யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/17

விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு!!

அக்ரிகல்சர் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பது விவசாயக் காப்பீட்டிற்கு  என்று பிரத்யேகமாக செயல்படும் காப்பீட்டு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
*காலியிடங்கள்  :*AIC நிறுவனத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பதவியில் SC பிரிவினருக்கு 8ம், ST பிரிவினருக்கு 4ம், OBC பிரிவினருக்கு 13ம், பொது இடங்களாக 25ம் சேர்த்து மொத்தம் 50 காலியிடங்கள் உள்ளன.
*வயது :* 1.9.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.9.1987க்குப் பின்னரும் 1.9.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
*கல்வித் தகுதி :*B.Sc. Agri, BE அல்லது B.Tech படிப்பை அக்ரிகல்சரில் முடித்தவராக இருக்க வேண்டும். இது தவிர M.Sc Agri , BE அல்லது B.Tech படிப்பை, CS அல்லது IT யில் முடித்தவர்கள், B.Com அல்லது M.Com, CA, ICWA, கம்பெனி செக்ரட்டரிஷிப், MBA - நிதிப்பிரிவு, ஸ்டாடிஸ்டிக்ஸ், லீகல், மார்க்கெட்டிங், முடித்தவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.

*தேர்ந்தெடுக்கும்  முறை :* ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகதேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

*விண்ணப்பக் கட்டணம் :* ரூ.650/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

*விண்ணப்பிக்கும் முறை :* ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

*விண்ணப்பிக்க கடைசி நாள் :* அக். 10

*கூடுதல் விபரங்களுக்கு :* www.aicofindia.com

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மத்தியரசுப் பணி!!!

நமது  நாட்டின் தாமிர உற்பத்தியில் முத்திரை பதித்து வரும் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் பெருமைக்குரியது. இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்கள் 75ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

*பிரிவுகள் :* எலக்ட்ரீசியனில் 25, ஆர்மச்சூரி வைண்டரில் 2, மெக்கானிக் டீசலில் 10, சி., அண்டு இ., வெல்டரில் 7, பிட்டரில் 10, டர்னரில் 5, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்கில்2, டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கில் 3, சர்வேயரில் 3, கார்பென்டரில் 3, பிளம்பரில் 2ம் சேர்த்து மொத்தம் 75 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
*வயது :* விண்ணப்பதாரர்கள் 2017 செப்., 1 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

*கல்வித் தகுதி :* பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு, உரிய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

*தேர்ச்சி முறை :* எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

*விண்ணப்பிக்கும் முறை :* பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்ப படிவத்தை
முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து, பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

```Assistant General Manager (HR&A),

Hindustan Copper Limited,

Malanjkhand Copper Project,

Tehsil:- Birsa, P.O.- Malanjkhand,

 District Balaghat,

Madhya Pradesh -481116```

*விண்ணப்பிக்க கடைசி நாள் :* அக். 8.

*கூடுதல் விபரங்களுக்கு :* www.hindustancopper.com

TNPSC அறிவிப்பு: பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அக்.3 கடைசி!!

TNPSC–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

```Advt.No.: 477```

பணியின் பெயர்: Statistician

காலியிடங்கள்:31 (UR-10, BC-9, MBC/DC-6, SC-5, SCA-1)

சம்பளம்:*9,300 – 34,800+GP

வயது:*  1.7.2017 தேதிபடி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/DW/MBC/DC/SC/SCA/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:* Statistics/ Mathematics/Economics பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 26.11.2017

தேர்வுக் கட்டணம்:

 ரூ.150. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். One Time Registration செய்யாதவர்கள் மட்டும் ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:* 3.10.2017

*மேலும் கூடுதல் தகவல்களுக்கு*  www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.
ரூ.5,400 கோடி
வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.
இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்யும் முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு, காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம் 
பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.
தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. 
முறைகேடுகளுக்கு முடிவு
இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்து கண்காணிக்க முடிகிறது.இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும். 
ஒரே மாதத்தில், இரு இடங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகள், இனி செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது. 
செப்., 29 முதல் அக்.,2 வரை வங்கிகள் இயங்காது. அதனால் வாடிக்கையாளர்கள் 28ம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 முதல், 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதற்கான வரைவு கலை திட்ட அறிக்கை தயாரித்து, ஆய்வு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கணினி பாடத்தை, அறிவியல் பாடத்துடன், தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.


ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும், ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது.
எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து!

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருவதாக நேற்று (செப்டம்பர் 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, “ துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை புதிய ரயில்களை அறிமுகம் செய்யப்படும். சாத் பண்டிகைக்கு கொல்கத்தா, டெல்லி, மும்பை, சூரத், வதோதரா, அகமதாபாத், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய நகரங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கடந்த ஆண்டு 3,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 4,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அனைத்து ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தவும், முக்கிய ரயில் நிலையங்களில் பந்தல்களை அமைக்கவும், கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பண்டிகை காலத்தில் ரயில் பயணங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக 1,654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 693 வழக்குகளில் ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ பக்கம் சாய்ந்த டிராய்: ஏர்டெல், ஐடியா, வோடபோன் அதிருப்தி!!

இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிக்கும் பிரச்சனையில் டிராய் ஜியோவை ஆதரித்துள்ளதால், போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா அதிருப்தியில் உள்ளன. 

இந்த இண்டர்கனக்ட் கட்டணத்தை அதிக அளவில் வசூலிப்பதாக ஜியோ ஏர்டெல் மீது புகார் தெரிவித்திருந்தது. மேலும், இண்டர்கனக்ட் கட்டணம் தேவையில்லை எனவும் கோரிக்கை வைத்தது.


லேண்டு லைன் - மொபைல் மற்றும் மொபைல் - லேண்டு லைன் அழைப்புகளுக்கு இண்டர்கனக்ட் கட்டணங்கள் ஏதும் இல்லை. அதேபோல் மொபைல் - மொபைல் அழைப்புகளுக்கும் இண்டர்கனக்ட் கட்டணங்கள் வேண்டியதில்லை என தெரிவித்தது.


இந்நிலையில், ஒரு அழைப்பைன் இணைக்க 14 பைசாவாக இருந்த இண்டர்கனக்ட் கட்டணம் 6 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இண்டர்கனக்ட் கட்டண முறை வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிராய் தெரிவித்துள்ளது.


மேலும், இந்த கட்டணத்தை தவிக்கபும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் மற்றும் சில போட்டி நிறுவனங்கள் அதிருப்தியில் உள்ளன.

Flash News : அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து செப்.30-க்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: அரசு தரப்பு உறுதி

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார்.
கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.
எனினும் அரசுஊழியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு காட்டியது. மேலும் உடனடியாக பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயணா நீதிமன்றத்தில் கூறியதாவது:
   
அரசு பரிசீலிக்கிறது
அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன.
செப்.30க்குள் அறிக்கை
இது நிதி சார்ந்த விஷயம் என்பதால் பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விஜய் நாராயணா கூறினார்.
   
இடைக்கால உத்தரவு
அப்போது, அறிக்கை தாக்கல் செய்து 2 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிடில் 20 சதவீத நிவாரணம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்த அரசு ஊழியர்கள் இந்த மாத இறுதி வரை காத்திருக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டார்.
   
5 மாத அவகாசம்
இதனிடயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 5 மாத கால அவகாசம் கோரியது தமிழக அரசு.

நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

நாட்டில் முதல் முறையாக ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகள் 40 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
மேலும் வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் தேசிய அளவில் பொதுத்தேர்வை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

JACTTO - GEO போராட்ட வழக்கும் நீதிமன்ற உத்தரவும் - முழு விவரம் :

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.
2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

3.  போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது
4. வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது
5. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்
6 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.

ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது .
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு வைத்து இரண்டு மாத்ததில் அவர்களுக்கான நியமனத்துக்கான இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது . அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1663 முதுகலைப்பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 க்கான நியமனத்தில் விரைந்து தேர்வு நடத்தி அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தியுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் .

ஆசிரியர்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின் 1712 இடங்கள் மேலும் சேர்க்கப்பட்டு மொத்தம் நிரப்படும் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3375 ஆக கொண்டு வந்தது . இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்து பங்கேற்ற தேர்வானது மிக கடினமான போட்டி களமாக இருந்தது . ஜூலை 1 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது . தேர்வுக்கான முடிவு ஆகஸ்ட் 11 ஆம் நாள் வெளியிடப்பட்டது .41 நாளுக்குள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது,   எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29 சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது .

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் அனைத்தும் முறைப்படி சரிப்பார்க்கப்பட்டு , சீனியர், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு போன்ற பல்வேறு வெயிட்டேஜ் மதிபெண்களை கவனித்து அவர்களுக்கான மதிபெண்கள் ஒதுக்கீடு செய்து கடந்த 12 ஆம் நாள் பணிநியமனத்தில் நியமிக்கப்படுவோர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது .

இதற்கிடையில் 2315 பேர் மட்டுமே எழுத்து தேர்வில் தேர்வு பெற்றனர் எனபதால் மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தயராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மீதமுள்ள 1065 காலி பணியிடங்களுக்கான நியமனம் செய்ய கேட்டுகொண்டால் அதற்க்கும் தயாராக இருப்பதாக அறிவித்தார் ஆசிரிய தேர்வு வாரிய தலைவர் .

உண்மையில் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் வேகம் மற்றும் தேர்வு நடத்தும் நாள் அத்துடன் விடைகள், கவுன்சிலிங் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடப்பதாக தேர்வர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.