யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/3/17

இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும், இதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் பிறப்பித்து உள்ளது.

நாடுமுழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவ - மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை
அதிகரித்துள்ளது. மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதேபோல் சமையலர்கள், உதவியாளர்களும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதிய உணவு திட்டத்தில் சில இடங்களில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதற்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வழங்குவதாக புகார்கள் வந்தன. மேலும் பல மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதாக கணக்கிடப்படுகிறது.

எனவேஇது போன்ற முறைகேடுகளை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

TET - 2017" தேர்வு அறிவிக்கை தமிழில் வெளியிட கோரிக்கை

டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.ஆர்.பி., நடத்தும், 'டெட் ' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு, ஏப்., 29 மற்றும், 30ல், நடைபெற உள்ளது.


 இதற்கான அறிவிக்கை, கடந்த வாரம் வெளியானது.தேர்வுக்கான கட்டுப்
பாடுகள், இரு தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின. இரு அறிவிக்கைகளும், ஆங்கிலத்தில் உள்ளன. அதனால், நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூறியதாவது:மூன்றாண்டு இடைவெளிக்கு பின், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கான நிபந்தனைகள், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்கின்றனர்.ஆசிரியர் பணிக்கு வரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், பாடங்கள் குறித்து ஆங்கில அறிவை எதிர்பார்க்கலாம்; தொடர்புக்கான ஆங்கில மொழி புலமையை, எதிர்பார்க்க முடியாது. எனவே, 'டெட்' தேர்வுக்கான
அறிவிக்கை மற்றும் நிபந்தனைகளை தமிழில் வெளியிட வேண்டும்.அரசு விதிகளின்படி, அரசாணை மற்றும் அறிவிக்கைகளை தமிழில் வெளியிட வேண்டும்.

 ஆண்டு முழுவதும், நுாற்றுக்கணக்கான தேர்வை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி.,
யும், தமிழில் தான், அறிவிக்கை வெளியிடுகிறது. எப்போதாவது தேர்வு நடத்தும், டி.ஆர்.பி., விதிகளை பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தலைவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழை
புறக்கணித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'TET' தேர்வுக்கு குறைந்த அவகாசம்:தேர்ச்சி பெறாவிட்டால் பணி பறிபோகும் - ஆசிரியர்கள் கலக்கம்

ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர்கள்
கலக்கத்தில் உள்ளனர்.
இந்ததேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால்,அவர்களின் பணி பறிபோகும் நிலைஏற்பட்டுள்ளது.



  மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைசட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்'தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படவேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,அவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவிகிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும் என, அனைத்து அரசுஉதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால்,வழக்கு காரணமாக, டெட் தேர்வுதள்ளிப்போனது.
இந்நிலையில், பிரச்னைகள் முடிவுக்கு வந்து,ஏப்ரலில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்டஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும் என்றசூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தேர்வுக்கான அவகாசம் மிகவும்குறைவாக உள்ளதால், தேர்வில் தேர்ச்சி அடையமுடியுமா என, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்குழப்பத்தில் உள்ளனர்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது
இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மாநில தலைவர் செல்வம்
கூறியதாவது:

  மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.
வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதுஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.

31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன.
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன.

அதைநடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

வருமான வரி: அரசு ஊழியர்களுக்கு கிடுக்கி

அரசுஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம்
செய்யக்கூடாது. 

  இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான, ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசும், டீசல் விலை, லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த
விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி, 21.43 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
ஜனவரி 1 ஆம்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் , தமிழக அரசு 6 அல்லது 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது .

ஆள் பற்றாக்குறையால் திணறும் தேர்வு துறை

தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், தேர்வு பணிகளை கண்காணிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ல் துவங்கியது. இந்த தேர்வில், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, மாவட்ட வாரியாக இயக்குனர் மற்றும் இணை
இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்வு பணிகள் குறித்த புகார்கள், தேர்வில் பங்கேற்ற மாணவர் எண்ணிக்கை, தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை, காப்பியடித்தோர் எண்ணிக்கை குறித்த விபரங்களை, மாவட்ட வாரியாக பெற, தேர்வுத்துறைக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என, இரண்டு தேர்வுகளிலும், மாவட்டங்களிலிருந்து விபரங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரித்த போது, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் போதுமான ஆட்கள் இல்லாததால், தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிந்தவுடன் காப்பியடித்தவர்கள் விபரம், தலைமை
செயலகத்துக்கும், ஊடகங்களுக்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆள் பற்றாக்குறையால், தலைமை செயலகத்துக்கு தகவல் அனுப்பவே ஊழியர்கள் திணறுவதால், ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை தரப்பில், தேர்வுத் துறைக்கு கூடுதல் ஊழியர்களை அனுப்ப மறுப்பதால், தகவல் சேகரிப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

வருமான வரி: அரசு ஊழியர்களுக்கு கிடுக்கி

அரசு ஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம் செய்யக்கூடாது. இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான, ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச தொகைஸ்டேட் வங்கியில் ரூ.5,000 ஆக உயர்வு

பாரத ஸ்டேட் வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காவிட்டால், 50 - 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, 'ஏப்., 1 முதல், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேணாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும்' எனக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கை விபரம்:சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேண வேண்டும். பெருநகரங்களில் இருப்போர், தங்கள் சேமிப்புக் கணக்குகளில், 5,000 ரூபாய், பகுதியளவு நகரமயமான பகுதிகளில், 3,000 ரூபாய், கிராமப் பகுதிகளில், 1,000 ரூபாய், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு பேணாத வாடிக்கையாளர்களிடம், 50 முதல் 100 ரூபாய் வரை, அபராதமாக வசூலிக்கப்படும். வரும், ஏப்., 1 முதல், இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.
பெருநகரங்களில், வங்கிக் கணக்கில் பேணப்பட வேண்டிய இருப்புத் தொகைக்கும், தற்போது கணக்கில் உள்ள தொகைக்கும், 50 சதவீத வித்தியாசம் இருந்தால், 50 ரூபாய் அபராதமும், அதற்கான சேவை வரியும் வசூலிக்கப்படும்; 70 சதவீத வித்தியாசம் இருந்தால், 75 ரூபாய் அபராதம் மற்றும் சேவை வரி பெறப்படும். அதற்கு மேல் வித்தியாசம் இருந்தால், 100 ரூபாய் அபராதமும் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

நகர்ப்புறங்களில், 40 முதல் 80 ரூபாயும், பகுதியளவு நகர்ப் பகுதிகளில், 25 முதல் 75 ரூபாயும், கிராமப் புறங்களில், 20 முதல் 50 ரூபாயும் அபராதமாக பெற
திட்டமிடப்பட்டு உள்ளது.ஒரு மாதத்தில், மூன்று முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களிடம், 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது; அது, இனியும்
தொடரும். காசோலை புத்தகம் வழங்குதல், பணம் செலுத்துதலை நிறுத்துதல் போன்ற சேவைகளுக்கு கட்டணம் பெறப்படும்.

டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக, ஆண்டுக்கு, 125 முதல், 300 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., பரிவர்த்தனைகள், மாதத்திற்கு, பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் ஐந்து முறையும் இலவசமாக அனுமதிக்கப்படும்.

இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதியை, 2012ல் நீக்கியது. தற்போது மீண்டும் அந்த விதி அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் வசூலிக்கப்படும் தொகை, பாரத ஸ்டேட் வங்கியில், 25 கோடி சேமிப்புக் கணக்குகளை பராமரிக்க தேவைப்படும் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் என, வங்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.


மாநில தலைவர் செல்வம்
கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.
வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.

31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன.
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன.

அதை நடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

TNPSC - Results of Departmental Examinations - December 2016

TNPSC - துறைத் தேர்வுகள் - டிசம்பர்' 2016 [Dept. Exam. - Dec' 2016] தேர்வு முடிவுகள் வெளியீடு...

Results of Departmental Examinations - December 2016
(Updated on 03 March 2017)
Enter Your Register Number :                                                         

"TET - 2017" தேர்வு அறிவிக்கை தமிழில் வெளியிட கோரிக்கை

'டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டி.ஆர்.பி., நடத்தும், 'டெட் ' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு, ஏப்., 29 மற்றும், 30ல், நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை, கடந்த வாரம் வெளியானது.தேர்வுக்கான கட்டுப்
பாடுகள், இரு தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின. இரு அறிவிக்கைகளும், ஆங்கிலத்தில் உள்ளன. அதனால், நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.
இது குறித்து, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூறியதாவது:மூன்றாண்டு இடைவெளிக்கு பின், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கான நிபந்தனைகள், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்கின்றனர்.ஆசிரியர் பணிக்கு வரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், பாடங்கள் குறித்து ஆங்கில அறிவை எதிர்பார்க்கலாம்; தொடர்புக்கான ஆங்கில மொழி புலமையை, எதிர்பார்க்க முடியாது. எனவே, 'டெட்' தேர்வுக்கான
அறிவிக்கை மற்றும் நிபந்தனைகளை தமிழில் வெளியிட வேண்டும்.அரசு விதிகளின்படி, அரசாணை மற்றும் அறிவிக்கைகளை தமிழில் வெளியிட வேண்டும்.

 ஆண்டு முழுவதும், நுாற்றுக்கணக்கான தேர்வை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி.,
யும், தமிழில் தான், அறிவிக்கை வெளியிடுகிறது. எப்போதாவது தேர்வு நடத்தும், டி.ஆர்.பி., விதிகளை பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தலைவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழை
புறக்கணித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

TET' தேர்வுக்கு குறைந்த அவகாசம்:தேர்ச்சி பெறாவிட்டால் பணி பறிபோகும் - ஆசிரியர்கள் கலக்கம்

ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவி கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், வழக்கு காரணமாக, டெட் தேர்வு தள்ளிப்போனது.
இந்நிலையில், பிரச்னைகள் முடிவுக்கு வந்து, ஏப்ரலில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், தேர்வுக்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளதால், தேர்வில் தேர்ச்சி அடைய முடியுமா என, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.