யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/3/18

குடந்தையில் மார்ச் 24-இல் வேலைவாய்ப்பு முகாம்


கும்பகோணம் அரசு ஆண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:

மார்ச் 24-ம் தேதி 

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி நடைபெறவுள்ள முகாமில் 50-க்கும் அதிகமான தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை அளிக்க உள்ளனர்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இலவசப் பயிற்சி வகுப்புக்காகப் பதிவுகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பப் படிவங்கள் வழங்குதல், தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவுகள், அயல் நாட்டு வேலைவாய்ப்பு பணிக்கான பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

முகாமில் 18 வயது முதல் 45 வரையிலான (இரு பாலர்) பணி நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் சுய விவரஅறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


வேலைவாய்ப்புச் செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள இந்த ஆப் பயன் உள்ளதாக இருக்கிறது.
 நீங்களும் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள் !https://play.google.com/store/apps/details?id=com.app.tnpscjobs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக