யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/9/16

முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'

பள்ளி கல்வியில், 272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, தேர்வு முடிவை விரைந்துவெளியிட, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவுசெய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், 272 விரிவுரையாளர்பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, செப்., 17ல், தேர்வு நடந்தது. மதுரைதேர்வு மையம் ஒன்றில், தேர்வுஎழுதிய பெண் மூலம் வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது.தேர்வு முடிவை வெளியிடதாமதித்தால், இந்த பிரச்னையை மையப்படுத்தி, யாராவது வழக்கு தொடரலாம் என்பதால், தேர்வு முடிவை விரைந்து வெளியிட,

டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. தேர்வுக்கான உத்தேச விடை வெளியிடப்பட்டுஉள்ளது; தேர்வு எழுதியோர் தங்கள்கருத்துகளை, டி.ஆர்.பி.,க்கு அனுப்பலாம் எனவும்அறிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக