யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/1/17

உங்கள் வீட்டில் மின்தடை எப்போது? : 10 நாட்களுக்கு முன் தெரியும் வசதி

பராமரிப்பு பணி மின் தடை விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கி உள்ளது. துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணி செய்கிறது. 


பராமரிப்பு பணி : இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். அந்த விபரத்தை, மின் வாரியம், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பராமரிப்பு மின் தடை செய்யும் பகுதிகளை, 10 நாட்களுக்கு முன் தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், தினமும், பல இடங்களில் உள்ள மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டும், அந்த விபரம் தெரிகிறது; மற்ற நகரங்களில் வசிப்போருக்கு தெரிவதில்லை. 

இணையதளம்: தற்போது, 10 நாட்களுக்கு முன், பராமரிப்பு நடக்கும் துணை மின் நிலையங்கள்; அவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற விபரங்கள், மின் வாரிய இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளன. அனைவரும், அதை பார்த்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு அவர் கூறினார்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான "நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் மாணவர்கள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத் திட்டம், மெட்ரிக் பாடத் திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கின்றனர். ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்இ, என்சிஆர்டி ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால் பிற பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர். குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத சூழல் ஏற்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு ஊழியர்கள் திருவள்ளுவர் தினம் கொண்டாட விடுமுறை அளிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மத்திய அரசு ஊழியர்கள் திருவள்ளுவர் தினத்தையும் கொண்டாட அனுமதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படும் முக்கியமான அறுவடை பண்டிகைதான் பொங்கல் என்பது தங்களுக்குத் தெரியும். பொங்கல் பண்டிகையுடன் இணைந்து, ஜல்லிக்கட்டு உட்பட பல்வேறு சமுதாய, புத்துணர்வு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்தப் பண்டிகை 3 அல்லது 4 நாள்கள் வரை நீடிக்கும். தமிழக அரசைப் பொருத்தவரை, இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை (திங்கள்கிழமை) விடுமுறை தினங்களாகும். உழவர் திருநாள் என்பதற்காக இந்த நாள்களில் அரசு விடுமுறை அளிக்கிறது.
தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளில் எப்போதுமே பொங்கல் தினம் வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சனிக்கிழமை பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தின விழா: இந்த நிலையில், மத்திய அரசின் 12 விருப்ப விடுமுறை தினப் பட்டியலில் தெரிவு செய்யக்கூடிய 3 விடுமுறை தினத்தில் கூடுதலாக தசரா, பொங்கல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் திருவள்ளுவர் தினத்தையும் மத்திய அரசு பணியாளர்கள் நலன் ஒருங்கிணைப்புக் குழு விடுமுறை தினமாக அறிவிக்க முடியும். அதன்படி, பொங்கல் தொடர்புடைய அனைத்து விழாக்களையும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களும் கொண்டாட வழி வகுக்கும்.

தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வித் திட்டம் வேண்டும்: பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி

மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக கல்வித்திட்டம் அமைய வேண்டும் என பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 21-ஆவது ஆண்டு கல்லூரி தின விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

நம் நாட்டில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. தில்லியில் பாலியல் துன்புறுத்தலால் பெண் ஒருவர் கொல்லப்பட்டபோது, நமது நாட்டை விமர்சித்தும், இங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் பத்திரிகைகள் தெரிவித்தன. ஆனால், லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில், இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள் இருப்பினும், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கதியால் நாடே ஸ்தம்பித்துவிட்டது. இதிலிருந்து இந்தியாவில் பெண்ணுக்குள்ள மரியாதையை அறிய முடியும் என எழுதப்பட்டிருந்தது.
நமது நாட்டின் பண்பாடு, கலாசாரம், பெற்றோருக்கு அளிக்கப்படும் மரியாதையை எடுத்துக் கூற யாரும் இல்லை. பெற்றோரை போற்றுதல், குடும்பமாக வாழ்தல் என்பது நமது வாழ்க்கையின் ஒரு பங்கு. ஆனால் இது வெளிநாட்டில் இல்லை.
குடும்பங்களை சட்டத்தின் மூலமாக உருவாக்க முடியாது. பிரிக்க மட்டுமே இயலும். சேர்ப்பதற்கு கலாசாரம், பாரம்பரியத்தால் மட்டுமே முடியும்.
நமது நாட்டில் படிக்காதவர்கள் வேலை அளிப்பவர்களாகவும், படித்தவர்கள் அவர்களிடம் வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர். இதற்கு அவர்களின் தன்னம்பிக்கையே காரணம். நமது நாட்டில் கல்விக்கும், தொழில்வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை.
மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லையென்றால் தொழில்வளர்ச்சி ஏற்படாது. தன்னம்பிக்கையே மனிதனை உயர்த்தும். மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக கல்வித் திட்டம் அமைய வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு தலைமை வகித்து, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பேசியது:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்போது, வங்கி அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. அவர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கிறதா, நேர்மை உள்ளதா என்ற சந்தேகம் வருகிறது. இது மொத்த சமுதாயத்தையும் கெடுக்கும் செயலாகும். இன்றைய மாணவர்கள் சிறந்த குடிமகனாக, சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றார்.
முன்னதாக, விழாவில் கல்லூரியின் செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார். முதல்வர் ஜெ.ராதிகா ஆண்டறிக்கை வாசித்தார். ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் தலைவர் ராஜகோபால், மாணவ, மாணவிகள், அனைத்துத் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு !

பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வங்கி கணக்கு வைத்திருப்போர் அனைவரும் பான் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஏற்கெனவே பதிவு செய்திருப்போருக்கு பிரச்னை இல்லை. கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வங்கி கணக்கு வைத்திருந்தாலும் இதுவரை பான்கார்டு இல்லாதவர்களுக்கு, Form 60-ஐ வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் Form-60 படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Form 60 படிவத்தில் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் முகவரி தொடர்புடைய சான்றுகள் மற்றும் புகைப்படத்தையும் இணைத்து வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைன் Form 60 படிவத்தை பெற, வங்கியின் பெயருடன் Form 60 என டைப் செய்தால் படிவம் PDF ஆக வரும்

பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு

தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 


இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர். இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது.  குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : தேர்வுத்துறை புது உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த  ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்
என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.


மேலும், செய்முறைத் தேர்விலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வில் 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க உள்ளனர்.

ஜாக்டோ -ஜியோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்....

1).CPS ஐ நீக்கி GPFஐ  கொண்டுவர அடுத்த கட்ட போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது...இதற்காக நம் ஜாக்டோஜியோ பொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஐயா அவர்களை விரைவில் சந்திக்கவுள்ளனர்.


2).தமிழகத்தில்  நிலவும் விவசாய வறட்சி நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் அனைத்து அரசு ஆசிரியர்கள் மற்றும் அனைத்து விதமான அரசு ஊழியர்களும் பிடித்தம் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

3)ஏழாவது ஊதிய குழு உடனடியாக அமல்படுத்தி இடைகால நிவாரண
நிதியாக 20% வழங்கவேண்டும்.

4)பொங்கல் போனஸ் அரசாணை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.


 தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் மற்றும் பல்வேறு அரசு ஊழி யர் சங்கங்கள், ஆசிரியர் அமைப்பு கள் இணைந்து ஜாக்டோ - ஜியோ அமைப்பாக உருவாகியுள்ளது. இதன் பிரதிநிதிகள் கூட்டம், சென்னை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.இதில், ஜாக்டோ - ஜியோவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெ.கணேசன் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களும் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. வறட்சி நிவாரணத்துக் காக ஜாக்டோ -ஜியோ சங்கங் களில் உள்ள ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்துள்ளோம். இது உத்தேசமாக ரூ.40 கோடி அளவுக்கு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்

BREAKING NEWS : விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்
- பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

★ AB பிரிவுக்கு ₹1000 சிறப்பு மிகை ஊதியம்

 ★ CD பிரிவுக்கு ₹3000 என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு 30நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம்

★  ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு


★ உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்.

★ பொங்கல் போனஸ் வழங்குவதன்மூலம் அரசுக்கு  ரூ.325.20 கோடி  செலவு ஏற்படும்.

பிளஸ் 2 வரை கேள்வித்தாள் என்ன மாற்றம்

🍎பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் :

🍏 கல்வித் துறை உத்தரவு..

🌻தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

🌻 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில்
உள்ளது.



🌻 பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

🌻இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது.

🌻மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

🌻 இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர்.

🌻 இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

🌻இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது.

🌻 வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது.

🌻  குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.

🌻அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

🌻இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.

🌻 இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும்.

🌻பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது.

🌻இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. 

Breaking News: புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்.


🔷 தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னையில் இன்று (11.01.2017) நிருபர்களிடம் கூறியதாவது:-

📝 தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

📝 ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணியிடங்களில் அமர்த்தப்பட உள்ளனர்.எனவே புதிதாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேவையில்லை.


🔵 மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.

🔴 மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வருவதில் தவறில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியென்பது பதிவா? தெளிவா? - மஞ்சை வசந்தன்



கற்றல் என்பது இலக்கின்றி, பொருளின்றி, வரையறையின்றி, விவாதமின்றி, பயனின்றி மனனம் செய்து மதிப்பெண் பெறுதல்; ஏட்டில் உள்ளதை மூளையில் பதித்து, தேர்வுக் கூடத்தில் தாளில் பதித்தல்; தேர்வு முடிந்ததும் அனைத்தையும் மறத்தல் என்ற அளவில் இன்று _ குறிப்பாக இந்தியாவில் நடைபெறுகிறது.


கல்வியென்பது வல்லுனர்கள், அரசு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோரோடு பின்னிப் பிணைந்தது.

கல்வி எப்படியிருக்க வேண்டும் என்பதை கல்வியாளர்களும் அரசும் தீர்மானிக்க வேண்டும். அதைப் பொறுப்போடு மாணவர்க்குச் சேர்க்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்; அதைச் சரியாகப் பெற வேண்டியவர்கள் மாணவர்கள்; பெறச்செய்ய வேண்டியவர்கள் பெற்றோர்.

எனவே, கற்கும் கல்வி பயனுடையதாக இருக்க, ஆற்றல், அறிவு, வல்லன வளர்ப்பதாய் இருக்க பொறுப்பேற்க வேண்டியவர்கள் அரசும், கல்வியாளர்களுமே!
அரசு என்பது மக்கள் தேர்வு செய்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் ஆவர். அரசு அலுவலர்கள், ஆட்சியாளர்கள் இடும் கட்டளையை அப்படியே நிறைவேற்ற வேண்டியவர்கள். எனவே, அவர்கள் கல்வியைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் அல்ல. கல்வியைத் தீர்மானிக்க வேண்டிய ஆட்சியாளர்களோ, அதில் தெளிவும், நுட்பமும், வல்லமையும், அதற்குரிய அறிவும் அற்றவர்கள் - விலக்காக ஓரிருவர் இருக்கலாம்.

எனவே, கல்வியை வகுத்தளிக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கல்வியாளர்களுக்கே உண்டு. ஆனால், அந்தக் கல்வியாளர்கள் வகுத்தளிக்கும் வல்லமையுடையவர்களேயன்றி, நிறைவேற்றும் அதிகாரம் உடையவர்கள் அல்ல.
ஆக, ஆட்சியாளர்கள் பொறுப்போடு, தொலைநோக்கோடு, கல்வியாளர்களை முறையாக, வெளிப்படையாக, தயக்கமின்றி கருத்துரைக்க வழிசெய்து கல்வியின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து _ என்ன கற்பது, எப்படிக் கற்பது, எப்படிக் கற்பிப்பது என்பனவற்றை வரையறுத்து மாணவர்களைக் கற்கச் செய்வது மட்டுமே உண்மையான கல்வியாய் அமைந்து பயன் தரும்.

மாறாக, ஆட்சியாளர் தான்தோன்றித் தனமான விருப்பு வெறுப்புகளையெல்லாம் கல்வித் திட்டமாக்கினால், அது பயனற்றுப் போவதோடு சமூக எதிர்ச் செயலாயும் ஆகும்.

முதலில் அரசும் கல்வியாளர்களும் கல்வியென்பது பதிவா? தெளிவா? என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.

யார் ஒருவன் நினைவாற்றலோடு பதிவு செய்து தேர்வில் எழுதுகிறானோ அவனே உயர் மாணவன், சிறந்த கல்வி கற்றவன் என்பது எவ்வகையில் சரியாகும்? அது நினைவாற்றல் திறனை மட்டுமே வெளிப்படுத்தும்.

நவீன கருவிகள் இல்லாத காலத்தில் நினைவாற்றல் முதன்மையிடத்தில் இருந்தது. இன்றைக்கு அது கட்டாயம் இல்லை. நினைவாற்றல் இன்றியே சாதிக்க முடியும்!

திருக்குறளைத் தலைகீழாகச் சொல்லும் நினைவாற்றல் உள்ள ஒருவர், திருக்குறளில் புலமை உள்ளவர் என்றாவாரா? திருக்குறளை மனப்பாடமாகச் சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் திருக்குறளில் புலமை இல்லாதவர்கள் என்று ஆகுவரா?

இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் கல்வித் திட்டம், பாடத் திட்டம், பயிலும் முறை எப்படியிருக்க வேண்டும் என்பது பளிச்செனப் புலப்படும்.
எனவே, புரிதலும் தெளிதலும்இன்றி கற்கும் கல்வி கல்வியே அல்ல. அது வெறும் மனனப் பயிற்சி மட்டுமே!

படித்தது அனைத்தும் பதிந்ததா? என்பதைவிட, படித்தது அனைத்தும் புரிந்ததா? என்பதே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது! புரிதலும் தெளிதலும் இல்லாமல் எவ்வளவு செய்திகளை மூளையில் பதிவு செய்தாலும் என்ன பயன்? ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாவிற்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?

படிப்பது அனைத்தும் புரிய வேண்டும், தெளிவாக வேண்டும் என்றால் கற்பிப்போர், கற்கும் மொழி இரண்டும் முதன்மைப் பங்கு வகிக்கும் நிலையில், இவற்றில் ஒரு தெளிவான கொள்கை முடிவு கல்வியாளர்களுக்கும் அரசுக்கும் வேண்டும்.

அதிலும் குறிப்பாக அடிப்படையான தொடக்கக் கல்வி எம்மொழியில் பயிலப்பட வேண்டும் என்பது மிக முதன்மையாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தாய்மொழி வழிக் கல்விதான் அதற்குச் சரியான தீர்வு என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, 5ஆம் வகுப்பு வரையில் தாய்வழிக் கல்வி என்பது மட்டுமல்ல, முடிந்தால் கல்லூரிக் கல்விவரை தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதும் அசைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை!

ஆனால், மக்களாட்சி நாட்டில், விரும்பிய மொழியில் கற்க உரிமையில்லையா? என்ற விவாதம் கட்டாயம் எழுகிறது.

விரும்பியதை உண்பது என்பதைவிட உகந்ததை, நலம் தருவதை உண்பது என்பதுதான் சரியாக இருக்க முடியும்! அது கல்வி கற்கும் பயிற்றுமொழிக்கும் பொருந்தும். எதன்வழி கற்பது சிறந்தது என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

அதேவேளையில் தொடர்பு மொழியான ஆங்கில அறிவு மாணவர்களுக்குக் கட்டாயம் என்பது உண்மை! ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுத உரிய வல்லமை உருவாக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயம். அதற்குரிய பயிற்சி அடித்தட்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; அதுவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்

இங்கு ஓர் உண்மையை அனைவரும் ஆழமாய் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுதல் என்பது பழக்கத்தில் வருவதேயன்றி, படித்து வருவதன்று.

ஆங்கிலத்தில் மட்டுமே கட்டாயம் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலில் ஆங்கிலத்தை ஒருவர் சரளமாகப் பேச முடியும். மேல்நிலைக் கல்வி வரை தமிழில் படித்து, பின் பொறியியல் படிப்பை ஆங்கில வழியில் படித்து முடித்து, ஆங்கிலத்தில் பேச வராத கிராமப்புறத்து மாணவர்கள் எல்லாம், நிறுவனங்களில் பணியில் சேர்ந்த பின் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் பெற்றதெல்லாம் நடைமுறை உண்மை.

ஆங்கில வழியில் கற்றுத்தான் ஆகவேண்டும் என்று பிடிவாதமாய் கற்கும் மாணவர்கள், கற்பது எதுவாயினும் அதைத் தெளிவாய் தன் தாய்மொழியில் புரிந்து கற்க வேண்டும். காரணம், கற்றல் என்பது பதிவு அல்ல. தெளிவு!

தெளிவற்ற, விளங்காத கல்வி பயனற்றுப் பாழாகும்!

ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கான "பீம்' செயலி: 10 நாள்களில் 1 கோடி பேர் பதிவிறக்கம்.

ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கான "பீம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாள்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடையே ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டில் வடிமைக்கப்பட்ட இந்தச் செயலியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.


சட்ட மேதை பீம ராவ் அம்பேத்கரின் நினைவாக இந்தச் செயலிக்கு பீம் எனப் பெயரிடப்பட்டது.
ஆதார் எண் மற்றும் பயன்படுத்துபவரின் கைவிரல் ரேகைப்பதிவு ஆகியவற்றின் மூலம் மிகவும் பாதுகாப்பான ரொக்கமற்ற பணப் பரிமாற்றத்தை இந்தச் செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.
மேலும், பரிமாற்றம் எளிதாகவும், விரைவாகவும் நடைபெறும். இதனால் இளைஞர்கள், வர்த்தகர்கள் மத்தியில் இந்தச் செயலி குறுகிய நாள்களில் மிகவும் பிரபலமாகவிட்டது.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள செல்லிடப்பேசிகளில் "கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து இச்செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இப்போது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. விரைவில் பிற மாநில மொழிகளும் சேர்க்கப்படவுள்ளன.

 இந்திய தேசிய செலுத்துகை நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கிய யுபிஐ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரிமாற்றங்களை வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ள முடிகிறது.
இதில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றத்துக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், வங்கிகள் அவற்றின் விதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.
வங்கிக் கணக்கும், ஆதார் எண்ணும் உள்ள அனைவரும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

கைவிடப்பட்ட 155 அரசு பள்ளிகள் : ஜெ., அறிவிப்பு; மரணத்தோடு 'காலாவதி'

தமிழகத்தில் 155 அரசு நடுநிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ் 2011-12ல் ஆண்டு 700 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டது. அரசியல் பின்னணி மற்றும் ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலில் இணைத்தது உட்பட சில காரணங்களால் 155 பள்ளிகளை அங்கீகரிக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மறுத்து விட்டதாக புகார் எழுந்தது.இதனால் இப்பள்ளிகளுக்கு அத்திட்டத்தில் இருந்து கிடைக்க வேண்டிய நிதிகள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், 2016ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் இந்த 155 பள்ளிகளையும் மேம்படுத்த தலா 1.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு மீது கல்வி அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வகுப்பறை, பெஞ்ச் வசதி இல்லாததால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் சூழ்நிலை உள்ளது.

மதுரை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தில் வேடர்புளியங்குளம், மலைப்பட்டி, நிலையூர், அயன்பாப்பாகுடி ஆகிய நான்கு அரசு நடுநிலை பள்ளிகள் இந்த 155 பள்ளிகள் 'லிஸ்ட்'டில் உள்ளன. இப்பள்ளிகளுக்கு 2011 முதல் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி கிடைக்கவில்லை.இதனால் போதிய வகுப்பறை, இருக்கைகள் வசதி இங்கு இல்லை. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். அரசு சிறப்பு உத்தரவு வெளியிட்டால், உலக வங்கி நிதியுதவியுடன் நபார்டு வங்கி சார்பில் இப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், இருக்கை வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மறைந்ததை அடுத்து கல்வி அதிகாரிகள் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை, என்றார்.

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு - மத்திய அரசு அறிவிப்பு.

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தசரா விடுமுறைக்கு பதிலாக கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து விருப்ப விடுமுறையிலிருந்து கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையை மத்திய அரசு சேர்த்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் அறிவிப்பு.

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிபட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.ஆனால் இந்தப் பட்ஜெட் 2017, மாத சம்பளகாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
நல்ல காலம் பொறந்தாச்சு..

IRCTC INTRODUCES "NEW APP" FOR TRAIN TICKET RESERVATATION

ரயில் டிக்கெட் முன்பதிவு! ஐஆர்சிடிசி புதிய ஆப் அறிமுகம்!



ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கிவைத்தார்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில், விமான டிக்கெட்டுகள்முன்பதிவு செய்யப்படுகிறது. பயனாளர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு தனித் தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஐஆர்சிடிசி புதியசெயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய செயலில், டிக்கெட் முன்பதிவு, தட்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வுஅரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது.
அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப்பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:

தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் CPS தொகையினை ரூ.50,000/- வரை கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது, sec 80C- ல் ரூ.1, 50,000 மும் + sec 80 CCD(1B)-ல் ரூ.50, 000 மும் இரண்டையும் சேர்த்து ரூ.2,00,000 வரை கழிக்கலாம் என்ற செய்தி ஊடகங்களில் வலம்வருகிறது அல்லவா ?
அதற்கான விளக்கம்தான் இது.



நமது மாதச்சம்பளத்தில் CPSக்காக பிடித்தம் செய்யப்படும் 10% தொகையினை income tax section 80C யில் (LIC, Tuition fee, mutual fund, PLI, salary யில் பிடிக்கப்படும் CPS,...உள்ளிட்டவைகளை ) ரூ.1,50,000 வரை கழித்துக்கொள்ளலாம்.ஆனால் கூடுதலாக செலுத்தப்படும் ரூ.50,000/- த்தை உங்கள் கையிருப்பில் உள்ள தொகையினை புதிதாக NPS (National pension scheme or system தேசிய ஓய்வூதிய திட்டம்) திட்டத்தில் செலுத்தி income tax ல் வரிவிலக்கு பெறலாம்.

ஆக, section 80CCD(1B)ல் மாதச்சம்பளத்தில் பிடித்தம் செய்யும் CPS தொகையினை Income tax வரிவிலக்கில் கழிக்க முடியாது.

Apple Iphone 6 விலை ரூ.7,990 மட்டுமே - Flipkart அதிரடி தள்ளுபடி !

இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து ஆப்பிள் ஃபெஸ்ட் (Apple Fest) எனும் விற்பனை திருவிழா ஒன்றை நடத்தி வருகின்றன.



 இந்த விற்பனையில் பல்வேறு ஐபோன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 7 விலையில் 5000 ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 6:

ஐபோன் 7 32GB, 128GB மற்றும் 256GB விலை முறையே ரூ.55,000, ரூ.65,000 மற்றும் ரூ.75,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் 23,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் உச்சகட்ட தள்ளுபடியினை பெற ஐபோன் 6s  பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கிறது. இந்த சலுகை நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் சார்ந்து மாறுபடுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுடன் கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6s எக்சேஞ்ச் சலுகை:

  ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை, எனினும் ஐபோன் 6s ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 வரை தள்ளுபடி பெற முடியும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எக்சேஞ்ச் செய்யலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

ஐபோன் 6 ரூ.7,990 மட்டுமே:

  ஐபோன் 6 16GB ஸ்பேஸ் கிரே நிறம் கொண்ட மாடல் வாங்கும் போது ரூ.5,000 தள்ளுபடியும் பிளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.24,000 வரை தள்ளுபடியும் பெற முடியும். எக்சேஞ்ச் சலுகையில் அதிக தள்ளுபடி பெற ஐபோன் 6s பிளஸ் தகுதியுடையதாக உள்ளது. முழுமையான எக்சேஞ்ச் சலுகையில் தள்ளுபடி பெறும் போது ஐபோன் 6 போனினை ரூ.7,990 என்ற விலையில் வாங்க முடியும்.

ஐபோன் 5s ரூ.4,999 மட்டுமே:
 ஆப்பிள் ஐபோன் 5s 16GB ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ஐபோன் 5s ஸ்மார்ட்போனினை ரூ.4,999 விலையில் வாங்க முடியும். ஐபோன்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கிகள் வழங்கும் தள்ளுபடியும் சீரிஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கிடைக்கிறது.   

அக்சஸரீகளுக்கு தள்ளுபடி:

ஆப்பிள் நிறுவனத்தின் அக்சஸரீகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடியும், ஆப்பிள் கீபோர்டு மற்றும் மைஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு 25 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.