருகிறோம். ஆட்டோக்களுக்கு, அரசே இன்னும் விதிகளை ஏற்படுத்தவில்லை. பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களை போல், விதிகளை கொண்டு வந்தாலும், அதை மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பின்பற்றதயாராக உள்ளோம்.

வி.வைரசேகர், தமிழ்நாடு தனியார் பள்ளி வாகன கூட்டமைப்புநலச் சங்கம்

புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை.

புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.மதுரையில், அவர் அளித்த பேட்டி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பயனும் இல்லாத, புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும், இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒரு பணியாளர், மூன்று பேரின் பணிகளை செய்யும் நிலை உள்ளது. தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில், பணி நியமனங்களை தவிர்த்து, காலமுறை சம்பளத்தில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அனைத்து துறை பணியாளர்களுடன் ஆலோசித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.

மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. 
இதற்கு, மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு, அறிவியல் திட்டங்கள் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான பதிவு, ஆக., 25ல் துவங்கியது.

வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே திட்டங்கள் ஏற்கப்படும். தமிழகத்தின்பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இதுகுறித்த அறிவிப்பை, மாவட்டகல்வித் துறை வழங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தல், திட்டங்களை தேர்வு செய்தல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கோ, பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கோ, உரிய வழிகாட்டுதலும் இல்லை; பயிற்சியும் இல்லை. தொடர்ச்சியாக, இரு ஆண்டுகள், அறிவியல் கண்காட்சிக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், மீண்டும் பதிய முடியவில்லை. இதுகுறித்து, கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கும், பலர் புகார் செய்தும், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால், விருதுக்கான பதிவில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்னணியிலும், அரசு பள்ளிகள் பின்தங்கியும் உள்ளன.

டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:
l மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்மாணவர்கள், காய்ச்சி வடி கட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும்காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.

இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான்.

ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வுபெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.
இங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயா சமிதி வெளியிட்டு உள்ளது.

இப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்தி அல்லது ஏதாவது ஒரு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினிகளை இயக்க, அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில் நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலி இடங்கள் விபரம் : இரண்டு உதவி கமிஷனர்கள், 40 பள்ளிமுதல்வர்கள், 880 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்ற மற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர் உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள் என, 2,072 காலியிடங்கள் உள்ளன.