யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/18

நீதிக்கதை---சிந்தனை கதைகள்,

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.


“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

*நீதி*: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட, ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர்

நான்தான் உனக்குப் புள்ள...மாசம் ரூ.2,500 அனுப்புறேன்!"- தவித்த மூதாட்டியைத் தத்தெடுத்து, நெகிழ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

 கஜா புயலால் பாதிக்கப்பட்ட,  ஐந்து  பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், பூபதி. 13 லட்சம் வரை ஸ்பான்ஸர் பிடித்து, தான் பணிபுரியும் அரசுப் பள்ளியைத் தனியார் பள்ளிகளைவிட அதிக வசதிகளைக் கொண்ட பள்ளியாக மாற்றியிருக்கிறார்.

இவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இவரின் நண்பரானவர் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்துள்ள மருதவனம் கிராமத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் அமுதா. சமீபத்தில் இந்தப் பகுதியை கஜா புயல் சிதைத்துப்போட, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்திருக்கிறார் பூபதி.

அமுதாவிடம் பேசி, 'புயலால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் என்னால் உதவ முடியாது. யாராவது முதியவர் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள், அவருக்கு நிரந்தரமாக உதவுவோம்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, ஆசிரியை அமுதா மருதவனத்தில் தான் பெற்ற ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டுத் தனித்து வாழ்ந்த பாக்கியம் பாட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அவர் வசித்துவந்த ஒட்டுக் குடிசையையும் பழைய பாத்திரங்களையும், பழைய நைய்ந்த சேலைகளையும் கஜா புயல் சிதைத்துப் போட, பக்கத்து வீட்டில் தற்காலிகமாக வசித்துவந்திருக்கிறார். அவரது கதையைக் கேட்டு இதயம் கசிந்த பூபதியும், அவரது ஆசிரியை மனைவியான பிருந்தாவும், மளிகை சாமான்கள், 50 புடவைகள், சமையல் செய்யப் பயன்படுத்தும் சாமான்கள் சகிதமாகப் போய் இறங்கி இருக்கிறார். பாக்கியம் பாட்டி கையைப் பிடித்து,'என்னை மகனா நினைத்துக்கொண்டு இத வச்சிக்க.' என்று சொல்ல, கரகரவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

'கொள்ளு விரையாட்டம் அஞ்சு பிள்ளைகளைப் பெத்தேன். ஆனா, ஆளானதும் என்னை அம்போன்னு தவிக்கவிட்டுட்டு, தனியா போய்ட்டாங்க. என்னை சீந்தக்கூட நாதியில்லை. மாட்டுக்கொட்டகையைவிட கேவலமான குடிசையில் உசுரக் கையில புடிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டிருக்கேன். 75 வயசாயிட்டு.

முன்னமாதிரி பொழப்புதழப்புக்கும் போக முடியலை. அரசாங்கம் தர்ற 1000 ரூபா முதியோர் உதவித்தொகையில சீவனம் நடந்துச்சு. இலவச ரேஷன் அரிசி வாங்கி திங்கக்கூட வழியில்லாம ரேஷன் கார்டைகூட பாவி புள்ளைங்க தூக்கிட்டுப் போயிட்டுங்க. இந்த நிலையில புயல் வந்து, என்னோட வீட்டையும், சாமான்களையும் சேதம் பண்ணிட்டு. வாழ்க்கையே இருண்டுகிடக்கு தம்பி' என்று நெக்குருகிச் சொல்லியிருக்கிறார்.

அதைக் கேட்டு கண் கலங்கிய பூபதி, "உன்னை என் தாயா தத்தெடுத்துட்டேன். உன் கடைசி காலம் வரைக்கும் நான்தான் உனக்குப் புள்ள. குடிசைபோட எவ்வளவு செலவாகும்' என்று கேட்டிருக்கிறார். 'ஐயாயிரம் வரை செலவாகும்' என்று சொல்லியிருக்கிறார். 'அதை அமைச்சுத் தர்றேன்' என்றதோடு, கையில் இரண்டாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, "உன் கடைசி காலம் வரை உனக்கு மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புகிறேன்" என்று சொல்ல, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வராமல் பாக்கியம் பாட்டி நா தழுதழுத்திருக்கிறார்.

பூபதியிடமே பேசினோம். "அந்த அம்மாவின் கதையைக் கேட்டதும் மனசு நொறுங்கிப் போயிடுச்சு. கஜா புயலில் மருதவனம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஆனா, தனது அம்மா கதி என்னன்னு ஒரு பிள்ளையும் வந்து அவரை பார்க்கலை. அது புயல் செய்த கொடுமையைவிட அவலம். அதனால், நானும் என் மனைவியும் அந்த மூதாட்டியைத் தாயாகத் தத்தெடுப்பதுனு முடிவுபண்ணி மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புறதா சொல்லியிருக்கிறோம்.

அதோட, மாசம் ஒரு தடவை போய் அவரைப் பார்த்து, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்றதா இருக்கோம்.  அவருக்குப் புயல் பாதித்த அல்லலைவிட, தன் பிள்ளைகள் தன்னை வந்து பார்க்கலையேங்கிற மனக்குமுறல்தான் அதிகம். அந்தக் குறையை நானும் என் மனைவியும் ஆசிரியை அமுதா உதவியோடு போக்கியிருக்கிறோம்" என்றார் அழுத்தமாக

வங்கக்கடலில் உருவாகுது புது புயல்.. இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைதான்

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்கிறது. இதற்கெல்லாம் காரணம், காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்றாலும், இது வலுவடைந்து அடுத்த சில நாட்களில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது. காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால், 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை, 6ம் தேதிவாக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய பிறகு அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 4 நாட்களில் அதாவது டிசம்பர் 10ம் தேதி வாக்கில், புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.

சிபில் ஸ்கோர் பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்

கடன் சம்பந்தப்பட்ட விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?

*CIBIL என்றால் என்ன?*

Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.

*யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?*

க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.

*இதனால் என்ன பயன்?*

நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.

*கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?*

ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.

*என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?*

க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.

*ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?*

சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும். 

*சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?*

இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.

*தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?*

சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.

*சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?*

க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.

*கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?*

ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.

*சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?*

இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.

ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.

அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.

*நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?*

குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.

சில வங்கிகள், சிபில் ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக் கடன் போன்ற கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. எனவே உங்கள் சிபில் ஸ்கோர் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடக்கும்போது பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள்: பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் அறிவிப்பு

தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:. கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு மாத ஊதியம் ₹7700 அரசு வழங்கி வருகிறது.
பகுதி நேர ஆசிரியர்களாகவே பணியாற்றி வரும் நாங்கள்  வாழ்வாதாரத்துக்கு தேவையான ஊதியம் இல்லாமல் முடங்கியுள்ளோம்.

அதனால் அரசை கண்டித்து பல முறை போராட்டங்கள் நடத்தியுள்ளோம். பணி நிரந்தரம் கேட்டும் கோரிக்கை வைத்துவிட்டோம்.கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுவிட்டோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ நடத்தும் வேலை நிறுத்தப் போராட்ட காலத்தில்  பள்ளிக்கு சென்று வகுப்பு நடத்த இயலாது. எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம், பங்கேற்று பள்ளிகளை புறக்கணித்து  போராட்டத்தில் கலந்து கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6-8 வகுப்புகளுக்கு ஒரே மாதிரியான பருவத்தேர்வுகள் நடத்துதல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!! & தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு!!!



பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை!

பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பினர், 1,303 பேருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஜன., மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்புள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டு மூலம், நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அதன் மூலம், பள்ளி மாற்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டில் உள்ள சிம்கார்டை உபயோகித்தால், மாணவனின் சரித்திரமே, அந்த பள்ளிக்கு தெரிய வரும்.பயோ மெட்ரிக் முறையாக, பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், அதுகுறித்து பெற்றோருக்கு, குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை. 'உள்ளேன் ஐயா' என்பதே, வகுப்பறையில் இனி தேவைஇல்லை. மாணவன் பள்ளிக்குள் நுழையும் போதே, அனைத்து விபரங்களும் பதிவாகி விடும். எங்களுக்கும், லேப் டாப் வேண்டும் என ஆசிரியர்கள் கேட்கின்றனர்.


இதுகுறித்து, மத்திய அரசிடம் பேசி வருகிறோம். ஆசிரியர்களுக்கும், லேப் டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பினருக்கு டேப் வழங்கப்படும். இதன் மூலம், இரு மொழிகளில் கற்றுத்தரப்படும். கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 7,500 பேரில், 800 பேரை நியமிக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:பொதுத்தேர்வுக்கான மையங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும். 'கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில், நடத்தப்படும் தேர்வை, மாற்றி அமைப்பதில், சிரமம் இருப்பதாக துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், அதையும் அரசு பரிசீலித்து வருகிறது. 10 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பொதுத்தேர்வு உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:யு.ஜி.சி.,யின் அனுமதியுடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், முழு நேர, பகுதிநேர பிஎச்.டி., ஆய்வு படிப்பு நேரடி முறையில் நடத்தப்படுகிறது.

இதில், 2019க்கான சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் பாடங்களுக்கு வரும் 29க்குள் விண்ணப்பிக்கலாம்.விபரங்களை www.tnou.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி! மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26,000 மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்களின் துறையின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அனைத்து துறையிகளிலும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதிலிருந்து அவர் பணியை திறம்பட செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

சென்னை உட்பட, எட்டு கடலோர மாவட்டங்களுக்கு, இன்று கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழை பெய்யலாம்.நாளை, சில இடங்களில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும். நாளை மறுநாள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று லேசான மழை பெய்தது. மாலை முதல் அதிகாலை வரை, மலைப்பகுதி மாவட்டங்களில் பனி மூட்டம் காணப்பட்டது.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: இந்தாண்டு நடத்தப்படுமா

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு:
இந்தாண்டு நடத்தப்படுமா
நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாத முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, இந்தாண்டு நடத்தப்படுமா என, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2 ஆயிரத்து 488 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கலை பிரிவை அடிப்படையாக கொண்டு 9 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் 50 சதவீமும், நேரடி நியமனத்தில் 50 சதவீதமும் முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது.கடந்த 4 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் வழங்கப்படவில்லை.அரசு சார்பில் 1:3 என்ற விகிதப்படி முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் விகிதாசாரத்தை மாற்றி அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
1:1 விகித முறையில் பணியிடம் நிரப்ப வேண்டும்' என்றார்

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டவுடன் 40k வாங்கும் அவர்களுக்கு இன்னும் உயர்வா??என துடித்து எழும் நம் தோழர்களுக்கு இந்த பதிவு::-

உங்களுக்கு தெரியுமா? இந்த 40000 அவர்கள் எ ப்படி வாங்கினார்கள் என்று???? சிம்பிள்! ஆண்டாண்டு காலமாக இப்படி அழுது உண்ணாவிரதம் இருந்து சிறைக்கு சென்று ! வேலை நீக்கம் அடைந்து என படி படியாக ஆயிரம் ஐநூறு என சிறுக சிறுக வந்துதான் இன்று உங்கள் கண்களுக்கு விரியும் 40kஆனது! சரி உங்கள் பக்கத்து வீட்டிலோ தெரு விலோ ஒரு பண்ணை வீடு ! லக்சுரி கார் ! விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் என இருப்பவர்கள் யார் என பாருங்கள், அரசியல் வாதியோ தொழிலதிபரோ இருப்பார் ஆசிரியரோ வங்கி ஊழியரோ கிளார்க் கோ இருக்க மாட்டார் வருமான வரியை நாமெல்லாம் எவ்வளவு கட்டவேண்டும் என்று ஆடிட்டருடன் பேசி முடிவு 
செய்வோம் இவர்களுக்கு பிடித்து கொண்டு மீதியை கொடுக்கும் ! இன்று நாம் பாராட்டும் காவல் துறை அதிகாரிக்கு பொன்மாணிக்கவேல் அரசு அலுவலர் தான் டெல்லியில் சிறந்த அரசு அதிகாரி என பரிசு வாங்கிய சகாயம் ஐயா அரசு அதிகாரி தான்! இவர்கள் கேட்கும் ஆயிரம் ஐநூறு உங்கள் பாக்கெட்டுகளில் இருந்து பிடுங்குவது போல கோபமாக எதிர்க்கும் நீஙீகள்...கோடி கணக்கில் நம் வரிப்பணத்தில் கொள்ளையடிக்கும் அரசையோ அரசு காண்ட்ராக்ட்டர்களையோ ஏன் எதற்க்கு என கேட்க முடியாது! சரி இவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் உங்களில் வேலை இல்லாத நண்பருக்கு அந்த வேலையை தருவோம்! யாராவது அரசுக்கு உதவ தயாரா? சம்பளம் கேட்காத, உயர்வு கேட்காத, விடுமுறை கேட்காத,  லோன் கேட்காத, அந்த நல்லவர்கள் யார் யார்??  அது சரி நாங்கள் வேலை இல்லாமல் இருக்கோம் இவர்களுக்கு சம்பள உயர்வா என கேட்கும் சகோதரர்கள் அரசு வேலைக்கான தரம் அறியும்  தேர்வில் ஏன் வெற்றி பெறவில்லை???  இன்று இவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் நம்ம தினசரி வாழ்க்கை பாதிக்கும் என நினைக்கும் நாம் அரசு நடத்தவேண்டிய பஞ்சாயத்து எலக்ஷனை நடத்தி ஊருக்கு ஒரு தலைவரை போடலைன்னு கொதிக்கலையே ஏன்? 19தொகுதில  MLAஇல்லையே அதனால் அந்த தொகுதி நல்லது கெட்டத எடுத்து சொல்லி கேட்டு பெற MLA வேண்டும்னு கதறலயே ஏன்? கஜா புயல் சுஜா புயல்னு வந்தா நாமெல்லாம் டிவி ல பார்த்து உச்ச கொட்டும் போது மழையில் மிண் கம்பத்தில் உட்கார்ந்து கொண்டு இறங்கிவந்து உணவருந்த நேரமின்றி கம்பியில் அமர்ந்து உணவருந்தும் மின் ஊழியரை பாராட்டினோம் ஆனால் ஊதிய உயர்வுன்னதும் நம்ம பீரோவில யாரோ கை விடாடார்போல துடிக்கிறமே எப்படி???? கல் குவாரியை தோண்டும் போது இரவாகி விட்டதால் அங்கேயே படுத்து கொண்டிருந்த அரசு அதிகாரியை பாராட்டினோமே இப்ப அவர் ஊதிய உயர்வு கேட்டதும் உட்காற்ற இடத்தில் சூடு வைத்த மாதிரி எரிகிறோமே அது ஏன்? பொண்டாட்டி புள்ளியை சென்னைல விட்டுட்டு போலீஸ் அதிகாரி எவன் வீட்டு நகையையோ பணத்தையோ மீட்க மொழி தெரியாத வட இந்தியாவில் சுடப்பட்டு இறந்தபோது அய்யோ பாவம் என்றோமே! அவரின் சக ஊழியர் ஆயிரம் ரூபாய் உயர்வு கேட்டதும் நம் அப்பா எழுதி வைத்த சொத்து பத்திரத்தை பிடுங்கியது போல பதறுகிறோமே ஏன்? ஒரு ஆக்ஸிடென்ட் கொலை என்றதும் பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு வீட்டில போய் படுத்துக் கொள்வோம்,  ஆனால் அந்த இடத்திலேயே அன்றைய இரவைக் கழிக்கும் காவலர் ஆகட்டும் தாசில்தார் மருத்துவ ஊழியர்கள் சாலை பணியாளர் போன்ற அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதை நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்! 12 மாதங்களில் ஒரு மாதம் பள்ளி விடுமுறை விடுகிறார்கள் அந்த ஒரு மாதம் கூட நாம் நம் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் எங்காவது ஊருக்கு  அனுப்பலாமா விடுமுறை பள்ளியில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறோம் அந்தப் பதினொரு மாதங்கள் இந்த குழந்தைகளுக்காக வேலை செய்யும் அந்த ஆசிரியர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா?? அவர்கள் ஊதிய உயர்வு கேட்டதும் நம் வீட்டில் பாதியை பிரித்துக்கொடுக்க கேட்டது போல் துடிக்கிறோமே ஏன்? இன்று நமது மாநில அரசும் மத்திய அரசும் உலக வங்கி அந்த வங்கி இந்த வங்கிகளிடம் கடன் வாங்கி நாட்டின் கடன் எத்தனை ஆயிரம் கோடி என்று கூறுகிறார்களே அதில் எத்தனை ஆயிரம் கோடியை இந்த அரசு ஊழியர்களிடம் கொடுத்து விட்டார்கள் என்று என்றாவது நீங்கள் கேட்டதுண்டா? அதனால் நாம் அவர்களுக்கு உதவி  செய்ய தேவை இல்லை அவசியமின்றி அவர்களை உதாசீனப்படுத்த வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள் , நம் குடும்பத்திலும் யாரோ ஒரு அரசு ஊழியர் இருப்பார்,  இல்லை நாளை வருவார் என்பதை மனதில் வைத்து நாம் நமது வேலையை பார்ப்போம்! அவர்கள் அவர்கள்  வேலையை பார்க்கட்டும் நன்றி  

District level training schedule for Teachers on new Text Book TNSCERT Proceedings



2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு.

(1) சனவரி****                          -14 திங்கள்-    போகிப் பண்டிகை            21- திங்கள் -தைப்பூசம்         
(2)      பிப்ரவரி- ***            19- செவ்வாய்- மாசி மகம்                    
(3) மார்ச் - ***                    4- திங்கள்- மகாசிவராத்திரி.   6 புதன் -சாம்பல் புதன்                   
(4) ஏப்ரல்-***             3- புதன் -ஷாபே மேராஜ் 14- ஞாயிறு- அம்பேத்கர் பிறந்த நாள்.                    18- வியாழன்- பெரிய வியாழன்             19- வெள்ளி- சித்திரை பௌர்ணமி         20- சனி -ஷாபே பராஅத்                21- ஞாயிறு- ஈஸ்டர்                 
(5) மே - ***                        7- செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்                      18- சனி- புத்தர் ஜெயந்தி                  
(6) ஜுன் - ***           1- சனி- ஷாபே காதர்     
(7) ஜூலை ***   விடுப்பு இல்லை.             
(8)  ஆகஸ்ட்-***          3- சனி- ஆடிப்பெருக்கு      9- வெள்ளி- வரலெட்சுமி விரதம்.                 11- ஞாயிறு- அர்ஃபா                15- வியாழன்- ருக்உபகர்மா.      16- வெள்ளி- காயத்ரி ஜபம்    
(9) செப்டம்பர். ***      1- ஞாயிறு- ஹிஜ்ரி வருடம்                    2- திங்கள்- சாம உபகர்மா             11- புதன்- ஓணம் பண்டிகை.           28- சனி- சர்வ மஹாளய அமாவாசை     
(10) அக்டோபர்***    -28 திங்கள்- தீபாவளி நோன்பு
(11)  நவம்பர்.***        2- சனி- கல்லறை திருநாள்              12- செவ்வாய்- குருநானக் ஜெயந்தி.
 (12)  டிசம்பர்***          8- ஞாயிறு- கார்வீன் முகைதீன்           10- செவ்வாய்- கார்த்திகை தீபம் 24- செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ் 31- செவ்வாய்- நியூ இயர் ஈவ்

FLASH NEWS:பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக 800 கணினி ஆசிரியர்கள் நியமனம்:மாண்புமிகு கல்வி அமைச்சர்:

பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன்
பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும்,பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும் பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.


                                 


ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பினர் 1,303 பேருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது*

ஜன., மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்புள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டு மூலம், நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அதன் மூலம், பள்ளி மாற்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்

ஸ்மார்ட் கார்டில் உள்ள சிம்கார்டை உபயோகித்தால், மாணவனின் சரித்திரமே, அந்த பள்ளிக்கு தெரிய வரும்.பயோ மெட்ரிக் முறையாக, பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், அதுகுறித்து பெற்றோருக்கு, குறுஞ்செய்தி சென்றுவிடும்

பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை. 'உள்ளேன் ஐயா' என்பதே, வகுப்பறையில் இனி தேவைஇல்லை

மாணவன் பள்ளிக்குள் நுழையும் போதே, அனைத்து விபரங்களும் பதிவாகி விடும். எங்களுக்கும், லேப் டாப் வேண்டும் என ஆசிரியர்கள் கேட்கின்றனர். இதுகுறித்து, மத்திய அரசிடம் பேசி வருகிறோம்
ஆசிரியர்களுக்கும், லேப் டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பினருக்கு டேப் வழங்கப்படும். இதன் மூலம், இரு மொழிகளில் கற்றுத்தரப்படும்


 கம்ப்யூட்டர் ஆசிரியர்களில்,ரூ  7,500 சம்பளத்தில், 800 பேரை நியமிக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்


பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது.


*பொதுத்தேர்வுக்கான மையங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும். 'கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில், நடத்தப்படும் தேர்வை, மாற்றி அமைப்பதில், சிரமம் இருப்பதாக துறையினர் தெரிவித்துள்ளனர்*


 *இருந்தாலும், அதையும் அரசு பரிசீலித்து வருகிறது. 10 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பொதுத்தேர்வு உள்ளது

 *இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்*

SOURCE :DINAMALAR WEBSITE

Flash News : 10th PUBLIC EXAM - NOMINAL ROLL DATE EXTEND UP TO 14/12/2018 :

10-12 -18 முதல் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி :


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நக்சலைட்டுகளா ? எச்.ராஜா அவர்களின் கருத்திற்கு ஆசிரியர்கள் கண்டனம்

EMIS-10 ஆம் வகுப்பு மாணவர்களின் கூடுதல் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கி உத்தரவு