யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ24,129 கோடி ஒதுக்கீடு, இயக்குனர் கண்ணப்பன் பேச்சு

டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம்

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவுமுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசுதெரிவித்துள்ளது. கடந்த 8-ம் தேதிரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்று
அறிவித்தது மத்திய அரசு. இதையடுத்துநெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்துசெய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மீண்டும்டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவுமுதல் வசூலிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலைமைசீரடைந்து விட்டதாக கூறி சுங்கக்கட்டணம் வசூலைநெடுஞ்சாலைதுறை தொடங்குகிறது. டிசம்பர் 15-ம் தேதி வரைசுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கை தீவிரம்

வேலூர்மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பாரதஸ்டேட் வங்கி மூலம் மாதஊதியம் பெறுவதால், அவர்களுக்கான தொகையை விடுவிக்கும் நோக்கில்போதுமான ரூபாய் நோட்டுகள் கையிருப்பில்
வைக்கப்பட்டிருப்பதுடன், 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
புழக்கத்தில்இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதியரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. மத்திய அரசின் இந்தஅறிவிப்பைத் தொடர்ந்து வஙகி ஏடிஎம் மையங்களில்இருந்து பணம் எடுக்க அதிகளவில்மக்கள் வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இல்லாமல் தொடர்ந்துமூடப்பட்டு கிடக்கிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களில் 90 சதவீத்துக்கு அதிகமானவர்கள் பாரத ஸ்டேட் வங்கிமூலம் ஊதியம் பெறுவதால் சம்பளநாளான புதன், வியாழக்கிழமைகளில் (டிச. 1) சேமிப்புக் கணக்கு புத்தகம் மூலம்பணம் எடுக்க வருவோருக்கு தடையின்றிபணம் கொடுக்கும் வகையில் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகப்பட்டுசமாளிக்கப்படுகிறது.
இதுதவிரஒரு சில தனியார் வங்கிகளுக்குகுறைவான அளவில் 500 ரூபாய் நோட்டுகள் வரப்பெற்றுள்ளன.
இதுகுறித்துமாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன்கூறுகையில், அரசு ஊழியர்களுக்கு மாதஊதியம் வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் வந்துள்ளன.

ஏடிஎம்மையங்களில் நிலவும் பணத்தட்டுப்பாடு ஒருவாரத்தில் சீரடையும் என்றார்.

வங்கிகளில் திரண்ட அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்கள்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம்அவர்களது வங்கிக் கணக்கில் புதன்கிழமைசெலுத்தப்பட்டன. இதனை எடுப்பதற்காக வங்கிக்கிளைகளில் காலையில் இருந்தே அரசு
ஊழியர்கள்நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பல வங்கிக் கிளைகளில் 5 ஆயிரம்முதல் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமேவழங்கப்பட்டதால், அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னைதலைமைச் செயலகம், எழிலகம் உள்பட பலமுக்கிய அரசு அலுவலகங்களில் மாதஊதியத்தை வங்கிக் கணக்கில் இருந்துஎடுப்பதற்காக அரசு ஊழியர்கள் காலை9 மணியில் இருந்தே காத்திருந்தனர்.
வழக்கமாகபணிக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்குமுன்பே அரசு அலுவலகங்களுக்குச் சென்றஅவர்கள், நேராக வங்கிக் கிளைகளில்ஏற்கெனவே காத்திருந்த வாடிக்கையாளர்களின் வரிசைகளில் இணைந்து கொண்டனர். இதனால், பல வங்கிக் கிளைகளில் சாலைகள்வரை வாடிக்கையாளர்களின் வரிசை நீண்டிருந்தது.
ரொக்கத்துக்குகட்டுப்பாடு: அரசு ஊழியர்கள் பலருக்கும்ரூ.40 ஆயிரம் வரை மாதஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இதனை எடுப்பதற்குஅவர்களால் புதன்கிழமை முடியவில்லை. ஒவ்வொரு வங்கிக் கிளையிலும்இலக்கு வைத்தே ரொக்கமாக பணம்வழங்கப்பட்டது.
சென்னைதலைமைச் செயலகத்தில் உள்ள சிண்டிகேட், இந்தியன்ஓவர்சீஸ் ஆகிய இரண்டு வங்கிக்கிளைகளிலும் ரூ. 9 ஆயிரம் முதல்ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஆனால், பிற இடங்களில் இதைவிடகுறைவாகவே ரூ.5 ஆயிரம் அளவுக்குமட்டுமே ரொக்கமாக பணம் அளிக்கப்பட்டது.
கூட்டம்ஓயாது: வங்கிக் கிளைகளில் மாதஊதியத்தை எடுப்பதற்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின்வரிசை இன்னும் ஒரு வாரத்துக்குத்தொடரும் என வங்கித் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலக சங்கத்தின்தலைவர் ஜெ.கணேசன் கூறியதாவது:-
அரசு ஊழியர்களின் ரொக்கப் பணத்துக்கு கட்டுப்பாடுகள்வைத்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதத்துக்கு 1,300 கோடி ரூபாய் அளவுக்குஊதியமும், ஓய்வூதியமும் அளிக்கப்படுகிறது. இது மாநில அரசுஊழியர்களுக்கான பணம் மட்டுமே. இந்தப்பணத்தை ஒவ்வொரு ஊழியரும் அவரவர்வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றார்.
போக்குவரத்துதொழிலாளர்கள்: தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துத்தொழிலாளர்களுக்கும் மாத ஊதியத்தில் இருந்துரொக்கமாக ரூ.3 ஆயிரம் புதன்கிழமைவழங்கப்பட்டது. அனைத்து பணிமனைகளிலும் காலையில்இருந்தே இதற்கான பணிகள் நடைபெற்றது. இதனால், பணிக்கு வந்த அனைத்துநடத்துநர், ஓட்டுநர்கள் தங்களுக்கான ரொக்கப் பணத்தை வரிசைகள்ஏதும் இல்லாமல் வாங்கிச் சென்றனர்.

ரொக்கப்பணம் வழங்கும் பணி மாலை வரைநடைபெற்றதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

மழை விடுமுறை விழித்துக்கொண்ட கல்வித்துறை...!!

புயல் காரணமாக மழை பெய்யப்போகிறதுஎன்ற முன்னெச்சரிக்கையே விவசாயிகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னொருபுறம் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறைஅறிவிக்கப்பட்டது மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வழக்கமாக கனமழை பெய்யும் போதுதான், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறைஅளிக்கப்படும். கடந்த ஆண்டு சென்னைமழையின்போது கூட கனமழை பெய்தபோதும் விடுமுறை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்றுசர்ச்சை கிளம்பியது. யார் விடுமுறை அறிவிப்பதுஎன்பதிலும் குழப்பம் நிலவியது.
மாவட்டஆட்சியரா அல்லது தலைமைச் செயலகத்தில்கல்வித்துறையா என்பதில் சர்ச்சை இருந்தது.
ஆனால், இப்போது நாடா புயல் 2-ம்தேதி காலை கரையைக் கடக்கும்என்று அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில்கல்வித்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்கள் மாவட்டத்தில்சில பகுதிகளுக்கு என முன்கூட்டியே பள்ளிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொருபுறம் "இவனுகளை வீட்டில் வைத்துக்கொண்டுஎப்படி சமாளிப்பது" என்று பெற்றோர் புலம்புவதையும்கேட்கமுடிகிறது.

2015-ம்ஆண்டு மழை, வெள்ளத்தின் போதுநவம்பர் மாத த்தில் தீபாவளிவிடுமுறைக்குப் பின்னர் மழை காரணமாகபள்ளிகள் செயல்படவில்லை. டிசம்பர் மாதத்திலும் பல நாட்கள் விடுமுறைஅறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை.

நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே பணம் அச்சிடப்படும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய்த் தாள்களை அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இவ்வமைப்பின்தமிழ்நாட்டுப் பொதுச்செயலர் சி.பி.கிருஷ்ணன்இது பற்றி வெளியிட்ட அறிக்கையிலிருந்து…
ரிசர்வ்வங்கிக்குச் சொந்தமான பாரதிய ரிசர்வ் பாங்க்நோட் முத்ரன்
பிரைவேட் லிமிடெட்என்ற நிறுவனம், கர்நாடக
மாநிலத்தில்மைசூரிலும், மேற்குவங்க மாநிலத்தில் சல்போனியிலும் உள்ள ரூபாய் நோட்டுஅச்சடிக்கும் இரண்டு அச்சகங்களை நிர்வகிக்கிறது. இந்த இரண்டு அச்சகங்களும் தற்போதுநடைமுறையில் உள்ளது போல ஒருநாளைக்கு இரண்டு ஷிப்ட் அடிப்படையில்வருடத்திற்கு ரூபாய்த் தாள்களாக எண்ணிக்கையில் 1600 கோடி அளவிற்கு அச்சடிக்கும்திறமை வாய்ந்தவை. இவையல்லாமல் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும்இரண்டு அச்சகங்கள் நாசிக் (மகாராஷ்டிரா) மற்றும்தேவாஸ் (மத்தியபிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன.
இவை இரண்டும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்டு மின்ட்டிங் கார்ப்பரேஷன்ஆப் இந்தியா லிமிடெட் மூலமாகமுழுமையாக மத்திய
அரசாங்கத்திற்குசொந்தமானவை. நிதியமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி இந்த இரண்டு அச்சகங்களும்மொத்த ரூபாய்த்தாள் தேவையில் 40 சதவீதம்வரை அச்சடிக்கத் தகுதி வாய்ந்தவை. மைசூரிலும், சல்மோனியிலும் உள்ள இரண்டு அச்சகங்கள்60 சதவீதம்வரை அச்சடிக்கும் திறன் படைத்தவை.
ஆக நான்கு அச்சகங்களும் இணைந்துமொத்தமாக தற்போதுள்ள நடைமுறைப்படி இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிந்தால்ரூபாய்த்தாள்களாக எண்ணிக்கையில் வருடத்திற்கு 2,666 கோடி அளவிற்கு அச்சடிக்கும்திறன் படைத்தவை.
புழக்கத்தில்இருந்த ரூபாய் நோட்டுக்கள்
மத்தியஅரசாங்கம் வழங்கும் புள்ளி விவரப்படி 2016 நவம்பர்8ஆம் தேதி புழக்கத்தில் இருந்தரூபாய் தாள்களின் மதிப்பு 17,54,000 கோடி ரூபாய். இதில்45 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள். இதன்மதிப்பு ரூ. 7,89,000 கோடி. இது எண்ணிக்கையில்1,578 கோடி தாள்கள். மேலும், 39 சதவீதம் 1000 ரூபாய் நோட்டுக்கள். இதன்மதிப்பு ரூ. 6,84,000 கோடி. இது எண்ணிக்கையில்684 கோடி தாள்கள். 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 342 கோடிதாள்கள் அச்சடித்தாலே போதுமானது. மத்திய அரசாங்கம் புதிய2000 ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் பணியைசெப்டம்பர் மாதமே துவங்கிவிட்டதாக கூறுகிறது. அதன்படி ஏறக்குறைய இரண்டு மாத காலத்தில்அப்பணி நிறைவடைந்திருக்கும்.
எவ்வளவுகாலமாகும்?
500 ரூபாய்நோட்டுக்கள் அச்சடிக்க எவ்வளவு காலமாகும்? நான்குஅச்சகங்களின் திறன் வருடத்திற்கு 2666 கோடிதாள்கள். மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தால்இதன் திறன் 4000 கோடி தாள்களாக உயரும். இதில் 20 சதவீத திறன் 10 ரூபாயிலிருந்து100 ரூபாய் நோட்டுக்கள் வரை அச்சடிக்க பயன்படுத்தப்படும். மீதமுள்ள 80 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்காகபயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால், இதனை அச்சடிப்பதற்கான திறன்வருடத்திற்கு 3200 கோடி தாள்களாகும்.
புழக்கத்திலிருந்துசெல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை1,578 கோடி தாள்கள். சுமார் 20 சதவீதம் வரை கருப்புப்பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் வங்கிகளுக்குவராது என்றும் கூறப்படுகிறது. அதைஅப்படியே ஏற்றுக் கொண்டால் அந்தஅளவிற்கு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதைகுறைத்துக் கொள்ளலாம். இதன்படி செல்லாததாக்கப்பட்ட 500 ரூபாய்த் தாள்களான1,578 கோடி தாள்களில் 20 சதவீதத்தை கழித்தால் மீதமுள்ள 80 சதவீதமான 1,262 கோடி தாள்கள் அச்சடிக்கப்படவேண்டும்.
ஆனால், 1000 ரூபாய் நோட்டுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டதால் குறைந்தபட்சம் அதில் 25 சதமாவது புதிய 500 ரூபாய்நோட்டுக்களாக புழக்கத்தில் வந்தால்தான் நிலைமை சகஜமாகும் என்றும்ஒரு கணிப்பு உள்ளது. அவ்வாறெனில்செல்லாததாக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்தமதிப்பில் 25 சதவீதம் கூடுதலாக 500 ரூபாய்த்தாள்கள், அதாவது கூடுதலாக 342 கோடிதாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்படி மொத்தத் தேவையாக1,262 கோடி + 342 கோடி = 1,604 கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய்நோட்டுக்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.
50 நாட்களில்தட்டுப்பாடு தீராது
3,200 கோடிதாள்கள் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கஒரு வருட காலமாகும். அப்படியானால்தற்போதைய தேவையான 1,604 கோடி தாள்களை அச்சடிக்க6 மாத காலமாகும். நவம்பர் மாதம் முதல்வாரத்திலேயே இப்பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும்.
மத்தியஅரசும் ரிசர்வ் வங்கியும் சொல்வதுபோல50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீர்வதற்கானவாய்ப்பில்லை. எனவே, மத்திய அரசுமுதலில் மக்களுக்கு உண்மையைச்

சொல்ல வேண்டும். மேலும் ரூபாய்த் தட்டுப்பாட்டைத்தீர்க்க விரைந்து மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டும்என்று கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் 'டிபாசிட்' : வருமான வரி 'நோட்டீஸ்'

தமிழகத்தில், வங்கிக் கணக்குகளில், அதிக பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்ப
துவங்கியுள்ளது,'' என, வருமான வரித் துறை முதன்மைதலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

தமிழகத்தில், வங்கிக் கணக்குகளை நேரடியாக கண்காணிக்க, எங்களுக்கு வசதி இல்லை என்றபோதிலும், அதன் விபரங்களை பெறுவதற்கான, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்அடிப்படையில், வங்கிகளில், திடீரென அதிகமாக பணம் டிபாசிட்செய்யப்பட்டுள்ள, சேமிப்புக் கணக்கு எண்களை பெறதுவங்கி உள்ளோம். அவற்றை ஆய்வு செய்து, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கி இருக்கிறோம்.

எத்தனை பேருக்கு, நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது என, இப்போதைக்கு கூறமுடியாது. ஆனால், நடவடிக்கை துவங்கப்பட்டிருப்பதுஉறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

நாடா' புயல் வருவதனை முன்னிட்டுபுயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டியநடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை 15 அம்ச
அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


15 அறிவுறுத்தல்கள்

1. ரேடியோமற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளைஅறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2. ரேடியோமற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.


3. புயல்காற்றுகதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தவாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடிவைக்கவும்.

4. கடற்கரைமற்றும் நீர் சூழ வாய்ப்புள்ளபகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாகவெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரேபாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

5. தங்கள்குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால்பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால்உடன் வெளியேறவும்.

6. நீர்நிலைகள்மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள்கன மழை காரணமாக நீர்சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.

7. சமைக்காமல்உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.


  8. நீர் சூழ்வதால் வெளியேறவேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களைதவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களைவீட்டில் உயரமான பகுதியில் வைத்துபாதுகாக்கவும்.

9. குழந்தைகள்மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும்முதியோருக்கு தேவையான உணவுப் பொருளைஇருப்பு வைக்கவும்.

10. மழைநீரில்செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினைவைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்கவாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

11. மின்வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புஉள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.

12. அமைதியாகசூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாகஎதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும்பயன்படலாம்.

13. அதிகாரபூர்வமாகஅறிவிக்கும் வரை புயல் பாதுகாப்புமையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.

14. மின்கம்பங்களிலிருந்துதளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாகதவிர்க்கவும்.

15. பேரிடரால்பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல்வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில்மட்டுமே செல்லவும்.

இவ்வாறுவருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புரளியை நம்ப வேண்டாம்: ஆர்பிஐ

 500 ரூபாய்நோட்டுகள் கடந்த ஒரு சிலநாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால்டிசம்பர் மாதத் துவக்கத்தில்
கடுமையானபணத் தட்டுப்பாடு ஏற்படும் என்று புரளி பரவுகிறது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் போதுமானஅளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும்சொல்லப்போனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்பணி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனவே, புரளிகளை நம்பவேண்டாம் என்று ரிசர்வ் பேங்க்ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவிப்பினால், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம்முற்றிலுமாக நின்றது. இதனால், மக்களின் பணப்பரிமாற்றம், பொருட்களை வாங்குதல் போன்றவை பெரிய அளவில்பாதிக்கப்பட்டது. 2000 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பது பெரும்சிரமமாக இருந்தது.

ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகுசுமார் 20 நாட்களுக்குப் பின், ஒரு சிலஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், அவையும் போதிய அளவில்இல்லை.

அதே சமயம் சில 500 ரூபாய்நோட்டுகள் சரியாக பிரிண்ட் ஆகாததாலும்மக்களுக்கு பீதி ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், ஆர்பியை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்தியாவில் சுமார் 1,660 கோடி மதிப்பிலான 500 ரூபாய்நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் தற்போது ரூ.8.3 லட்சம்கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்இருப்பதாகவும் கூறியுள்ளது.

தற்போது2000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுகளே வங்கிகளுக்குஅதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் வங்கிஅதிகாரிகளும் கூறியுள்ளனர்.

சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : நிறுத்த புதிய வசதி அறிமுகம்

வருமானவரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய
வருமான வரி முதன்மைதலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையைதுவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: ஊழியர்களிடம், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலேயே, டி.டி.எஸ்., என்றமுறையில், வருமானத்திற்கு தக்கபடி, மாத சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்யப்படுகிறது.

படிவம்- 13 : அது தேவையில்லை என, ஊழியர்கள் விரும்பினால், வருமான வரித் துறைக்கும், அலுவலகத்திற்கும்தகவல் தெரிவித்து, படிவம் - 13ஐ நிரப்பி தரலாம். அந்த வசதியை, இனி தமிழகத்தில், 'ஆன்லைனில்' பெறலாம். 

  அதற்காக, www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில், சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 'tds (for197)' என்ற பகுதியினுள் நுழைந்து, சம்பளதாரர்கள், தங்களது முந்தைய, இருஆண்டு கணக்குகளைபதிவு செய்தால் போதும். அலுவலகத்தில் வரிப்பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் அல்லதுதேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வசதி அறிமுகம் செய்யப்படும், மூன்றாவது மாநிலம், தமிழகம். இந்தியாவை, 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. அந்த வேகத்திற்கு, வருமான வரித் துறையும்ஈடுகொடுத்து வருகிறது. அதற்கு,இப்புதிய சேவையேஉதாரணம். கணினிமயமாக்கல் காரணமாக, வரி செலுத்தாத நிறுவனங்களைஎளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மூன்றில்ஒரு பங்கு : வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல், முரளிகுமார் பேசுகையில், ''வருமான வரித் துறைக்கு கிடைக்கும்வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, டி.டி.எஸ்., மூலமாகவேகிடைக்கிறது,'' என்றார். மேலும், டி.டி.எஸ்., பிரிவு ஆணையர், சேகர், முதன்மை ஆணையர், ஹர்லால்நாயக் ஆகியோரும் பேசினர்.

Central Teacher Eligibility Test - CTET Sep 2016 Answer Key Published

CCE -THIRD WEEK MATHS TENTATIVE ANSWER KEY - 1 to 8th Std

CCE-WORKSHEET -SCIENCE KEY ANSWER

ஜியோ சிம் இலவச சேவை வரும் மார்ச் 31 வரை நீடிப்பு..?

ரிலையன்ஸ்ஜியோ-வின் 4 ஜி ஆஃபர்மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படு இருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ்நிறுவனம்ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகைஆஃபரை
டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும்
அளவற்றஅழைப்புகளை ஜியோ 4ஜி சிம்பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில்100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச்2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்ட மிட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபிஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.

இந்நிலையில்தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயின் விதிகளின்படி, ஜியோ உள்பட எந்ததொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள்வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கூடாது.

அதனால்ஜியோ வின் இந்த ஆஃபர்நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால்ஜியோ ‘வெல்கம் ஆஃபர் ’ எனபெயரை மாற்றி இந்த சலுகைகளைமீண்டும் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது

IAS தேர்வு என்றால் என்ன?

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

அன்னை தெரேசாவின் வரிகள்

அறிவியல்

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்

இந்து மதத்தில் காகத்திற்கு உணவிடுவது ஏன்

இரத்தம் பற்றிய அறிய பயனுள்ள தகவல்கள்

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும்

உண்மையா?

உமிழ்நீர்