யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/10/15

தமிழகத்தில் 50 ரயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி

தமிழகத்தில் சென்னை எழும்பூர், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உட்பட 50ரயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சென்னை சென்ட் ரல், எழும்பூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட8 ரயில் நிலை யங்கள் ‘ஏ-1’ வகை ரயில் நிலை யங்களாகவும், திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உட்பட 42 ரயில் நிலையங்கள் ‘ஏ’ வகை ரயில் நிலையங்களாகவும் வகைப் படுத்தப்பட்டுள்ளன.


இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “பயணிகள் புகார் அளிக்கும் வகையில் புதிய செயலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதிகள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.தமிழகத்தில் மொத்தம் 50 ரயில் நிலையங்கள் ஏ1, ஏ தரம் கொண் டவையாக வகைப்படுத்தப்பட்டுள் ளன. ஏற்கெனவே, சென்னை சென்ட் ரலில் வை-பை வசதி உள்ளது. விரைவில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ரயில்வே வாரியம் உத்தரவு வந்த பிறகுதான் எந்தெந்த இடங்கள் என்பது இறுதி செய்யப்படும்’’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக