யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/3/18

குடந்தையில் மார்ச் 24-இல் வேலைவாய்ப்பு முகாம்


கும்பகோணம் அரசு ஆண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:

மார்ச் 24-ம் தேதி 

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி நடைபெறவுள்ள முகாமில் 50-க்கும் அதிகமான தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை அளிக்க உள்ளனர்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இலவசப் பயிற்சி வகுப்புக்காகப் பதிவுகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பப் படிவங்கள் வழங்குதல், தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவுகள், அயல் நாட்டு வேலைவாய்ப்பு பணிக்கான பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

முகாமில் 18 வயது முதல் 45 வரையிலான (இரு பாலர்) பணி நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் சுய விவரஅறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


வேலைவாய்ப்புச் செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள இந்த ஆப் பயன் உள்ளதாக இருக்கிறது.
 நீங்களும் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள் !https://play.google.com/store/apps/details?id=com.app.tnpscjobs

பள்ளியில் பேரிடர் மேலாண்மை பாடம்- ஆசிரியர் கருத்து!

அரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!!!

ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும்போது கவனமாக இருங்கள்;-ஆணையம் திடீர் எச்சரிக்கை!!!

மாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூடாது!!!

2% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில்!

தலைமைச் செயலக வட்டார செய்தி:



 2% அகவிலைப்படி உயர்வுக்கான கோப்பு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சில தினங்களில் முதல்வரின் உத்தரவுக்காக வைக்கப்படும் என தகவல்.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது: விடையளிக்க போதிய நேரம் இருந்ததாகவும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. 
பொறியியல் படிப்புக்கு முக்கியமாக கருதப்படும் கணித தேர்வு சற்று கடினமாக இருந்ததால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ? என்ற அச்சம் மாணவ-மாணவிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில், இயற்பியல் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவிகள் புனிதா, கவிநயா, காயத்ரி, திவ்யா, ஹேமலதா ஆகியோர் இயற்பியல் தேர்வு குறித்து கூறும்போது, “கணித தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டதால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன்தான் தேர்வுக்கூடத்துக்குச் சென்றோம். ஆனால், அவற்றுக்கு மாறாக தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 1, 3, 5, 10 மதிப்பெண் கேள்விகள் அனைத்துப் பிரிவுகளிலும் கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட பல வினாக்கள் தேர்வுக்கு வந்திருந்தன. விடையளிப்பதற்கு போதிய நேரம் இருந்தது” என்றனர்.“கணித தேர்வுடன் ஒப்பிடும்போது இயற்பியல் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்தது. குறிப்பாக 10 மதிப்பெண் வினாக்கள் மிகவும்எளிதாக இருந்தது” என்று சூளைமேடு கில்டு நகர் டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவி கரீனா தெரிவித்தார். பல்வேறு மையங்களில் தேர்வெழுதிய மாணவ-மாணவிகளும் இதே கருத்தை கூறினர். அதேபோல், நேற்று நடந்த பொருளாதார தேர்வும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது என்று பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருப்பதால் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோல, 200-க்கு195-க்கு மேல் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதனால், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப்மதிப்பெண் உயரலாம்.

பிதாகரஸ் தேற்றமா? அல்லது போதையனார் தேற்றமா?

பிதாகரஸ் தேற்றமா? அல்லது போதையனார் தேற்றமா?
இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.

கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.


இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.
"ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.

இரத்தினம் தாத்தா:
"இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"
அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"

இரத்தினம் தாத்தா: "சொல்றேன் கேள்,
இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, *போதையனார்* என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்

விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.

இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.

அமிர்தா: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
--------------------------------
இது வெறும் கதை அல்ல.
நிரூபணம்:
நீளம் = 4m, உயரம் = 3m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் = √(4^2 + 3^2) = 5

போதையனார் கோட்பாடு:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5 

School Team Visit - சேலம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை கோரி மனு

2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. குமார் அவர்கள் இன்னைறய தினம் பள்ளிகல்விதுறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களையும்.
மாற்றுதிறனாளி நலவாரிய ஆணையரையும் சந்தித்து முன்னுரிமை கோரி மனு அளித்துள்ளார்.