யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/10/15

கால் டிராப்'புக்கு இழப்பீடு விரைவில் வருகிறது அறிவிப்பு

புதுடில்லி,: மொபைல் போன்களில், பேசும்போதே, அழைப்பு துண்டிக்கப்பட்டால், அதற்காக இழப்பீடுவழங்குவதற்கான திட்டத்தை, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' விரைவில் அறிவிக்கவுள்ளது. தொலைபேசி அல்லது மொபைல் போன்களில் பேசும்போது, திடீரென, அழைப்பு துண்டிக்கப்படுவது அதிகம் நிகழ்கிறது; இதை, 'கால் டிராப்' என்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு இதனால் பண இழப்பு ஏற்படுகிறது. 


சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனங்கள் இதை ஏற்க மறுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு, டிராய் சார்பில், நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள்,அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும், டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம், 15க்குள், கால் டிராப்புக்காக, வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம்.அந்த பரிந்துரையில் இதுபற்றிய விரிவான விவரங்கள் இடம்பெறும். இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது. கால் டிராப்புக்கான காரணம் குறித்தும், தரமான சேவையை வழங்குவது குறித்தும், விரிவான அறிக்கையை, அடுத்த சில நாட்களுக்குள் தாக்கல் செய்யும்படி, தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்கள் இல்லை: பயணிகள் ஏமாற்றம்

ரயில்வே துறை அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட்ட புதிய ரயில் கால அட்டவணையில் புதிய ரயில்கள் அறிவிக்காததால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கச் செயலர் பி. எட்வர்ட் ஜெனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


நிகழாண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், ஆய்வுகள் முடிந்த பிறகு புதிய ரயில்கள் பற்றி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் ரயில் கால அட்டவணையில் புதிய ரயில்கள் அறிவிப்பு வெளியிடப்படும் என பயணிகள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் ரயில்கால அட்டவணையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இன்டர்சிட்டி ரயில் நீட்டிப்பு: நாகர்கோவில் - திருநெல்வேலி - மதுரை வழித்தடத்தில் பகலில் பத்து மணி நேரத்துக்கு ரயில் இல்லாத குறையைப் போக்க திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்கள்: நாகர்கோவில் - காந்திதாம், திருநெல்வேலி - ஹாபா, கன்னியாகுமரி திப்ரூகர் விரைவு ரயில்கள் மற்றும் நாகர்கோவில் - ஷாலிமர், திருநெல்வேலி - பிலாஸ்பூர்ஆகிய ரயில்கள் குமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்தில்நிற்காமல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் கொங்கன் வழித்தடத்தில் மும்பை வழியாக செல்லும் இரண்டு விரைவு ரயில்களை குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்தும் அக். 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட கால அட்டவணையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதைப்போன்று நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் அறிவிப்பு இல்லை.

சிறப்பு ரயில்களாக இயக்கம்:

தெற்கு ரயில்வேயில் புதிய ரயில்கள் அறிவிக்காத காரணத்தால் பழனி - பொள்ளாச்சி, சென்னை - ஹூப்ளி, எர்ணாகுளம் - அங்கமாலி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரையிலும், திருவனந்தபுரம் - மங்களூர் ரயிலை கன்னியாகுமரி வரையிலும் நீட்டித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. 


இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்குக் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால், அந்தப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. அதாவது, மத்திய அரசு ஒரு சதுர அடிக்கு ரூ.600 ஒதுக்குகிறது. ஆனால், கட்டடம் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1,300 வரை செலவாகிறது.

இந்தப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக கூடுதல் நிதியையும்சேர்த்து மாநில அரசு ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி, முதல் கட்டமாக 344 பள்ளிகளைக் கட்டுவதற்காக இப்போது தமிழக அரசின் பங்காக ரூ.380 கோடியும், மத்திய அரசின் பங்காக ரூ.175 கோடியும் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, கட்டடங்களைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை மாநில அரசின் பங்கீடு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பங்கு 75 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் கட்டடப் பணிகள் ஒரு மாதத்துக்குள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலியாக உள்ள 218 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப முடிவு: 4-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம் - அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் திருப்பி ஒப்படைப்பு

அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் காலியாக உள்ள 218 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான 4-ம் கட்ட கலந் தாய்வு வரும் 4, 5-ம்தேதிகளில் நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 


இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (15 சத வீதம்) 398 எம்பிபிஎஸ் இடங்களும், 15 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப் பட்டன. மீதம் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 85 பிடிஎஸ் இடங்கள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட 69 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட 597 எம்பிபிஎஸ் இடங்கள் 3 கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.

இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திருப்பி அளிக்கப்பட்ட 67 எம்பிபிஎஸ் இடங்கள், 8 பிடிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மாநில அரசுக்கான 143 பிடிஎஸ் இடங்கள் 4-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.சென்னை அண்ணாசாலை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத் துவமனையில் கலந்தாய்வு நடை பெற உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

தமிழகத்தில் 50 ரயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி

தமிழகத்தில் சென்னை எழும்பூர், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உட்பட 50ரயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சென்னை சென்ட் ரல், எழும்பூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட8 ரயில் நிலை யங்கள் ‘ஏ-1’ வகை ரயில் நிலை யங்களாகவும், திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உட்பட 42 ரயில் நிலையங்கள் ‘ஏ’ வகை ரயில் நிலையங்களாகவும் வகைப் படுத்தப்பட்டுள்ளன.


இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “பயணிகள் புகார் அளிக்கும் வகையில் புதிய செயலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதிகள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.தமிழகத்தில் மொத்தம் 50 ரயில் நிலையங்கள் ஏ1, ஏ தரம் கொண் டவையாக வகைப்படுத்தப்பட்டுள் ளன. ஏற்கெனவே, சென்னை சென்ட் ரலில் வை-பை வசதி உள்ளது. விரைவில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ரயில்வே வாரியம் உத்தரவு வந்த பிறகுதான் எந்தெந்த இடங்கள் என்பது இறுதி செய்யப்படும்’’ என்றனர்.

அக்.8ல் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 6ஆயிரம் ஆசிரியர் பங்கேற்பு

நாடு முழுவதும் அவசர அழைப்பு எண் 112: டிராய் பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு

இந்தியா முழுவதற்குமான அவசர அழைப்பு எண்ணாக டிராய் பரிந்துரை செய்த 112எண்ணை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த எண் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன.


ஆனால் இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.இதைமாற்றி நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
மேலும் செல்போனில் அழைப்பு வசதி நிறுத்தப்பட்டிருந்தாலும், வேறு வகையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், எந்த சூழலிலும் இந்த 112ஐ எண்ணை மட்டும் அழைக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.எனவே டிராயின் பரிந்துரையை ஏற்று நாடு முழுவதும் விரைவில் அவசர கால உதவி அழைப்புக்கு எண் 112ஐ அழுத்தவும் என்ற அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

விரைவில் PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்

அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், நியமனம் தொடர்பாக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு 500 முதல் 600 காலியிடங்கள் உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பின்னர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கும்.

பெரும்பாலும், கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெற்ற அதேகாலத்திலேயே இந்த ஆண்டும் போட்டித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயத் துறை பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்: பள்ளிக் கல்வித் துறைக்கு விவசாயத் துறையில் பட்டம் பெற்ற 25 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதுதொடர்பாக அரசாணை உள்ளிட்டவை பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், இந்தப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பட்டதாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு.

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.) உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இதற்காக ஒவ்வொரு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியளவில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆயிரம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்துக்கு - சிறந்து விளங்கும் தமிழகம் - என்பதைக் குறிக்கும் வகையில் டான்எக்ùஸல் (பஅசஉலஇஉக) என்று பெயரிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் மிகக் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெறுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு உள்ளது.

இதைப் போக்கும் வகையில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசு ஆகியவை இணைந்து ரூ.2.50 கோடியில் நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்யும் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க உள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் இது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: வாரத்தில் 2 நாள்களில் பள்ளி வேலை நேரம் தவிர்த்து மீதமுள்ள நேரத்தில் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சிக்கான பாடத் திட்டம், குறிப்புகள் போன்றவை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், அரசுப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளின் மூத்த விரிவுரையாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு உருவாக்கப்பட உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் உள்ள ஐஐடி நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குறிப்புகள் உருவாக்கப்படும். இந்தக் குறிப்புகளைக் கையேடாக அச்சடித்து வழங்கும் திட்டம் உள்ளது. பெரும்பாலும் இந்த ஆண்டு அந்தக் குறிப்புகள் நகல்கள் எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு வட்டார அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் பேராசிரியர்களின் வகுப்புகளை எஜுசாட் மூலம் திரையிடலாமா அல்லது அவர்களின் உரைகளை மாணவர்களுக்கு சி.டி.க்களாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கமளிப்பர். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை எப்போது வழங்குவது, வகுப்புகளை எவ்வாறு நடத்துவது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் இறுதி செய்யப்பட்டுவிடும். அக்டோபர் இறுதியிலிருந்து இந்தப் பயிற்சி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.2016 மார்ச்சில் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிபிஎஸ்இ அமைப்பின் இணையதளமான www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 


அதேபோன்று, இந்தப் பொதுத் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள விரும்புவோரும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். தாமதக் கட்டணம் இன்றி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 15 ஆகும். இணையம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800-11-8002 என்ற எண்ணில் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்கள் அழைக்கலாம். சிபிஎஸ்இ பள்ளிகளின் மூலம் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் மூலமாக இந்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

குரூப் 2 தேர்வு: இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக். 5ல் தொடக்கம்; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள 2ஏ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வரும் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


குரூப் 2 தொகுதியில் அடங்கிய நேர்முகத் தேர்வு இல்லாத காலியிடங்களை நிரப்பும் வகையில், எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது. இதைத் தொடர்ந்து, 786 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 5-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமும் கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவு, காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

மதிய உணவு கிடைக்காவிட்டால் மாணவர்களுக்கு பணம் கிடைக்கும்

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும்' என, புதிய, மதிய உணவு திட்ட விதிகள் தெரிவிக்கின்றன. 


நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 13 கோடி குழந்தைகள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, 55 லட்சம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுகின்றனர்.மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்கள் வராதது, உணவுப்பொருள் கிடைக்காதது, எரிபொருள் தீர்ந்து விட்டது போன்ற பல காரணங்களால், சில நேரங்களில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட முடியாமல் போகிறது.

அத்தகைய நிலைமை இனி ஏற்பட்டால், எத்தனை நாட்களுக்கு உணவு வழங்கப்படவில்லையோ, அந்த நாட்களுக்கான பணம், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும்.
இதற்கான விதிமுறைகள், 2013ல், அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்த, உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ளன.அந்த விதிகளை இப்போதைய அரசு பின்பற்ற முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்பை, மத்திய அரசு நேற்று முன்தினம்வெளியிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:மதிய உணவு திட்டத் தின் படி வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா என்பதை, உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, அறிக்கை அளித்த பிறகு தான், மாணவர்களுக்கு பரிமாற முடியும்.
இந்த நடைமுறையும் விரைவில் பின்பற்றப்பட உள்ளது.இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

பள்ளி குழந்தைகளுக்குரூ.45.37 கோடியில் 2 ஜோடி சீருடை: மூன்று கட்ட நிதியளிப்பு

பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு ரூ.45.37 கோடி நிதியை அரசு சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும்.


தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தையல் கூலியாக அரைக்கால் சட்டை, சட்டைக்கு தலா ரூ.22.05ம், முழு கால்சட்டை ஒன்றுக்கு ரூ.55.13ம், முழு நீள சட்டைக்கு (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ரூ.27.56ம், ஸ்கர்ட் ஒன்றுக்கு ரூ.16.54ம், மாணவிகளின் சட்டை ஒன்றுக்கு ரூ.19.85ம் சல்வார் கம்மீஸ் ஒன்றுக்கு ரூ.55.13ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதி சமூகநலத்துறை சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன.முதல் பருவ 2 ஜோடி சீருடைகளுக்கு தையற்கூலியாக ரூ.45 கோடியே 37 லட்சத்து 80 
ஆயிரத்து 827 ஒதுக்கப்பட்டது. அதில், 50 சதவீதத் தொகையான ரூ.21 கோடியே 95 லட்சத்து 27 ஆயிரத்து 676 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ.23 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 151 விரைவில் வழங்கப்பட உள்ளது. 
இந்த நிதியை அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது.
சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மகளிர் சுய உதவிகுழு கூட்டுறவு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும், என்றார்.

ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல கருவூலத் துறை அலுவலர்கள் முடிவு

கருவூலக் கணக்குத் துறை இயக்குநர் மீது நடவடிக்கைக் கோரி, அனைத்து மாவட்ட கருவூலங்கள் முன் வருகிற 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும், 6-ஆம் தேதி ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பில் செல்லவும், தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.


மதுரை மாவட்டக் கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி, சென்னையில் ஆய்வுக் கூட்டத்தின்போது மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு, கருவூலக் கணக்குத் துறை இயக்குநரின் நெருக்கடியே காரணம் எனக் கூறி கருவூலக் கணக்குத் துறையினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதைத் தொடர்ந்து, கருவூலக் கணக்குத் துறை அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் முத்து சிலுப்பன் தலைமையில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துமுத்து சிலுப்பன் கூறியதாவது: மதுரை கூடுதல் கருவூல அலுவலர் இறப்புக்கு காரணமான கருவூலக் கணக்குத் துறை இயக்குநரை பணி இடைநீக்கம் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும். இயக்குநருக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் நிலை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.


கருவூலக் கணக்குத் துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இதன்படி, வரும் திங்கள்கிழமை (அக்.5) அனைத்து மாவட்ட கருவூலங்கள் முன் இரங்கல் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மதுரை மாவட்டத்தில் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் வருகிற 6-ஆம் தேதி அனைத்து கருவூலத் துறை ஊழியர்களும் ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பில் சென்று, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம் என்றார்.