யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/15

ரூ.1 லட்சம் கோடி குஷி Dinakaran தலையங்கம்

சமீபத்தில் தான் தீபாவளிபண்டிகை கோலாகலமாககழிந்தது; மத்தியஅரசு ஊழியர்களைபொறுத்தவரை நேற்றுமுன்தினம் இன்னொரு தீபாவளி என்றுதான் கூறவேண்டும். ஆம், இதுவரை இல்லாதஅளவுக்கு
சம்பளஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளமே 18,000 ரூபாய் என்றாகி விட்டது; அதிகபட்ச சம்பளம்2.25 லட்சம் ரூபாய். 47 லட்சம் ஊழியர்கள், 52 லட்சம்ஓய்வூதியதாரர்கள் நிச்சயம், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருப்பர்.
வாக்கு வங்கியை பொறுத்தவரை, அரசு ஊழியர்களையாரும் ஒதுக்கிதள்ளி விடமுடியாது; கணிசமானவாக்காளர்களை கொண்ட மகத்தான பிரிவு இது. அரசு சார்ந்தபொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள்ஆகியவற்றின் ஊழியர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தனி இன்சூரன்ஸ்திட்டம், பணிக்கொடைவரம்பு இருமடங்காக அதாவதுரூ.10 லட்சம்வரை அளிப்பது, ஊழியர்கள், மத்திய பாதுகாப்பு படையினருக்கு ஒரேபணி ஒரேபென்ஷன் திட்டம்என்பன போன்றவைஎல்லாம் கூடுதல்சலுகைகள்.
இதில் குறிப்பிடத்தக்க ஒரேமுக்கிய விஷயம், திறன் சார்ந்தபணியின் அடிப்படையைபிரதான தகுதியாகவைத்து சலுகைகள்நிர்ணயிப்பது என்பது தான். முந்தைய சம்பளகமிஷனும் சரி, மத்திய நிதிஆணையமும் சரிஇந்த விஷயத்தைசுட்டிக்காட்டியது. ஆனால், ஏனோஅப்போது இதற்குஅரசு தனிகவனம் செலுத்தவில்லை. இப்போது ஏழாவதுசம்பள கமிஷனுக்குதலைமை வகித்தஓய்வு பெற்றநீதிபதி மாத்தூர், இது தொடர்பாககுறிப்பாக பரிந்துரைசெய்துள்ளார். திறன் சார்ந்த பணிக்கு முக்கியத்துவம்தருவது தொடர்பாகஅந்தந்த துறைகள்ரீதியாக தனிமுறை வடிவமைக்கவேண்டும். அந்தந்ததுறை வளர்ச்சிக்குஊழியர்கள் பங்குஎந்த அளவுக்குஇருக்க வேண்டும்என்பதை பொறுத்துஒவ்வொரு ஊழியருக்கும்பணித்திறன் அடிப்படையை முடிவு செய்ய வேண்டும்.

சாப்ட்வேர் மற்றும் தனியார்நிறுவனங்களில் பெரும்பாலும், பணித்திறன் முக்கியமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஊதியம், போனஸ், சலுகைகள்வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறையைகண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களிடம் அமல்படுத்தவேண்டும் என்றுகமிஷன் திடமாகபரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு, தன் ஊழியர்களிடம்இந்த பணித்திறன்முறையை அமல்படுத்தினால்துறை சார்ந்தஇலக்கை எட்டிவிடமுடியும் என்றுகமிஷன் கூறியுள்ளது. இதை அமல்படுத்தினால், மத்திய அரசுதுறை ஊழியர்களின்பணித்திறன் அதிகரிக்கும்; மக்களுக்கும்பெரிதும் பலன்கிடைக்கும் என்று நம்பலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக