யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/10/17

9 மாதமாக என்ன செஞ்சீங்க..? சூடு பிடிக்கிறது சேகர் ரெட்டி வழக்கு..! உயர்நீதிமன்றம் அதிரடி.!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையையொட்டி மணல் ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான 
வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. இதில் புதிய இரண்டாயிரம் நோட்டுகளும் ஏராளமாக பிடிபட்டன. இதன் மீதான விசாரணையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்  அடைக்கப்பட்டார். பின்னர் உத்திரவாதம் அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார் சேகர் ரெட்டி.

பின்னர் இவர் குறித்த இந்த வழக்கில் தொய்வு காணப் பட்டது.இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக  சேகர் ரெட்டி மீதான வழக்கில் சிபிஐ எந்த நடவடிக்கை எடுத்தது என சென்னை உயர்நீதிமன்றம்  சிபிஐ- கு கேள்வி எழுப்பியுள்ளது.

  
சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக கடந்த ஜனவரி மாதம் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போது கடந்த 9 மாதங்களாக இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் இது குறித்த வழக்கு விசாரணை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக