யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/12/18

Flash News - (staff fixation -6to 8 ,9-10 ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல் வெளியீடு




பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்? : மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பம்

பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தை மாற்றப்போவதாக, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளதால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், பள்ளி கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற செங்கோட்டையன், ஓர் ஆண்டுக்கும் மேலாக, பள்ளி கல்வியின் நிர்வாக முறையிலும், கல்வி முறையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். பொதுமக்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் விரும்பிய பல திட்டங்களை, அவர் அமல்படுத்தியுள்ளார்.இருப்பினும், சில நடவடிக்கைகளில், அவர் அவ்வப்போது பின்வாங்கி, திட்டங்களை மாற்றி மாற்றி அறிவிப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிவித்தார். அதற்கு மாணவர்கள் தயாராகி, ஒரு தரப்பினர் பொது தேர்வும் எழுதி விட்ட நிலையில், அந்த தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையும் மாற்றப்பட்டு, வழக்கம் போல், பிளஸ் 2வுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.'பிளஸ் 2, புதிய பாடத் திட்டத்தில், அதிக பாடங்கள் இருப்பதால், அதை குறைத்து, வேறு பாடத்திட்டம் அமைக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.'புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில் இருக்கும்' என, பேட்டிகளில் சவால் விட்ட அமைச்சர், தற்போது இவ்வாறு அறிவித்துள்ளது, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்பால், தமிழக பாடத் திட்டம் நிரந்தர தன்மையையும், உறுதியையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைக்கப்படும் பாடத் திட்டத்தில் படித்தால், மாணவர்கள், மருத்துவ, இன்ஜினியரிங் படிப்பில், சி.பி.எஸ்.இ., மாணவர்களை மிஞ்சி, மேல்நிலை கல்வியை பெற முடியுமா என, பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்வது எப்படி? - இயக்குநர் சுற்றறிக்கை!

வட மாவட்ட அரசுப் பள்ளிகளில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளது!

வட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளதாகவும் மேலும் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் 6,000 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்

ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

ஆங்கில வழி வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை


15-க்கு குறைவாக மாணவர்கள் இருந்தால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விபரங்களை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு!

அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஜனவரி 8 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் :

உயர் நீதிமன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஜனவரி 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று ஜாக்டோ ஜியோ மாநில  ஒருங்கிணைப்பாளர் மாயவன் நாகர்கோவிலில் தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க கூட்டம், நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  செயலாளர் ராஜ்குமார், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நாகராஜன், மரிய மிக்கேல், இளங்கோ, முருகன், மணிகண்டன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு, ஜனவரி 7ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள்  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை? தள்ளிப்போட காரணம் என்ன? 12ம் தேதிக்குள் அறிக்ைக சமர்ப்பிக்க வேண்டும் என்று  கூறியுள்ளனர். மேலும் 21 மாத நிலுவை தொகையை தரமுடியாது என்று கூறுவது ஏன்? 21 மாத நிலுவை தொகை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

 சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றோம். இவையும் 7ம் தேதி  பரிசீலிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். எங்களது கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க வில்லையெனில், ஜனவரி 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.  போராட்டத்துக்கு தள்ளிவிடுவது அரசுதான். ஜாக்டோ ஜியோ போராட்டத்தை விரும்பவில்லை. இந்தநிலை ஏற்பட அரசு எடுத்து வருகின்ற முடிவுகளே காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் :

அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அஞ்சல் வழி கல்வி அல்லது மாலை நேரக் கல்லூரிகளில் சேர்ந்து பயில விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உயர் அலுவலர் அனுமதி வழங்கிட வேண்டும் .தவறும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதி படிப்பை தொடரலாம் :

10,+2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் இறுதி செய்யும் பணிகள் தீவிரம் :

TNPSC Group 2 Preliminary Result Published- Click Here To Download PDF: