யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/16

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த உணவுகளை சாப்பிடுங்க

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய்

சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

சிறந்த 25 பொன்மொழிகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்புமற்றும்

தமிழ் இலக்கண இலக்கியம்

தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன்

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும்

தேசிய கீதம் - விளக்கம்

புதிய வருமான வரி திட்டம் 
4 லட்சம் வரை வரி இல்லை 
4 லட்சம் முதல் 10 லட்சம் =10% வரி
10 லட்சம் முதல் 15 லட்சம் =15%வரி 
15 லட்சம் முதல் 20 லட்சம் =20%வரி
20 லட்சத்திற்கு மேல் 30%வரி

INCOME TAX SLABS TO BE REVISED

Upto Rs. 4 lacs salary  = NIL tax
From 4 lacs to 10 lacs =  10% tax
From 10 lacs to 15 lacs = 15% tax
From 15 lacs to 20 lacs = 20% tax
Above Rs. 20 lacs          = 30% tax

- Source: CNBC awaazTV

போலீஸ் ஸ்டேஷன்களில் இனி ‘ரிசப்ஷனிஸ்ட்’..! 3,647 பெண் போலீசார் நியமனம்!!

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரிடம் கரடுமுரடான அணுகுமுறையை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல் நிலையங்களுக்கு புகாரளிக்க வருவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மேலும்,
காவல் நிலையங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காவல் நிலையங்களில் புகாரளிக்க வருவோரை இன்முகத்துடன் வரவேற்று, குறைகளை கனிவுடன் கேட்டறிய, 1,007 பெண் போலீசார் உள்ளிட்ட 3,647 பேர் காவல்நிலை வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள வரவேற்பாளர்களுக்கு, சென்னை காவலர் பயிற்சி பள்ளி, மாவட்டம், மாநகர தலைமை அலுவலகங்களில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், புகாரளிக்க வருவோரை வரவேற்று, குறைகளை கனிவுடன் கேட்டறிந்து மேலதிகாரிக்கு தெரிவிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் தேவைகளை உணர்ந்து, நல்ல முறையில் அணுக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்!!

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.

பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது: தற்போதைய சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை 100 மாணவர்களில் 99 பேர் 6 -ஆம் வகுப்பையும், 95 சதவீதம் பேர் 10 -ஆம் வகுப்பையும், 80 சதவீதம் பேர் பிளஸ் 2 வகுப்பையும் நிறைவு செய்கின்றனர்.அமெரிக்காவில் கூட கல்லூரி படிப்பை 100 -க்கு 30 சதவீதம் பேர் மட்டுமே நிறைவு செய்யும் நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 சதவீதம் பேர் கல்லூரி படிப்பை நிறைவு செய்கின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் இதை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாணவர்களின் கற்கும் திறனை வெளிப்படுத்தச் செய்வது, படிப்பு தவிர தனித்திறனை வளர்க்கும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பிளஸ் 2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தைஅறிமுகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர். விழாவில் அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்ஸாண்டர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு..? மறுப்பு தெரிவித்துள்ள அரசு !!

உத்திர பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடும். எதிர்க்கட்சியினர் நரேந்திர மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பை
எதிர்த்து வரும் நிலையில் வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாக இந்தியா டூடே சேனல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.



எப்போது அறிவிக்கப்படும்

உத்திர பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய வருமான வரி உச்சவரம்பு எப்படி இருக்கலாம்?

இந்திய டூடேவின் அறிக்கை படி 4 முதல் 10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரியும், 10 லட்சம் வரியும், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 15 சதவீத வரியும், 15 முதல் 20 லட்சம் வரை வருமான உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 20 லட்சத்திற்கும் அத்திக்காக்க சம்பளம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகின்றது. இந்த புதிய வரி உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டால் வரி செலுத்துனர்கள் பெரிதும் பயனடைவர்.

Income Tax Slabs     

Income Tax Slabsநடப்பு வருமான வரி உச்சவரம்புபுதிய வருமான வரி உச்சவரம்புSlab (Rs. Lakh)Tax Rate (%)Slab (Rs. Lakh)Tax Rate (%)0-2.5No Tax0-4No Tax2.5-5104-10105-102010-151510 +3015-202020+30


நடப்பு வருமான வரி உச்சவரம்பு எப்படி உள்ளது?

இப்போது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீத வரியும், 5,00,001 ரூபாய் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளவர்கள் 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும்.


மறுப்பு தெரிவித்துள்ள அரசு

இது குறித்து அரசு தரப்பு செய்தி தொடர்பாளர் ஃபிராங்க் நோரோன்ஹாவை கேட்ட பொழுது இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரம் ஏஎன்ஐ இது வதந்தி ஆதாரமற்ற செய்தி என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


அருண் ஜேட்லி

டிசம்பர் 14-ம் தேதி மத்திய அமைச்சர் அருண் கேட்லி 2018 ஆண்டு பட்ஜெட்டில் பொது மக்களின் நேரடி வரி மற்றும் மறைமுக வரி இரண்டும் குறைக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


நேரடி வரி மற்றும் மறைமுக வரி

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லது என்று அறிவித்ததை அடுத்து மறைமுக வரியை விட நேரடி வரி அதிகரித்து உள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவிக்கின்றனர்.



அதே நேரம் மறைமுக வரி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TRB REGULARISARTION ,TRB மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணிநாள் முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவே தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை*

எவ்வளவு வேண்டுமானாலும் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் : அருண் ஜெட்லி விளக்கம் !!

வரும் 30ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 ஆகிய பழைய நோட்டுகளை வங்கிகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய்களை மாற்றுவதற்கான கால

அவகாசம் முடிந்த நிலையில், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு இம்மாதம் 30ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த சூழலில் பழைய ரூபாய் நோட்டுகளை இனி அதிகபட்சமாக 5000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘இம்மாதம் 30ம் தேதி வரை வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம். சில பகுதிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு சில சலுகைகள் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு விட்டது. மற்றபடி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு கிடையாது.
எனினும், ஒருவரே பல முறை தொடர்ந்து பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய வரும் போது சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, 5000 ரூபாய்க்கு அதிகமாக டெபாசிட் செய்யும் போது, காலதாமதத்திற்கான விளக்கம் கேட்கப்படும். மேலும், பழைய நோட்டுகளை ஒரு வங்கிக் கணக்கில மொத்தமாக ஒரேயொரு முறைதான் செலுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். சிறுவியாபாரிகளின் ஆண்டு வரவு செலவில்(டர்ன் ஓவர்) 8 சதவீதம் வருமானமாக கணக்கிடப்பட்டு, வரி விதிக்கப்பட்டு வந்தது. இதை 6 சதவீதமாக குறைக்க வருமான வரிச் சட்டப்பிரிவு 44ஏடி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜெட்லி அறிவித்திருக்கிறார்.

வீடு, நிலம் விற்க முடியாமல் மக்கள் தவிப்பு !!

மொழிப் பாடத்திற்கு முன்னுரிமை இல்லை !!! - தமிழாசிரியர்கள் வேதனை

கருப்புப்பணம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் !!

கருப்புப்பணம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறி மத்திய நிதியமைச்சக புலனாய்வுத்துறை ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தது.

வெள்ளிக்கிழமையன்றுதான் அந்த மின்னஞ்சல் முகவரி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நான்கே நாட்களில் 4 ஆயிரம் புகார்கள் மின்னஞ்சலில் குவிந்திருக்கின்றன. மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம் எனும் அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக நிதியமைச்சக புலனாய்வுத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி 
தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று மத்திய நிதியமைச்சக புலனாய்வு அமைப்பு blackmoneyinfo@incometax. gov.in எனும் முகவரியைக் கொடுத்து, கருப்புப்பணம் குறித்த தகவல்கள் இருந்தால் இந்த மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.
அதில் இருந்து அந்த முகவரிக்கு மின்னஞ்சல்கள் குவியத் தொடங்கின. இதுவரையில் நான்காயிரம் மின்னஞ்சல்கள் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மின்னஞ்சல்கள் மூலம் வரும் தகவல்கள் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் கணக்கில் வராத பழைய மற்றும் புதிய நோட்டுகள் சுமார் 100 கோடி வரையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமரின் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளில் நிறைய டெபாசிட்டுகள் செய்யப்பட்டுள்ளன. முறையான கணக்குகளுடன் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தல் பெரும் தொகை ஏதேனும் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் வங்கிகள் நிதியமைச்சக புலனாய்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஸ்வைப் மிஷின்' மூலம் காஸ் பில் : புத்தாண்டு முதல் அமல்படுத்த முடிவு !!

ஸ்வைப் மிஷின்' மூலம், காஸ் சிலிண்டர் பில் செலுத்தும் முறை, புத்தாண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. 'ரூபாய் நோட்டுகள்
செல்லாது' என்ற அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு, 'ஸ்வைப் மிஷின்' மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் முறையை, அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் அமல்படுத்தி உள்ளன. இனி, வீடு மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்கள் வாங்கும் போது, அதற்கான பணத்தை, 'ஸ்வைப் மிஷின்'கள் மூலம், வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த முறை, புத்தாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிடம், 'ஸ்வைப் மிஷின்' கேட்டு காஸ் ஏஜென்சிகள் விண்ணப்பித்துள்ளன. இனி, காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் ஒவ்வொரு ஊழியரின் கையிலும், 'ஸ்வைப் மிஷின்' இருக்கும். காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் போதே, இந்த மிஷின் மூலம் அதற்குரிய பில் தொகையை பெற்றுக் கொள்வர்.

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் !!

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள்
புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்


பெரம்பலூரில் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாஜ்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் அருள்ஜோதி வாழ்த்தி பேசினார். மாநில பொது செயலாளர் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

ஆசிரியர் நியமன தகுதி தேர்வான டி.இ.டி, டி.ஆர்.பி போன்ற தேர்வுகளில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிற பாடப்பிரிவுகளுக்கு இணையாக கணினி அறிவியல் பாடம் பிரதான திட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் கணினி அறிவியல் பாடத்திற்கென கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

காலிபணியிடம்

இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குனரின் (தொழிற்கல்வி) ஆணைப்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் 1-11-2016 அன்று கணினி அறிவியல் ஆசிரியர் பணி காலியிடம் குறித்து அறிக்கை கோரப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. எனவே பி.எட் கணினி அறிவியல் தகுதியுள்ள ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நியமனம் செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் மாநில துணை செயலாளர் புகழ், தலைமை ஆலோசகர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மருது நன்றி கூறினார்.

தவறாக கணக்கிடப்படும் EL விடுப்பு !!

ஈட்டிய விடுப்பிலிருந்து மருத்துவ விடுப்பை கழித்தலில் குறைபாடுகளும்.... ஆசிரியர்களுக்கு ஏற்படுகிற இழப்புகளும்..,ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் 365 நாட்கள்(365/21.47=17days)அதற்கு 17 நாட்கள் EL வழங்கப்படுகின்றது தற்போது ஒரு கல்வியாண்டில் 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்திருந்தால் (365-21=344,344/21.47=16days)16 நாட்கள் EL வழங்கப்படுகின்றது அதே சமயத்தில் 
ஒரு கல்வியாண்டில் வெறும் 3 நாட்கள் மட்டுமே ML எடுத்தவர்களுக்கும்(365-3=362,362/21.47=16.86)16.86 என்பதில் தசம இலக்கம் கணக்கில் கொள்ளப்படாமல் 16 நாட்கள் மட்டுமே EL வரவு வைக்கப்படுகின்றது,...3 நாள் Ml க்கு 1 நாள் EL கழிக்கலாமா?இதே போல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைவான மருத்துவ விடுப்பிற்கெல்லாம் (2முதல் 10நாட்கள்)1நாள் ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 3முதல் 10 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பு இழப்பு ஏற்படுகிறது.....21நாட்கள் மருத்துவ விடுப்புக்கு மட்டுமே 1ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சார்ந்த ஆசிரியர் கணக்கில் மீள வரவு வைக்கப்படல் வேண்டும்....

கடைசி நேரத்தில் ரயில் பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? சலுகை விலையில் பயணச்சீட்டு !!

கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறிப் பயணிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் பயணிப்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கும் போது படுக்கை வசதி 
கொண்ட ரிசர்வேஷன் டிக்கெட் இருக்கிறதா என்று கேட்க வேண்டும். ரிசர்வேஷன் கோச்சில் காலி இடம் இருக்கும் பட்சத்தில் அதற்கான டிக்கெட்டை வாங்கி படுக்கை வசதி கொண்ட ரிசர்வேஷன் கோச்சில் பயணிக்கலாம். இவ்வாறு டிக்கெட் வாங்கும்போது பத்து சதவீத தள்ளுபடியும் உண்டு என்பது தான் முக்கியமான விஷயம்.

கடைசி நேரத்தில் அட்டவணை (சார்ட்) தயாரான பின்பு தான் இந்தச் சலுகையினை பெற முடியும் என்பதால் ரயில் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்துக்குள் டிக்கெட் வாங்குபவர்கள் இந்தச் சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை அடுத்த ஆறு மாதத்துக்குப் பரிசோதனை முறையில் வைத்திருப்பார்கள். அதிகளவில் வரவேற்பு இருக்கும் பட்சத்தில் இதனைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள்.

கடைசி நேரத்தில் வாங்கும் தள்ளுபடி டிக்கெட்டுக்கு மற்ற டிக்கெட்டில் உள்ளது போன்ற ரிசர்வேஷன் கட்டணம், அதிகவேக ரயில் கட்டணம், சேவை வரி போன்றவை எல்லாம் இருக்கும். அடிப்படை பயண கட்டணத்தில் மட்டும் பத்து சதவீத தள்ளுபடி என்பதை நினைவில் கொள்ளவும். ஏற்கெனவே இன்டர்நெட்டில் ரயில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு சேவை வரி தள்ளுபடி செய்திருந்தது நினைவில் கொள்ளவும்.

கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ ரயில்களில் கடைசி நேரத்தில் பயணித்தால் சீட்டு வாங்கும்போது டிமாண்ட் அதிகளவில் இருந்தால் 50% வரை டிக்கெட் உயர்த்தப்பட்டது. ஆனால் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதனை அறிவித்த பின்பு ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டே ரயில்களில் அதிக காலியிடங்கள் இருந்திருக்கின்றன. தக்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதும் குறைந்திருக்கிறது. இதனால் இப்போது தக்கலில் பதிவு செய்யும் டிக்கெட்டின் எண்ணிக்கையை 10% சதவீத இடத்தைக் குறைத்து இருக்கிறார்கள்.


இனி வரும் காலங்களில் அதிக பயணிகள் கொண்ட ரயில்களில் ஆர்ஏசி எண்ணிக்கையையும் ஒவ்வொரு ரயிலும் அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு இரண்டாவது படுத்துறங்கும் பெட்டியிலும் ஆர்ஏசி ஐந்தில் இருந்து ஏழாகவும் உயர்த்த உள்ளார்கள். இதன் மூலம் ஒரே கோச்சில் பதினான்கு பேர் ஆர்ஏசியில் இடம் பெறுவார்கள். இதைப்போலவே ஏசி கோச்சில் இரண்டிலிருந்து நான்காக உயர்த்த உள்ளார்கள். இதன் மூலம் ஒரு கோச்சில் எட்டு பேர் இடம்பிடிப்பார்கள். இதைப்போல இரண்டாம் வகுப்பு ஏசி வகுப்பில் இரண்டு பேருக்கு பதிலாக மூன்று பேர் என மொத்தம் 6 பேர் இடம்பிடிக்க உள்ளார்கள்.

ஆனால் இந்த முறை நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்குச் சிரமத்தையே தரும். டிடிஆர் எப்போது வருவார்? எப்போது நமக்கு ஒதுக்கீடு செய்வார்கள் என்ற காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதன் மூலம் ஒரு நபர் படுக்கும் வசதி கொண்ட சீட்டில் இரண்டு பேர் நீண்ட தூரம் அமர்ந்து செல்வார்கள். அதுவும் முழு கட்டணத்தையும் செலுத்தி இருப்பார்கள் என்பதால் ரயில்வேக்கு லாபம்.

ராஜஸ்தானி, டொரண்டோ, சதாப்தி ரயில்களில் தக்கல் அளவைக் குறைத்த அதே வேளையில், அதிகளவில் பயணிக்கும் ரயில்களில் எங்கு அதிகளவில் பயணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இனி வரும் காலங்களில் இதர ரயில்களில் தக்கலின் அளவினை 30% வரை அதிகரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதன் மூலம், தக்கல் சீட்டு பெறும் கூடுதல் கட்டணத்தால் கணிசமான வருமானத்தை எதிர்பார்த்து இருக்கிறது ரயில்வே.

இந்த நடவடிக்கைகள் மூலம், ரயில்வே நிர்வாகம் எப்படி எல்லாம் வருமானத்தை உயர்த்துவது என நிறைய மெனக்கெட்டு யோசித்துக்கொண்டு இருக்கிறது என்றே தோன்றுகிறது. பயணிகளுக்கு நல்லது நடந்தால் சரி தான்.

காலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.


தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர், அரசு ஊழியர் சங்க அமைப்புகளின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படவில்லை. அரசு ஊழியர்களையும், பெண் ஊழியர்களையும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களையும் ஒன்று திரட்டுவதில் பிரச்னையும், பலகீனமும் உள்ளது. அரசு நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் உண்மை நிலை மற்றும் கோரிக்கை குறித்து முறையாக ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற நாம் முன்பு போல் ஒன்று திரள வேண்டும். நமக்குள் கூட்டு சக்தியை உருவாக்க வேண்டும். பெண் ஊழியர்கள் உட்பட அத்தனை அரசு ஊழியர்களும் சென்னையில் ஒன்று திரண்டால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விடலாம். 3.5 லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் ஒன்று திரண்டால் தொகுப்பூதிய முறையை மாற்றி விடலாம். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் 20 சதவீதம் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்குவது, தொகுப்பூதிய திட்டத்தை ஒழிப்பது, மீண்டும் நிர்வாக தீர்ப்பாய சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவை நிறைவேறாவிட்டால், திருவண்ணாமலையில் ஜனவரி 6, 7, 8, தேதிகளில் நடக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 தனித்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோரிடம் இருந்து ‘ஆன்-லைனில்’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ‘ஆன்-லைனில்’ பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ‘ஆன்லைனில்’ விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான அறிவுரை ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

ஒப்புகை சீட்டு

‘ஆன்-லைனில்’ விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வு துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே ஒப்புகைச் சீட்டை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்கு உதவும் கல்வியே சிறந்தது - ஜெர்மன் அறிஞர் பேச்சு

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை என ஜெர்மன் நாட்டை சேர்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன்,எல்.ஐ.சி.வினை தீர்த்தான், அழகப்பா பல்கலைகழக அலுவலர் காளைராஜன், மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலேட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய சுபாஷினி, நிறைய வாசித்தால் நல்ல குணங்கள் ஏற்படும்.வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும். மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.ஜெர்மானியர்கள் கடமை உணர்வு அதிகம் உள்ளவர்கள்.அங்கு இயற்கை சூழ்நிலை நன்கு பாதுகாக்கபட்டுள்ளது. இயந்திரவியல் கல்வி முறை அதிகம். அறிவை ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் நாடுகளில் ஜெர்மன் முன்னிலை வகிக்கிறது. jerman tamil marapu arakattalai president subhashini discussion with school student தமிழகத்தில் தொன்மையான விசயங்களான கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும். கற்கும் பருவத்தில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.கணிதம், கணிபொறி தொடர்பான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் பெரிய வெற்றிகளை அடையலாம். புத்தகங்களை நிறைய வாசித்தல் நல்ல குணங்கள் உண்டாகும். இனத்தின் வரலாறை பாதுகாப்பதுதான் சந்திதியனரின் முக்கிய கடமை. ஜெர்மன் நாட்டில் அதிகமான வளர்ந்த தொழில்நுட்பம் பயன்படுவதால் அந்த நாட்டை தேர்ந்தெடுத்து அங்கு சென்று பணிபுரிந்து வருகின்றேன். எந்த விசயம் நமக்கு வரவேயில்லை என்று நினைக்கிறோமோ அதனை மீண்டும்,மீண்டும் முயற்சி செய்து அது நன்றாக வரும் வரை அதனை தொடர்ந்து செய்ய வேண்டும். நிச்சயம் நம்மால் அதனை அடைந்து விட முடியும். கணினி மூலமாக நல்ல கல்வியை பெற்று வாழ்க்கையில் சிறந்த வெற்றியை பெற முயற்சி செய்ய வேண்டும். அது உங்களால் முடியும். உங்களின் கேள்வி கேட்கும் ஆற்றல் என்னை வியக்க வைக்கிறது. அதற்கு என் பாராட்டுக்கள். தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி மாணவர்களுக்கு கணினி கற்கும் வகையில் கணினி வழி கல்விக்காக கணினி ஒன்றினை பரிசாக வழங்கினார். கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பதன் மூலம் பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்வி தான் சிறந்த, உற்ற நண்பனாக இருக்க முடியும். வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளை கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும்.யாரேனும் குப்பையை கொட்டினால் அதைஎடுத்து தொட்டியில் போடவேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் காயத்ரி, செந்தில்குமார், தனலெட்சுமி, ராஜேஷ், அய்யப்பன், ராஜேஸ்வரி, ரஞ்சித், ஜெனிபர்,ராஜி உட்பட பலர் கேள்விகள் கேட்டனர். ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.