யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/17

8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - இல் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு 31.12.2015 அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு அறிவுரை!


அதிகவேகமாக செல்வதை தடுக்க வாகனங்களில் கட்டுப்பாட்டுக் கருவி-சாலைபோக்குவரத்து துறை முடிவு!!!

                                      

மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு: நிதி ஆயோக் பரிந்துரையால் மத்திய அரசு திட்டம்

ராகி, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் ஒன்றாக கம்பு விளங்குகிறது
. இதில் மற்ற தானியங்களை விட இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வறட்சிக் காலங்களிலும் இதன் விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே அதன் பயன்பாட்டை நாடு முழுவதிலும் ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய நிதி ஆயோக், மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு அளிக்கவும், பொதுமக்களுக்கு ரேஷன் மூலமாக கம்பு தானியம் வினியோகிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, அதிக சத்துள்ள கம்பு தானியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் எங்கள் அமைச்சகம் இறங்கியுள்ளது. மதிய உணவுக்கும் ரேஷன் கடைகளுக்கும் இதை விநியோகிக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. தற்போது கம்பு சேமிக்கும் வசதி குறைவாக இருப்பதால் அதை அதிகரித்த பிறகு இதன் விநியோக அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே குறைந்த நீரில் அதிக தானிய விளைச்சல் பெறுவது குறித்து இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலும் ஆய்வு செய்து வருகிறது. இதன் மீதான ஆய்வறிக்கையை கவுன்சில் விரைவில் வெளியிட உள்ளது. இதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் ‘விவசாயிகள் உற்பத்தி அமைப்பு’ என ஒன்றை ஏற்படுத்தி, கம்பு உள்ளிட்ட அனைத்து தானியங்களும் பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

கம்பு நல்ல விளைச்சல் தந்தாலும்,அதற்கு ஆதரவு குறைவாக இருப்பதால் இதை விளைவிக்க விவசாயிகள் முன்வருவதில்லை என மத்திய அரசு கருதுகிறது. தற்போது வளரும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் இருப்பதால் அதை சரிசெய்யவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் கம்பு பயன்பாடு குறைந்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 72 % நகரங்கள், 73% கிராமங்களில் இதன் பயன்பாடு குறைந்துள்ளது. அரிசி பயன்பாடு 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதற்கு கம்பு உணவை சமூக அந்தஸ்துக்கு குறைவாக கருதுவதும் ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில் அதை மதிய உணவு திட்டத்தில் விநியோகிக்க சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பும் என்பதும் மத்திய அரசின் அச்சமாக உள்ளது.

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்துடன் கூடிய 13 வகை கலவை சாதம் மற்றும் முட்டை மசாலாக்கள் வழங்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பனில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து 
நிலைகொண்டுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.

புதன்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கை அம்பந்தோட்டாவிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரிக்கு 500 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வியாழக்கிழமை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருக்கும். இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, எஸ்.பி. பட்டிணம், கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் யாரும் ஆழமான கடற்பகுதிற்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பாம்பன் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் மணிக்கு 50 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக காற்று வீசியதால் பாம்பன் ரயில் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.

BLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்ல ஆசிரியர்களுக்கு திருப்பூர் CEO- அனுமதி...

                                                  

ஆசிரியர் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து நடிகர் கமல் கருத்து!!!

பள்ளிவரும் பிள்ளைகள்,
பயின்றுவரும் கிள்ளைகள்;

தற்கொலைசெய்து சாவு!
இக்கொலையில் ஆசான்தானே காவு?
பள்ளி வருவது படிக்க- கூடாது
சுள்ளி எடுத்து அடிக்க,
ஆசிரியருக்கு கட்டுப்பாடு
ஆசு களைவதில் தட்டுப்பாடு ;
ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும்,
வழுக்கிப் போனால் தடுக்க வேண்டும்;
தடுக்காவிட்டால் வேலைப்பழி!
தடுத்துவிட்டால் கொலைப்பழி?
கண்டிக்கவும் உரிமையில்லை!
தண்டிக்கவும் உரிமையில்லை!
அழைத்துவா பெற்றோரை,
அறியட்டுமுன் அக்கப்போரை;
இதுதான் ஆசானெடுத்த முடிவு!
இனிமேல் அவருக்குண்டா விடிவு?
'காப்பியடித்ததை' கண்டறிந்தால்
கைபிடித்திழுத்த 'காமுகன்' பட்டம்!
'தப்பென' கண்டித்தால்
தற்கொலையால் 'காலன்' பட்டம்!
அழியாத கல்வி கொடுத்தவன்,
அழிகிறானே குற்றம் தடுத்தவன்;
போதிக்கிறவன் பேச்சு,
பேதலித்தே போச்சு;
குருவென எம்மை வணங்கவும் வேண்டாம்,
எமனென எம்மிதயம் துளைக்கவும் வேண்டாம்;
எம்மிதயமும் சதையால்தானே ஆனது-இன்று
எம்வாழ்வுதானே சிதையாகிப் போனது!
வேதனையுடன்,
கமல்

வணங்குகிறோம் உம்மை எம் இன்னல்களை அறிந்து குரல் கொடுத்தமைக்கு...

இச்சமூகத்தை மாற்றிடலாம் என நினைத்து ஏமாற்றத்துடன் பணிபுரியும் ஓர்ஆசிரியர்

நீட்' பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, 'நீட்' தேர்வு பயிற்சி மைய மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:
'நீட் 'தேர்வுக்கு பாட வாரியாக நிபுணர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சியளிக்க தமிழக அரசுடன் புதுடில்லியில் உள்ள 'ஸ்பீட்' பயிற்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் 100 மையங்களை தேர்வு செய்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. தேனியில் இப்பயிற்சிக்கு 2016 மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.11 மையங்களில் 3ல் பயிற்சி துவங்கியுள்ளன. மற்ற கல்வி மாவட்டங்களில் பயிற்சிக்கான ஆன் -லைன் பதிவுகள் தொடர்ந்து நடக்கிறது, என்றார்.

பள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா?

மாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நிபுணர்கள் நியமனம் : தமிழகத்தில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களுக்கு, கல்வி மாவட்டம் வாரியாக, உளவியல் கவுன்சிலிங் வழங்க, மூன்று உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், கூடுதலாக, ஏழு மனோதத்துவ நிபுணர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டது.
இதற்காக, உளவியல் கவுன்சிலிங் வாகனங்களும் வாங்கப்பட்டன.ஆனால், எந்த பள்ளியிலும், இந்த கவுன்சிலிங் நடத்தப்படவில்லை; மனோதத்துவ நிபுணர்களும் நியமிக்கப்படவில்லை.
'பேஸ் புக்' : பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு, உளவியல் கவுன்சிலிங் செய்கின்றனர். இந்நிலையில், சமீப காலமாக பள்ளி மாணவ - மாணவியர், மனதளவில் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சக மாணவர்களுடன் சகஜமாக பழகுவதில்லை. ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போட்டி போடுவது, ஒழுக்க கல்வி கிடைக்காதது, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' மற்றும், 'ஆன்லைன் கேம்ஸ்' என, படிப்பு நேரத்தை வீணடிப்பது என, பள்ளிகளில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

'ஆசிரியர்கள், பெற்றோர் கண்டித்தால் தற்கொலை செய்வது என, விபரீதமான முடிவுகள் எடுக்கின்றனர். எனவே, மாணவர்களை பக்குவப்படுத்தவும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே, ஒருமித்த உணர்வை ஏற்படுத்தவும், கவுன்சிலிங் தேவை. அதனால், பள்ளிகளில் செயல்படாமல் முடங்கியுள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

CPS ACCOUNT SLIP – PUBLISHED ONLINE :

தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!

இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.

4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'

வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 16 வயதுடைய நான்கு மாணவியர், பிளஸ் 1 படித்து வந்தனர். 
இவர்களை ஆசிரியர் திட்டியதால், நவ.,24ல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்ட கல்வி அலுவலர், அமுதா, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார். அதில் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியைகள், மாணவியரை மிகவும் அசிங்கமாகவும், சாதி பெயரை குறிப்பிட்டு திட்டுவதும் தெரியவந்தது.
பட்டியல் தயாரிப்பு : இதைடுத்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியைகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், பள்ளியில் பணியாற்றும், 48 ஆசிரியைகளில், 18 பேர் தற்காலிகமாக பணியாற்றி வருவது தெரியவந்தது.தற்காலிக ஆசிரியர்கள், 18 பேரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று கூண்டோடு டிஸ்மிஸ் செய்தார். மேலும், இவர்கள் வேறு எந்த அரசு பள்ளியிலும் பணியாற்றவும் தடை விதித்துள்ளார்.மாணவியர் தற்கொலை விவகாரத்தில், தற்காலிக ஆசிரியர்கள் பலர் காரணமாக இருந்துள்ளதால், அவர்கள் பனப்பாக்கத்தை விட்டு செல்லவும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என, தனிப்படை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

வீடுகளில் டியூஷன் : இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியைகள் சிலர், தங்கள் வீடுகளில், 'டியூசன்' எடுத்து வருவதாகவும், இதில், மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவியரை சேரும்படி கட்டாயப்படுத்துவதாகவும் விசாரணையில் மாணவியர் கூறினர்.
இதையடுத்து, 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், யாரும் தங்கள் வீடுகளில் டியூசன் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா எச்சரித்துள்ளார்.வேலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மன நல மருத்துவர் நேற்று பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பு, பிளஸ், 1, பிளஸ் 2 மாணவியரை தனித்தனியாக அழைத்து 'கவுன்சிலிங்' செய்தார்.

தமிழக அரசில் இளநிலை ஆய்வாளர், தொல்பொருள் வேதியியலாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் மருத்துவம், தொழில் மற்றும் வர்த்தகம், தொல்பொருள் துறைகளில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், இளநிலை வேதியியலாளர், தொல்பொருள் வேதியியலாளர் போன்ற 24 பணியிடங்களுக்கு வரும் பிப். 17, 18-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 2க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Analyst - 14

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800 (PB2) 4,400/- G.P]
பணி: Junior Chemist in Industries and Commerce Department - 06 
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800/- (PB2) 4,400/- G.P
பணி: Chemist in Industries and Commerce Department - 03 
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800/- (PB2) 5,100/-G.P
பணி: Archaeological Chemist in Archaeology Department - 01 
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100/- (PB2) 5,400/-G.P
எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிச. 20-ஆம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த டிச. 22 ஆம் தேதி கடைசி நாள்.

எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்
அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்வோர் மட்டுமே ரூ.150 செலுத்த வேண்டும்.

ஏற்கெனவே நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய -
http://www.tnpsc.gov.in/notifications/2017_28_not_junior_analyst_chemist.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் சத்துணவு உண்ணும் காட்சி!

                                 

மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் விருது!

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவுக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

                                          

மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றதிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக இந்த விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. 
வருகிற டிசம்பர் 3ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கவுள்ளார்.குடியரசுத் தலைவர் விருது பெறவுள்ள மாவட்ட ஆட்சியர்வீரராகவ ராவுக்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இவர் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு, தூய்மை பாரதம் ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.