யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/6/18

ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
திறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் பல மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக ஆசிரியர்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றார்

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தெரிவித்தார்.பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப் பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கூறிய தாவது:


 இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் 14 வகையான இலவசப் பொருட் கள் குறித்த விழிப்புணர்வு துண் டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5,600 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங் கில வழி கல்விக்காகத்தான் தனியார் பள்ளிகளை பொதுமக்கள் நாடுகின்றனர்.


எனவே, சமூக நலத்துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

இனி காகித சம்பள பட்டியல் தேவையில்லை தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் ஆன்லைன் மயமாகும் கருவூலங்கள்

அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை 1962ல் உருவாக்கப்பட்டது.

 ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தின் பகுதியாக இருந்த இத்துறை, நிதித்துறையின் கீழ் தனி இயக்குனரகமாக, அனைத்து மாவட்டம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.


 கருவூலத்தின் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 இதனால் அரசு துறைகளில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் அந்தந்தந்த அலுவலக ஊழியர்களின் சம்பளப் பட்டியலை மாவட்ட கருவூலத்திற்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும்.


 இதில் ஊழியர்களின் வருகை பதிவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு காகிதப்பட்டியல் தயாரிக்க வேண்டும். இந்த பட்டியலை மாவட்ட கருவூல அதிகாரிகள் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்நிலையில், மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மை திட்டம் மூலம் கருவூலம் கணக்குத்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


 இதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.

 எனவே அரசு துறைகளில் அந்தந்த பிரிவுகளில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் காகித சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை.

 இதற்கான பயிற்சி மாவட்டம்தோறும் நடந்து வருகிறது. இதன் பின்னர் வரும் அக்டோபர் முதல் தமிழகத்தில் உள்ள கருவூலம் அனைத்தும் ஆன்லைன் மயமாகிறது.

 மேலும் அரசுத்துறை ஊழியர்களின் பணி வரலாறு முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSA - ONE DAY "TABLET USING" TRAINING FOR BT TEACHERS - SPD PROC

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை 26ல் கவுன்சிலிங் துவக்கம்

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 26ல் துவங்குகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களும், காரைக்கால் கிளையில்,
50 இடங்கள் என மொத்தம், 200 இடங்களுக்கு, 2018- - 19ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, கடந்த ஜூன் 3ம் தேதி, நாடு முழுவதும், 291 மையங்களில் நடத்தப்பட்டது. இத்தேர்வில், 1.56 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, கடந்த 8ம் தேதி, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தரவரிசை அடிப்படையில், இடஒதுக்கீடு பிரிவின் தகுதிபட்டியலும் வெளியிடப்பட்டது. வரும், 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கலந்தாய்வு: முதல் நாளில் பொதுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள், புதுச்சேரி மாற்றுத் திறனாளி பிரிவு இட ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 27ல், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும், 28ல், புதுச்சேரி பொதுப் பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ., பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. ஜிப்மர் மருத்துவக் குழுவினர் மூலம், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள் மற்றும் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகளின் உடல் தகுதி குறித்து, மருத்துவ ஆய்வு செய்யப்படும். சான்றிதழ்கள் அவசியம்: ஜிப்மர் கல்வி வளாகத்தின் தேர்வுப் பிரிவில், சான்றிதழ் மற்றும் பயோமெட்ரிக்ஸ் சரிபார்த்தல் நடைபெறும். மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போது, தங்களின் அசல் சான்றிதழ் , போனபைட் சான்றிதழ் ( கல்வி நிறுவனத்தின் மூலம் கையொப்பம் இடப்பட்டது), சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட குடியிருப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, நுழைவுச்சீட்டுடன், அனைத்து அசல் மற்றும் நகல் படிவத்தை எடுத்து வர வேண்டும என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தை தேர்வு செய்த பின், எந்த சூழ்நிலையிலும் வளாகத்தை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. கலந்தாய்வின்போது, ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் மாற்றம் செய்வது அனுமதிக்கப்படாது. ஆதாரமற்ற சான்றிதழை கொண்டுவரும் மாணவர்கள் கலந்தாய்வில் இருந்து நிராகரிக்கப்படுவர். கலந்தாய்வு நடந்த அன்று மதியம், மாணவர்கள் தங்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என, ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு : 'ரிசல்ட்' தேதியும் முன்கூட்டியே வெளியீடு

அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், 
செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.கடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளையும், அவற்றின் முடிவுகள் வெளியாகும் தேதிகளையும், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, தயார் செய்துள்ளார். அதை, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.* அதன்படி, பிளஸ் 2 தேர்வு, 2019 மார்ச், 1ல் துவங்கி, 19ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், ஏப்., 19ல் வெளியாகின்றன. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6ல் துவங்கி, 22ல் முடிகிறது.  தேர்வு முடிவுகள், மே, 8ல் வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, 29ல் முடிகிறது. ஏப்., 29ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன* கடந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்பில், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கின்றனர்.  அவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும்* கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 படித்து, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பழைய முறைப்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் வீதம், 1,200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.  இரண்டு பிரிவினருக்கும், காலையில் தேர்வு துவங்கி, மதியம் முடியும்* இந்த ஆண்டு, புதிதாக அமலுக்கு வந்துள்ள, மொழி பாடத்தாள் குறைப்புப்படி, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், பழைய, புதிய மாணவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஒரு தாளுக்கு மட்டுமே, தேர்வு நடத்தப்படும்.10ம் வகுப்பு தேர்வுஇந்த தேர்வில், மொழி பாடம் மற்றும் ஆங்கில தேர்வுகள் மட்டும், பிற்பகலில் நடக்கும். மற்ற முக்கிய பாட தேர்வுகள், காலையில் நடத்தப்படுகின்றன. 10ம் வகுப்புக்கு மட்டும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு, தலா, இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு தேதி விபரம்மார்ச் 14, 18 - மொழி பாடம் இரண்டு தாள்கள்மார்ச் 20, 22 - ஆங்கிலம் இரண்டு தாள்கள்மார்ச் 23 - விருப்ப மொழி பாடம்மார்ச் 25 - கணிதம்மார்ச் 27 - அறிவியல்மார்ச் 29 - சமூக அறிவியல்* ஏப்., 29ல் தேர்வு முடிவுகள் வெளியீடுபிளஸ் 1 தேர்வு: (பழைய பாடத்திட்டம்)* பிளஸ் 1 வகுப்பில், இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படித்த மாணவர்கள், ஏதாவது ஒரு பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு, பழைய பாடத்திட்டத்தில், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும.தேர்வு தேதி விபரம்மார்ச் 6 - மொழிப் பாடம் தமிழ் மற்றும் பிறமொழிகள்மார்ச் 8 - ஆங்கிலம்மார்ச் 12 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் செயல்முறைகள், நர்சிங் - பொது மற்றும் நர்சிங் தொழிற்கல்விமார்ச் 14 - இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல், மின்னணு உபகரணம், வரைவாளர் சிவில், மின் இயந்திரவியல் மற்றும் செயல்பாடுகள், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்மார்ச் 18 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், பொது இயந்திரவியல் - 2, மின் இயந்திரங்கள், அதன் செயல்பாடுகள், மேலாண்மை கொள்கைகள், செயல் திறன்மார்ச் 20 - வேதியியல், கணக்கு பதிவியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்மார்ச் 22 - தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்ட் மொழிபாடம் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்* மே 8ல் தேர்வு முடிவுபிளஸ் 1 தேர்வு: (புதிய பாடத்திட்டம்)* பிளஸ் 1 வகுப்பில், இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு, இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு தேதி விபரம்மார்ச் 6 மொழிப் பாடம் தமிழ் மற்றும் பிறமொழிகள்மார்ச் 8 ஆங்கிலம்மார்ச் 12 கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் செயல்முறைகள், நர்சிங் - பொது மற்றும் நர்சிங் தொழிற்கல்விமார்ச் 14 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்மார்ச் 18 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின் பொறியியல், மின்னணு பொறியியல், கட்டுமான பொறியியல், 'ஆட்டோமொபைல்' பொறியியல், 'மெக்கானிக்கல்' பொறியியல், அலுவலக மேலாண்மை மற்றும் செயலக படிப்புமார்ச் 20 வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்மார்ச் 22 தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி செயல்பாடுகள், உயிரி வேதியியல், அட்வான்ஸ்ட் மொழிபாடம் - தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்* மே 8ல் தேர்வு முடிவு வெளியீடுபிளஸ் 2 தேர்வு தேதி விபரம் மார்ச் 1 - மொழிப்பாடம் - தமிழ் மற்றும் பிறமொழிகள்மார்ச் 5 - ஆங்கிலம்மார்ச் 7 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், 'டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்', உணவு மேலாண்மை, வேளாண் செயல்முறைகள், நர்சிங் - பொது மற்றும் நர்சிங் தொழிற்கல்விமார்ச் 11 - இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல், மின்னணு உபகரணங்கள், வரைவாளர் சிவில், மின் இயந்திரவியல், 'ஆட்டோ மெக்கானிக்' மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்மார்ச் 13 - வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்மார்ச் 15 - தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், 'அட்வான்ஸ்ட்' மொழி பாடம் - தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்மார்ச் 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை மற்றும் கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல்* ஏப்ரல், 19ல் தேர்வு முடிவு வெளியீடு

கல்வித்துறையில் கோலோச்சும் பணியிடங்களை கைப்பற்ற போட்டி : சிபாரிசு மழையால் திணறல்

கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் (பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, மூன்று ஆண்டுக்கும் மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் சி.இ.ஓ., பி.ஏ.,, உதவி திட்ட அலுவலர் (எஸ்.எஸ்.ஏ., - ஏ.பி.ஓ.,), திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஆர்.எம்.எஸ்.ஏ., - ஏ.டி.பி.சி.,), சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர் (டி.ஐ.,) ஆகியோர் கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற்று, பள்ளிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள், நேற்று முதல் கலந்தாய்வில் பங்கேற்று தலைமையாசிரியராக பள்ளிக்கு மீண்டும் மாறுதல் பெறுகின்றனர். காலியாகும் இடங்களுக்கு நியமனம் செய்ய வழிகாட்டுதல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிகாரிகள் போல் கோலோச்சும் இப்பணியிடங்களை கைப்பற்ற சி.இ.ஓ., மற்றும் அரசியல்வாதிகள் சிபாரிசுகளை தலைமையாசிரியர் பெற்று வருகின்றனர். இதில் பேரம் நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பல மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் போல் பி.ஏ.,க்கள் உள்ளிட்டோர் செயல்பட்டு கோலோச்சினர். முறைகேடுகள் நடந்தன. இதனால்தான் அவர்களை மாற்ற கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் நடவடிக்கை எடுத்தார். தகுதி, திறமையுள்ளவர்களை னியாரிட்டி அடிப்படையில் இப்பதவிகளில் நியமிக்க வேண்டும். சிபாரிசு அடிப்படையில் நியமித்தால் மீண்டும் முறைகேடு நடக்கும், என்றனர்.

ஜாக்டோ ஜியோ சென்னை காலவறையற்ற உண்ணாவிரதம், மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் இரண்டாம் நாள் நிகழ்வு நாளிதழ்களில்

ஜாக்டோ ஜியோவுடன் பேச முதல்வர் மறுப்பு, பேரவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு