யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/15

மத்திய அரசின் புதிய பாடத்திட்டம் : ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

மத்திய அரசின் 'ஒரேகல்வித்திட்டம்' குறித்த கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள்புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறுஆசிரியர்கள்
சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்தியமனித வளமேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பக்கல்வி பாடத்திட்டத்தில் 'ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம்' அறிமுகப்படுத்த உள்ளது.இதற்கான திட்டம் வகுத்து, மாநிலங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களைநடத்தி வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் 21 லட்சம்இடங்களில் சிறப்புகருத்துக்கேட்பு முகாம்கள் நடந்து வருகின்றன. மதுரை, கோவை, சென்னையில்மட்டுமே கருத்துக்கேட்புக் கூட்டங்கள்நடந்தன. கருத்துக்கேட்புக்கூட்டங்களை மாநில அரசு அதிகாரிகளை வைத்தேமத்திய அரசுநடத்தி விட்டது. தமிழக, கேரளமாநிலங்களில் இக்கூட்டங்களில் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.இது ஒருபுறம் இருக்கபுதிய திட்டத்தில், குற்றம் புரியும்ஆசிரியர்களை பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களே, 'தண்டிக்கலாமா? அல்லது 'டிஸ்மிஸ்' பண்ணலாமா?' என்பதைமக்களே தீர்மானிக்கும்வகையில் கல்வித்திட்டம்உள்ளது.
ஆரம்பக்கல்வியில் மாணவர்களின் சொந்தமாவட்டம் சார்ந்தவரலாறு இடம்பெறாமல் போவதற்கானசாத்திய கூறுகள்உள்ளன. இதுமாதிரியான13 அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது, எனக்கூறி, தமிழகஆசிரியர் சங்கங்கள்எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மாநிலத் தலைவர்மோசஸ் கூறியதாவது:

தவறுகள் இழைக்கும்v ஆசிரியர்கள்தண்டிக்கப்பட வேண்டும். அதே சமயம் தண்டிக்கும்அதிகாரத்தை கிராம நிர்வாகத்தின் கைகளில் திணிப்பதுஏற்புடையது அல்ல. ஆரம்பக் கல்வியில் மாவட்டத்தின்வரலாறே இல்லாதவகையில் பாடத்திட்டம்அமைய இருப்பது, அடிப்படை கல்வியேஆட்டம் காணவைப்பதாகும். இதற்கு எதிராக டிச., 8ல்இந்திய பள்ளிகளின்ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழக கவர்னரிடம்கோரிக்கை மனுஅளிக்க உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில்பேரணி நடத்தி, கலெக்டர்களிடம் கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம்என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக