யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/9/18

10th Standard - Quarterly Exam Model Question Papers 2018

கல்வித்துறை அதிகாரிகளுக்கு




இன்றைய வேலூர் மாவட்ட நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள்.


ஓர் பிஜி ஆசிரீயர்!
உங்களைப் போலவே படித்துவிட்டு டிஆர்பி எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேர்ந்தவர்,
தன்னிடம் படிக்கும் மாணவன் திறனுடையவனாக முன்னேறவேண்டும் என்ற வேட்கை கொண்டவர் 

இன்று அவரது பள்ளியிலேயே நிராதரவாக்கிடப்பட்டு தனித்து சூழப்பட்டு பெண்களால்! அப்பள்ளி மாணவனாலேயே அடித்து வீழ்த்தப்பட்டு மண்ணில் சாய்கிறார்.


பார்க்கும் போதே குலை நடங்குகிறது.
Mass violence! என்றோ!Public rampage!என்றோ சிலரது கருத்துக்களாக மாறிப்போகும்.
நாள்பட மறந்தும் போகும்.


தான் பணியாற்றிய பள்ளியிலேயே தாக்கப்படும் ஆசிரியருக்கு பணிப்பாதுகாப்பு எங்கே?

பேருந்து ஓட்டுநர் எங்கேயாவது மோதிவிட்டால் இறங்கி ஓட்டம் எடுப்பதுபோல் இனி ஆசிரீயர்களும் ஓட வேண்டுமா?
இருநாட்கள் முன் ஆசிரியர் தினமென்று வாழ்த்திவிட்டு அடுத்த இரு நாட்களிலேயே அடிக்கும் காணொளியைப் போடுகிறார்கள்.


மாணவன் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தின் உண்மைத்தன்மை உறுப்படும் முன்னரே கற்பிக்கும் ஆசானைஅடித்து துவைக்கிறார்கள்.மாணவனின் கடிதத்தில் எல்லோர் மேலுமே வெறுப்படைந்ததாக உள்ளதற்கு காரணம் யார்?அனைவரின் மேலுமே குற்றம் சொல்லிடும் அவனது மனநிலை என்ன?


இதற்கிடையே குறைந்தது தேர்ச்சியாவது பெற வைத்திட முடியாத நீங்கள் வாங்கும் சம்பளம் தர்மமா?எனவும் அதிகாரிகள் கேட்டுவிடுகிறீர்கள்.



தாக்கப்பட்ட ஆசிரியரின் மனநிலை என்னவாக இருக்கும்?அவர் தாக்கப்படுவதைப்பார்க்கும் அவரது குழந்தைகளும்,மனைவியும்,பெற்றோரும் இனி என்ன அவருக்கு சொல்லப்போகிறார்கள்?


கத்தியால் குத்திய மாணவனுக்கு தண்டனை இல்லை.அவனுக்கு கவுன்சலிங் கொடுத்து ராஜமரியாதையோடு அடுத்த பள்ளிக்கு கூட்டிச் சென்று சேர்த்து விடுகிறீர்கள்.ஆனால் அடிபட்ட ஆசிரியருக்கு என்றைக்காவாவது ஆறுதல் சொன்னதுண்டா?




எங்களின் பாதுகாப்பு யாரிடம் இனி கேட்பது?


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?

தமிழகத்தில் 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி துவக்கம்

திருநெல்வேலி: தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 412 மையங்களில் நேற்று முதல் பயிற்சிகள் துவங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று நெல்லையில் இருந்து இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து உதவிகள் கேரளத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்விற்கான பயிற்சி 412 மையங்களில் இன்று (நேற்று) பயிற்சி தொடங்கிறது. விடுமுறை நாட்களில் காலை , மாலைகளில் பயிற்சியளிக்கப்படும். மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பயிற்சி வழங்கப்படும். இதற்காக 3,200 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் பள்ளிகளில் மையங்கள் தயார்படுத்தப்படும்.கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 24 பேர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் ஆயிரம் பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும், என்றார்.

தயார் நிலையில் 2ம் கட்ட புதிய பாடத்தயார் நிலையில் 2ம் கட்ட புதிய பாடத்திட்டம்: இயக்குனர் தகவல்திட்டம்: இயக்குனர் தகவல்

மதுரை: "தமிழகத்தில் பத்து மற்றும் பிளஸ் 2விற்கான புதிய பாடத்திட்டங்கள் டிசம்பரில் வெளியாகும் வாய்ப்புள்ளது," என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: பள்ளி கல்வித்துறையில் 6, 9, 10, பிளஸ் 1க்கு புதிய பாடத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது. ஆசிரியர்களுக்கு தான் சவாலாக இருக்கும். மாணவர்களுக்கு இருக்காது. உரிய பயிற்சி மூலம் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் எளிதாகி விடும்.இரண்டாம் கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு டிசம்பரில் வெளி வரவுள்ளது. அமைச்சர், அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புதிய பாடத்திட்டங்களால் இரண்டு ஆண்டுகள் வரை ஆசிரியர்கள் பிரத்யேகமாக பயிற்சி பெற வேண்டும். பாடம் நடத்துவதற்கு நேரம் இல்லை என ஆசிரியர்கள் தெரிவிக்க கூடாது. திட்டமிட்டு உரிய காலத்திற்குள் பாடத்தை நடத்தி முடிக்க வேண்டும். அலுவலக பணிக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது, என்றார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1.62 கோடி நிவாரண உதவி

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ.1.62 கோடி மதிப்பிலான நிவாரண உதவி பொருள்கள் திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

 தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு துறை மூலமும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 அதன்படி, ஏற்கெனவே ஈரோட்டில் இருந்து முதல்கட்டமாக பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
 இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் அளித்த நிவாரண பொருள்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருநெல்வேலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
 ரூ.1 கோடியே 62 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் 22 லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ். முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்தி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

காலாண்டு தேர்வு முடிவுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் நிபந்தனை:ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவு.


மதுரை:மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உட்பட ஐந்து கட்டளைகளை விதித்து ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.
கலெக்டராக பொறுப்பேற்றபோது 'கல்வி, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்,' என நடராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவட்ட கல்வித்தரத்தை ஆய்வு செய்ய தலைமையாசிரியர் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.

இதன்படி சேதுபதி பள்ளியில் நேற்று கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கல்வித்துறைக்கு ஐந்து நிபந்தனைகளை விதித்தார். அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர் வசதி செய்ய வேண்டும். போதிய கழிப்பறைகள் வசதி வேண்டும். குறிப்பாக மாணவிகளுக்கென தனிக் கழிப்பறைகள் இருக்க வேண்டும். பள்ளிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
பள்ளி வகுப்பறைகளில் லேசான பழுது இருந்தால் உடனடியாக பழுதுநீக்கி பராமரிக்க வேண்டும். பயன்படுத்த மற்றும் பராமரிக்க இயலாத வகுப்பறை கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். "கலெக்டரின் இந்நிபந்தனைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்படும்," என, சி.இ.ஓ., கோபிதாஸ் உறுதியளித்தார்.
ஆசிரியர்களிடம் விளக்கம்
அரசு பள்ளிகளில் வரும் காலாண்டு தேர்வு முடிவுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பாடங்களில் தோல்வியடைந்த மாணவரின் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அத்துடன் பள்ளி தலைமையாசிரியர்களும் விளக்கம் அளிக்க வேண்டும். கல்வித்துறைக்கு அந்தநிலை வராமல் ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து பணிபுரிந்து மாணவர்கள் மற்றும் மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு முன் தலைமையாசிரியர் முன்கூட்டியே சென்றுவிடவேண்டும் எனவும் கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆசிரியைகள் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் Tweet!

ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம்.

புதிய பாடத்திட்ட சுமையை குறைக்க கோரி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள செய்தி

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

State wise New DEO Office Codes State wise New DEO Office Codes

அரசு கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்க ராமதாஸ் கோரிக்கை

அரசு கலை கல்லூரிகளில்
2640 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கல்லூரிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பதிலாக நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.