யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/18

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளிக்கல்வி துறை சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டி.ஜெகநாதன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் எஸ்.ஜெயந்தி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்கள்.

அதேபோல், திருச்செந்தூர் நூலகத்தின் நூலகர் மாதவன் உள்பட 33 பேருக்கு சிறந்த நூலகர் விருதும், நூலக விழிப்புணர்வை ஏற்படுத்திய 31 மாவட்ட வாசகர் வட்ட தலைவர்களுக்கு நூலக ஆர்வலர் விருதும், மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், அதிக புரவலர்கள் மற்றும் அதிக நன்கொடைகள் பெற்ற 12 நூலகங்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் ஒப்புதலோடு அடுத்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 2 வெவ்வேறு விதமான பள்ளி சீருடைகளை அறிமுகப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும். வருகிற டிசம்பர் மாத இறுதியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும்.

அதேபோல், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றும்போது வழக்கு போடுகிறார்கள். அது முடிய 6 மாத காலம் ஆகிவிடுகிறது. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வகுப்பு அறைகளும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி கொடுக்கப்பட இருக்கிறது.

அறிவியல் வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனை அறிந்து கொள்ள ரூ.20 லட்சம் செலவில் 671 பள்ளிகளுக்கு ‘அட்டல் டிங்கர் லேப்’ டிசம்பர் மாதம் இறுதிக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘பயோ மெட்ரிக்’ திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமல்படுத்துகிறது. அதை அமல்படுத்த அரசிடம் நிதி இல்லை என்றாலும், தனியார் நிறுவனம் மூலம் அதை செயல்படுத்த இருக்கிறோம். ஆண்டுக்கு ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை தேர்வு செய்து மேலைநாடுகளின் அறிவியல், பண்பாடு, கலாசாரத்தை புரிந்து கொள்ள அங்கு அனுப்ப இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து விழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பாசிரியர் தேர்வு தொடர்பாக தமிழ் வழி கல்வியில் படித்த ஆசிரியர்கள், ராணுவத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், விதவை பெண்களாக தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம் சான்றிதழ் பெற்று அனுப்ப 4 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அதை அனுப்பவில்லை என்றால் பொதுப்பிரிவில் இருக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஆசிரியர் தேர்வுகள் (டி.ஆர்.பி.), பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நிறைய இடங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது. முறையான பயிற்சி வழங்காதது, அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சரளமாக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர அடுத்த வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்

Flash News : கனமழை - நாளை ( 16.11.2018 ) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கஜா புயல் தொடர் கனமழை காரணமாக,மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


* தஞ்சாவூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* திருவாரூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* ராமநாதபுரம் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* நாகை மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* கடலூர் மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* புதுக்கோட்டை  மாவட்டம் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

* புதுச்சேரி , காரைக்கால் மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இனி குறைதீர் முகாம் கட்டாயம் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு :

மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, ஆசிரியர்களுக்கான குறைதீர் முகாம் நடத்தி, புகார்களை கேட்டறிய வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.கட்டாயம்பள்ளிக்கல்வித்துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணப்பலன் மற்றும் பதவி உயர்வில் முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளை, நிர்வாக மட்டத்திலே சீர் செய்துவிடலாம். இதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால், நீதிமன்றத்தை நாடுவதே இறுதி தீர்வாகிவிட்டது.தேங்கிய வழக்குகள் மீது, ஒத்துழைப்பு வழங்குவதோடு, ஆசிரியர்களின் புகார்கள் கேட்டறியவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.இதற்காக ஏற்கனவே அமலில் இருந்த குறைதீர் முகாம், இனி கட்டாயம் நடத்த வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.
அவசியம்பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி, பண பலன்கள் பெறுவதில், உள்ள சிரமங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும், மாதந்தோறும் முதல், சனிக்கிழமை, குறைதீர் முகாம் நடத்த வேண்டும்.இதில், பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்து, இயக்குனரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இல்லாவிடிலும், தகவல் அளிப்பது அவசியம்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

குழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திய மாணவர்கள்!

கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், அனைவரையும் கவரும் விதமாக புதுமையான முறையில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார்.

பழங்குடியின மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்க்கும் முகமாக, 8-ஆம் வகுப்பு மாணவர் பரத் ஒரு நாள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர ஆசிரியர்கள், பணியாளர்கள் அவர் முன்பு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து, ஆசிரியர்களை வகுப்பறையில் அமரவைத்து மாணவர்கள் பாடம் நடத்தினர். மாணவர்களின் இருக்கைகளில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடங்களைக் கவனித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்ததாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
ஆசிரியர்களை மாணவர்களின் இருக்கையில் அமரவைத்து பாடம் நடத்தும் மாணவி அஜிதா

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கூடுதல் மதிப்பெண்கள்: குறைகிறதா கல்வியின் தரம்?

பொதுத் தேர்வு முடிவுகளில் மாநிலத்தின் முதல் 10 இடங்களைப் பிடிப்பதற்காக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு சில பள்ளிகளில் சராசரி தேர்ச்சியை அதிகரித்துக்காட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண்களை கூடுதலாக அளித்து மதிப்பெண் பட்டியலை கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவதால் கல்வியின் தரம் குறைக்கப்படுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாநில கல்வித் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வி இயக்குநரகம் மூலம் எடுத்து வருகின்றனர். இதனால் தேர்ச்சி சதவிகிதம் குறைந்த மாவட்டங்களான வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ளுதல், ஆசிரியர்களின் கூட்டத்தைக் கூட்டி மாத அளவிலான தரமேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் முதல் முதலாக பொதுத் தேர்வு மாணவர்களுக்காக காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 10-ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும், 10-ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும் அவர்களது பள்ளி மாணவ, மாணவிகளின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களுடன் கூட்டத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தனியே மூத்த தலைமை ஆசிரியர்கள் மூவரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் ஏதாவது ஒரு விடைத்தாளை எடுத்து திருத்தியது சரியான முறையில் உள்ளதா?, விடைக்கேற்ற மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதே முறை வேலூர் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் வேலூர் கல்வி மாவட்டத்துக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கூட்டம் வேலூரில் நடந்தபோது ஒரு பள்ளி ஆசிரியர், மாணவர் எடுத்த மதிப்பெண்களைவிட கூடுதலாக மதிப்பெண்கள் போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட ஆசிரியர் கண்டிக்கப்பட்டார். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இக்கூட்டம் அரக்கோணம் கல்வி மாவட்ட அளவில் அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திருமால்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தமிழ் விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் அவை மாணவர்களாலேயே 2 விதமான பேனாக்களால் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட ஆசிரியர், மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால், இது கல்வி அலுவலர்களுக்கு தெரியவந்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற பயத்தில் தேர்வு தினத்துக்குப் பிறகு ஒரு நாளில் தன் வகுப்பில் இருந்த 20 மாணவர்களிடம் வெள்ளைத் தாளை அளித்து சரியான பதிலை எழுதித் தருமாறு வாங்கி அதை காலாண்டுத் தேர்வு விடைத்தாளோடு சேர்த்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் இந்த தவறு தெரியவந்ததை அடுத்து குறிப்பிட்ட ஆசிரியரைக் கண்டித்த முதன்மைக் கல்வி அலுவலர், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்ற தவறு ஏதும் வேலூர் மாவட்டத்தில் நடக்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.

மேலும் அரக்கோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பேசும்போது கற்பித்தலின் திறனை ஆசிரியர்கள் அதிகரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் வந்துவிட்டது என பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார்.

தற்போது இதுபோன்று தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க மதிப்பெண்களை கூடுதலாக ஆசிரியர்கள் அளிக்கும்போது தேர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வேண்டுமானால் நிறைவேறலாம், ஆனால் மாணவர்களின் கல்வித் தரம் குறையும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

பொதுத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும்போது அம்மையத்துக்கு வரும் கல்வி அலுவலர்கள், மதிப்பெண்கள் குறைவாக பெற்றுள்ள மாணவர்களுக்கு சற்று கூடுதலாகப் போட்டு அவர்களை தேர்ச்சி அடைய செய்யுங்கள். மாவட்டத்தின், மாநிலத்தின் தேர்ச்சியை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம் நமக்குள்ளது என தெரிவித்தார். அப்போது நாங்கள் அவர்கள் கூறியபடி அதைச் செய்தோம். இப்போது ஆசிரியர்கள் அவர்களாகவே அதைச் செய்துள்ளனர். இதில் தவறு எங்கே இருக்கிறது என்றார்.

ஆசிரியர்களும் அலுவலர்களும் தவறு எங்கே இருக்கிறது எனப்  பார்க்காமல் மாவட்டத்தின் பெயரை, மாநிலத்தின் பெயரை உயர்த்திக்காட்டுவதாக கருதி மாணவர்களின் கல்வித் தரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது.

எனவே கல்வித் துறை அலுவலர்களும், ஆசிரியர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மாணவ, மாணவிகளுக்கு நன்முறையில் கற்பித்து அவர்களின் கற்றல் திறனை மேன்மையடைய செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் சிறப்பாசிரியர்களின் சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்

சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்தோம். 4 வாரம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள், ராணுவத்தில் பணியாற்றியவர்கள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு நான்கு வாரத்தில் தாசில்தார், ஆர்டிஓவிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வழங்கவில்லை என்றால் பொதுப்பிரிவில் வைத்து நியமனங்கள்  வழங்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

அறிவியல்-அறிவோம்: ஆபத்தான அழகுசாதன பொருட்கள்

ஆபத்தான அழகுசாதன பொருட்கள்.

#அறிவியல்-அறிவோம்
(சீ.ஹரிநாராயணன் GHSS தச்சம்பட்டு)

இந்தியாவில் ஆண்டுக்கு 220 கோடிகள் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்கள் ஆண்டுக்கு 15% விற்பனை வளர்ச்சி பெற்று, பெண்களை 'நடமாடும் அழகு சாதனப் பெட்டகமாக' மாற்றி வருகின்றன.

இயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே ஆபத்தாக விளைகின்றது.


கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு பயன்படுத்தப்படும் நகப்பூச்சுகள் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷாம்பு, ஸ்ப்ரே:

 இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வர வேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றது.
அதில் சோடியம் சல்பேட், டெட்ரா சோடியம், பாரோபிளின், கிளைசால் போன்றவை ஆபத்தானவை என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயனங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயனங்கள் மிகவும் ஆபத்தானவை.

அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹோர்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

கண் அழகு சாதனங்கள்:

கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம்.
இது புற்றுநோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

கன்னக் கதுப்பு:

 கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எத்தில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

முக அழகுப் பொருட்கள்:

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில் மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

வாசனை திரவியங்கள்:

வாசனை திரவியங்களில்  15 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.
இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது, தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.

உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹோர்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள்:

 நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

மாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகம் :

மாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. அனிமீயா குறைபாடு மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை  பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாராத் துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க   அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 280 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் பெரிய ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும். இதற்காக பல மாதங்கள் ஆகலாம். எனவேதான் மாணவர்களிடம் உள்ள ஊட்டச் சத்து குறைப்பாட்டை மாணவர்களை வைத்தே கண்டறியும் முறையானது பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 8 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். ஆசிரியர்கள் இந்த குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.  இதனைத் ெதாடர்ந்து அந்த மாணவர்களின் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது என்பதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். மாணவர்களின் அளிக்கும் தகவல்களை பொறுத்து ஆசிரியர்கள் அது எந்த மாதிரியான பிரச்னை எண்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு   அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

கணக்கெடுப்பு பணி நிறைவு அரசு பள்ளிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு :

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இனி பராமரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், இந்தாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.


இன்று(15ம் தேதி) வீடியோ கான்பரன்ஸ் மூலம் பள்ளிகல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடுகின்றனர். தற்போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், தினமும் காலை 9.15க்கு துவங்கி மாலை 4.15க்கு முடிவடைகிறது. பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி துவங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக, தலைமை ஆசிரியர் அறையில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறையாக இருந்து வருகிறது.

இது போல மதியமும் பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவேண்டும். குறித்த நேரத்தில் வரமுடியாத ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை சரி கட்டி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர். பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்தால், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையில் சிக்கல் ஏற்படும்.

நீதிக்கதை



ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

 ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

 நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.

 நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

 “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.

 அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து

உலகம் புகழும்
பெனிசிலின்
கண்டுபிடித்த
 *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்* ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது

 பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

 நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
வாழ்க்கையில்

இனி யாரும் தப்பமுடியாது.! வாட்ஸ் அப் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

இன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாகவே வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.


குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் வதந்திகளால், சில அப்பாவிகள் பலியாகினர். இதையடுத்து, மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில், தவறான தகவல் அதிகப்படியாக பரவாமல் இருக்க, ஒருவர் ஒரே நேரத்தில் வாட்சப்பில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்று வாட்சப் நிறுவனம் அறிவித்தது.

மேலும், வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை தெரிவிக்கையில், ''வாட்சப்பில் வதந்தி மற்றும் தவறான செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி வேண்டும் என வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக அவர் தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின், பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த அணைத்து தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளதாக'' தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் பரவும் பொய் செய்திகளை களையெடுக்க, உலகம் முழுவதும் 20 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ''வாட் அப்பில் பொய் செய்திகள் எவ்வாறு பரவுகிறது என்றும், அதனை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்தியய உட்பட உலகம் முழுவதும் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்திய நாட்டை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள்'' என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது