யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/10/17

யூனியன் வங்கியில் அதிகாரி வேலை: பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

                                             

9 மாதமாக என்ன செஞ்சீங்க..? சூடு பிடிக்கிறது சேகர் ரெட்டி வழக்கு..! உயர்நீதிமன்றம் அதிரடி.!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையையொட்டி மணல் ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான 
வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. இதில் புதிய இரண்டாயிரம் நோட்டுகளும் ஏராளமாக பிடிபட்டன. இதன் மீதான விசாரணையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்  அடைக்கப்பட்டார். பின்னர் உத்திரவாதம் அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார் சேகர் ரெட்டி.

பின்னர் இவர் குறித்த இந்த வழக்கில் தொய்வு காணப் பட்டது.இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக  சேகர் ரெட்டி மீதான வழக்கில் சிபிஐ எந்த நடவடிக்கை எடுத்தது என சென்னை உயர்நீதிமன்றம்  சிபிஐ- கு கேள்வி எழுப்பியுள்ளது.

  
சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக கடந்த ஜனவரி மாதம் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போது கடந்த 9 மாதங்களாக இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் இது குறித்த வழக்கு விசாரணை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

SSTA -FLASH 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை!!!

                                                

இந்திய குடியுரிமை பணியில் சேர்வதற்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்வதற்கு மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய குடிமை பணிகளுக்கான பயிற்சி நிலையம் மூலம் அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுமதி கோரும் விண்ணப்ப படிவம்!!

                                                         

டெங்கு: மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை!!!

முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் 
என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதற்கு இதுவரை 85 பேர் பலியாகி உள்ளனர். இந்தத் தகவலை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில், 300-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று(அக்டோபர் 08) மாலை ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பெரிதாகப் பரவவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட ஒருசில இடங்களில் மட்டுமே டெங்கு உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கை வசதி, ரத்த பரிசோதனை செய்ய இயலாத தனியார் மருத்துவமனைகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம்.

இது தொடர்பாக இந்திய மருத்துவ கழகத்திடமும் கோரிக்கை வைத்தோம். இதை ஏற்றுக் கொண்டு அவர்களும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளோம். இது வரை 4,716 பேர் இதன் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர். அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மற்ற துறையினர் செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடப்பாண்டில் 770 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலி மருத்துவர்கள் எளிதில் தப்பிக்காத வகையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. போலி மருத்துவர்களைக் கண்டறிவதற்காக மருத்துவ சேவைப்பணிகள் இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்

310 தொலை தூர கல்வி நிலையங்கள் மூடல்!!!

வெளி மாநிலங்களில் செயல்படும் 310 தொலை தூர கல்வி நிலையங்கள்
மூடப்படும் என நேற்று முன்தினம் (அக்டோபர் 7) அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர் டாக்டர் ஏ. கணபதி, “மத்திய அரசின் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்' சார்பில் (institutes of eminence) சிறந்த முறையில் செயல்படும் பல்கலைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், பாரதியார் பல்கலைக்கழகம் நிதியுதவி பெறும் தகுதியைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தில், பதிவுக் கட்டணமாக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அந்நிறுவனம், பாரதியார் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து விட்டால் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் வழங்கும். இதன் மூலம் உள் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்கலை தேவைகளை மேம்படுத்த முடியும். இங்குள்ள கல்லூரி ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று, சிறப்பு பயிற்சி பெறலாம். மேலும், வெளிநாடுகளில் இருந்து நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்களை வரவழைத்து, கல்வி கற்பிக்க செய்யலாம். தற்போது பல்கலையில் 150 கோடி ரூபாய் அளவுக்கு, ஓய்வூதிய நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஓய்வூதிய பண பலன் சார்ந்த பிரச்சினை இருக்காது.

2015 ஆம் ஆண்டு வரை, பலகலை மானிய குழுவான யூஜிசி அங்கீகாரத்துடன் தொலை தூர கல்வியை நடத்தி வருகிறோம். எனினும், உயர்கல்வி துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, வெளி மாநிலங்களில் செயல்படும், 310 தொலை தூர கல்வி நிலையங்களை மூட முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்குள் செயல்படும் 150 தொலை தூர கல்வி நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமியை முந்த ஓபிஎஸ் போட்ட ரகசிய கூட்டம்???

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு
வருகிறது. இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நவம்பர் 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை துணை முதல்வர் ஓபிஎஸ் பார்வையிட்டு வருகிறார். 

தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்ட ஓபிஎஸ் மாவட்ட அளவில் உள்ள சுயஉதவி குழுக்கள் 20 ஆயிரம் பேரை அழைத்து வரவேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர் கழகம் மற்றும் கிளை பொறுப்பாளர்களை பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்து ஓபிஎஸ் ரகசிய கூட்டம் போட்டதாக தகவல்கள் வருகின்றன.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அந்தந்த பகுதியில் இருந்து அதிகமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களையும் அழைத்து வரச்சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ். குறிப்பாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய கூட்டத்தை விட அதிகமாக கூட்டத்தை தேனியில் கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள்: சந்திரசேகர ராவ்!

                                               
சமீபத்தில் நடந்த தெலுங்கானாவில் சிங்கரனி கொலிரியஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) அமைப்பின் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தெலுங்கானா போகு கானி கர்மிகா சங்கம் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விழாவில் 
தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசினார்.
அப்போது அவர், எஸ்சிசிஎல்.,ல் லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள். யாரும் லஞ்சம் தராதீர்கள். ஒருவேளை எந்த அதிகாரியாவது, விடுமுறை, மருத்துவ பலன், வீடு கட்டுவதற்கான கடன் பெறுவது உள்ளிட்ட உங்களின் தொழிலாளர் பயன்களை பெற லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள். லஞ்சம் கேட்பவர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள்.
தகுதி உடைய தொழிலாளர்கள் அனைவருக்கும் வட்டியில்லாத வீட்டு கடன் வழங்கப்படும். வாக்குதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். எஸ்சிசிஎல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஐஐடி.,க்கள் மற்றும் ஐஐஎம்.,களில் படிக்க சீட் கிடைத்தால் அதற்கான கல்வி செலவை மாநில அரசே ஏற்கும்.
உங்களின் பிரச்னைகளை நேரடியாக கண்டிட விரைவில் சிங்கரனி யாத்திரை மேற்கொள்ள உள்ளேன். நீங்கள் மக்களுக்கு எப்படி மருத்துவ சேவை வழங்குகிறீர்கள் என்பதை கண்டறிய சிங்கரனி மருத்துவனையில் நான் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளேன் என்றார்

பிஇ படித்தவர்களுக்கு மின் துறையில் பணியிடங்கள்!! (Last date 10.10.2017)

NSPCL நிறுவனம் அமைக்கும் மின் நிலையங்களுக்கு எலக்ட்ரிக்கல், 
மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன்,  எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பி.இ., படித்தவர்களை தேர்தெடுக்கிறது. *

*பணி விவரம்: -*

Engineering Executive Trainees.

1. Electrical:

4 இடங்கள் (ஓபிசி-3, எஸ்டி-1).

*தகுதி: -*

Electrical/Electrical & Electronics/Electrical, Instrumentation & Control/Power Systems & High Voltage/Power Electronics/Power Engineering ஆகிய பாடங்களில் பி.இ.

2. Mechanical:

7 இடங்கள் (எஸ்சி-5, எஸ்டி-1, ஓபிசி-1).

*தகுதி: -*

Mechanical Engg. (Mechanical/Production/Industrial Engg.,/Production & Industrial Engg./Thermal/Mechanical & Automation/Power Engineering) ஆகிய பாடங்களில் பி.இ.,

3. Instrumentation:

2 இடங்கள் (எஸ்சி-1, ஓபிசி-1).

*தகுதி: -*

Instrumentation Engg.,/Electronics & Instrumentation Engg/Instrumentation & Control Engg., ஆகிய பாடங்களில் பி.இ.,

4. Electronics Engineering:

2 இடங்கள் (ஓபிசி):

*தகுதி: -*

Electronics/Electronics & Telecommunication/Electronics & Power/Power Electronics/Electronics  & Communication/Electrical & Electronics ஆகிய பாடங்களில் பி.இ., விண்ணப்பதாரர்கள் கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.150/-. (எஸ்சி.,/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது).

விண்ணப்பதாரர்கள் www.nspcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2017.*

அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதமா ??

Flash News : வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது -  7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக ஆலோசனை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.


7வதுஊதிய குழு பரிந்துரைகள் மற்றும் மழை காலங்களில் எடுக்க வேண்டிய ஏற்பாடுகள் பற்றி அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டிய உள்ள நிலையில் அதனை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரி பணியிடம்!!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை
மற்றும் எழுத்தறிவித்தல் துறையின் கீழ் இயங்கும் தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தில் அதிகாரிகள், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

*பணி: -*

1. Director: (Academic) 1 இடம் (பொது)
2. Joint Director: (Media): 1 இடம் (பொது)
3. Deputy Director (Administration): 1 இடம் (பொது)
4. Deputy Director (Academic): 1 இடம் (பொது)
5. Deputy Director (Accounts): 1 இடம் (பொது)
6. Training Officer (Humanities/Social Science): 1 இடம் (ஓபிசி)
7. Section Officer: 7 இடங்கள் (பொது)
8. Assistant Audit Officer: 1 இடம் (பொது)
9. Stenographer: 1 இடம் (பொது).

விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.nios.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

*விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2017*

உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்ற அவமதிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட
வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்.09) உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகக் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் அமல்படுத்தவில்லை. எனவே, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 09) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், குறித்த காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டும் அதைச் செய்யாமல் இருப்பதை நீதிமன்ற அவமதிப்பாகத்தான் கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.

மனுதாரரின் புகார் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலர் டி.ஆர்.ராஜசேகர் ஆகியோர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இருவகையான இருள்

குறையும் ரயில் கட்டணம்!

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவின்போது வசூலிக்கப்படும்
வணிகர் தள்ளுபடி விலையை (MDR) திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்து வருகிறது. இதன் மூலம், ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்குக் கட்டணம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்டிசிடி இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு வணிகர் தள்ளுபடி விலைக் கட்டணம் பொருந்தும். டெபிட் / கிரெடிட் கார்டு சேவைகளை வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இந்தக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். ரயில்வே அமைச்சர் தெரிவித்தபடி, இந்த எம்.டி.ஆர்., பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன்30 ஆம் தேதியுடன் முடிய இருந்த சேவைக் கட்டண ரத்து செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இதனை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ. 20 முதல் 40 வரை சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவையை அளிப்பதற்காக வங்கிகள் பெறும் கட்டணத்தைத் திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்துவருகிறது. இதனால், ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் தானாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., வருவாயில் சுமார் 33% ஆன்லைன் முன்பதிவுகளிலிருந்து வரும் சேவைக் கட்டணமாகும். கடந்த நிதியாண்டின் வருவாயின் படி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் மொத்த வருவாய் ரூ.1,500 கோடியில் ரூ. 540 கோடி டிக்கெட் முன்பதிவுகள் மூலம் வந்தது என மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடிக்கு ஆப்பு??? ஆளுநர் வைக்கும் செக்!!!

                                                       
தமிழக காவல்துறையை நவீனமயமாக்க வாக்கி டாக்கி வாங்கியதில்
ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராக இந்த ஊழல் தற்போது பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


பொதுவாக வாக்கி டாக்கி வாங்குவதற்கான டெண்டர் ஒதுக்கும்போது பல நிறுவனங்கள் பங்கேற்கும். அதில், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிடும் போது ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறை ரத்து செய்யப்படும். இதுதான் காலம் காலமாக உள்ள நடைமுறை.

ஆனால், 2017-2018-ஆம் ஆண்டுக்கான வாக்கி டாக்கி வாங்கும் ஒப்பந்த புள்ளி கோரலில் மோடோரோலோ சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. அதற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.
உண்மையில், அந்த திட்டத்திற்கு ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிக பட்சமாக ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, வெறும் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய விதிமீறலாகும்.
ஒரு வாக்கி டாக்கியின் விலை ரூ.4700 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டு பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியிருந்தார். ஒப்பந்த புள்ளி கோரலில் ஒரே ஒரு நிறுவனமே, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ள நிரஞ்சன் மார்டி, வாக்கி டாக்கியின் தொழில்நுட்ப மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை, வாக்கி டாக்கி வழங்கும் நிறுவனத்திற்கு அளித்த ஒப்பந்த ஏற்பு ஆணை, கொள்முதல் ஆணை ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஊழலை திமுக கையிலெடுத்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதன் பேரில் ஆளுநர் தலைமைச்செயலருக்கு உத்தரவிட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து தமிழகத்தில் பாஜக நல்ல பெயரை எடுக்க ஆளுநரை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக புதிதாக வந்துள்ள ஆளுநர் வாக்கி டாக்கி ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என ஆளுநர் தலைமைச் செயலரிடம் கேட்கலாம் எனவும், புதிய ஆளுநர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க இருப்பதாக பேசப்படுகிறது.

100ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்கள்

6B43~1கணினி என்றால் என்ன?

Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet

MOBILE

அறிந்துகொள்ளுவேம்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆசிரியர்களை பற்றி தவறாகவோ

ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி பராமரிப்பு

ஆன்மீகத்தில்பெண்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்

இஞ்சிப் பால்