யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/18

Income Tax SlabRates Income Tax Slab Rates




For Male and Female,
Up to 2,50,000-Nil
2,51,000-5,00,000- 5%
5,00,001-10,00,000- 20%
10lakh and above- *30%


Education has revised as Health and Education Cess and Cess is 4% now.
Previously it was 3%
80 C Deduction-1.5 lakhs
Home loan interest deduction- 2 lakhs
80D-Mediclaim,NHIS deduction raised to 1lakh.
Previously it was 30,000


Standard Deduction என்னும் புதிய பிரிவின் மூலம் 40,000 ரூபாயை ஒட்டுமொத்த சம்பளத்தில் கழித்துக் கொள்ளலாம். போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக இவ்விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக ரசீதுகள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
மற்றபடி வேறெந்த மாற்றமுமில்லை

பள்ளிக் கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடக்கம்! பள்ளிக் கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடக்கம்!



தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களைஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசுமேற்கொண்டு வருகிறது. குறிப்பாக புதிய பாடத்திட்டம், ரேங்க் முறை ரத்து,எஸ்சிஇஆர்டி யூடியூப்-

சேனல் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள்மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும்,பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள்தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் புதியதொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.


இதையடுத்து இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குநர்வி.சி. ராமேஸ்வர முருகன், மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவன இயக்குநர் க.அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்டஇயக்குநர்சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழுஅமைக்கப்பட்டது.கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைக்கானதொழில்நுட்பப் பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்புகாட்சிகளைப் பதிவு செய்யவும் தனியாக ஒரு குழுவும்ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று கேமராக்கள், தொழில்நுட்பக்கருவிகள்வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட ஒருசிலமாநிலங்களில் மட்டுமே கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல்உள்ளது. இது போன்ற அலைவரிசையை தமிழக மாணவர்களுக்காகதொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்.... கல்வித் தொலைக்காட்சிக்கானபடப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப தளம் (ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க்உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் இட்ஹய்ய்ங்ப் இங்ய்ற்ழ்ஹப்ண்ள்ங்க் நற்ன்க்ண்ர்)சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8 ஆவதுதளத்தில் அமையவுள்ளது. பள்ளிக் கல்வி செயல்பாடுகளைப் பதிவுசெய்வதற்காக வழக்கமான கேமராக்களுடன் ஆளில்லா பறக்கும்கண்காணிப்பு ("ட்ரோன்') கேமரா வாங்கப்படும். இந்தப் பணிகளுக்காகமுதல் கட்டமாக ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்?:

 கல்வித் தொலைக்காட்சி அரசு கேபிளில் 200 ஆவது அலைவரிசையில்ஒளிபரப்பாகும். புதிதாக தொடங்கப்படவுள்ள எல்.கே.ஜி. வகுப்புகள் முதல்பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிக் கல்விக்காக அரசு செயல்படுத்தும்திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நீட்உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான விளக்கங்கள், புதுமையான முறையில்கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின்கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள்,கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல அம்சங்கள் இடம்பெறும்.

இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும்மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும். பொங்கல் திருநாளில் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பைதொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

TAMIL UNIVERSITY UNAPPROVAL REGARDING - RTI LETTER



2012&13&14 TET ல் தேர்ச்சி பெற்றவர்களது பணிநியமனத்தில் முறைகேடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு !

2012&13&14 ஆசிரியர் தகுதிதேர்வு தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு. மேலும் குறிப்பாக 2017 ஆண்டு வெளியிடபட்ட 1114 பணியிடங்கள் நிரப்ப வெளியிடபட்ட இறுதிபட்டியலில் தேர்வு வாரியத்தால் நிராகரிக்கபட்ட பலர் தற்போது பணிபுரிகின்றனர். இந்த அறிவிப்பாணையில் பல்வேறு முறைகேடுகளை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

14/12/2018 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு.K.Kசசிதரன்
P.D ஆதிகேசவலு
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
வழக்கறிஞர் S.Sதேசிகன்  வாதாடினார். 
 இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியது. 


மேலும் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில்  தேர்ச்சி பெற்ற நலசங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த இளங்கோவனிடம் கேட்ட போது ஆசிரியர் தேர்வுவாரிம் தொடர்ந்து   முறைகேட்டில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்தது. இவ்வழக்கில்  முறைகேடு சார்ந்த 52 ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் மேலும் ஆசிரியர்  முறைகேடு சார்ந்த கூடுதல்  ஆவணங்கள் , ஆதாரங்கள் இருப்பின் ஆசிரியர் பெருமக்கள் அளித்தால் முறைகேடுகளை முற்றிலுமாக களையலாம், சம்மந்தபட்ட அத்துணை பேர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இயலும் என தெரிவித்தார். தொடர்பு எண்கள் 9994994339

கற்றல் இனிது 1 ... ப-ப-ப, ப-கோ -ப , கோ-ப-கோ, செ-க-ப என்ன வேறு மொழியில திட்ற மாதிரி இருக்குங்களா ? இல்ல இல்ல இது கணக்கு பாடம். இந்த வார்த்தைகள் பெயரிட்டு கூறினாலே மாணவன் கணிதத்தை விட்டு தூர ஓடி விடுவான்.

கற்றல் இனிது 1 ...

ப-ப-ப, ப-கோ -ப , கோ-ப-கோ, செ-க-ப என்ன வேறு மொழியில திட்ற மாதிரி இருக்குங்களா ? இல்ல இல்ல இது கணக்கு பாடம்.
இந்த வார்த்தைகள் பெயரிட்டு கூறினாலே மாணவன் கணிதத்தை விட்டு தூர ஓடி விடுவான்.

Concept புரிஞ்சிடுச்சுனா 1000 கணக்கு தந்தாலும் அசத்தலா போட்டுடலாம்.

கணிதத்தில் அடுத்த நாள் நடத்தும் பாடத்திற்கான _ Surprise செயல்பாடுகளை வழங்குவதால் பாடம் சார் புரிதல் மேம்படும் என்ற கோணத்தில் இப்பயணம்.

பிள்ளைகளுக்கு கணிதம் புரியாமல் போவதற்கு காரணம் ... வாழ்வியலோடு தொடர்பற்ற கணக்கிடலே.

5 x 20 எவ்வளவு ? பதில் தராத மாணவனும் 5 பேர் கிட்ட 20 சாக்லேட் இருக்கு மொத்தம் என்றவுடன் 100 சார் என சொல்லும் மெல்ல மலரும் அரும்பின் குரலில் துளிர்க்கிறது - கணிதம் உயிர்ப்புடன்...

எனவே பாடம் நடத்தும் முந்தைய நாளில் சில களப்பயணம் - அவை தொடர்ந்து பாட விளக்கம்...

இன்றைய தேடல் - சர்வ சம முக்கோணம் ...

சர்வ சம உருவம் முதல்ல புரிய சொல்லி தந்து தலைப்பை வெளிபடுத்தலாம்.

போர்டும் டஸ்டரும்,
ஜன்னலும் சுவரும்,
கொடி கம்பமும் சிறு செடியும் ,
ஜாமென்றி பாக்ஸ்யும்  5 ரூ அப்சரா ரப்பரும், சாப்பிடும் தட்டும்
டிபன் பாக்ஸ் மூடியும் ...

இதெல்லாம் கிட்ட திட்ட சர்வ சம உருவங்கள்

அதாவது வடிவம் ஓரே மாதிரியான உருவங்கள் - அவற்றிலிருந்தே சர்வ சமம் தோன்றுகிறது .. என்ன அதற்கு கொஞ்சம் ரூல்ஸ் இருக்கு...

முதல்ல இன்று நாம சர்வ சம முக்கோணம் பற்றி பார்ப்போம்.

வழியில் வரும் போது கண்ட பொருட்களில் எல்லாம் கணிதம் இருந்தது. அவையே இதற்கான செயல்பாடுகளாயின...

1.ஒரு பிரட் துண்டை கொண்டு வர செய்து மூலை விட்டம் வழி கட் செய்யும் போது கிடைக்கும் உருவத்தை உற்று நோக்குக..

2. 5 ரூ Dairy Milk சாக்லெட் யை மூலைவிட்டம் வழியாக கட் செய்து வரும் உருவம் எப்படி உள்ளது என பார்க்க ?

3. அமரும் தரையின் டைல்ஸ் மூலை விட்டங்களை சாக்பீஸ் கொண்டு வரைவோம் நிகழ்வது என்ன ?

4. மணல் கடிகாரம் வைத்து மணல் இறங்கும் போது உண்டாகும் முக்கோணம் போன்ற உருவத்தில் புரிவது என்ன ?

5. அஞ்சல் கடித 4 மடிப்புகளை மடித்து உற்று நோக்குக. என்ன உருவம் வருகிறது?

6. வீட்டில் பட்டம் தயார் செய்து குறுக்கே குச்சிகளால் ஒட்டும் போது தோன்றும் வடிவம் பார்த்து வா ?

7. கத்தரிக்கோல் திறக்கும் போதும் மூடும் போதும் உண்டாகும் உருவம் பார்?

8. கடைக்கு சென்று கயிறுதராசின் இரு புறமும் உண்டாக கூடிய முக்கோணத்தை நன்கு கவனி

9. தென்னம் பிஞ்சுகளை கொண்டு தேர்களை உருவாக்கி கொண்டு வா ? உருவத்தில் உணர்வது என்ன?

10. வீட்டின் கூரையின் இருபுறமும் பார் - மனதில் தோன்றுவது யாது ?

12. மின்னோட்டத்தை கொண்டு வரும் Tranform கம்பத்தின் உச்சிகளின் வடிவத்தை பார்த்து உணர்வதை எழுதி வா

13. பாலங்களில் உள்ள கம்பிகளிலும், பழைய  கட்டிடத்தின் மேல் தள இரும்பு கம்பிகளையும் பார் தோன்றும் உருவம் என்ன ?

14. காக்கா முட்டை பீட்சா போன்று தோசையை 8 சம பாகமா பிரிக்க என்ன உருவம் வருகிறது என பார் ?

15. மோகன் பர்த்டேக்கு வட்ட வடிவ கேக் வெட்டும் போது உருவாகும் வடிவத்தை பார்?

மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளிலும் சர்வ சம முக்கோணங்களை பயன்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.

சின்ன வயசுல செய்த காகித காமிராவிலும் - கத்தி கப்பலிலும் கூட வடிவொத்த முக்கோணங்கள் இருக்கு .. சர்வ சமம் இருந்தா கப்பல் அழகா வரும் இல்லனா அது... உடைஞ்ச கப்பலாயிடும்...

இதை களப்பயணமாக வழங்கி விட்டு பின் - சர்வ சம முக்கோணம் நடத்தினால் இறக்கும் வரை கணித Concept மறக்காது.

இது போன்ற நிகழ்வுகளை உற்று நோக்கிய பின் ப-ப-ப
கோ - ப_ கோ
ப-கோ - ப
ஆகியற்றை கூறினால் - நிச்சயம் கணிதமும் இனிக்கும்.

தெரியாத விஷயம் ஒன்றை கூறவா ? என்றதும் மாணவர் விழிகள் உற்று நோக்கும் போது

டாவின்சி னு ஒருத்தரு வரைந்த மோனலிசா ஓவியமும் பல்வேறு சர்வ சம முக்கோணங்களை இணைத்து வரையப்பட்ட ஓவியமாம்...

எகிப்த்தில் மம்மிஸ் புதைச்சு வச்சுருக்க பல ஆயிரம் பிரமிட் உருவங்கள் சர்வ சம முக்கோணங்கள் தானாம் .. இதற்காக தேல்ஸ் என்பவர் பல வருஷம் ஆராய்ச்சி செய்திருக்காராம்...

வாவ்... ஆச்சரியத்துடன் கணிதத்திலும் ஆராய்ச்சி பண்ணலாமா சார் ?

ஆமாம் டா தம்பி ... புரிஞ்சதா எல்லாருக்கும் ? (உண்மையாகவே )புரிஞ்சது சார் எனும் போது - ஆசிரியம் வெற்றி பெறுகிறது.

 சிந்திக்கும்
பிள்ளைகளுடன் சங்கமிப்போம்

அடுத்த தேடலில் சந்திப்போம்...


கனவுப்பள்ளி பிரதீப்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள்,  ஆசிரியர்கள்,  பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை
தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  குறிப்பாக புதிய பாடத்திட்டம்,  ரேங்க் முறை ரத்து,  எஸ்சிஇஆர்டி யூடியூப்-சேனல் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


 இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும்,  பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் புதிய தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்பப் பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளைப் பதிவு செய்யவும் தனியாக ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதே போன்று கேமராக்கள், தொழில்நுட்பக் கருவிகள் வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:

இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே  கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உள்ளது. இது போன்ற அலைவரிசையை தமிழக மாணவர்களுக்காக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்.... கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப தளம் (ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் இட்ஹய்ய்ங்ப் இங்ய்ற்ழ்ஹப்ண்ள்ங்க் நற்ன்க்ண்ர்) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8 ஆவது தளத்தில் அமையவுள்ளது. பள்ளிக் கல்வி செயல்பாடுகளைப் பதிவு செய்வதற்காக வழக்கமான கேமராக்களுடன் ஆளில்லா பறக்கும் கண்காணிப்பு ("ட்ரோன்') கேமரா வாங்கப்படும்.  இந்தப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன அம்சங்கள்?:  கல்வித் தொலைக்காட்சி அரசு கேபிளில் 200 ஆவது அலைவரிசையில் ஒளிபரப்பாகும்.   புதிதாக தொடங்கப்படவுள்ள எல்.கே.ஜி.  வகுப்புகள் முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிக் கல்விக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள்,  கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை,  நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான விளக்கங்கள்,  புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல்,  அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள்,  பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள்,  கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல அம்சங்கள் இடம்பெறும்.
இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள்,  ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.  பொங்கல் திருநாளில் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்

நாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஐந்து நாட்கள், அதாவது டிசம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி இது தொடருமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
வேலை நிறுத்தம் காரணமாக, ஏடிஎம் சேவை முடங்கும் அபாயமும் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FLASH NEWS : G.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..




EMIS SCHOOL PROFILE FORMAT FOR GOVT/AIDED PRIMARY/ MIDDLE SCHOOLS ONLY

பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : வரும் நிதியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களுக்கு கூடுதல் சுமை, நாட்கள் போதவில்லை என கோரிக்கைகள் வந்துள்ளதால் அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அவர் தகவல் அளித்துள்ளார்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - CEO PROCEEDINGS

உயர் நீதிமன்றம் மதுரை கிளை யில்4-12-2018 மற்றும் 10-12-2018 வழக்கு நடந்த நிகழ்வுகள் பற்றி ஜாக்டோ ஜியோ விளக்கக் கூட்டம்*

காலை 10  மணி முதல் மதியம் 1 மணிவரை*
*இடம்:- பெரியார் மன்றம் தருமபுரி*
*அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்*
*தருமபுரி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் Cpsஐ இரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோருதல் உள்ளிட்டு 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  4-12-18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 12 இலட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்புடன் மிகவும் சக்தியாகவும் எழுச்சியாகவும் நடத்த திட்டமிடபட்டிருந்தது.*



*நாம் நடத்த இருந்த ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக  மீண்டும்  பொது நல வழக்கு மதுரை  உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு  வழக்கு நடைபெற்று வருகிறது இது சம்மந்தமான நிகழ்வுகளை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில்  விளக்கக் கூட்டதத்தினை மாநிலம் முழுக்க மாவட்டட தலைநகரில் 16-12-18 அன்று   நடத்துவது என ஜாக்டோ ஜியோ  முடிவு செய்துள்ளது.*

 *ஜாக்டோ ஜியோ மாநில முடிவின்படி தருமபுரி மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான  ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம் 16-12-18 அன்று காலை 10  மணியளவில் தருமபுரி  பெரியார் மன்றத்தில் எழுச்சியாக நடைபெறவுள்ளது*

 *இந்த மாவட்ட அளவிலான விளக்கக் கூட்டத்தில்  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். மு.அன்பரசு (மாநில பொதுச்செயலாளர்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.*


*தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலையிலான ஆசிரியர்கள்  ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இணைப்பிலுள்ள அனைத்து துறை சங்கங்களின் மாநில மாவட்ட,வட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்டு அனைத்து அரசு ஊழியர்கள்,தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து  பணியாளர்கள் அனைவரும் 100%  தருமபுரியில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டத்தில் பங்கேற்குமாறு  கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றிபெறுவோம் இறுதி வெற்றி நமதே*



*நம்மால் முடியாதது வேறுயாராலும் முடியாது*


*வேறுயாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்*




இவண்
 B.M.கௌரன்
 *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*ஜாக்டோ ஜியோ*
*தருமபுரி*