யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/15

ரூ.1 லட்சம் கோடி குஷி Dinakaran தலையங்கம்

சமீபத்தில் தான் தீபாவளிபண்டிகை கோலாகலமாககழிந்தது; மத்தியஅரசு ஊழியர்களைபொறுத்தவரை நேற்றுமுன்தினம் இன்னொரு தீபாவளி என்றுதான் கூறவேண்டும். ஆம், இதுவரை இல்லாதஅளவுக்கு
சம்பளஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளமே 18,000 ரூபாய் என்றாகி விட்டது; அதிகபட்ச சம்பளம்2.25 லட்சம் ரூபாய். 47 லட்சம் ஊழியர்கள், 52 லட்சம்ஓய்வூதியதாரர்கள் நிச்சயம், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருப்பர்.
வாக்கு வங்கியை பொறுத்தவரை, அரசு ஊழியர்களையாரும் ஒதுக்கிதள்ளி விடமுடியாது; கணிசமானவாக்காளர்களை கொண்ட மகத்தான பிரிவு இது. அரசு சார்ந்தபொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள்ஆகியவற்றின் ஊழியர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தனி இன்சூரன்ஸ்திட்டம், பணிக்கொடைவரம்பு இருமடங்காக அதாவதுரூ.10 லட்சம்வரை அளிப்பது, ஊழியர்கள், மத்திய பாதுகாப்பு படையினருக்கு ஒரேபணி ஒரேபென்ஷன் திட்டம்என்பன போன்றவைஎல்லாம் கூடுதல்சலுகைகள்.
இதில் குறிப்பிடத்தக்க ஒரேமுக்கிய விஷயம், திறன் சார்ந்தபணியின் அடிப்படையைபிரதான தகுதியாகவைத்து சலுகைகள்நிர்ணயிப்பது என்பது தான். முந்தைய சம்பளகமிஷனும் சரி, மத்திய நிதிஆணையமும் சரிஇந்த விஷயத்தைசுட்டிக்காட்டியது. ஆனால், ஏனோஅப்போது இதற்குஅரசு தனிகவனம் செலுத்தவில்லை. இப்போது ஏழாவதுசம்பள கமிஷனுக்குதலைமை வகித்தஓய்வு பெற்றநீதிபதி மாத்தூர், இது தொடர்பாககுறிப்பாக பரிந்துரைசெய்துள்ளார். திறன் சார்ந்த பணிக்கு முக்கியத்துவம்தருவது தொடர்பாகஅந்தந்த துறைகள்ரீதியாக தனிமுறை வடிவமைக்கவேண்டும். அந்தந்ததுறை வளர்ச்சிக்குஊழியர்கள் பங்குஎந்த அளவுக்குஇருக்க வேண்டும்என்பதை பொறுத்துஒவ்வொரு ஊழியருக்கும்பணித்திறன் அடிப்படையை முடிவு செய்ய வேண்டும்.

சாப்ட்வேர் மற்றும் தனியார்நிறுவனங்களில் பெரும்பாலும், பணித்திறன் முக்கியமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஊதியம், போனஸ், சலுகைகள்வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறையைகண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களிடம் அமல்படுத்தவேண்டும் என்றுகமிஷன் திடமாகபரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு, தன் ஊழியர்களிடம்இந்த பணித்திறன்முறையை அமல்படுத்தினால்துறை சார்ந்தஇலக்கை எட்டிவிடமுடியும் என்றுகமிஷன் கூறியுள்ளது. இதை அமல்படுத்தினால், மத்திய அரசுதுறை ஊழியர்களின்பணித்திறன் அதிகரிக்கும்; மக்களுக்கும்பெரிதும் பலன்கிடைக்கும் என்று நம்பலாம்

7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும் DINAMALAR

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் கையில், தாராளமான பணப்புழக்கம் இருக்கும்; இதனால், வீடு, கார், டூ - வீலர், வீட்டு உபயோகப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை
எகிறும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2016 ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, ஒரு கோடி பேரின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியம், 23 சதவீதம் அளவுக்கு உயரும். அப்போது, அவர்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த பணத்தை, அவர்கள் உபயோகமாக செலவழிக்க திட்டமிடுவர்.
குறிப்பாக, 'குறைந்த விலையில் வீடுகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க முற்படுவர். இதனால், அவற்றின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். இது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார வளர்ச்சி 0.65 சதவீதம்:
அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட உள்ள, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.65 சதவீதம் கூடும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது; இது, ஆறாவது ஊதியக் குழுவின் போது, 0.77 சதவீதமாக இருந்தது.
* ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்தும் போது, 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இது, மத்திய பட்ஜெட்டில், 73 ஆயிரத்து, 650 கோடி ரூபாய், ரயில்வே பட்ஜெட்டில், 28 ஆயிரத்து, 450 கோடி ரூபாய் என, பகிர்ந்து கொள்ளப்படும்
* ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை, 23.55 சதவீதம் உயர்த்தி வழங்க, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அடிப்படை சம்பளம் மட்டும், 16 சதவீத அளவுக்கும், அனைத்து விதமான படிகளும், 63 சதவீதம் அளவுக்கும் உயரும். சம்பளத்திற்கான அரசின் செலவு, 39 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, இரண்டு லட்சத்து, 83 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும்.
படிகளுக்கான செலவு, 12 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும். ஓய்வூதியத்திற்கான செலவு, 33 ஆயிரத்து, 700 கோடி அதிகரித்து, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாக இருக்கும்
* முன்னாள் ராணுவத்தினருக்கு, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளதால், சம்பள கமிஷன் பரிந்துரை அமல் கூடுதல் சுமையாகும்.
23.55 %:மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பென்ஷன் உயர்வு
16 %:அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் உயர்வு
63 %:படிகளில் உயர்வு
24 %:பென்ஷனில் உயர்வு
52ரத்து:* ரயில்வே ஊழியர் மற்றும் கேபினட்செயலர்களுக்கான கேளிக்கை படி
* குடும்ப கட்டுப்பாடு, முடி வெட்ட, பரிசோதனை, இறுதிச்சடங்கு, சேமிப்புக் கணக்கு, கூடுதல் வேலை படிகள்
* நர்சிங் ஊழியர்களுக்கான உணவக படி
36:பிற படிகளுடன் இணைப்பு
* வாஷிங் அலவன்ஸ் எனப்படும் துணி துவைப்பு படி இணைப்பு
* குறிப்பிட்ட இடங்களுக்கான படிகள், இடர்பாடு மற்றும் கடினப்பணி படியில் இணைப்பு
108:தொடரும், கூடுதலாகியுள்ள படிகள்
* மாற்றுப்பணி, தேசிய விடுமுறை மற்றும் மொழி படிகள், 50 சதவீதமாக அதிகரிப்பு
* இணையதளம், மொபைல், செய்தித்தாள் படிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன
* வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வழங்கப்படும் தினப்படி தொடர்கிறது
தொடர்கிறதுமகப்பேறு 'லீவு':
ஆண், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களை, அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஏழாவது ஊதியக் குழு நிராகரித்து உள்ளது. எனவே, வழக்கம் போல, மகப்பேறின் போது, பெண் ஊழியர்களுக்கு, 180 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆண் ஊழியரின் மனைவியின் பிரசவத்தின் போது, அந்த ஊழியருக்கு, 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை தொடர்கிறது. இந்த சலுகை, இரு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு படி:
மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மட்டும், இதுவரை வழங்கப்பட்டு வந்த, சி.சி.எல்., என்ற, 'சைல்ட் கேர் லீவ்' எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுமுறை, இப்போது ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மனைவி இல்லாத ஆண் ஊழியர்கள், தங்களின், 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளை பராமரிக்க, அவர்களின் பணிக்காலத்தில், இரு ஆண்டுகள் சம்பளத்துடன் விடுமுறை பெற்றுக் கொள்ளலாம். முதல் ஆண்டில், 100 சதவீத சம்பளமும், இரண்டாவது ஆண்டில், 80 சதவீத சம்பளமும், ஆண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ளபடி, கணவர் இல்லாத அரசு பெண் ஊழியருக்கு, வழக்கம் போல இந்த சலுகை தொடரும்.
இரண்டு தவணைகளாகமுந்தைய பரிந்துரை:
கடந்த, 2006ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட, ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், இரு ஆண்டுகள் கழித்து தான் அமல்படுத்தப்பட்டன. அதனால் மத்திய அரசின் சம்பள பில், 35 சதவீதம் அதிகரித்து, சம்பள உயர்வை மொத்தமாக கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, 40 சதவீத தொகை, 2008 - 09ம் ஆண்டிலும், 60 சதவீத தொகை, 2009 - 10ம்நிதியாண்டிலும் வழங்கப்பட்டது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை, அடுத்த ஆண்டு அமல்படுத்துவதால், நிதிப் பற்றாக்குறை மிக அதிகரிக்கும் என்ற அச்சம் தேவையில்லை. சற்றே அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தி விடுவோம். பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தச் செலவுகள் திடீரென வந்ததல்ல; ஏற்கனவே எதிர்பார்த்தது தான்
சக்திகந்த தாஸ், பொருளாதார துறை செயலர்
குறைந்தபட்ச சம்பள உயர்வு, 18 ஆயிரம், அதிகபட்ச சம்பள உயர்வு, 2.5 லட்சம் ரூபாய்ஆண்டுக்கு, 3 சதவீத சம்பள உயர்வுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை
சம்பள கமிஷன் பரிந்துரையால், ஆண்டுக்கு, 1.02 லட்சம் கோடி நிதிச்சுமை ஏற்படும்
'கிரேடு சம்பளம், பே பேண்ட்' முறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
சியாச்சின் பகுதியில் பாதுகாப்பு வீரர்களுக்கு, மாத சம்பளத்தில், 21 - 31 ஆயிரம் ரூபாய் வரை உயர்வு
சம்பளத்தை அதிகம் சாப்பிடும் நான்கு துறைகள்
ரயில்வே: 36.60 %
உள்துறை: 23.98%
பிற துறைகள்: 19.17%
பாதுகாப்புத்துறை (சிவில்): 12.16%

தபால் துறை: 8.09%

7 வது சம்பளக் கமிஷன் பரிந்துரை : டிஆர்இயு கண்டனம் - நவ. 24 முதல் ஆர்ப்பாட்டம்

7 வது சம்பளக் கமிஷன் பரிந்துரை குறித்த கீழ்க்காணும் கண்டன அறிக்கையை நவம்பர் 24 முதல் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் தெற்கு ரயில்வே முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஆர்இயு பொதுச் செயலாளர் அ.ஜானகிராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
7வது சம்பளக் கமிஷன் சிபாரிசு அமல்படுத்துவது குறித்து மீண்டும் ஒரு குழு அமைத்து முடிவெடுக்கப்படு மென நிதியமைச்சர் கூறியுள்ளார்.
குழுமத்திற்கு குழு அமைப்பது காலம் கடத்துவதற்கே!ட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சம்பளக் கமிஷன், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது.ட
7வது சம்பளக் கமிஷன் அறிக்கை இரண்டாவது சம்பளக் கமிஷனின் சம்பள உயர்வுக்கு இணையாக குறைக்கப்பட்டுள்ளது.
6வது சம்பளக் கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 54 சதம் சம்பள உயர்வை கொடுத்தது. ஆனால் 7வது சம்பளக் கமிஷனோ 14.2 சதம் மட்டுமே உயர்வை அளித்துள்ளது.
குறைந்தபட்ச சம்பளமாக ரூ.26,000 உயர்த்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை சம்பளக் கமிஷன் நிராகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமான உயர்வு 14.2 சதமாகவே உள்ளது.
ட அதிகாரிகளுக்கு ரூ.90ஆயிரமாக இருந்த சம்பளத்தை இரண்டரை லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது.
7வது சம்பளக் கமிஷன் 1.1.2014 முதல் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்காண்டு வழங்கப்படும் இன்கிரிமென்ட் 5சதம் கேட்பது நிராகரிக்கப்பட்டு தற்போதுள்ள அதே 3 சதம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகைப்படி தற்போதுள்ள 30 சதம் குறைக்கப்பட்டு 24 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
20சதம் என்பது 16 சதமாகவும் 10 சதம் வீட்டு வாடகைப்படி பெற்றவர்களுக்கு 6 சதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெறுவதற்குள் 5 பதவி உயர்வு என்ற கோரிக்கை மறுக்கப்பட்டு தற்போதுள்ள அதே மூன்று பதவி உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டு அலவன்ஸ் உட்பட 52 வகையான அலவன்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட காசுவல் லீவை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட நிராகரிப்பு,
எந்த லீவிலும் மாற்றமில்லை.
20 வருடம் பணிமுடித்த தொழிலாளர்களுக்கு வேலைத்திறன் இல்லை எனக் காரணம் கூறி வருடாந்திர இன்கிரிமென்ட்டை முடக்கவும் வி.ஆர்.-ல் அனுப்பவும் திட்டம்.
அதிகாரிகளின் அடக்குமுறைகளை அதிகரிக்கும் வகையில் எக்ஸ்ட்ரா ஒர்க் அலவன்ஸ் அறிமுகப்படுத்தியது தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்தும்.
பர்பார்மென்ஸ் ரிலேட்டட் பே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
பி.எல்.பி. போனசில் பார்முலாவை மாற்றுவதற்கு சிபாரிசு.

காலியிடங்களின் எண்ணிக்கை நிரப்புவதற்கோ (ரயில்வேயில் 2,35,567) அல்லது நிரந்தரத் தன்மையுடைய வேலைகளை காண்ட்ராக்ட் விடுவதற்கோ சிபாரிசுகள் இல்லை

ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை குறித்த DAKSHIN RAILWAY EMPLOYEES UNION-இன் கண்டன அறிக்கை. (நன்றி: விமலாவித்யா)





பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு-ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை

ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைமுக்கிய அம்சங்கள் நீதிபதி மாத்தூர் தலைமையிலான7-வது ஊதியகமிஷனின் பரிந்துரை அறிக்கைமத்திய அரசிடம்நேற்று முன்தினம்தாக்கல் செய்யப்பட்டது. அதன்முக்கிய 

பரிந்துரைகள் வருமாறு ஒட்டுமொத்தமாக மத்திய அரசுஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு. அடிப்படை ஊதியத்தில்16% உயர்வு.

படிகளில் 63% உயர்வு. ஆண்டுக்கு3% ஊதிய உயர்வு. 52 படிகள் ரத்து, 36 படிகள் இதரபடிகளோடு இணைப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயம்.

அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்ச மாகநிர்ணயம், குரூப்இன்சூரன்ஸ் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு. இதனால் பிரிமியம்பிடித்தம் உயரும், ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத உயர்வு.

ஒரே பதவி ஒரேஓய்வூதிய திட்டம்ராணுவத்தை போன்றுதுணை ராணுவபடைகளிலும் அமல். தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், மின்வாரியம், விமான நிலையங்களின் தலைமைநிர்வாகிகளுக்கு ரூ.4.50 லட்சம் ஊதியம்.

ராணுவ பணிக்கு இளைஞர்களை ஈர்க்கஐஐடி மற்றும்ஐஐஎம்களில் ஓராண்டு மானியக் கல்வி.

ராணுவ குறுகிய காலசேவை களில்பணியாற்றும் அதிகாரிகள் 7 முதல் 10 ஆண்டுகளில் எப்போதுவேண்டுமானாலும் ஓய்வுபெற சிறப்பு சலுகை.
தனியார் நிறுவனங்கள் போன்றுபணித் திறன்அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகைவட்டியில்லா கடன்கள் ரத்து, மனைவி துணையில்லாதஆண்களின் நலன்கருதி குழந்தைபராமரிப்புக்காக முழு ஊதியத் துடன் ஓராண்டுவிடுமுறை.

பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.

நன்றி: 21.11.15-தி இந்துதமிழ் நாளிதழ்

7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 2.57 ஆல் பெருக்குவதற்கான காரணம் என்ன? 2.57 எப்படி வந்தது?

31.12.2015 இல் D.A 119%

01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%


கூடுதல் (119% + 6%) = D.A 125%.

கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)

= 225% = 2.25

# அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,

F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29% ( 2.25 x 14.29%)

= 2.25 + ( 2.25 × 14.29% )

= 2.25 + 0.32

= 2.57


இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....இந்த அடிப்படை ஊதியத்தை, ஊதியக்குழு வெளியிட்டுள்ள அட்டவணையில்(Table 5: Pay Matrix) பொருத்துவதன் மூலம் நமது ஊதியம் நிர்ணயிக்கப் படுகிறது.

மத்திய அரசின் புதிய பாடத்திட்டம் : ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

மத்திய அரசின் 'ஒரேகல்வித்திட்டம்' குறித்த கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள்புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறுஆசிரியர்கள்
சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்தியமனித வளமேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பக்கல்வி பாடத்திட்டத்தில் 'ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம்' அறிமுகப்படுத்த உள்ளது.இதற்கான திட்டம் வகுத்து, மாநிலங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களைநடத்தி வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் 21 லட்சம்இடங்களில் சிறப்புகருத்துக்கேட்பு முகாம்கள் நடந்து வருகின்றன. மதுரை, கோவை, சென்னையில்மட்டுமே கருத்துக்கேட்புக் கூட்டங்கள்நடந்தன. கருத்துக்கேட்புக்கூட்டங்களை மாநில அரசு அதிகாரிகளை வைத்தேமத்திய அரசுநடத்தி விட்டது. தமிழக, கேரளமாநிலங்களில் இக்கூட்டங்களில் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.இது ஒருபுறம் இருக்கபுதிய திட்டத்தில், குற்றம் புரியும்ஆசிரியர்களை பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களே, 'தண்டிக்கலாமா? அல்லது 'டிஸ்மிஸ்' பண்ணலாமா?' என்பதைமக்களே தீர்மானிக்கும்வகையில் கல்வித்திட்டம்உள்ளது.
ஆரம்பக்கல்வியில் மாணவர்களின் சொந்தமாவட்டம் சார்ந்தவரலாறு இடம்பெறாமல் போவதற்கானசாத்திய கூறுகள்உள்ளன. இதுமாதிரியான13 அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது, எனக்கூறி, தமிழகஆசிரியர் சங்கங்கள்எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மாநிலத் தலைவர்மோசஸ் கூறியதாவது:

தவறுகள் இழைக்கும்v ஆசிரியர்கள்தண்டிக்கப்பட வேண்டும். அதே சமயம் தண்டிக்கும்அதிகாரத்தை கிராம நிர்வாகத்தின் கைகளில் திணிப்பதுஏற்புடையது அல்ல. ஆரம்பக் கல்வியில் மாவட்டத்தின்வரலாறே இல்லாதவகையில் பாடத்திட்டம்அமைய இருப்பது, அடிப்படை கல்வியேஆட்டம் காணவைப்பதாகும். இதற்கு எதிராக டிச., 8ல்இந்திய பள்ளிகளின்ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழக கவர்னரிடம்கோரிக்கை மனுஅளிக்க உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில்பேரணி நடத்தி, கலெக்டர்களிடம் கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம்என்றார்.